Sunday, April 30, 2006

தீவிரவாதிகளின் மற்றுமொரு வெறியாட்டம்

அப்பாவியான திரு சூரியநாரயணா அவருடைய கடமையை செய்ததற்கு, ஆப்கானிஸ்தானிய மக்களின் மேம்பாட்டுக்கு உதவ சென்றதற்கு அந்நாட்டு தீவிரவாதிகள் தந்த பரிசு தலைத்துண்டிப்பு.

ஆப்கானிய சகோதரர்களே உங்கள் நன்றி இதுதானா?

உங்களின் அரேபிய எஜமானர்களின் மூளைச் சலுவையில் இந்தியாவின் உதவியை மறந்ததும் ஏனோ.

திரு சூரியநாரயணா அவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நெஞ்சில் பாரத்துடன்

சிவா

39 comments:

  1. ஏன் உங்கள் நாட்டிலேயே இன்று 4 இந்துக்களை இந்துக்கள் என்ற காரணத்துக்காகவே கொன்று காஷ்மீர முஸ்லீம் விடுதலை வீரர்கள் வெறியாட்டம் ஆடியிருப்பது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? எல்லோரும் ஆப்கானிஸ்தானத்தில் தாலிபான் மட்டுமே வெறியாட்டம் ஆடுவார்கள் என்று உங்கள் கண்களை மறைக்கிறார்கள்.. கொஞ்சம் கண்களைத் திறந்து உங்கள் நாட்டிலேயே வெறியாட்டம் ஆடுபவர்களையும், அந்த வெறியாட்டத்தை விடுதலைப் போர் என்று உளறுபவர்களையும் கொஞ்சம் பாருங்கள்..

    udhampur என்று கூகுள் நியூஸில் போட்டு தேடிப்பாருங்கள். இல்லையேல் கீழ்க்காணும் பதிவில் பாருங்கள்.

    Ennamopo.Blogsome.Com
    Those who forget the past are condemned to repeat it

    ReplyDelete
  2. Really a sad incident. I strongly condemn it. My deepest condolence!!

    ReplyDelete
  3. Anonymous8:26 PM

    ஆக்கிரமிக்கும் அமெரிக்கர்களை நேருக்கு நேர் சந்திக்கும் ஆண்மையற்ற அலிகள் ஆப்கான் தீவிரவாதிகள். அன்பை போதிக்கும் மதம் அல்லாவின் மதமென்று மக்களை மூளைச்சலவை செய்யும் சுகவனப்ரியன் போன்ற போலி முஸ்லிம்கள். அந்த அயோக்கிய அமெரிக்கர்களுக்கு துணை போகும் மற்ற முஸ்லிம் நாடுகள்.

    ReplyDelete
  4. $#$#$# பசங்களுக்கு ஆதரவு தெரிவிச்சு எப்பவும் எழுதுற பசங்க இப்ப வாய் தொறக்கிறானுங்களா பாரேன்.


    Anonymous I censored your harsh words, please refrain in future

    ReplyDelete
  5. ஆரோக்கியம், அந்த செய்தி என் கண்களில் படவில்லை. இங்கெ தொலைக் காட்சியிலும் இணயத்தில் உள்ள தமிழ் பத்திரிக்கைகளும் இதைப் பற்றி மூச்சுவிடவில்லை. இந்த செய்திப் போட்டால் அந்த பத்திரிக்கைகலின் ஆதரவுக் கட்சிக்கு இந்த 'விடுதலை' வீரர்களின் ஆதரவு ஓட்டுக் கிடைக்காது என்ற பயம்.

    நிச்சயமாக என் எதிர்ப்பு காஷ்மீர தீவிரவாதிகளுக்கும் உண்டு.

    ஓட்டுப் பிச்சைக்கார அரசியல்வாதிகளைக் கொண்டு அந்த தீவிரவாதிகளை எப்படி அழிக்கப் போகிறோம்

    ReplyDelete
  6. சிவா. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

    //நிச்சயமாக என் எதிர்ப்பு காஷ்மீர தீவிரவாதிகளுக்கும் உண்டு.//

    தீவிரவாதிகள்- எங்கிருந்தாலும் தீவிரவாதிகளே, அது காஷ்மீரோ, இல்லை உலகின் வேறு எந்த மூலையோ.

    இந்துக்களைக் கொன்றாலோ அல்லது வேறு எந்த மனிதனை கொன்றாலும் அது தீவிரவாதிகளே.

    இதை படிக்கும் போது, 'தீவிரவாததிற்க்கு மதமில்லை' என்று அதிபர் நெல்சன் மன்டேலா, ஜனாதிபதி அப்துல்கலாம், சொன்னது ஏனோ நினைவில் ஆடியது.

    ReplyDelete
  7. ஏன் இதை எதிர்த்தும் கண்டித்தும் பலர் எழுதவில்லை என்பது எனக்குப் புரியவில்லை.
    என் பதிவில் ஒரு கவிதை இட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  8. Anonymous1:23 AM

    Siva,

    I do not understand this line.

    //உங்களின் அரேபிய எஜமானர்களின் மூளைச் சலுவையில் இந்தியாவின் உதவியை மறந்ததும் ஏனோ.//

    I believe that the talibans are being controlled by Pakistan. Pakistan is supporting them even over (by protecting Osama/Omar ...)

    Please refer this article in rediff.

    http://in.rediff.com/news/2006/apr/30ajay.htm

    ReplyDelete
  9. ஆசிஃப் மீரான் அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இது.

    அருமை நண்பர் ஆசிஃப் மீரான், ஜனாதிபதி அப்துல் கலாம், ஆஃப்கானிய மந்திரி ஒருவர் இம்மூவரைத் தவிர்த்து ஒரு இசுலாமிய அரசியல்வாதியோ, வலைப்பூ நண்பர்களோ இக்கொலை பற்றி ஒன்றுமே கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது ஒரு "உரத்த நிசப்தமே", (thundering silence) மிக வெட்கக் கேடானது.

    படுகொலையுண்டவர் மரணத்துக்காக அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    வருத்தத்துடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. Anonymous,

    பாகிஸ்தானியர் அரேபிய எஜமானர்களின் வேலைக்காரர்களே. அமெரிக்கா அதிக பணம் கொடுத்தால் கட்சி மாறக் கூடிய வீரர்கள். தாலிபான்களின் நிஜ எஜமானர்கள் அரேபியர்களே. அவர்களின் தீவிரவாத விளைநிலத்தை அமெரிக்கா அழித்ததால் நட்டம் அரேபியருக்கே.

    ஆப்கானிகள் மூர்க்கர்கள், அறிவிலிகள் ஆனால் அப்பாவிகள், அவர்களை மூளை சலவை செய்ய மிகவும் எளிது.

    ReplyDelete
  11. நேசகுமார், உலகின் இன்னொரு மிகப் பெரிய ஜனநாயக நாடன அமெரிக்காவில், அந்த நாட்டு எதிரிகளை ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் சேர்ந்து எதிர்க்கிறார்கள்.

    ஆனால் நம் நாட்டிலோ நடுநிலை (அவ்வாறு ஏதாவது இருந்தால்) பத்திரிக்கைகள் கூட இம்மாதிரி செய்திகளை வெளியுடுவதில்லை.

    என்ன அநியாயம்? கேட்பதற்கு யாருமே இல்லையா?

    ReplyDelete
  12. உவகை, உங்கள் கவிதை அருமை

    ReplyDelete
  13. டோண்டு சார், அரேபியர்களை அரேபியன் என்று நீங்கள் சொன்னதற்காக உங்களை கன்னா பின்னாவென்று திட்டிய வீரர்கள் எங்கே ஒளிந்தார்கள்.

    ReplyDelete
  14. சிவபாலன் மற்றும் சிவமுருகன் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  15. Anonymous9:07 AM

    திரு சூரியநாரயணா அவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்

    Dear siva
    islathirkum surya narayanan padukolaikum enna samantham???

    Australia padariyar padukolaikum hindhu mathathirkum enna samantham???

    Indra gandhi padukolaikum sikkiya madathirkum enna samantham???

    desa peda gandhiji padukolaikum paarpanarkalukum enna samantham???

    mandai kadu kalavarathukum chirsthuvarukum enna samantham???

    oonume pooriyala!!!!!!!!!

    Eppa intha periyar bakthanuku pooriyira mathiri solungappa

    naanum ungakuda senthukiren

    -Swamy red bull

    ReplyDelete
  16. //ஜனாதிபதி அப்துல் கலாம்//

    டோண்டு சார், நீங்க சொன்ன லிஸ்ட்டிலே இவரை சேர்க்க முடியாதுன்னு நெனைக்கிறேன்.

    ReplyDelete
  17. கொடுமையான செய்தி. நேற்று படித்ததும் சுர்ர்ரென்று கோபம் ஏறியது.

    இது பாகிஸ்தான் control-இல் உள்ள பஷ்டூன் தாலிபான்களால் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்கு, இந்தியாவின் ஆப்கானிஸ்தான இருப்பு மிகவும் எரிச்சலூட்டி வருகிறது. இந்தியர் அனைவரும் வெளியேற வேண்டும் என அறிவிப்பு விடுத்து இப்பாதகச்செயலை இன்று தாலிபான்கள் நடத்தியுள்ளது, இதே போல இந்துக்கள் அனைவரும் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற வேண்டும் என அறிவிப்பு விடுத்து நடத்திய வெறியாட்டத்தை (விளைவு: சொந்த நாட்டில் இன்று அகதிகளாக காஷ்மீர் பண்டிட்டுகள்) நினைவுறுத்துகிறது.

    மேலும் இப்படி selective-ஆக இந்துக்களைக் கொல்வதால் இந்தியாவில் முஸ்லீம்கள் மீதான இந்துக்களின் வெறுப்பினை மேலும் ஆழமாக்கிப் பிளவுபடுத்த முடிந்தால், முஸ்லீம் வெறியர்களுக்கு வசதியான பெரியதொரு recruitment ground எளிதாகக் கிடைப்பது மட்டுமல்ல. இந்தியாவை ஒரு உள்நாட்டுக்கலகத்தை நோக்கி இட்டுச்செல்லவும் முடியும்.

    ஆப்கானிஸ்தானத்திலிருந்து இந்தியா பின்வாங்கவும் கூடாது; இந்திய முஸ்லீம்களைத் தனிமைப்படுத்தித் தன் பக்கம் இழுக்கவும் தாலிபான்களை அனுமதித்துவிடக்கூடாது. இதற்கு ஒரே வழி: ஆப்கானிஸ்தானத்தில் பணி செய்ய இந்தியா தன் நாட்டு முஸ்லீம்களை மட்டுமே அனுப்ப வேண்டும். தாலிபான்களால் இந்திய முஸ்லீம்கள் கொல்லப்பட்டால், இந்தியா மற்றும் இந்துக்களிடமிருந்து இந்திய முஸ்லீம்களைப் பிரிக்கும் சூழ்ச்சி பலிக்காது. அதே சமயம், அரசு இந்துக்களைக் காப்பாற்றுவதில் மட்டும் மெத்தனம் காட்டுகிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளுக்கும் வழி பிறக்காது.

    ReplyDelete
  18. Dear Swamy Red Bull,

    The only issue here is the strange silence exercised by the Muslims in this matter other than a few honorable exceptions such as Abdul Kalam, our fellow blogger Asif Miran and a few others.

    It is strange that you don't see it.

    Regards,
    N.Raghavan

    ReplyDelete
  19. கால்கரி சிவா,

    தாலிபான்கள், செய்த இந்த படுகொலை கண்டனத்திற்குறியது. காட்டுமிராண்டிகளிடம் பேசிப் பிரயோசனமில்லை, இஸ்ரேலில் செய்வது போல் Targeted killing தான் சரி. யார் என்று தெரிந்தால் நேராகப் போய் போட்டு தள்ளிவிடவேண்டும். இவர்களை கைது செய்து, வக்கீல் வைத்து வாதாடி எல்லம் தூக்கு தண்டனை கொடுப்பது நேரம், பணம், உழைப்பு எல்லமே வீண்.

    கஷ்மீரில் நடந்த படுகொலை எதற்க்காக? அவர்கள் இந்துக்கள் என்றா ஒரே காரணத்திற்காக.

    நெல்சன் மண்டேலா, அப்துல் கலாம் போன்ற மகான்கள் தீவிரவாதிக்கு மதம் இல்லை என்று சொல்லி இருக்கலாம், ஆனால், தீவிரவாதத்தால் பதிக்கப் படுபவர்களுக்கு மதம் உள்ளது ஐயா!.

    ஷங்கர்.

    ReplyDelete
  20. //
    இதற்கு ஒரே வழி: ஆப்கானிஸ்தானத்தில் பணி செய்ய இந்தியா தன் நாட்டு முஸ்லீம்களை மட்டுமே அனுப்ப வேண்டும். தாலிபான்களால் இந்திய முஸ்லீம்கள் கொல்லப்பட்டால், இந்தியா மற்றும் இந்துக்களிடமிருந்து இந்திய முஸ்லீம்களைப் பிரிக்கும் சூழ்ச்சி பலிக்காது. அதே சமயம், அரசு இந்துக்களைக் காப்பாற்றுவதில் மட்டும் மெத்தனம் காட்டுகிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளுக்கும் வழி பிறக்காது.
    //

    இட ஒதுக்கீடா? இதுலயா!!

    ஓவரா இல்லை!!?

    தாலிபான்கள் முஸ்லீம்களை கொல்லமாட்டர்களா!!? இராக்கில் வேலைக்குச் சென்ற இந்திய முஸ்லீம்களை தாலிபான்கள் கொல்லவில்லையா! ?

    எகிப்தில்(சினாய் பகுதியில்) சென்ற வாரத்தில் குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் எல்லோருமே முஸ்லீம்கள் தான்.? தெரிந்தே தானே குண்டு வைக்கிறார்கள்!!

    //
    மேலும் இப்படி selective-ஆக இந்துக்களைக் கொல்வதால் இந்தியாவில் முஸ்லீம்கள் மீதான இந்துக்களின் வெறுப்பினை மேலும் ஆழமாக்கிப் பிளவுபடுத்த முடிந்தால், முஸ்லீம் வெறியர்களுக்கு வசதியான பெரியதொரு recruitment ground எளிதாகக் கிடைப்பது மட்டுமல்ல. இந்தியாவை ஒரு உள்நாட்டுக்கலகத்தை நோக்கி இட்டுச்செல்லவும் முடியும்.
    //

    அபத்தமா இருக்கு!! இந்திய முஸ்லீம்களை ஒன்றும் செய்யாமலே தீவிரவாத இயக்கங்கள் recruit செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    எத்தனை முஸ்லீம்கள், இத்தகய தீவிரவாதச் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர்? விரல் விட்டு எண்ணிவிடலாம்! மற்றவர்களெல்லாம் இப்படி பேசாமல் இருந்து தான் தீவிரவாதிகளுக்கு ஒத்துளைப்பு கொடுக்கிறார்கள்.

    மிதவாதிகள் கூட, இத்தகய தீவிரவாதச் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்காமல் மழுப்பிவிடுவார்கள்.

    குஜராத் என்று யாராவது வாய் தவறி சொல்லிவிட்டால், எங்கிருந்தாலும் "சவுண்டு" விடும் ஷபானா ஆஸ்மி எங்கே?

    ஷங்கர்.

    ReplyDelete
  21. "குஜராத் என்று யாராவது வாய் தவறி சொல்லிவிட்டால், எங்கிருந்தாலும் "சவுண்டு" விடும் ஷபானா ஆஸ்மி எங்கே?"

    ஏன் ஷபானா ஆஸ்மியைக் கூப்பிடுகிறீர்கள்? அவரா இதனைப் படிக்கபோகிறார்? குஜராத் என்றதும் எகிறிக் குதித்துக்கொண்டிருந்த தமிழ்வலைப்பதிவாளர்களிடமிருந்து மூச்சுச் சத்தம் கூட வரவில்லையே என்று கேளுங்கள்.


    Ennamopo.Blogsome.Com
    Those who forget the past are condemned to repeat it

    ReplyDelete
  22. உங்கள் பதிவில் ஒருவர் என் பதிவை தூக்கியதைப் பற்றி எழுதியிருந்ததை இப்போதுதான் பார்த்தேன். தமிழ்மணத்திலிருந்து நானே விலகினேன் என்பதையும் எப்போதும் நான் தேன்கூட்டில் என் பதிவை இணைத்ததில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

    ஆனால், அவர் சொல்வதில் ஒரு உண்மை இருக்கிறது. நேசக்குமார் இப்போது என்ன காரணத்தினாலோ எழுதுவதில்லை. அரபுக்கலாச்சாரத்தைப் பற்றி நீங்கள் ஒருவர்தான் எழுதுகிறீர்கள். என் பதிவுகள் அந்த இரண்டு திரட்டிகளிலும் வருவதில்லை. ஆகவே உங்களையும் தூக்கிவிட்டால், அவர்கள் இஷ்டத்துக்கு பேத்திக்கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது.

    Ennamopo.Blogsome.Com
    Those who forget the past are condemned to repeat it

    ReplyDelete
  23. Anonymous7:04 PM

    Dear Siva

    I share my deep anguish and pain with you. I am sick and tired of writing these matters. I dont see any end to these macabre massacres. There will be light at the end of the tunnel when and alternative fuel is found against Petrol. Till then this will never stop. I agree with Arunagiri's point. India should make this opportunity to send its troops inside Afghan atleast to protect its citizens. This is not the first, this not going to be the last. Look at Baroda, Kashmir, Keep exposing the evil designs of Saudi from your part. Arokiam is 100% right, there is no difference between Afghan barbarians and Indian barbarians who extended their vermin fangs upto the southern corner of India. Wait for the release of Coimbatore bombblasters soon after the elections are over. Congress and Communista are passing resoultions in Assembly for the release of great freedom fighter Madhani. Are those Afhghan Talibans worse than our comrades and congress wallas who want freedom for killers like Basha and Madhani?

    I cant write anything more at this emotional moment.

    Thanks
    Rajan

    ReplyDelete
  24. "இட ஒதுக்கீடா? இதுலயா!!
    ஓவரா இல்லை!!?"

    இல்லை. தாலிபான்கள் கொல்வதில் "இட ஒதுக்கீடு" செய்தால் அதனை எதிர்கொள்வதில் நாமும் "இட ஒதுக்கீடு" செய்யலாம்தான், தவறில்லை.

    "தாலிபான்கள் முஸ்லீம்களை கொல்லமாட்டர்களா!!?"

    கொல்லலாம். கொல்லாமலும் போகலாம். கீழே படியுங்கள்.

    "இராக்கில் வேலைக்குச் சென்ற இந்திய முஸ்லீம்களை தாலிபான்கள் கொல்லவில்லையா! ?"

    கொன்னார்களா பார்க்கலாம்.
    (சண்டையிலோ bomb blast-இலோ இறப்பதற்கும் targetted executions-க்கும் வித்தியாசம் உண்டு என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். The killings of suryanarayanan and maniappan kutty come under targetted executions).

    2004-இல் எல்டஹோ ஆப்ரஹாம் என்ற முஸ்லீம் சாலை வெடிகுண்டில் 4 பேருடன் சேர்ந்து அடிபட்டு பின் சிகிச்சை பலன் தராது இறந்தார்.
    கவனிக்க; இது targetted execution அல்ல.

    இந்த சம்பவத்தைத் தவிர்த்து இந்தியர் யாரும் ஈராக்கில் இறந்ததாக எனக்குத் தெரியவில்லை.

    சில வருடங்கள் முன்பு ஈராக் பயங்கரவாதிகளால் பிணைக்கைதியாகப்பிடிக்கப்பட்ட கேரள சாம் குட்டி என்ற கிறித்துவரை மீட்க இந்திய அரசு மைனாரிட்டி கமிஷன் துணையுடன் துரிதமாக இயங்கி அவரை மீட்டது. No casualities.

    (கொசுறுச் செய்தி: execution style-இல் ஒரே நாளில்- ஆகஸ்டு 30 அன்று- 12 பேர் படுகொலை செய்யப்பட்டது இன்று வரை முறியடிக்கப்படா "சாதனை"- இவ்வாறு கொல்லப்பட்ட அனைவரும் நேபாள இந்துக்கள். coincident?)

    ஆனாலும் தாலிபான்கள் இந்திய முஸ்லீம்களைக் கொல்லமாட்டார்கள் எனச் சொல்ல முடியாதுதான். ஆனால் அப்படிக் கொல்லப்பட்டால்,
    i) இந்திய மண்ணில் பான்-இஸ்லாமியம் என்ற பயங்கரம் அடி வாங்கும்.
    ii). முஸ்லீம்கள் வதைபட்டால் இந்திய அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிராகப் பல மடங்கு கடும் முனைப்புடன் செயல்படும்.
    iii). இன்று பல் குத்திக்கொண்டிருக்கும் அரசியல் தலைகளை அது வீறு கொண்டு எழ வைக்கலாம். இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்தால் முஸ்லீம் ஓட்டுகள் காணாமல் போய் விடாது என்ற எண்ணம் வந்தால் "நான் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொன்னவனாக்கும்" "இந்து என்று சொல்ல வெட்கப்படுகிறேன்" என்றெல்லாம் சொல்லி ஓட்டுக்கேட்க மாட்டார்கள்.

    "எகிப்தில்(சினாய் பகுதியில்) சென்ற வாரத்தில் குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் எல்லோருமே முஸ்லீம்கள் தான்.? தெரிந்தே தானே குண்டு வைக்கிறார்கள்!!"

    ஆம். அதைப்பற்றி எகிப்தியர்கள் கவலைப்படட்டும்.

    "அபத்தமா இருக்கு!! இந்திய முஸ்லீம்களை ஒன்றும் செய்யாமலே தீவிரவாத இயக்கங்கள் recruit செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்".

    அபத்தம் இல்லை. பான்-இஸ்லாமியம் என்ற வியாதி இந்தியாவில் பரவுவது இந்திய ஒருமைப்பாட்டுக்குக்கேடு. பாகிஸ்தானும், தாலிபான்களும் விரும்புவது அதனையே. பான்-இஸ்லாமியத்தின் கொடிய விளைவினை இந்திய முஸ்லீம்கள் நேரடியாகக் அனுபவிக்க நேர்ந்தால், அதனைக்கடுமையாக விலக்கி இந்தியம் என்ற குடையின் கீழ் ஒன்று திரளும் வாய்ப்பு உள்ளது.

    recruitement நடக்கிறது; இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் விளிம்பில் நடந்து வரும் ஒரு விஷயத்தை social polarisation மூலம் mainstream உண்மையாக்க தாலிபான்கள் விரும்புகிறார்கள். அதற்கு நாம் இடம் தந்துவிடக்கூடாது.

    "எத்தனை முஸ்லீம்கள், இத்தகய தீவிரவாதச் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர்? விரல் விட்டு எண்ணிவிடலாம்! மற்றவர்களெல்லாம் இப்படி பேசாமல் இருந்து தான் தீவிரவாதிகளுக்கு ஒத்துளைப்பு கொடுக்கிறார்கள்".

    இதுபோன்ற செய்திகள் வரும்போது பெரும்பாலான முஸ்லீம்கள் சங்கடமாகவும் குற்றவுணர்வும் கொள்கிறார்கள் என்றும் அதன் நீட்சியாகவே தர்மசங்கட அமைதி காக்கிறார்கள் என்றும் நினைக்கிறேன்/(நினைக்க விரும்புகிறேன்). சங்கடம் குற்றவுணர்வு இரண்டுமே அவர்களுக்குத் தேவையற்றது, தவறானதும்கூட. பான்-இஸ்லாமியவாதிகளாக இல்லாமல் இந்தியர்களாகவும், மனிதத்தன்மை மிகுந்த இஸ்லாமியர்களாகவும் அவர்கள் உணர்ந்தால், வெளியில் வந்து இவற்றை உரத்த குரலில் கண்டிக்க வேண்டும்.

    எங்கோ உள்ள ஈராக்கிற்காகவும், ஈரானிற்காகவும் பேரணியும் பந்த்தும் நடத்துபவர்கள் சக இந்தியர் கொல்லப்பட்டதற்காக ஒரு நாள் அடையாள ஹர்த்தால் மற்றும் சிறப்பு தொழுகை நடத்தி தங்களது தீவிரவாத எதிர்ப்பையும் பாதிப்படைந்தவரிடத்தில் பரிவையும் வெளிப்படுத்த வேண்டும் என மற்றவர் நினைப்பதில் நியாயம் உண்டு. சமுதாய நல்லிணக்கத்துக்கு இவை பெரிதும் உதவும்.

    ReplyDelete
  25. மத்தளராயன்,

    சூரியநாராயாணா ஒரு தலித் என்றும் முஸ்லிமாக மதம் மாறியவர் என்றும் எங்களுக்கும் தகவல் வந்துள்ளது.

    சற்றே மனித தன்மையுடன் பேசுங்கள்

    ReplyDelete
  26. நீங்கள் சொல்வது போல தலிபான்கள் அவ்வளவு கொடுமையானவர்கள் இல்லை. தெய்வத்தின் பணியை செய்யும் வீர மகன்களை நீங்கள் இப்படியெல்லாம் கூறுவது கண்டனத்துக்குரியது.

    தலிபான்களை விட மோசமானவர்கள் இந்தியாவில் உண்டு. இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளே அவர்கள் என நீங்கள் நினைத்தால் அதுவும் தவறு.

    அவர்கள் வேறு யாரும் இல்லை. இந்திய அரசாங்கம்தான்.

    ஆப்கானிஸ்தானில் "புனித படையினரால்" முதன் முதலில் "தண்டிக்கப்பட்ட" "காபீர்" ஒரு மலையாளி. அவர் கொல்லப்பட்டவுடன் இந்திய அரசாங்கங்கள் (மத்திய, மாநில) இதற்காகவே ரெடிமேடாக வைத்திருக்கும் அறிக்கைகளை வெளியிட்டன - "இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய தீவிரவாத செயல்", "குட்டியின் குடும்பத்தார்க்கு உடனடியாக அரசாங்க வேலை" " - - - லக்ஷம் அல்லது கோடி பணம் நஷ்ட ஈடு" etc .

    குட்டியின் அப்பா அம்மா இருவரும் நோயாளிகள். அரசாங்கத்திடமிருந்து ஐந்து பைசா இதுவரை பெயரவில்லை. ஒரு கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம் மனைவி. சர்டிபிகேட் இருந்தால் உடனடியாக அரசாங்க வேலையாம். ஆனால் அரசாங்க அலுவலகங்கள் இதுவரை சர்டிபிகேட்கள் தரவில்லை. தரப்போவதுமில்லை.

    இது போன்ற நிலைமைதான் சூரியனாரயணனின் இரு மனைவியர்க்கும், அவர்களது குடும்பத்திற்கும் ஏற்படப்போகிறது.

    ஆனால் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட (மற்றும் பாதிக்கப்பட்டதாக கூறிக் கொள்கிற) அனைத்து முஸ்லீம்களுக்கும் உடனடியாக நஷ்ட ஈடு வழங்கப்பட்டுவிட்டது இந்த பாரதிய ஜனதா ஆட்சியிலே. கோத்ரா ரயிலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை எதுவும் வழங்கப்படவில்லை என்று கேள்வி. ஏனென்றால் அவர்கள் தற்கொலைதானே செய்து கொண்டார்கள்?

    இப்பொது சொல்லுங்கள். தீவிரவாதிகள் யார்? தலிபான்களா, இல்லை இந்திய அரசாங்கங்களா?

    ReplyDelete
  27. //
    முஸ்லீம்கள் வதைபட்டால் இந்திய அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிராகப் பல மடங்கு கடும் முனைப்புடன் செயல்படும்.
    //

    அதை இப்பவும் செய்யலாம்,

    ஒரு முஸ்லீம் உயிருக்கும், இந்து உயிருக்கும் வித்தியாசம் இருக்கிற்து என்று இந்திய அரசாங்கம் நினைக்கிறது என்கிறீர்கள்.

    //
    இதுபோன்ற செய்திகள் வரும்போது பெரும்பாலான முஸ்லீம்கள் சங்கடமாகவும் குற்றவுணர்வும் கொள்கிறார்கள் என்றும் அதன் நீட்சியாகவே தர்மசங்கட அமைதி காக்கிறார்கள் என்றும் நினைக்கிறேன்/(நினைக்க விரும்புகிறேன்).
    //

    நீங்கள், நினைக்க விரும்புவது இதுவாக இருக்கலாம். ஆனால், அவர்கள், ஏனோ உள்ளூர பரவசப் படுகிறார்கள் (God forbid) என்ற எண்ணம் தான் வருகிறது.

    //
    எங்கோ உள்ள ஈராக்கிற்காகவும், ஈரானிற்காகவும் பேரணியும் பந்த்தும் நடத்துபவர்கள் சக இந்தியர் கொல்லப்பட்டதற்காக ஒரு நாள் அடையாள ஹர்த்தால் மற்றும் சிறப்பு தொழுகை நடத்தி தங்களது தீவிரவாத எதிர்ப்பையும் பாதிப்படைந்தவரிடத்தில் பரிவையும் வெளிப்படுத்த வேண்டும் என மற்றவர் நினைப்பதில் நியாயம் உண்டு. சமுதாய நல்லிணக்கத்துக்கு இவை பெரிதும் உதவும்.
    //

    செய்வார்களா? அல்லது தெருக்களுக்கும், குழந்தைகளுக்கும் சதாம் உசேன், ஓசாமா என்று பெயர் வைப்பார்களா?

    ஒரு இந்துவின் அஸ்தியை சிந்து நதியில் கரைக்க அனுமதிக்கவில்லை பாகிஸ்தான் அரசு (அந்த இந்து யார் தெரியுமா?) இந்துவை இஸ்லாத்தவர்கள் மதிக்கும் நிலை இது தான்.

    ஷங்கர்.

    ReplyDelete
  28. ஷங்கர்,

    அந்த இந்து இஸ்லாமியற்காக உண்ணாவிரதமிருந்து, பாகிஸ்தானுக்கு 54 கோடி வாங்கிதந்த, இந்து வெறியனால் கொல்லப்பட்டதற்காகவே முஸ்லிம்களால் விரும்பபடுகின்ற தியாக செம்மல் மகாத்மா காந்தியடிகள் அல்லவா

    ReplyDelete
  29. muse: "தலிபான்களை விட மோசமானவர்கள் இந்தியாவில் உண்டு.... அவர்கள் வேறு யாரும் இல்லை. இந்திய அரசாங்கம்தான்".

    இதைத்தான் வேறு விதத்தில் சொல்ல வந்தேன்.

    "ஒரு முஸ்லீம் உயிருக்கும், இந்து உயிருக்கும் வித்தியாசம் இருக்கிற்து என்று இந்திய அரசாங்கம் நினைக்கிறது என்கிறீர்கள்".

    ஆமாம். Dhimmitude என்று இதைச் சொல்லலாம்.

    "ஆனால், அவர்கள், ஏனோ உள்ளூர பரவசப் படுகிறார்கள் (God forbid) என்ற எண்ணம் தான் வருகிறது".

    அப்படி நினைப்பவர்கள் இருக்கலாம். பெரும்பாலானவர் அப்படி இல்லை என்றே எண்ணுகிறேன்.

    இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள பிளவை அதிகரிக்க வைப்பதில் மைனாரிட்டி ஓட்டு வங்கி அரசியலுக்குப் பெரும்பங்கு உள்ளது. புலிகளை விட பசுத்தோல் போர்த்திய புலிகளே மிகவும் அபாயகரமானவை. இஸ்லாமியர்களால் அல்ல, இந்து திம்மிகளாலேயே இந்தியா பெரும் கேட்டினை எதிர்கொள்கிறது.

    ReplyDelete
  30. //இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள பிளவை அதிகரிக்க வைப்பதில் மைனாரிட்டி ஓட்டு வங்கி அரசியலுக்குப் பெரும்பங்கு உள்ளது//

    இதை தீர்க்க வழியே இல்லையா?

    ReplyDelete
  31. //இப்பொது சொல்லுங்கள். தீவிரவாதிகள் யார்? தலிபான்களா, இல்லை இந்திய அரசாங்கங்களா? //

    Muse,
    பதவி வெறிப் பிடித்த இந்திய அரசியல் வாதிகளே.

    உங்கள் எழுத்தில் அனல் தெரிக்கிறது.
    நன்று எழுதுங்கள்

    ReplyDelete
  32. //
    ஆமாம். Dhimmitude என்று இதைச் சொல்லலாம்
    //

    இந்த dhimmitude இங்கு பல வலைப் பதிவாளர்களிடமும் நீங்கள் காணலாம்.

    //
    இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள பிளவை அதிகரிக்க வைப்பதில் மைனாரிட்டி ஓட்டு வங்கி அரசியலுக்குப் பெரும்பங்கு உள்ளது. புலிகளை விட பசுத்தோல் போர்த்திய புலிகளே மிகவும் அபாயகரமானவை. இஸ்லாமியர்களால் அல்ல, இந்து திம்மிகளாலேயே இந்தியா பெரும் கேட்டினை எதிர்கொள்கிறது.
    //

    சரியாகச் சொன்னீர்கள். பசுந்தோல் போர்த்திய புலிகளினால் தான் இந்தியா ஒரு Soft state என்ற எண்ணம் பல தீவிரவாதிகளுக்கு.

    //
    "குஜராத் என்று யாராவது வாய் தவறி சொல்லிவிட்டால், எங்கிருந்தாலும் "சவுண்டு" விடும் ஷபானா ஆஸ்மி எங்கே?"

    ஏன் ஷபானா ஆஸ்மியைக் கூப்பிடுகிறீர்கள்? அவரா இதனைப் படிக்கபோகிறார்? குஜராத் என்றதும் எகிறிக் குதித்துக்கொண்டிருந்த தமிழ்வலைப்பதிவாளர்களிடமிருந்து மூச்சுச் சத்தம் கூட வரவில்லையே என்று கேளுங்கள்.
    //

    ஆரோக்கியம் சார், அதுவும் உண்மை தான்!! அவர்களெல்லாம் முஸ்லீம் செத்தால்,
    இந்து மதத்தை அழிப்பது பற்றி,
    சங் பரிவாரங்களைத் திட்டி,

    தான் பதிவு போடுவார்கள்.

    ஷங்கர்.

    ReplyDelete
  33. "இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள பிளவை அதிகரிக்க வைப்பதில் மைனாரிட்டி ஓட்டு வங்கி அரசியலுக்குப் பெரும்பங்கு உள்ளது"

    "இதை தீர்க்க வழியே இல்லையா?"

    மத அடிப்படையில் மெஜாரிட்டி ஒட்டு வங்கி ஒன்றாக அணி திரண்டால், மத அடிப்படையிலான மைனாரிட்டி ஓட்டு வங்கி irrelevent-ஆகும். ஆனால் இது மதரீதியாக மைனாரிட்டிகளை (மலேசியா, சிங்கப்பூர் போல)ஒதுக்குவதுபோல் ஆகும் என்பதால் கீழே காணும் பிற வழிகளையே நான் முதலில் நான் முன்வைப்பேன்.

    மத அடிப்படையில் சென்சஸ் எடுப்பது, தனி உரிமையும் சலுகையும் தருவது, மத நிறுவனங்களுக்கு வெளிநாட்டுப்பண உதவி கிடப்பது இது போன்ற மத அடிப்படை சலுகைகள் மத ரீதியாக மைனாரிட்டிகள் பிரிந்து கிடப்பதை reward செய்கிறது. உடனடியாகச் செய்ய வேண்டியது:

    1. மத அடிப்படையிலான கட்சிகளைத் தடை செய்ய வேண்டும். மத அடிப்படையில் தேர்தல் அறிக்கைகளோ, சலுகைகளோ அரசியல் கட்சிகள் தருவது சட்டத்தால் தடை செய்யப்பட வேண்டும்.

    2. மத அடிப்படையில் reserved தொகுதிகள், மத அடிப்படையில் தனிச்சட்டங்கள் இவற்றை ஒழித்து விட வேண்டும். UCC-இன் அவசியத்தை சுப்ரீம் கோர்ட்டே பலமுறை வலியுறுத்தி உள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று இல்லாத கேவலம் அழிய வேண்டும்.

    3. எல்லா மதத்தலங்களும், நிறுவனங்களூம் அரசின் கீழ் வர வேண்டும். அல்லது எல்லா மதத்தலங்களும், நிறுவனங்களும் அந்தந்த மத நிறுவனக்களாலேயே நிர்வாகம் செய்யப்பட வேண்டும். இன்றுள்ளது போல் பாரபட்ச நிலை கூடாது.

    4. மற்ற நாடுகளிடம் இருந்து நம் நாட்டு மத நிறுவனங்களுக்கு (including கல்வி நிறுவனங்கள்) வரும் பொருளாதார உதவி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். அவற்றின் விரிவான தணிக்கை அறிக்கைகளுக்கு public access கிடைக்க வேண்டும்.

    5. நியோகி அறிக்கையில் கூறியுள்ளபடி அனைத்து மாநிலங்களும் மத மாற்றங்களைக் கடுமையாகக் கண்காணித்து, lure/coercion/taking advantage of vulnerability போன்ற வகைகளில் வரும் மத மாற்றங்களையும், குறிப்பாக கூட்ட மத மாற்றங்களையும் தடை செய்ய வேண்டும்.

    இவை நடக்காத சூழ்நிலையில் ரிலீஜியஸ் மெஜாரிட்டேரியானிசமே வழியென்று ஆகி விடும். அது நாட்டுக்கு அவ்வளவு நல்லதில்லை என நினைக்கிறேன்.

    ReplyDelete
  34. அருணகிரி, அருமையான யோசனைகள். இதை தனிப் பதிவாகப் போட்டு விவாததிற்கு விடுவோமா?

    ReplyDelete
  35. மத்தளராயன் என்ற போலி பெயரில் வந்த ஜந்துவுக்கு சூப்பர் ஆப்பு வெச்சீங்க கால்கரி!

    ReplyDelete
  36. மாயா, பலபேரிடம் ஆப்பு வாங்கிய எனக்கு ஆப்படிப்பது அத்துபடி :)

    ReplyDelete
  37. கால்கரி சிவா,

    தாராளமாக. என் வலைப்பூவில் நான் இன்னும் எழுதத்தொடங்கவில்லை (என்றாவது ஒருநாள் தொடங்க வேண்டும்). எனவே நீங்களே தனிப்பதிவாக போஸ்ட் செய்து விடுங்கள்.

    ReplyDelete
  38. அருணகிரி கொடுத்தவை அருமையான யோசனைகள். ஆனால் இது பொது சிவில் கோடின் வேறு வடிவம் என்று கூறி மதச்சார்பற்ற (?), இடதுசாரிகள் கண்டிப்பாக எதிர்த்து இவற்றை நடைமுறைப்படுத்த விடமாட்டார்கள்.

    அவர்கள் கையில்தான் இப்போது தீர்வுகளை செயல்படுத்தக் கூடிய சக்தி உள்ளது. இச்சக்தியை அவர்கள் வன்முறை மூலமும், ஓட்டு வங்கி மூலமும் பெற்றும், தக்கவும் வைத்துள்ளார்கள்.

    ReplyDelete
  39. muse,

    இதிலுள்ள முரண் நயம் என்னவென்றால், இவை அனைத்துமே (4-இல் உள்ள public access to information தவிர) கம்யூனிச/இடது சாரி நாடுகளில் உள்ள நடைமுறையில் உள்ள சட்டங்கள்தான்!

    இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற விஷயங்களை 50,60 ஏன் 70-களில்கூட (குறைந்தபட்சம்) பேசியாவது வந்தனர் நம் நாட்டு கம்யூனிஸ்டுகள். பிறகு மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் இஸ்லாமிய ஓட்டு வங்கி இந்திரா காங்கிரஸ் பக்கம் சாய்வதையும், தனது traditional rural மற்றும் அரிசன ஓட்டுக்கள் புதிய சாதி மற்றும் பிராந்திய கட்சிகளால் மேலும் பிரிக்கப்படுவதைக் கண்டு, வர்க்க அடிப்படை அணுகுமுறையைக் கைகழுவி மதச்சிறுபான்மை ஆதரவு என்று மாறி இன்று அடிப்படைவாத இஸ்லாமியத்தைக்கூட ஆதரிக்கும் ஓட்டுப்பொறுக்கிகளாய்ப் போய் விட்டனர்.

    அடிப்படைவாத இஸ்லாத்திற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் பொது எதிரி அமெரிக்கா என்பதால் கண்ணை மூடிக்கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு ஆதரவு தரும் அரிதார நாயகர்களாகவே இன்று நம் நாட்டு இடதுசாரிகள் உள்ளனர்- தான் பாலூட்டுவது ஒரு கொடிய விஷப்பாம்புக்கு என்ற வரலாற்று உண்மையைக்கூட அதிகார ஆசையில் வசதியாக மறந்தபடி. இந்த வரலாற்றின் ஈரம் மாறாத ரத்தச்சுவடுகளை சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலும் இன்றும் காண முடியும். கம்யூனிசம் மாறி இஸ்லாமிய நாடுகளாய் இவை மாறியதும் செய்த முதல் வேலை தேடித்தேடி கம்யூனிஸ்டுகளை விரட்டி தெருநாய்கள் போல சுட்டுக் கொன்று குவித்ததுதான்.

    ReplyDelete