Sunday, February 22, 2009

வால்மார்ட் பற்றிய இரு வேறு பார்வைகள்


வால் மார்ட் என்பது ஆணி முதல் கப்பல்வரை விற்கும் ஒரு பலசரக்கு கடை. இந்த கடை அமெரிக்கா/கனடாவில் எல்லா ஊரிலும் மூலை முடுக்கு களிலும் இருக்கும். உலகில் அதிக பிசினஸ் செய்யும் கம்பெனிகளில் முதல் இடத்தில் இருப்பது இதுதான்.


கடந்த வாரம் ஒரு இந்திய சிவில் இஞ்ஜினியரை சந்தித்தேன். மிக பணக்காரர். கால்கரியில் 4 வீடுகள். டில்லியில் ஒரு பங்களா, ஹவாயில் ஒரு ரிசார்ட் என பணத்தில் திளைப்பவர். எல்லாம் அவரும் அவருடைய குடும்பத்தாரும் உழைத்த சொத்து.


அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் எல்லா பொருடகளையும் வால்மார்ட்டிலேயே வாங்குவதாக சொன்னார். அவர் தேடின பொருள் வால்மார்ட்டில் கிடைக்கவில்லையென்றால் மட்டும் வெளியில் வாங்குவதாக சொன்னார்.

வால்மார்ட் ஏழை மக்களின் கடையாயிற்றே உங்களை போன்ற பணக்காரர்கள் எப்படி... என இழுத்தேன்.. அவர் சொன்ன அவரின் கதை என்னை பிரமிக்க வைத்தது.


அவர் கனடாவிற்கு வந்த புதிதில் வேலையே கிடைக்கவில்லை. இந்தியாவில் அவர் பார்த்த கவர்மெண்ட் வேலையும் அனுபவமும் உதவவில்லை. கையில் கொண்டு வந்த ரூபாய் 20 லட்சம் வேகமாக தீர்ந்தது. அவர் அவரின் மனைவி மற்றும் பதின்ம வயதில் இரு மகன்களும் ஒரு மகளும் என்ன செய்வது என கையைப் பிசைந்து கொண்டு நின்றார்கள். அப்போது அவர்களுக்கு கை கொடுத்ததது வால்மார்ட். ஐவரும் அங்கே வேலைக்கு சேர்ந்தார்கள். வாடகைக்கும் சாப்பாட்டிற்கும் பணம் கிடைத்தது. முதலில் தந்தை மேல் படிப்பு படித்து இஞ்ஜினியராக மறுபடியும் நல்ல வேலையில் சேர்ந்தார். மனைவி வால்மார்ட்டிலேயே பதவி உயர்வடைந்து அக்கௌண்டண்ட் ஆனார். பிறகு குழந்தைகள் படித்து முன்னுக்கு வந்துவிட்டார்கள். வந்தாரை வாழ வைத்த வால்மார்ட்டுக்கு நன்றி கடனுடன் இருக்கிறார்கள் இந்த மில்லியனர்கள்

இன்னொருவர், இவர் ஒரு அமெரிக்கர், வெள்ளை இனத்தவர் . அமெரிக்காவின் ஆடம்பர, கூச்சல் நிறைந்த வாழ்க்கையை வெறுத்து கனடவில் குடியேறிவர். மிக எளிமையாக வாழ்பவர். இவரின் அபார்ட்மெண்டில் சுத்தமாக ஒரு பர்னிச்சரும் இல்லை. ஸ்லீப்பிங் பாக் இல் தூங்குவார். இயற்கை சோப், மற்றும் வாசனை திரவியங்களை உபயோகிப்பார். உறைந்த இறைச்சியை சாப்பிட மாட்டார். ப்ரஷ் இறைச்சி அதுவும் இயற்கை தீவனங்கள் தின்று வளர்ந்த கால்நடை, இறைச்சியை உண்பார். இயற்கை உரங்களை கொண்டு விளந்த காயகறிகளைதான் உண்பார். கனடா மற்றும் அமெரிக்காவில் தயாரான உடைகளையும் காலணிகளையும் அணிவார். கோக் பெப்ஸி போன்ற பானங்களை அருந்த மாட்டார் இவ்வாறும் இன்னும் பல

இவரும் நானும் ஒரு முறை நகருக்கு சென்ற போது நான் வால்மார்ட்டில் சில பொருட்களை வாங்க வேண்டியிருந்தது. இவர் வால்மார்ட்டின் உள்ளே வர மறுத்து விட்டார். பிறகு அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் வால்மார்ட்டின் மேலுள்ள அவரின் ஆதங்கங்களை வெளியிட்டார்..


வால்மார்ட் அநியாய பிஸினஸ் செய்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் பல குழந்தை தொழிலாளர்களினால் குறைந்த விலையில் தயாரிக்க்பட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்கிறது என்பார். வால்மார்ட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களை அடிமையாக நடத்துவார்கள் என்றார். உதாரணத்திற்கு. திங்களன்று ஒருவரை மானேஜர் ஒரு தொழிலாளியை அழைத்து இன்று 10 மணிநேரம் வேலை செய் என்பார். அந்த தொழிலாளியும் ஓவர் டைம் கிடைக்கிறது என்று சந்தோஷமாக வேலை செய்வார். ஆனால் வெள்ளி கிழமை அந்த தொழிலாளியை அழைத்து இன்று 6 மணிநேரம் வேலை செய்தால் போதும் என்பார். அந்த வாரம் அவர் 40 மணிநேரம் வேலை செய்த மாதிரி ஆகிவிடும் ஆகையால் ஓவர் டைம் வழங்க தேவையில்லை. மேலும் தொழிலாளிகளின் கூலியை எப்போதும் ஏற்றுவது இல்லை. சம்பள உயர்வு கேட்டால் வேலை காலியாகிவிடும் இன்னும் இவ்வாறு பல குற்றசாட்டுகளை அடுக்கினார்.


அவர் அடுக்கியதில் அர்த்த முள்ள குற்றசாட்டு இதுதான்: வால்மார்ட் அசுர வளர்ச்சிக்கு அடைவதற்கு முன் ஆங்காங்கே சிறு சிறு கடைகள் இருந்தன. சில கடைகளில் சில பிரத்யேக பொருடகள் கிடைக்கும். அங்கே வாடிக்கையாளராகி அந்த கடைகளை ஊக்குவிப்பதில் அலாதி இன்பம். ஆனால் வால்மார்ட் வந்தவுடன் அந்த சின்ன கடைகள் காணாமல் போய்விட்டன. சின்ன சின்ன முதலாளிகள் இல்லாமல் போய்விட்டனர். இப்படி சின்ன மீன்களை விழுங்கிய பெரும் திமிங்கிலம் தான் இந்த வால்மார்ட் இங்கே பிசினஸ் செய்வது நல்லதில்லை என்பார். மேலும் இவர் சுவிட்சர்லாந்தை அதிகமாக வெறுப்பவர். சுவிட்சர்லாண்ட்டில் மூன்றாம் உலக ஊழல்வாதிகள் ஏழை மக்களை ஏமாற்றி அங்கே பணத்தை போடுகிறார்கள். அந்த பாவபட்ட பணத்தில் கிடைக்கும் வட்டியில் வாழ்கிறது இந்த நாடு. இதெல்லாம் ஒரு நாடு. இந்த நாட்டின் பொருளை நான் ஏன் வாங்க வேண்டுமென்றார். இந்தியாவில் தயாராக்கும் டைடன் வாட்ச்களை வாங்க தயாராய் இருக்கிறார். அடுத்த முறை இந்தியாவிற்கு போகும் போது ஒரு டைடன் வாட்ச் ஒன்றை வாங்கி இவருக்கு தரவேண்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்.

இதில்எனக்கு என்ன புரிந்தது என்றால் .ஏழை மக்களை அடித்து ஏழைகளை வாழவைத்து வால்மார்ட் ஓனர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்பது தான்



























4 comments:

said...

நன்றாக எழுதுகிறீர்கள். Comments வராவிட்டால் கவலைப்பட வேண்டாம்.
Comments போடாமல் படிப்பவர்கள் அனேகம்.

said...

நன்றாக இருந்தது உங்கள் கட்டுரை. நல்ல மனிதர்கள் உலகெங்கும் விரவிக்கிடக்கிறார்கள். பதிவுக்கு நன்றி.

said...

நன்றி சாய் தாசன், எழுத நேரமில்லை. பப்ளிக் கமெண்டுகள் வராவிட்டாலும் அவ்வபோது பிரைவேட் ஈமெயிலகள் வருவதுண்டு

said...

agree with first commenter, i for one read your posts but never left a comment..
Please continue writing...

srini