அவன் வீட்டிலிருந்து சற்று நடந்து சரேலென்று ஒரு பள்ளத்தில் இறங்கினால் ஒரு நதி அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. உடனே கையிலிருந்த பாய்ண்ட் அண்ட் சூட் காமிராவில் கீழே உள்ள படத்தை பிடித்தேன்.
"என்னப்பா செய்வது ஏழைக்கு எற்ற எள்ளுருண்டை" என்றேன்.
அவன் என் காமிராவை பிடிங்கி 5 போட்டோகளை எடுத்தான்.
அதில் ஒன்று நார்மல் எக்ஸ்போஸர். இரண்டு அண்டர் எக்ஸ்போஸர் இரண்டு ஓவர் எக்ஸ்போசர் எடுத்துக் கொண்டான். 5 போட்டோகளையும் வைத்து HDR (Hi Dyanamic Range) rendering என்ற சாப்ட்வேரில் இணைத்தான். கிடைத்த ரிசல்ட் கீழே.

சாப்ட்வேர் முழுக்க முழுக்க அவன் கல்லூரியில் அவனின் நண்பர்கள செய்தது.
பின்னே சும்மாவா அவன் படிக்கும் கல்லூரிக்கு பில் கேட்ஸும் அப்துல் கலாமும் வந்து உரையாற்றுகிறார்கள்?