Monday, August 07, 2006

சந்திரோதயமும்.......

Photobucket - Video and Image Hosting
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?

Photobucket - Video and Image Hosting

இளஞ்சூரியன் இரு கண்ணானதோ

Photobucket - Video and Image Hosting

வசந்தத்தில் பயிருட்டு கோடையில் தோன்றிய அழகிய ரோஜா



Photobucket - Video and Image Hosting

துளித்துளி ..... மழைத்துளி.......

17 comments:

  1. கோடையில் தோன்றிய ரோஜா அருமை!
    ஆனா Bulls Eye composition கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம் !

    ReplyDelete
  2. கல்கேரி சிவா,
    படங்கள் மிகவும் அருமை. படங்களின் கீழ் படங்கள் பற்றிய சில விபரங்களையும் [ஊர், நாடு, இடத்தின் பெயர் போன்றவை] சேர்த்தால் நன்றாக இருக்கும். இவை எல்லாம் கல்கேரிப் பகுதியில் எடுத்த படங்களா?

    ReplyDelete
  3. 'இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ!
    செவ்வானமே உந்தன் நிறமானதோ!'

    இனிய சிவா,

    இவைதானே அந்த வரிகள்.

    இரு கண்ணானது செந்தாமரைதானே.

    'செந்தாமரை இரு கண்ணானதோ'

    அன்புடன்
    ஆசாத்

    ReplyDelete
  4. an&

    பூப்படங்களை எடுத்தது என் மகன். மேலும் காமிரா மிகச் சிறியது.

    டிஜிடல் காமிராவில் காம்பினேஷன் பார்ப்பது கடினமாக இருக்கிறது. எஸ் எல் ஆர் இல் இருக்கும் தெளிவு இதில்லை

    ReplyDelete
  5. வெற்றி,

    கால்கரிக்கு நடுவில் ஓரும் ஆறு அது. என் வீட்டிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

    பூக்கள் என் வீட்டு தோட்டம்

    ReplyDelete
  6. ஆசாத் சார், நான் எழுதிய வரிகள் தவறானவை சார்.

    வருக்கைக்கு நன்றி

    ReplyDelete
  7. ரோஜா படங்கள் வெகு அருமை. உங்கள் வீட்டில் ஒரு ஒளி ஓவியர் உருவாகிக் கொண்டிருக்கிறார். ஆமாம்! ரோஜாப்பூ இவ்வளவு சத்தா தெம்பா இருக்குதுங்களே...ஏதாவது ஸ்பெசல் ஆகாரம் காரணமா? இல்லை வெறும் சீதோஷணம் தான் காரணமா?

    ReplyDelete
  8. digital camera syndrome!! :D

    வாங்கின புதிதில் இப்படித்தான் பூக்கள், தெரு க்கள், சூர்யோதயம், சந்திரோதயம் என்று பாரதிராஜாவின் "கேமரா மேன் கண்ணன்" போல் படம் பிடித்துக் கொண்டிருந்தேன்...

    ஒரு படத்தெக் கூட print போட்டதில்லை...!

    ReplyDelete
  9. கைப்புள்ள,

    வஜ்ரா சொன்ன மாதிரி இது ஒரு டிஜிடல் காமிரா சிண்ட்ரோம் தான்.

    ரோஜாக்களில் பலவகை உண்டு. இந்த ரோஜாக்கள் காட்டு ரோஜாக்கள் பார்க்கதான் பெரிதாக இருக்கும் ஆனால் வாசனை இல்லை.

    நாங்கள் பாலைவனத்தில் வாழும் காலத்திலும் பெரிய்ய்ய்ய்ய ரோஜக்களை வளர்த்துளோம். ரகசியம் 18-24-16. இந்த கலவையில் உரங்களைப் போட்டால் அருமையாக வளரும் இந்த உரங்களை போடும் முன் ஒரு தனித் தொட்டியில் பரிசோதனை செய்யவும். அதிக உரமிட்டால் ரோஜா செடிகள் இறந்துவிடும் ஜாக்கிரதை.

    நீங்கள் வட அமெரிக்காவில் இருந்தால் இந்த தளத்தில் உள்ள மிரக்கில் குரோ புராடெக்ட்களை வாங்குங்கள்.

    சோகம் என்ன வென்றால் இன்னும் 2 மாதங்களில் இலையுதிர்காலம் அதன் பின் குளிர்காலம் எல்லாப் பூக்களும் இறந்துவிடும்

    ReplyDelete
  10. //digital camera syndrome!! :D

    வாங்கின புதிதில் இப்படித்தான் பூக்கள், தெரு க்கள், சூர்யோதயம், சந்திரோதயம் என்று பாரதிராஜாவின் "கேமரா மேன் கண்ணன்" போல் படம் பிடித்துக் கொண்டிருந்தேன்...//

    தற்போது இந்த சிண்ட்ரோமால் பயங்கரமாகப் பீடிக்கப் பட்டிருக்கிறேன். நீங்க சொன்னதுக்கு மேலாவும் மரவட்டை, ஓணான், எறும்பு இப்படின்னும் நம்ம லிஸ்டு தொடருது. ஐயோ ஐயோ!கேமராமேன் கண்ணன்னு தானே நெனச்சி படமெல்லாம் எடுத்தேன். ஒங்களுக்கு எப்பிடிங்கோ தெரிஞ்சது?
    :)

    ReplyDelete
  11. //நீங்கள் வட அமெரிக்காவில் இருந்தால் இந்த தளத்தில் உள்ள மிரக்கில் குரோ புராடெக்ட்களை வாங்குங்கள்//

    இல்லீங்கோ! வடமேற்கு இந்தியாவில் இருக்கிறேன். சென்னையில எங்க வீட்டுல எம்புட்டோ ஒரம் போட்டு பாத்தாச்சு. ஒன்னும் வேலைக்காவலை.

    ReplyDelete
  12. //கேமராமேன் கண்ணன்னு தானே நெனச்சி படமெல்லாம் எடுத்தேன். ஒங்களுக்கு எப்பிடிங்கோ தெரிஞ்சது?
    :)
    //

    எங்களூக்கும் அப்படிதான் படுகிறது. அந்தகாலத்தில் கையால் திருகி போகஸ் செய்து, லைட்டை கண்ணால் உணர்ந்து அபெர்ச்சர், ஸ்பீடு செட் செய்து கை ஆடாமல் மெக்கானிகல் காமிராவில் எடுப்பது மனிதக் கண்ணன்.

    இப்போது அந்த கண்ணன் மூளையை உங்களை மாதிரி சாப்ட்வேர் ஆசாமிகள் கோட் செய்து காமிராவில் செலுத்தி எல்லா காமிராவிற்கும் கண்ணன் மூளையை தந்துட்டாங்க.

    நேத்திக்கு ஒரு கானன் காமிராவைப் பார்த்தேன்.நம் விழி எதை நோக்குகிறதோ அதை ஜூம் செய்கிறது யப்பா இந்த காமிராவிற்க்கும் செல் போனுக்கும் முடிவே இல்லை

    ReplyDelete
  13. கைப்புள்ளே, என் பி கே 18-24-16 இந்த கலவை.

    குழந்தைகளின் B-காம்ளெக்ஸ் டானிக்குகள், முட்டை ஓடுகள் ஆகியவை ரோஜாவிற்கு புஷ்டியை தரும்.

    நம்ம வலைப்பதிவாளார்கள் அடிக்கடி சந்திக்கும் டிரைவ்-இன் எதிரில் ஹோர்டிகல்ஜீரல் சொசைட்டி ஒன்று இருந்தது. இன்னும் அது இருந்தால் அங்கே ரோஜா உணவு ஏதாவது கிடைக்கிறதா என பார்க்கவும்.

    கூகுளாண்டவர் துணையால் இதை பிடித்தேன். இங்கே முயற்சிக்கவும்.

    ரோஜா வளர்ப்பதால் சென்னையில் வாலிபர்களுக்கு பல நண்மைகள் விளையும். இந்த ரோஜாகளூக்கு உணவு, உரம் தேடி மேலே சொன்ன இடங்களுக்கு போனால் நாகை சிவா போல் பாகிஸ்தான் பிரிந்து விட்டதே என் கவலைக் கொள்ள தேவையில்லை

    ReplyDelete
  14. கைப்பூ, இன்னுமொரு லிங்க் http://www.geocities.com/indianliving/nursery.htm

    ReplyDelete
  15. இவ்வளவு சிரத்தை எடுத்து தகவல் சேகரிச்சு கொடுத்ததுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  16. சிவா,

    >>> ரகசியம் 18-24-16 <<<<

    32-24-36 ரகஸியங்கள் ஏதும் உள்ளனவா?

    ReplyDelete
  17. ம்யூஸ், 32-24-36 போன்ற கலவைகளை ரோஜாக்கு போட்டால் உங்கள் வீட்டு ரோஜாவும் பக்கத்து வீட்டு ரோஜாவும் செத்துவிடும். இந்த கலவையில் எந்த உரமும் பார்க்கவில்லை ஒரு வேள நன்றாக வளர்ந்த பெரிய்ய்ய்ய்ய ஆல மரத்திற்க்கு போட்டா தாங்குமா?

    அப்படா tangential ஆ ஒரு கடி கடித்தாகி விட்டது

    ஹி..ஹி..ஹி..

    ReplyDelete