Friday, December 14, 2007

கிளிகளை கொஞ்சுவது எப்படி- துக்ளக் க்கு ஒரு பதில்

இந்த வார துக்ளக்கில் டெலிவிஷயம் என்ற பகுதியில் கீழ்கண்ட செய்தி வந்திருந்தது :

அடுத்த வீட்டு நாய்க்குட்டி !

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது குறித்து, ஒரு துண்டுச்செய்தி சன் நியூஸில் வந்தது. நாய், பூனை மட்டுமின்றி, முயலையும் கிளியையும் வளர்ப்போரைப் பற்றிக் கூடக் காட்டினார்கள். குழந்தைகளுக்குத்தான் இதில் வெகு ஆனந்தம். "என் டாமியைப் போல எங்கேயும் பார்க்க முடியாது' என்று சொல்லி, கொஞ்சிக் கொஞ்சி அதற்கு முத்தம் கொடுக்கிறார்கள். (நாய்க்கும் பூனைக்கும் சரி. கிளிக்கு எப்படி முத்தம் கொடுப்பார்கள்?)
வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்தால், இதய நோய் உள்ளவர்களுக்கு விரைவில் குணமாகும் என்று ஒரு நிபுணர் தெரிவித்தார். சில அபார்ட்மென்ட்களில் நாய் வளர்க்கக் கூடாதென்று கட்டுப்பாடுகள் இருப்பதாக ஒரு பிராணி நேசர் வருத்தப்பட்டார். அதற்கென்ன செய்ய முடியும்? செல்ல நாய் வளர்த்தால், இவருடைய இருதய நோய் வேண்டுமானால் குணமாகலாம். நாள் பூரா அதன் குரைப்பைக் கேட்டுக்கொண்டிருக்கும் அடுத்த போர்ஷன்காரர்களுக்கு, இருதய நோய் வரும் அபாயம் இருக்கிறதே!
The pessimist complains about the wind; the optimist expects it to change; the realist adjusts the sails – என்ற யதார்த்தத்தை உணர்ந்து, நாய் பூனை இல்லாத வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடி போக வேண்டியதுதான்.

இந்த மாதிரி சினிமா கிசுகிசு களையும் டெலிவிஷயம் போன்ற filler ஐட்டங்களை எழுதுபவர்கள் ஆங்கில கோட்களை சொல்லி முடிப்பது என்ன வழக்கம் என புரியவில்லை

அவர்கள் வழியிலேயே நாமும் ஒரு கொட்டேஷனை சொல்லி ஆரம்பிப்போம். நம்ம காந்திஜி என்ன சொல்லியிருக்கார்னா :

"The greatness of a nation and its moral progress can be judged by the way its animals are treated."


இதன்படி பார்த்தா அமெரிக்காவும், ஜப்பானும், கனடாவும் உலகில் மிக சிறந்த நாடுகள். இது ஓரளவு உண்மையும் கூட.

சரி பாய்ண்டுக்கு வருவோம். கிளியை கொஞ்ச முடியுமா? நிச்சயமாக முடியும்.

கிளிகள்தாம் பறவையினங்களில் ஒரு உன்னத இனம்.

இதன் உணர்ச்சிகள், அறிவுதிறன் அபாரமானவை. கிளிகள் பல சைஸ்களில் உள்ளன. உங்கள் உள்ளங்கையில் ஆனந்த சயனம் கொள்ளும் மிக சிறிய பாரட்லெட்டுகள் முதல் ஒரு சிறு நாய் குட்டி சைஸில் உள்ள மக்கா (Macaw) வரை பல சைஸ்களில் உள்ளன.

எல்லா கிளிகளையும் உங்கள் கையில் ஏந்தி உங்கள் உதட்டையும் அதன் அலகையும் ஒத்தி கொஞ்சலாம்.

அதற்கு முன் அதனுடன் உங்கள் பாசத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

என்னிடம் இருக்கும் நீமோவுடன் சென்று கொஞ்சும் குரலில் "நீமோ பேபி, குட்டி பேபி , ஐ லவ் யு உச்..உச்..உச்.. "என்றால் ஒடி வந்து அதன் அலகை நம் உதட்டோடு உரசி கொள்ளும். சில சம்யம் என் தாடியை அதன் அலகால் வருடி கொடுக்கும். அதைப் பார்க்கும் நீமோவின் ஜோடியான ரமோவிற்கு பொறாமை வந்து அதுவும் என்னை கொஞ்சும். கொஞ்சுவதில் இரண்டிற்கும் பலத்த போட்டி இருக்கும்.

சில கிளிகளிகளுக்கு முதுகை தடவினால் பிடிக்கும், சிலவற்றிற்கு மார்பை தடவினால் பிடிக்கும்.

பெரும்பாலன கிளிகளுக்கு தலையை தடவினால் மிக பிடிக்கும். இந்த தடவலில் கிளிகள் அடிமையாகி கொஞ்ச சொல்லி கெஞ்சும். மெதுவாக பொறுமையாக கிளிகளின் தலையை தடவிவிட்டால் போதும். பிறகு நாள் முழுவதும் கொஞ்சிக் கொண்டே இருக்கலாம்.

காக்கடூ என்ற வகை கிளியின் தலையை தடவி அனைத்துக் கொண்டால் நாள் முழுவது உங்கள் உடலிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும்., ஒரு அன்பான குழந்தையை போல.

வீட்டில் வளரும் கிளிகள் மிக சுத்தமானவை. வேளா வேளைக்கு குளித்து ஒரு வித சுகந்த நறுமணத்துடன் இருக்கும். நாயும் பூனையும் என்னதான் பற்பல ஷாம்பு , சோப்பு போட்டு குளிப்பாட்டினாலும் அதன் மேல் ஒரு வித துர்நாற்றம் இருக்கும். இந்த துர்நாற்றத்தை அந்த நாய்/பூனை குடும்பத்தினருக்கு தெரியாது.

துக்ளக் நிருபர் நாய் குரைப்பதை பார்த்து குறைப்பட்டிருக்கிறார். நன்றாக பழக்கிய நாய்கள் தேவையில்லாமல் குரைப்பதில்லை. வீட்டில் இயற்கை உபாதைகளை கழிப்பதில்லை. சுமார் 8 மணிநேரம் வரைக்கும் அது இயற்கை உபாதையை அடக்கிகொள்ளும். சில பூனைகள் வீட்டிலிருக்கும் டாய்லெட்டை உபயோகித்து விட்டு அதை ஃப்ளஷ் செய்கின்றன. இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்


இனி சில படங்கள் :


கீழே இருப்பது எங்கள் வீட்டில் இருக்கும் நீமோ (க்ரே கலரில் எட்டிப் பார்க்கும் கிளி) மற்றும் ரமோ






கிழே உள்ள வீடியோவில் ஒரு சின்னஞ்சிறு பாரட்லெட் செய்யும் குறும்பை பார்க்கவும்




இறந்து போவதாக வேடிக்கைக் காட்டும் சன் கனூர் வகை கிளி



மிக புத்திசாலியான ஆப்ரிகன் க்ரே வகை கிளிகள். சுமார் 300 வார்த்தைகள் வரை அதன் அர்த்ததுடன் புரிந்து கொள்ளும்


கீழே உள்ளது நம் இந்திய பச்சைகிளிகள். இவைகளும் பாசகார பசங்கதான்.


கீழே அமேசான் என்ற தென் அமெரிக்க கிளி ஒன்று கால்கரியில் ஒரு செல்ல ப்ராணிகளை விற்கும் கடையில் என்னைப் பார்த்து "hai guy.. " என அழைத்தது. கையில் எடுத்து தலையை தடவியவுடன் வீட்டிற்கு அழைத்து போ என் ஏக்கத்துடன் பார்த்தது. அதன் விலையைப் பார்த்து நானும் ஏக்கத்துடன் விட்டு விட்டு வந்துவிட்டேன் . அதன் விலை சுமார் $2000.

மடியில் குழந்தையை போல் கொஞ்சி விளையாடும் காக்கடூ வகை கிளிகள்









Sunday, December 09, 2007

ஜெனிபர் என் உற்ற தோழி.......

கடந்த ஒரு மாதமாக பல நகரங்களுக்கு சுற்றுலா. எல்லாம் தொழில் நிமித்தம்தான். கால்கரி போன்ற சின்ன ஊரில் குடும்பம் இருந்ததால் ஜெனிபரின் தேவை அவசியமில்லாமல் இருந்தது. அமெரிக்காவில் தன்னந்தனியே கும்மிருட்டில், பெரும்பாலும் இரவு நேரங்களில் ஜெனிபர் இல்லாமல் வழி தெரியவில்லை. ஜெனிபர் என் உற்ற தோழி, என் வழிகாட்டி, என் வயிற்று பசிக்கு வழிகாட்டுபவள், என் தேவைகளை வாங்க கடைகளுக்கு அழைத்து செல்வாள், பொழுது போக்க போதை ஏற்ற என பல இடங்களுக்கு வழிகாட்டுவாள். காலையில் சரியாக அலுவலகம் அனுப்பி ஆபிஸில் நல்ல பெயர் வாங்க வைப்பாள்.







என்னடா அமெரிக்காவில் வெள்ளைகாரியை செட்டப் செய்துவிட்டானா இந்த பாழாய் போன கால்கரி என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல..



இதோ என் ஜெனிபர்.......









இந்த ஜிபிஎஸ் தாங்க என் வழிகாட்டி. இதை காரில் பொறுத்தி ஏர்போர்ட்டிலிருந்து எந்த இடியாப்ப மேம்பாலத்தில் ஏறுவது என்ற கவலை வேண்டாம். வலது புறத்தில் 4 மைல் போய் திரும்பு, இடது புறம் ஆறாவது மைலில் இரண்டாம் தெருவில் திரும்பு சிறிது தூரம் போ வலபுறத்தில் பார் உன் ஓட்டல் என வழி சொல்லும்.

சரி பசியாக இருக்கிறதா ஜெனிபர் 5 மைல் சுற்றுவட்டாரத்தில் என்னன்ன ஓட்டல்கள் உள்ளன என்றால் ஜெனிபர் கபால் எனக் காட்டிவிடுவாள். இந்திய ஓட்டல்கள், இந்திய பலசரக்கு கடைகள், பெட்ரோ பங்குகள், ஏடிஎம் கள், சாப்பிங் சென்டர்கள், ஆஸ்பத்திரி, பார்க்கிங்கள் என சகலத்தையும் காட்டிவிடுவாள். இந்த விலாசத்திற்கு போக எந்த வழியில் போனால் சீக்கிரம் போகலாம், எந்த வழி மிக கம்மியான தூரம் என சொல்லுவாள். எந்த ரோட்டில் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள், எந்த வழியில் ட்ராபிக் அதிகம் என்பதையும் சொல்லுவாள், எந்த திசையில் பயணிக்கிறோம் எத்தனை வேகத்தில் பயணிக்கிறோம், எத்தனை மணிக்கு போய் சேருவோம் என்பதையும் சொல்லுவாள். எம்பி3 பாடல்களை இசைப்பாள், ப்ளூடூட்ல் உங்கள் போனை எடுப்பாள். மிக பெரிய நகரங்களில் கார் எந்த பார்க்கிங்கில் உள்ளது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்வாள்.

மொத்தத்தில் உற்ற தோழி இந்த ஜெனிபர்...

இந்த ஜிபிஎஸ் பிரயாணிகளுக்கு ஒரு வரப்ரசாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில்.

என்னங்க இந்த கிறிஸ்துமஸ் பர்சேஸ் ஜிபிஎஸ் தானே


Sunday, December 02, 2007

புஷ் பேட்டையில் கால்கரி

தந்தைக்கோ வயது 83. போரில் வெற்றிவாகை சூடி எதிரியை ஓட ஓட விரட்டியவர். இந்த வயதிலும் வானத்திலிருந்து பாராசூட்டில் குதிப்பதென்ன? ஓடியாடி வேலைப் பார்பதென்ன பேட்டி அளிப்பதென்ன..தனயனோ... அஞ்சா நெஞ்சன் எதிரிகளின் சிம்ம சொப்பனம்...எதிரிகளை வேட்டையாடி துவம்சம் செய்தவர். இவ்வீரமிக்க தலைவர்களின் ஊரான ஹூஸ்டனில் கால்கரியின் மாபெரும் பதிவாளாராகிய நான் வந்ததில் பெருமை அடைகிறேன்.

அடுத்த ஒரு வருடம் இங்குதான் வாழ்க்கை. என்னை வரவேற்க பெரிய புஷ் ஏர்போர்ட்டில் காத்திருந்தார் :)



நீங்க ஹூஸ்டனுக்கு வந்தாலும் உங்களையும் வரவேற்பார். பெரிய புஷ்ஷின் சிலை இங்கே உள்ளது.


கால்கரியில் -25 டிகிரி சி இங்கே +25 அருமையாக உள்ளது. அருமை..


பல மாதங்களாக வலைப்பதிவில் எழுத முடியவில்லை. அதனால் யாருக்கும் நஷ்டமில்லை யாரும் வருந்தவும் இல்லை. சில விஷயங்கள் என்னை வருத்தின.


கடந்த வருடங்களில் நான் எழுதிய அரேபிய அனுபவங்களில் நம் இந்திய உழைப்பாளிகளின் அவல நிலையை சொல்லியிருந்தேன். அதற்கு காரணமான அரபு நாட்டினரை ஏசியும் இருந்தேன். அவர்களின் அடிமை காலசாரத்தை சாடியுமிருந்தேன். அதற்கு பல முனை தாக்குதல் எனக்கு இணைய இஸ்லாமிஸ்ட்களிடமிருந்து வந்தன. உழைப்பவரின் வேர்வை தரையில் சிந்துமுன் ஊதியம் வழங்கும் உன்னத குடியினர் அரேபியர் என தங்களது எஜமானரை தாங்கியவரும் உண்டு.


ஆனால் நடப்பது என்ன?


தினம் தினம் இந்தியர்/தமிழர் இவர்களின் துயர செய்திகள், தற்கொலை செய்திகள், சம்பளம் தரவில்லை, உழைக்கும் இடத்தில் சேப்டி இல்லை. தொழிலாளர் போராட்டம் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்திய அரசாங்கத்திற்கோ அரபு அரசாங்களை கண்டிக்கும் மன தைரியமில்லை.


அரபுகளை வக்கலாத்து வாங்கியவர்கள் காணவில்லை. உழைப்பாளிகள் என்றதும் ஓடிவரும் சமூகநீதி காவலர்கள் எங்கே போனார்கள்.. ஐயா வாங்கய்யா எல்லாரும் சேர்ந்து கண்டிக்கலாம் அரபு அடிமை கலாசாரத்தை எதிர்க்கலாம்.



அடுத்து என்னை பாதிக்க வைத்தது. மலேஷிய இந்துகளின் போராட்டம். அவர்கள் இந்துகள் அல்ல தமிழர்கள் என சில வெண்தாடி வேஸ்ட்டின் சிஷ்ய கோடிகள் கூக்குரல் இடுகின்றனர்.


அமைதி மார்க்கத்தினரின் வாடிக்கை இதுதான். முதலில் சமூதாயத்தின் கீழ்தட்டில் இருக்கும் மக்களை அடிமை படுத்துவர்கள். மேல்தட்டில் உள்ள அறிவாளிகளான இந்துகளை பகைத்துக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் அவர்க்ளின் தயவு மலேஷியற்கு தேவை. பிறகு மெதுவாக மொத்தமாக எல்லாரையும் அரபு அடிமையாக்குவர். இது சரித்திரம் சொல்லும் உண்மை.


அங்கே மைனாரிட்டிகளின் வழிபாடு தளங்கள் தினம் தினம் இடிக்கபடுகின்றன. மலேஷியாவில் நடப்பது மைனாரிட்டி அடக்குமுறை. இதை இந்திய மைனாரிட்டிகள் உட்பட அனைவரும் எதிர்க்க வேண்டும்.


புஷ்பேட்டையிலிருந்து கால்கரி

Monday, June 04, 2007

எண்ணை வற்றிவிடுமா?

இதோ வந்துவிட்டேன் மீண்டும் எண்ணை மேல் அப்ஷசன் கொண்டுள்ள நான். இன்னும் 40 வருடம் தான், இன்னும் 100 வருடம்தான் பிறகு எண்ணை வற்றிவிடும் என சில பேர் பய முறுத்திக் கொண்டே இருப்பார்கள். மேலும் சிலர் இப்போது எண்ணை உற்பத்தி அதி உயரத்தில் இருக்கிறது இனிமேல் எண்ணை உற்பத்தி இறங்கியாக வேண்டும். அவ்வாறு உற்பத்தி இறங்கினால் எண்ணை விலை பீப்பாய்க்கு $150 க்கு மேல் உயரும். உலக பொருளாதாரம் சீரழியும் என பயமுறுத்துவார்கள். எப்படியிருந்தாலும் அரபு நாடுகள் பணக்காரர்களாக இருப்பார்கள். அதை வைத்துக் கொண்டு உலகை ஆளுவார்கள் என சில இஸ்லாமிஸ்டுகள் கனவுலகில் மிதப்பார்கள்.

ஆனால் மேற்குலகில் மாற்று ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்கள். எலட்ரிக் கார்கள், ஹைட்ரஜன் கார்கள், பயோ டீசல் என ஆரவாரத்துடன் ஆராய்சிகள் செய்பவர்கள் ஒரு பக்கம். அமைதியாக நிலத்தடியில் இருக்கும் எண்ணையை தேடி அலைபவர்கள் இன்னொரு பக்கம்.

அமெரிக்காவின் அலாஸ்காவிலும், ரஸ்யாவின் சைபீரியாவிலும், கனடாவின் வட மாநிலங்களிலும் உள்ள எண்ணைவளம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு போதுமானது, அந்த உறைபனியிலிருந்து எண்ணை எடுக்கும் தொழில் நுட்பம் கடந்த பத்து ஆண்டுகளில் நேர்த்தி செய்யப் பட்டுவிட்டன. உலக கூட்டு களவாணிகளான ஓபெக் நாடுகளின் பிடியிலிருந்து உலக எண்ணை விலை இன்னும் சில ஆண்டுகளில் விடுதலை பெறும். பிறகு இக்கூட்டு களவாணிகள் அமெரிக்க/சீன/இந்திய நாடுகளின் நுகர்வை நம்ப வேண்டியிருக்கும்.

கடந்த முப்பது வருடங்களாக கிடப்பில் போட பட்டிருந்த ஒரு பகுதியை அமெரிக்க கம்பெனிகள் மீண்டும் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் வடமேற்கில் இருக்கும் ராக்கி மலைகள் உள்ள கொலராடோவும் யுடாவும் (உச்சரிப்பு சரியா?) தான் அந்த பகுதி. ராக்கி மலைகளின் அடியில் உள்ள சுண்ணாம்பு கற்களில் எண்ணை உள்ளது. இந்த எண்ணையை எடுக்க அமெரிக்க கம்பெனிகள் கடந்த சில ஆண்டுகளாக பற்பல ஆராய்ச்சிகளை மேற்க் கொண்டுள்ளன. இந்த கற்களை சூடாக்கி எண்ணையை எடுப்பதா, இல்லை வேதிப் பொருட்களைக் கொண்டு எண்ணையை எடுப்பதா என சில ஆராய்ச்சிகள் நடக்கின்றன. 2005ல் இங்கிருந்து எண்ணை எடுக்க ஆகும் செலவு பீப்பாய்க்கு $70 என இருந்தது. இதை எப்படியும் $30 க்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதில் ஓரளவிற்கு ஷெல் (Shell) வெற்றியும் பெற்றுவிட்டது. ஆராய்ச்சி சாலையில் பெற்ற வெற்றி வணிக படுத்த இன்னும் 5 முதல் பத்து வருடங்கள் ஆகும். பிறகு அமெரிக்கா எண்ணை இறக்குமதியை அடியோடு நிறுத்தி எண்ணை ஏற்றுமதியை ஆரம்பிக்கும் !!!!.

அது சரி ஏன் தீடிரென்று இந்த பதிவென்று பார்ர்கிறீர்களா?

இந்த இரு மாநிலங்களில் உள்ள எண்ணையின் அளவு, கூட்டுகளவாணிகளான ஓபெக் நாடுகளின் மொத்த எண்ணை வளத்தை விட மிக அதிகம் :)

Wednesday, May 02, 2007

நீமோவின் துணை(வன்)(வி)

எங்கள் நீமோவிற்கு துணையாக ரமோ வீட்டிற்கு வந்தாகிவிட்டது. ரமோ 21/2 மாதக் குழந்தை. இன்னும் ஒரு ஆணிற்குறிய அடையாளங்களை காட்டவில்லை. பெண்ணாக இருக்க வாய்ப்புகள் அதிகம். பெண்ணாக இருந்தால் நீமோவின் தோழி, ஆணாக இருந்தால் தோழன்.

மரகதமும் வெண்மையும் பழுப்பும் கலந்த கலவை ரமோ. பயங்கர சுட்டி.
ரமோ வந்ததிலிருந்து நீமோ ஒரு சவலைக் குழந்தைபோல் இருக்கிறது. ரமோவிடம் பேசக்கூடாது, ரமோவை தூக்க கூடாது என்ற ஒரே அலம்பல் மற்றும் அடம் பிடிக்கிறது.

நீமோ மற்றும் ரமோ இவைகளுடன் வாழ்க்கை சுவாரசியமாய் உள்ளது.

Thursday, April 26, 2007

சில விளக்கங்கள்..மேலும் சில சந்தேகங்கள்....

நான் தமிழ்மணத்தை விட்டு விலகிவிட்டேன். இத்துடன் முடிந்தது கதை. இதனால் அவர்களுக்கும் நட்டமில்லை எனக்கும் நட்டமில்லை. மீண்டும் மீண்டும் மக்கள் வந்து பின்னூட்டங்கள் இடுவதினால் இந்த பதிவு

பரஸ்பர நம்பிக்கை இல்லாததால் நான் தமிழ்மணத்தை விலகினேன் என சொல்லியும் சிலர் சில வார்த்தைகளை வைத்து கடுந்தமிழில் எழுதி ஜல்லி அடிக்கிறார்கள்.

அவர்களுக்கு விளக்கம் இதோ:

தமிழ்மணம் Personal identity ஐ தந்திருப்பார்களோ என நேசகுமார் ஐயத்தினை கிளப்பினார்.

அதற்கு பதில் தமிழ்மணத்திடமிருந்து வந்தது : //எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்.//

இங்கே அவர்களின் செயல்பாடு என்பது Personal identity ஐ தருவது என அர்த்தம் கொள்ளவேண்டும்

எப்போதுமே இடம் பொருள் ஏவல் அறிந்து பேசவேண்டும். வார்த்தைகளை மட்டும் தனித்தனியே எடுத்துப் பார்த்தால் விகல்பம்தான் மிஞ்சும்.நான்

Personal identity ஐ தருவதையும் ஆட்சேபிக்கவில்லை, தார்மீக காரணம் என்றால் என்ன என்பதே என் கேள்வி.

என் கேள்விக்கு பதில் பரஸ்பர நம்பிக்கை என வந்தது.

அவர்களிடம் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் விலகிவிட்டேன்.


மேட்டர் ஓவர்.... ..

சில திரைமறைவில் நடந்தவைகளை இங்கே விளக்கவேண்டும்.

அனைவரும் நேசகுமாரின் இந்தப் பதிவை படித்திருப்பீர்கள்.

இதில் நேசகுமார் என்ன சொல்கிறார் என்றால் " இந்தப் பதிவை எழுதியபோதுதான் நண்பர்கள் கேட்டார்கள், இந்தப் புதிய (நேசமுடன்) பதிவை தேன்கூட்டில் இணைக்கவில்லையா என்று.
நான் இணைக்கவில்லை. அது போன்றே, தமிழ்.நெட்டில் யாரும் இணைத்தார்களா என்று தெரியவில்லை, நான் இணைக்கவில்லை. ஆனால், அங்கே தெரிகிறது என்பது அங்கிருந்து வந்து என் பதிவைப் படித்தவர்கள் சொல்லிய பின்புதான் தெரிந்தது.

தமிழ்மணத்தில் கூட நண்பர் ஒருவர் வற்புறுத்திக் கேட்டு எனது கடவுச்சொல்லை வாங்கி தமிழ்மண நிரலை இந்தப் பதிவில் இணைத்தார். பின்பும் நானாக முயன்று எனது எந்த பதிவையும் சேர்த்ததோ வகைப்படுத்தியதோ இல்லை. இன்றுவரை பின்னூட்ட பகுதியில் எனது பதிவு தட்டுப்படுகிறதா என்று கூட நான் தேடியதில்லை, கவலைப்பட்டதுமில்லை. தேவைப்பட்டால் நீங்களே ஐபியெல்லாம் கூட பார்த்து இது சரியா தவறா என்று தெரிந்து கொள்ளலாம்.

அந்த நண்பர் நான் தான் !!!!...... அவரிடம் கடவுசொல்லை வாங்கி தமிழ்மண கருவிப்பட்டையை இணைக்காலம் என நினைத்தேன். அதற்கு முன் தமிழ்மண முகப்பில் உள்ள உரலை இட என பெட்டியில் நான் இணைத்தேன். தமிழ் மணம் இதை ஏற்றுக் கொண்டு அவரின் பதிவை காட்டியது.

இதற்கு பிறகு நான், அரவிந்தன், ஜடாயு, ம்யூஸ் மற்றும் வஜ்ரா தமிழ்மணத்திலிருந்து வெளிவருகிறோம்.

அதற்கு பின் ஸ்பெஷல் ஆப்பு பதிவில் பின்கண்ட செய்தி வருகிறது.


அரவிந்த நீலகண்டனின் சகோதரன் பெயர் நம்பி மெய்கண்டன்.
இந்த நாய் 23/12, # 4, 5th Main Road, Kasurba Nagar Adyar, hennai, Tamil Nadu 600020 என்ற முகவரியில் ப்ளாஸ்மா கன்சல்டன்சி வைத்து இருக்கிறான். அந்த நாயின் ஈமெயில் முகவரி
nambi@vsnl.com
ப்ளாஸ்மா கன்ஸல்டன்சிக்கும் நீலகண்டனுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தால் இன்னும் நாற்றம் அதிகமாகும். பல அதிர்ச்சிகள் வெளியாகும். இதுபற்றி இன்னொரு நாளில் எழுதுவேன். ஆனால் இந்த கம்னாட்டி நாய் காக்கி அரை டிராயரைப் போட்டுக்கொண்டு பாப்பான்களோடு சேர்ந்து RSS வாழ்க என கத்திக்கொண்டு இருக்கிறான்.


இன்னுமொரு முக்கிய செய்தி. செளராஸ்டிர ஜாதியில் பிறந்த கால்கரி சிவா என்பவனிடம் அரவிந்தன் நீலகண்டன், நேசகுமார் ப்ளாக்குகளுக்களின் பாஸ்வேர்டு உள்ளது. அவனே பின்னூட்டங்களை கனடவிலிருந்து அனுமதிக்கிறான்.

இந்த செய்தி வந்த பிறகு நான் முதலில் செய்தது என்னுடைய ISP Provider ஐ கூப்பிட்டு என்னுடைய கணிணியை யாரவது ஹாக் செய்கிறார்களா என கேட்டன். அவர்களும் பல டெஸ்ட்களை செய்துவிட்டு இருநாட்கள் கழித்து என்னுடைய கம்யுட்டரை அக்ஸஸ் செய்தவர்களின் லிஸ்டை தந்தார்கள். அந்த லிஸ்ட் சாதரணமானதுதான் சந்தேகபடும் படியான அக்ஸஸ் யாரும் செய்யவில்லை .

என் சந்தேகம் இப்போது என்னவென்றால் "எனக்கும் நேசகுமாருக்கும் தமிழ்மணத்திற்கும் மட்டும் தெரிந்த விஷயம் ஆப்பிற்கு எப்படி கிடைத்தது?.

மூன்று பாஸிபிளிட்டீஸ்:

ஆப்பு என்பவர் நானாக இருக்கவேண்டும்

அல்லது நேசகுமாராக இருக்கவேண்டும்

அல்லது தமிழ்மண நிர்வாகத்தில் இருக்கவேண்டும்.

இவைகள் என் ஊகங்கள்தான்.... சந்தேகங்கள்தான்.....

எனது ஆய்வுகள் தொடரும்...

என்னுடைய ஐபி அட்ரஸ் என்ன என்னுடைய போஸ்டல் அட்ரஸ்கூட தர தயார்

ஆட்டோ ஆஸிட் கத்திவெட்டு என்ற பயமில்லை.

என்னுடைய கருத்து சுதந்திரத்திற்காக நான் போராட ரெடி ஏனென்றால் பத்துவருடங்கள் அரேபியாவில் அடிமை வாழ்க்கை வாழ்ந்தவன் நான். ஆகையால் என்னால் சுதந்திரத்தை நன்றாகவே அனுபவிக்க முடியும். அதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க எனக்கு உத்தேசமில்லை.

Thursday, March 29, 2007

இளசுகளை ஊக்குவித்த பெருசுகள்

நான் வாழும் Alberta மாநிலத்தின் ப்ரொபெஷனல் அசோஷியனின் பெயர் The Association of Professional Engineers, Geologists and Geophysicists of Alberta (APEGGA). இங்கே சாதரணமாக பி.ஈ அல்லது பி.டெக் படித்துவிட்டால் தங்களை எஞ்ஜினியர் என அழைத்துக் கொள்ள முடியாது. APEGGA வில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு ப்ரஸ்ஸர் நான்கு வருடங்கள் EIT (Engineer-in-Traning) ஆக இருக்க வேண்டும் . பின்னர் Professional Ethics என்ற நன்னடத்தை பரீட்சை எழுதி பாஸ் செய்யவேண்டும், தாங்கள் வேலைப்பார்த்த கம்பெனிகளிடமிருந்து நல்ல ரெபரன்ஸ் இருக்க வேண்டும். இத்தனையும் இருந்தால் தான் Professional Engineer என்ற பட்டத்தை தருவார்கள்.

அந்தப் பட்டம் கிடைத்த பிறகு பெயருக்கு பின்னால் P.Eng. போட்டுக் கொள்ளலாம், எஞ்ஜினியர் என அழைத்துக் கொள்ளலாம். அடியேனுக்கு அந்த பட்டம் கிடைத்து விட்டது.

APEGGA வும் University of Calgary யும் சேர்ந்து நடத்திய விழாவில் பங்கு கொள்ள நேற்றைக்கு எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் என்னை போன்ற பெருசுகளிடம் பேசி எஞ்ஜினியர் வேலை எத்தகைய்து என அறிந்து கொள்ள அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம்.

சுமார் 50 பெருசுகளும் 300 சிறிசுகளும் 50 ஆசியர்களும் கலந்து கொண்ட நிகழ்சி. இதுவே மாணவர்களின் ஆண்டு விழாவாகவும் கொண்டாடப் பட்டது.

வெளிநாட்டு கல்லூரி விழாவில் நான் கலந்து கொள்வது முதல் முறை. மிக வித்தியாசமாக இருந்தது.

ஆங்கிலத்தாய்/ப்ரெஞ்ச் தாய் வாழ்த்து /இறைவணக்கம் இல்லை. விழாவின் தலைவர் வருகைக்கு கட் அவுட்டுகள், தலைவர் இதோ வந்துவிட்டார், வந்து விடுவார், வந்து கொண்டே இருக்கிறார் என்ற அறிவிப்புகள் இல்லை. விழாவின் மையப் பேச்சாளார் அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி. சுமார் 32 வயது நிறம்பியவர். சர்வதேச மோட்டார் சைக்கிள் ரேஸ் இஞ்ஜினியர். உலக மோட்டார் சைக்கிள் ரேஸ் வட்டாரத்தில் புகழ் பெற்றவர். தான் கலந்து கொண்ட பந்தயங்கள், சென்ற நாடுகள், புகழ் பெற்ற வீரர்கள், அவரை ஸ்பான்ஸர் செய்த கம்பெனிகள் என பவர் பாய்ண்டில் படம் காட்டி பேசி கொண்டே போனார். எனக்கு சிறிது அலுப்புத் தட்டியது. என்ன ஓவர் அலம்பல் ஆக இருக்கே என. பிறகு அவர் மோட்டர் சைக்கிள் ரேஸ் எஞ்ஜினியரிங்கள் உலகத்தில் முதுகலை பட்டம் அளிக்கும் கல்லூரி ஸ்பெயினில் இருப்பதாக குறிப்பிட்டார். சிறிது சுவாரசியம் வந்தது. இதற்கெல்லாம் பட்டம் அதுவும் முதுகலை என்பது ஆச்சரியமல்லவா. அந்தக் கல்லூரியில் அவருக்கு இடமும் கிடைத்துள்ளது என்பதையும் தெரிவித்தார். முத்தாய்ப்பாக "உங்கள் ஆசை எதுவோ அதில் உங்களை தொழிலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதாவது உங்கள் ஹாபி எதுவோ அதுவே உங்கள் காரியர் ஆக்கி கொள்ளுங்கள். அப்போதுதான் தினம் தினம் காலையில் உற்சாகமாக அலுவலகத்திற்கு செல்லுவீர்கள். உங்கள் வேலை உங்களின் மன உற்சாகத்தையும் தருவதால் நிச்சய வெற்றி உங்களுகுண்டு. நீங்கள் என்னவாக நினைக்கிறீர்களோ அதுவாக ஆகுங்கள்" என முடித்தார். நல்ல பேச்சு.

பிறகு மாணவர்கள் தாங்கள் ஒருவருடத்தில் செய்த அசட்டுதனங்களை வீடியோ போட்டுக் காட்டினார்கள்.

வித்தியாசமாக மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.

நான் அமர்ந்திருந்த டேபிளில் ஒரு சீன இஞ்ஜினியர், இரண்டு வெள்ளைக்கார ஆசிரியர்கள், ஒரு சிங்கள மாணவன், ஒரு பிலிப்பினோ மாணவி மற்றும் ஒரு பங்களாதேச மாணவி அமர்ந்திருந்தனர். சர்வதேச அரங்கில் வேலை செய்வது எப்படி இருக்கும் என என் அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். அருகிலிருந்து டேபிளிலிருந்து ஒரு வெள்ளைக்கார இளஞர் கலந்து கொண்டார். "இஞ்ஜினியர் ஆனால் அதிக பணம் சம்பாதிக்க முடியுமா?" எனக் கேட்டார்.

80களில் இந்தியாவில் ப்கழ் பெற்று இருந்த வசனத்தை சொன்னேன். அது "40 வயதிற்குள் 40 லட்சம் சம்பாதிக்க வேண்டும்" என்பதே. அவர் "சம்பாதித்தீர்களா" என கேட்டார். நானும் "ஆம் சம்பாதித்தேன் ஆனால் நான் எதிர்பார்த்ததை விட 21/2 மடங்கு அதிகம் சம்பாதித்தேன்" என்றேன். அவன் கண்களில் எதிர்காலத்தைப் பற்றிய கனவு விரிந்தது.

அப்போது அந்த பங்காளாதேசத்துபெண் " இப்போது பொருளாதாரம் நன்றாய் இருக்கிறது. அதனால் எல்லாருக்கும் வேலைக் கிடைக்கிறது. ரிசஷன் காலங்களில் எஞ்ஜினியர்களுக்கு வேலை போய்விடுமே" என்றார்.

"கனேடிய P.Eng. களுக்கு சர்வதேச அரங்கில் நல்ல மதிப்பு இருப்பதால் உலகில் எங்கே பொருளாதாரம் நன்றாக இருக்கிறதோ அங்கே வேலைக்கு போங்கள். கடந்த 23 வருடங்களாக நான் வேலையை இழக்கவில்லை." என்றேன். அந்த பெண்ணின் கண்களிலும் ஒளிமயமான எதிர்காலம் தெரிந்தது.

பெருசுகளாகிய நாங்கள் சிறுசுகளுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை ஏற்றிவிட்டு வெளி வரும் நேரத்தில் சிறுசுகள் ஒளிமயமான எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

வாழ்க சிறுசுகள்

Thursday, March 15, 2007

சில செய்திகள்

1. பாகிஸ்தானிய தீவிரவாதி "நான் தான் எல்லாம் செய்தேன்" என ஒப்புதல் வாக்குமூலம். சவூதியை சேர்ந்த ஒசாமா பின் லாடன் பணம் தந்தார் என்றான் (புஷ் பாகிஸ்தான் தீவிரவாத போரில் ஒரு நண்பன் என பெருமிதம். தீவிரவாதத்தை ஒழிப்பதில் சவூதியின் பங்கு பெரிது என பாராட்டு - இது வருங்கால செய்தி)

2. கனடாவின் மக்கள் தொகை G-8 நாடுகளில் அதிக வளர்ச்சி. இன்னும் மக்கள் தொகை அதிகமாக வேண்டும் என அரசியல்வாதிகள் மக்களை கேட்டுக் கொண்டனர். மக்கள் தொகை 3.2 கோடியாக உயர்ந்தது (தமிழக மக்கள் தொகை மட்டும் 6.2 கோடி. கனடாவின் பரப்பளவு இந்தியாவின் பரப்பளவை விட சுமார் 7 மடங்கு அதிகம்)

3. தொப்பை உள்ள ஆண்களுக்கு மனநோய் வரும் வாய்ப்பு கம்மியென்று ஆய்வு முடிவுகள தெரிவிக்கின்றன- சி என் என் செய்தி (தொப்பை வளர பீர் குடிப்போம் மன நோயை தவிர்ப்போம்)

4. கருக்கலைப்பு தவறு, கர்ப்பதடை தவறு, பாதிரியார்கள் பிரம்மாசாரியத்தை கடைப்பிடிக்வேண்டும் என போப்பாண்டவர் மீண்டும் வலியுறுத்தல் (மக்கள் தொகையை கட்டுபடுத்த இளம் வயது கத்தோலிக்கர்கள் பாதிரியார் ஆவதை தவிர வேறு வழியில்லை என புலமபல்)

5. ஆன்மிக சிந்தனைக்கு பரிசு $1.5 மில்லியன்கள். கனடாவை சேர்ந்த ஆன்மிக தத்துவஞானி சார்லஸ் டெயல்ர்க்க்கு கிடைத்தது ( ஆசையை அழியுங்கள் என சொன்னவருக்கு கிடைத்து பரிசு நல்ல காரியங்களுக்கு பயன்படும். ஆனால் 1.5 மில்லியன் கிடைக்கும் என ஆன்மிகத்தில் இறங்கினால் விபரீதம் ஏற்படும்.)

6. ஈரான் மேல் பொருளாதார தடைவிதிக்க 6 நாடுகள் சம்மதம் ( ஆனால் ஈரான் அதிபர் குரங்கு மார்க் அணுகுண்டை வெடித்தே தீருவேன் என சூளுரை)

7. பழைய பேப்பர், பாட்டில்கள், கேன்களை ரீசைக்கிள் செய்ய மாதம் $21 மக்கள் கொடுக்கவேண்டும் என கால்கரி முனிஸிபாலிடி முடிவு.( அடபாவிங்களா சென்னையில் இந்த ஐயிட்டங்களை மாதக் கடைசியில் விற்று பீர்-பிரியாணி சாப்பிடுவோம்டா என டெபுடேஷனில் கால்கரிக்கு வந்த சாப்ட்வேர் இளைஞர்கள் புலம்பல்)

8. பாரத பிரதமர் வீட்டின் மேல் பறக்கும் தட்டுகள் காணப்பட்டன (நாம் நம் கணவனை நோக்கி வீசிய தட்டுகள் அவ்வளவுதூரம் எப்படி போயின என மனைவியர் கலக்கம்)

9. The Hindu வின் கருத்துக்கணிப்பிற்கு மாறாக சமீப தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியதற்கு காரணம் காங்கிரஸ் மேலிருந்த இந்துக்களின் கோபம் என கண்டுபிடிப்பு ( இனி சோனியா காந்தி ரூ 5,000 தந்து இந்துவாக மாறுவார் என நம்பதகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. கருணாநிதி சாய் பாபவிற்கும், அமிர்தானந்தமயிக்கும் எவ்வள்வு தந்தார் என்பதை தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள் அன்னை சோனியாவிற்கு அறிக்கைகள் சமர்பித்தனர். தென்னாப்ரிககாவிலிருந்து அமேசான் நதி நீரை கொண்டுவர சாய்பாபா உதவினால சோனியா மீண்டும் பிரதமர் ஆவது உறுதி என அந்த அறிக்கைகள் கூறின)

Friday, March 09, 2007

சாப்ட்வேர் எஞ்ஜினியர்ஸ் நோ டென்ஷன் ப்ளீஸ்

பொன்ஸின் இந்த பதிவு இதை எழுத தூண்டியது. அலுவலகத்தில் அதிக நேரம் தங்கி வேலைப்பார்ப்பதை பற்றி நல்ல கருத்துப் பரிமாற்றம் நடந்துள்ளது.

இந்த மாதிரி அதிகநேரம் அதிகம் தங்கி இருக்கும் மனப்பான்மை எங்கிருந்து தோன்றியது எனப் பார்த்தால் பள்ளியிலேயே ஆரம்பித்து விடுகிறது. முதல் ராங்க் வாங்கும் மாணவனும் 6 மணிநேரம் பள்ளி 6 மணிநேரம் டியூசன் என போவான். ஐஐடி கோச்சிங் அந்த கோச்சிங் என மேலும் மேலும் தன்னை வருத்திக்கொள்வான்.

கல்லூரி போனதும் அங்கேயும் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடிஸ், ஜி ஆர் ஈ, டோபல், சாப்ட்வேர் கம்பெனிகளின் எண்ட்ரன்ஸ் டெஸ்ட் பிரிபரஷன், அடிஷனல் சாப்ட் வேர் பயிற்சி என ஓயாத ஓட்டம்.

வேலைக்கு சேர்ந்ததும் டிரெய்னிங் அதில் முதல் ராங்க் வாங்க ஓட்டம். அதன் பிறகு வேலைக்கு வந்ததும் ஒரு வேலையை தந்தால் அந்த டெக்னாலஜி தெரியாவிட்டால் தனக்கு தெரியாது என சொல்பவர்கள் எத்தனை பேர்?

"சார்... சார்... எனக்கு எல்லாம் தெரியும் சார்" என மார்தட்டுபவர்கள்தான் அத்தனைபேரும்.

வேலை வந்தபிறகு அந்த டெக்னாலஜியைக் கற்றுக் கொண்டு பிறகு வேலை செய்யவேண்டும். ப்ராஜெக்ட் மானேஜர் வேறு அப்பர் மானெஜ்மெண்டிடம் ஒரு ambitious டார்கெட்டை கொடுத்திருப்பார். இதனால் தான் மக்கள் லேட்டாக தங்கி வேலை செய்ய வேண்டியுள்ளது.

இங்கே ஒரு வெள்ளைக்காரனை ஒரு புது டெக்னாலஜியில் வேலை செய்ய சொன்னால் அவனுக்கு முதலில் அதில் பயிற்சி அளிக்கவேண்டும் அதன் பிறகுதான் வேலையை ஆரம்பிப்பான். அவன் சொல்லும் கால அளவு இந்திய ப்ராஜெக்ட் மானேஜர்கள் சொல்லும் கால அளவைவிட 4 மடங்கு அதிகம் இருக்கும். ஆனால் வேலைத்தரமாக இருக்கும் முழுமையாகவும் இருக்கும்.

இந்தியகம்பெனிகள் ஆழம் பார்க்கால் காலை விட்டுவிட்டு பிறகு இரவுபகல் பாடுபட்டு வேலைப்பார்ப்பது வழக்கமாகிவிட்டது.

"இந்த வயசில் வேலை செய்யாவிட்டால் எந்த வயசில் வேலை செய்ய்முடியும் அட்ஸஸ்ட் பண்ணிக்கிருங்க சார்" என்ற மெண்டலிட்டிதான் நம் ஆட்களின் எல்லா கஷ்டங்களுக்கும் காரணம்

Thursday, March 08, 2007

பன்னாட்டு கம்பெனிகளில் பார்ட்டி கலாசாரம்

சமீபத்தில் சாப்ட்வேர் இஞ்ஜினியர்கள் குடித்து போதை மாத்திரை சாப்பிட்டு விட்டு செக்ஸ் பார்ட்டிகளில் கலந்து கொண்டு கைதானர்கள் என்ற செய்தியை வைத்து இரண்டு பதிவுகள் வந்துவிட்டன.

கடந்த 23 வருடங்களில் 18 வருடங்கள் (5 வருடங்கள் அரபு கம்பெனி) 2 மேலை நாட்டு கம்பெனிகளில் பணிபுரிந்தவன் என்ற வகையில் என் அனுபவங்கள் :

1980களில் இந்தியாவில் பன்னாட்டு கம்பெனிகள் 5 நட்சத்திர ஓட்டல்களில் பார்ட்டியை வைப்பார்கள். இந்த மாதிரி பார்ட்டிகள் வருடத்திற்கு ஒரு முறை நடக்கும். இது வழக்கமாக புத்தாண்டு/கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியாக இருக்கும். சில பார்ட்டி கேம்கள், பீர் முதல் விஸ்கி வரை இருக்கும். இங்கே குடித்துவிட்டு ஆட்டம் போடுபவர் மிக மிக கம்மி. அவ்வாறு ஒருவர் செய்தார் என்றால் அவரின் வேலை ஆட்டம் காணும் அல்லது அவரது வேலை ஆட்டம் கண்டிருக்கும். பெண்கள் கம்மி இந்த காலகட்டங்களில் அவர்கள் குடித்து பார்த்ததில்லை.

கஸ்டமர் எண்டெர்டெய்ண்மெண்ட் பார்ட்டிகள் அதிகம் இருந்தன. இதில் குடித்து ஆட்டம் போட்டவர்கள் கஸ்டமர்களே. கவனிக்கவும் கஸ்டமர்கள் அனைவரும் பாரத நாட்டின் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள். சில ஜட்ஜ்களும் உயர் போலீஸ் ஆபிஸர்களும் மிகக் கீழ்தரமாக நடந்து பார்த்திருக்கிறேன். ஜட்ஜூகள் போலீஸ் அதிகாரிகள் பப்ளிக் இடங்களுக்கு வரமாட்டார்கள். ஆனால் போட்கிளப், ஜிம்கானா கிளப் போன்ற கிளப்களுக்கு வருவார்கள்

1990 களில் பார்டிகளின் அளவு எகிறியது. ஒவ்வொரு புராஜெக்ட் வெற்றிக்கும் பார்ட்டிகள் நடந்தன. பெண்கள் அதிகமாக வேலை செய்ய வந்தனர். அவர்களில் மிக சிலர் மறைவாக குடித்தனர். ஆபிஸில் காதலும் பாலுறவு தொடர்பும் வதந்திகளகாவே இருந்தது. இந்த காலகட்டத்தில் பன்னாட்டு கம்பெனிகள் லோக்கல் கலாசாரத்தையும் ஏற்றுக் கொண்டனர். தீபாவளி மற்றும் ஆயுத பூஜைகள் விமரிசையாக கொண்டாடப்பட்டன.

2000 களில் சரிபாதி பெண்கள் இருந்தனர். அலுவலகம் பாலுறவு தொந்தரவுகளை மன்னிக்கவில்லை. சம்பந்த பட்ட ஆணோ பெண்ணோ வேலையை இழந்தார்கள். ஆனால் காதல் ஆங்கீகரிக்கபட்டது.

நான் ஒரு பெண்ணை நேர்முக தேர்வு செய்து அவளுக்கு வேலை தந்தவுடன் அவள் என்னிடம் வந்து என்னுடைய காதலனும் இண்ஸ்ட்ருமெண்ட் இஞ்ஜினியர் அவனை வேலைக்கு எடுப்பீர்களா என கேட்டாள். உன்னுடைய காதலன் தகுதியானவன் என்றால் வேலைதருவதில் சிரமமில்லை என்றேன். பின்னர் அவளின் காதலனும் என்னுடைய அலுவலகத்தில் சேர்ந்தார். இரண்டு வருடங்களுக்கு பிறகு அவர்கள் திருமணம் நடந்தது. பெண் நெல்லூர் ஆண் லக்னோ.

கள்ளக் காதல்கள் வதந்திகளாகவே இருந்தது.

இங்கே கால்கரியில் மாதம் ஒரு முறை பீர் பார்ட்டி அலுவலகத்திலேயே உண்டு. ஆண்களும் பெண்களும் கலந்துக் கொண்டு ஜாலியாக பேசிவிட்டு குடித்துவிட்டு செல்வர். 2 கேன்களுக்கு மேல் குடித்துவிட்டால் வீட்டிற்கு போக வர டாக்ஸி டோக்கனும் கொடுத்துவிடுவார்கள் இங்கே.

இந்திய கம்பெனிகள் அதாவது இந்திய அரசாங்க கம்பெனிகள் இந்த மாதிரி பார்ட்டிகளை தருவதில்லை. ஆனால் மக்கள் பாருக்கு செல்லாமலா இருக்கிறார்கள். மது அருந்துவது ஒரு பொழுது போக்காக டென்ஷனை குறைக்கும் வழியாகிவிட்டது. அது கம்பெனியே வழங்கி மக்களை குஷி படுத்துகிறது. மதுவை குடித்தே ஆக வேண்டும் என யாரும் வற்புறுத்தவில்லை. அப்படியே மது குடிப்பவர்கள் 20 முதல் 25 % தான் மீதமுள்ளவர்கள் சைட் டிஷ்ஷை சாப்பிடுவதற்கும் பாஸை ஐஸ் வைப்பதற்கும் வருபவர்கள்

போதை மருந்து உட்கொள்வது மற்றும் கூட்டு பாலுறவு போன்றவை வெளிநாட்டிலும் நார்மலான வாழ்க்கை வாழ்பவர்கள் செய்யவில்லை.

ஆயிரகணக்கான பேர்கள் வேலை செய்யும் இடத்தில் ஒரு சிறு சதவிகிதம் இந்த மாதிரி கெட்ட கொண்டாட்டங்கள் செய்வது ஒன்றும் ஆச்சரியமான செய்தி அல்ல.

Tuesday, March 06, 2007

ரிசர்வேஷனின் பரிணாம வளர்ச்சி

மத்திய 80களில் ரிசர்வேஷன் என்பது அநியாயமாக இருந்தது. ஒவ்வொரு ஊருக்கு ஒரு அளவில் ரிசர்வேஷன் . சின்ன ஊர்களுக்கு மிக சிறிய கோட்டா. பணக்காரங்களுக்கு ஈசியாக ரிசர்வேஷன். என்ன அநியாயம்ன்னா பணக்காரனாய் இருந்தால் ராஜ மரியாதையாக ரிசர்வேஷன். ரிசர்வேஷனின் பலனை அனுபவிக்க மக்கள் பட்ட பாடு இருக்கே அப்பா பயங்கரம். அந்த இடமே ஒரே புழுக்கம், வேர்வை நாற்றம் எனக் கூட்டம் அலை போதும்.




அட ......நான் ரயில்வே ரிசர்வேஷனைப் பற்றி பேசறேன்.


அந்த காலத்திலே பாண்டியனுக்கு ஒரு லைன், வைகைக்கு ஒரு லைன், ப்ர்ஸ்ட் கிளாஸுக்கு ஒரு லைன் படா பேஜாராய் இருக்கும். இந்த ரிசர்வேஷன் பண்ற நேரத்துக்குள்ளே கே.பி. டிராவல்ஸ் பஸ்ஸை பிடிச்சி ஊருக்கே போயிடலாம்.

என் நண்பர் ஒருவர் சி எம் சி என்ற கவர்மெண்ட் கம்பெனியிலே வேலை பார்த்துகிட்டு இருந்தார் அப்போ. அவர் வந்து கதை கதை யாய் சொல்லுவார். கம்யூட்டர் ரிசர்வேஷன் சாப்ட்வேர் பற்றி. முழு சாப்ட்வேரும் போர்ட்ரானில் எழுதினார்கள் முதலில் என்பார். சென்னை, பம்பாய், டில்லி மற்றும் கல்கத்தா நகரங்களில் உள்ள கம்யூட்டர்களை இணைக்க போவதாய் சொல்லுவார். நாங்களும் வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருப்ப்போம்

அங்கிருந்து ஆரம்பித்தது நிற்கவே இல்லை. இப்போது ரயில்வே டிக்கட்டை வீட்டிலிருந்த படியே புக் செய்யலாம். சில சமயம் நான் கனடாவிலிருந்து என் தாயாராக்கு ரயில்வே ரிசர்வேஷன் செய்திருக்கிறேன்.

இதை ஆரம்பிக்கும் போது எத்தனை தடைகள். செங்கொடி தொண்டர்கள் முதலில் கம்யூட்டர் வந்தால் ஆள் குறைப்பு ஏற்படும் என்று கொடி தூக்கினார்கள்.

நடந்தது என்ன?

எந்த கவுண்டரிலும் எந்த டிரயினுக்கும் எந்த கிளாஸுக்கும் ரிசர்வேஷன் செய்யலாம் என சமத்துவம் வந்தது.

ஏஜெண்டுகள், லஞ்சம் பெருமளவு குறைந்தது.

எந்த ரயிலில் எந்த வகுப்பில் எந்த தேதியில் எவ்வளவு இருக்கைகள்/படுக்கைகள் உள்ளன என்பது மிக துல்லியமாக மக்கள் அறிய முடிகிறது.

இப்போது எந்த ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்ற தகவலையும் தருகிறார்கள்.

எஸ் எம் எஸில் கூட ரயில்வே பற்றி அறிய முடிகிறது...

எத்தனை எத்தனை மக்கள் பயன் பெற்றார்கள்.

ஆக மொத்தம் ரயில்வே ரிசர்வேஷன் செய்வது ஒரு இன்ப அனுபவமாகவே உள்ளது.

சாபஷ்டா... சாப்ட்வேர் இஞ்சினியா..... உன் பணி தொடரட்டும்

Tuesday, February 27, 2007

AC-360


நேற்று ஆண்டர்ஸன் கூப்பரின் AC-360 நிகழ்ச்சியில் கணிசமான இடத்தைப் பெற்றது இரண்டு செய்திகள்

முதல் செய்தி இயேசு குடும்பத்தாரின் கல்லறைப் பற்றிய ஜேம்ஸ் காமரூனின் ஆவணப்படம். எழிலும் இதைப் பற்றி இரண்டு பதிவுகளை பதிந்துள்ளார். இந்த படம் கிருத்துவத்தின் ஆணி வேரை அசைக்கும் அளவிற்கு செய்திகள் கொண்டவை என விவாதித்தார்கள். இந்த விவாதத்தில் மத குருமார்கள், விஞ்ஞானிகள், நிருபர்கள் பங்கு கொண்டனர். விவாதம் ஒரு அறிவாளித்தனத்துடன் நடந்தது. இது இயேசுவின் எலும்பா? இதனால் கிருத்துவம் ஆட்டம் காணுமா என்பதில் என் கருத்து எதுவும் இல்லை. ஆனால் மக்கள் அதை எதிர்கொண்ட விதம் என்னை பொறாமை கொள்ள செய்தது. அமைதியாகவும் காரசாரமாகவும் விவாதித்தார்கள் வன்முறை வெடிக்கவில்லை.

ஆனால் நம் நாட்டில் ஜட்டியில் ராமர் படம் போட்ட பிரான்ஸ் கம்பெனிக்கு எதிர்ப்பு தெரிவித்து நம் நாட்டின் பஸ்ஸை உடைப்பார்கள்.

இஸ்லாமிஸ்டுகளுக்கு சொல்லவே வேண்டாம் முகமதுவின் படத்திற்கு செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமா? கடைசியில் என்ன நடந்தது எல்லாரும் அந்த படத்தைப் பார்த்தார்கள்.

டாவின்சி கோட் படத்தை தடை செய்தது நம் மத சார்பற்ற அரசு ஆனால் அதன் டிவிடி விற்பனையை உயர்த்தி கொள்ளை லாபம் சம்பாதித்தென்னவோ இதே அரசியல் வாதிகள்தான்

சரி, கிறிஸ்துமஸ் போதும் ஈஸ்டர் போதும் இந்த மாதிரி படங்கள் ஏன் வருகின்றன? எல்லாம் பணத்திற்கு தான். இந்த நேரங்களில் மக்கள் இயேசுவை நினைப்பார்கள் அப்போது இந்த மாதிரி படங்களை வெளியிட்டால் மில்லியன்களை சுலபமாக தேற்றலாம்.

இராண்டாயிரம் வருட இரண்டு பில்லியன் மக்களின் நம்பிக்கையை இந்த மாதிரி படங்கள் மாற்ற போவதில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது.

ஆனால் இந்த மாதிரி விவாதங்கள் அவசியம் என்பது என் அபிப்ராயம் . உண்மைகளை அறிய மனித மனம் மேற்கொள்ளும் ப்ரயத்தனங்கள் எத்தனை.... எத்தனை.......


அடுத்த செய்தி மாவீரன், பேட்டை ரவுடி, கூலிக்கு மாரடிக்கும் முஷாரப்பைப் பற்றியது.


இது சற்று வீரமானது.

இதுவரைக்கும் 10 பில்லியன் டாலர்களை தந்துவிட்டோம் இந்த முஷாரப் ஏன் இன்னும் தீவிரவாதிகளை டெலிவரி செய்யவில்லை என சட்டையை பிடித்து கேட்கிறது இந்த ரிப்போர்ட்.

நம் தோழர் என்கிறோம், அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்த நாட்டை அவ்வளவாக நாம் கண்டிப்பதில்லை, பில்லியன்களை கொட்டி உதவுகிறோம் ஆனால் தீவிரவாதிகளை இவர்கள் நாட்டில் இன்னும் சகல வசதிகளுடன் வாழ்கிறார்கள். நம் வரிப்பணத்தில் இவர்கள் உண்டு களிக்கிறார்கள் நாம் என்ன இளிச்சவாயர்களா? என அமெரிக்கர்களை உசுப்பேத்துகிறார் ஆண்டர்ஸன்.

ஆண்டர்ஸன் கூப்பர் போன்ற தேசப்பற்றுமிக்க பத்திரிக்கையாளர்கள் நம்நாட்டில் இல்லாதது நாம் செய்த துரதிருஷ்டமே.

ஆண்டர்ஸன் கூப்பர் வாழ்க

Monday, February 26, 2007

0 டிகிரியிலிருந்து 180 டிகிரிக்கு

மு.கு. : சாய் பாபா பற்றி பதிவு வந்ததும் அதற்கு எதிர் பதிவு என்னிடம் இருந்து வரும் என பல பதிவளார்கள் நினைத்தது எனக்கு தெரிந்தது. அதனால்தான் இந்த பதிவு.

சாரு நிவேதிதா தமிழ் எழுத்துலகில் பின்நவீனத்துவத்தை எழுதுவதில் முன்னோடி. இவரின் சென்னை அனுபவங்கள் விரும்பி படிப்பேன் ஏனென்றால் என் அனுபவத்தை படித்தது போலிருக்கும். இவரும் நான் அடிக்கடி சென்று வந்த பார்களைப் பற்றியும் உணவு விடுதிகளையும் பற்றியும் எழுதியுள்ளார். இவர் வீடும் சென்னையில் எங்கள் வீட்டிற்கு அருகில்தான். இவர் வாக்கிங் போவதை பார்த்திருக்கிறேன். இவரிடம் பேச நினைத்துண்டு ஆனால் இவர் அதை விரும்பவில்லை என ஒரு முறை எழுதியிருந்தார். அதனால் பேசவில்லை. இவர் எழுதும் பொலிவிய நாட்டு இலக்கியங்களும், இசைபற்றிய கட்டுரைகளும் மற்றும் இவரின் இணைய காதலிகளின் சாட்களும் என் மிடில் கிளாஸ் மூளைக்கு எட்டாது.

இவர் சாய்பாபாவைப் பற்றி எழுதிய கோணல்பக்கங்கள் படிக்கநேர்ந்தது. அதை தமிழ் உள்ளங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

அந்த பதிவில் அவர் கூறுகிறார் " "பாபா இதையெல்லாம் (மோதிரத்தை) சட்டைக்குள்ளிலிருந்து எடுக்கிறார்" என சில பகுத்தறிவாளர்கள் கூறுவதை கேட்டிருக்கிறேன் அப்படியென்றால் பாபா ஒரு தங்க மலையை தன் சட்டைக்குள் வைத்திருக்கவேண்டும்"

சாய் பாபா பஜனைகள் பாடும் போது உபநிடத சுலோகங்களை பாடி முடிப்பார்கள். அதை சமசுகிருதத்தில் தந்தால் எதையும் தாங்கும் இதயங்கள் தாங்காதல்லவா ஆகையால் செந்தமிழில் இதோ

பொய்மையிலிருந்து உண்மைக்கு
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு
மரணத்திலிருந்து முக்திற்கு

கடைசியாக சாருவிற்கு

0 டிகிரியிலிருந்து 180 டிகிரிக்கு

------------------------------------------------------------------------------------------------
பி.கு தலைவா சாரு, அடுத்த முறை நான் சென்னை வரும்போது என் போன்ற இலக்கிய தற்குறிகளுடன் பேசுவீர்களா?. தங்களுக்கு பிடித்த விரால் மீன் குழம்பு எனக்கும் பிடிக்கும் சாய் பாபாவும் பிடிக்கும்

Friday, February 16, 2007

ஆன்மிகம் ஆனந்தமானது...

இன்று சிவராத்திரி. சிறுவயதில் மதுரை தெற்காவணி மூல தெருவில் திரு குன்னக்குடி வைத்தியநாதரின் வயலின் இசையை இரவு முழுக்க கேட்டு ஆனந்தமடைந்திருக்கிறேன்.

பிறகு அரேபிய பாலைவனத்தில் காபிரல்லாதவர்களின் நடுவில், மற்றவர்கள் பயந்து பயந்து இருக்க நான் ஆனந்தமாக இரவு முழுக்க சிவராத்திரி பஜனை மற்றும் அபிஷேகங்களை வீட்டில் நடத்தியிருக்கிறேன்.

பஜன் நடக்கும் போது அவ்வப்போது இஞ்சி ஏலக்காய் டீ, சுக்கு மல்லி காப்பிகளை தயாரித்து மக்களுக்கு விநியோகம் செய்திருக்கிறேன்.

இன்றைய ராத்திரி கால்கரியில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பக்தர்கள் நடத்தும் பஜனையில் கலந்து கொள்ள முடிவெடுத்துள்ளேன். ஸ்ரீஸ்ரீ " ஆன்மிகம் என்பது ஏன் இறுக்கமாக இருக்கவேண்டும். ஆனந்தமாக பாடி நடனமாடி சந்தோஷமாக ஆன்மிகத்தை பெறலாமே" என்று கூறுவார். பார்க்க ஸ்ரீஸ்ரீ பக்தர்கள் கொண்டாடும் வீடியோவை:




ஆன்மிகம் ஆனந்தமானது. நம்முள் இருக்கும் இறைவனை நாம் உணரும் போது கிடைக்கும் இன்பம் அளவிட முடியாது. பகலென்ன இரவென்ன அந்த ஆனந்ததிற்கு தடை கிடையாது. தங்கு தடையின்று ஆனந்த வெள்ளத்தில் நீந்த ஆன்மிகமன்றி வேறின்பம் ஏது இதைத் தான் முன்னோர்கள் பேரின்பனம் என்பார்களா?

இங்கே பாரதியாரின் பாடலை மனதிற்குள் பாடிக்கொண்டேன்.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் -
எங்கள் இறைவா! இறைவா! இறைவா!

சித்தினை அசித்துடன் இணைத்தாய் -
அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்.
அத்தனையுலகமும் வர்ணக்களஞ்சியமாகப்
பலபல நல்லழகுகள் சமைத்தாய். (ஓ- எத்தனை)

முக்தியென்றொருநிலை சமைத்தாய் -
அங்கு முழுதினையுமுணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலைவகுத்தாய் -
எங்கள பரமா! பரமா! பரமா! (ஓ - எத்தனை)

இந்த பாடலை என் அபிமான பாடகர் திரு உன்னிகிருஷ்ணன் குரலில் கேட்க
இங்கே

இசைக்குயில் பாடியதை கேட்க இங்கே

சின்னகுயில் மஹாநதி ஷோபனா பாடியதை கேட்க இங்கே

Friday, February 09, 2007

மனத்தளர்வு

தடைகள் இல்லாத பயணம் உற்சாகமாக இருக்கும். சோம்பல் இருக்காது. புத்துணர்வும் அமைதியும் நிறைந்த பயணமாக இருக்கும்.

அதே போல் தான் வாழ்க்கையும்.

மனத்தடைகள் இல்லாத வாழ்க்கை அற்புதமானது. மனத்தடைகள் நமக்கு எங்கிருந்து வருகின்றன. முதலில் வீட்டிலிருந்து பிறகு பள்ளியில், சுற்றம், நட்பு இவர்களிடமிருந்து. இதைத்தான் ஒஷோ "பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை உங்களிடமிருந்து காப்பாற்றுங்கள்" என்றார். உலகில் அனைவரும் தங்கள் மனத்தடைகளை மற்றவர்கள் மேல் திணிப்பதில் மும்முரமாக உள்ளார்கள்.

ஒரு சாரர் குழந்தை பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தவுடன் இதை செய்யாதே அதை செய்யாதே என எல்லாவற்றுக்குக் தடை செய்துக் கொண்டே இருப்பார்கள்.

இன்னொரு சாரர் மியூசிக், காரத்தே, கிரிக்கெட், ஹிந்தி, டியூசன் என ஓய்வில்லாமால் குழந்தையை ஓட்டிக் கொண்டே இருப்பார்கள். சதாகாலம் டென்ஷன்தான். இந்த பெற்றோர்கள் வெளிநாடு வந்தும் இங்குள்ள அமைதியான வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதில்லை. குழந்தைகளுக்கு பாட்ம் கம்மியாக இருக்கிறது என புலம்பி கொண்டே இருப்பார்கள்.

இவ்வாறு வளரும் குழந்தைகள், ஓடி ஓடி அலைந்து அல்லாடி கூடிய சீக்கிரம் உடல் தளர்வடைவதை போல் மனதளர்வை சீக்கிரம் அடைகின்றனர். இதை மன அழுத்தம் அல்லது டிப்ரஷன் என்றும் அழைப்பர். (கிளினிக்கல் டிப்ரஷனுக்கு காரணம் மூளயில் சுரக்கும் சில இரசாயன திரவங்கள் சமநிலை தவறுவதால் ஏற்படுகிறது. இதற்கு மாத்திரைகள் மருந்துகள் உண்டு. அது வேறு விஷயம்.)

நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களயும் சந்தோஷமாக வைத்திருந்தால் மனத்தளர்விற்கு வாய்ப்பு ஏது?

மனம் தளர்வடையாமல் இருக்க சில யோசனைகள்:

1. உங்களுக்கு பிடித்த வேலையை அல்லது படிப்பை தேர்ந்தெடுங்கள்.

2. பிடித்தவேலை கிடைக்கவில்லை அல்லது மிக அசாதரண திறமை இல்லை என்ன செய்வது? வாழ ஒரு வேலை கிடைக்காமலா போய்விடும். கிடைக்கும். அங்கே சேர்ந்து அங்குள்ளவர்களை மகிழ்ச்சி படுத்துங்கள்.

3.உங்களுகாக உங்களுகாகவே ஒரு நாளில் ஒரு மணி நேரத்தை ஒதுக்கி தனியாக இருங்கள். தனிமையை அனுபவியுங்கள். மனம் ஓய்வு எடுத்துக் கொள்ளும். மகிழ்ச்சி தானக வரும்

4. எதிர்காலம் பற்றிய பயத்தை விடுங்கள். தாங்கள் செய்யும் வேலையை முழு மனதுடன் இன்றே செய்யுங்கள். எதிர்காலம் இன்று போல் நன்றாக தான் இருக்கும்

5. உங்கள் குழந்தைகள அவர்கள் மனம் போல் வளரவிடுங்கள். தவறான வழியில் போனால் மட்டுமே அவர்களை நல்வழி படுத்துங்கள். அதுவும் அன்பாக பேசி

இப்போது அனுபவம்:

கோபால் என்ன தான் முயற்சித்தாலும் கணக்கு வரவே இல்லை.
ஆனால் அழகாக படம் வரைவான். உங்களைப் பார்த்தால் உங்களை போட்டோ எடுப்பது போல் வரைந்துவிடுவான்.

பென்சில், சாக்கு, கரி ஏன் உளி கொண்டு கட்டையில் கூட வரைந்துவிடுவான். ஆனால் விட்டார்களா அவனை...... வீட்டில் கரித்துக் கொட்டிவிட்டார்கள். பக்கத்து வீட்டு பையன்கள் ஐஐடி பிட்ஸ் அண்ணா என போனபோது இவன் கரஸ்ஸில் லிட் படித்தான். ஆங்கிலத்திலும் நாம்மாளுக்கு புலமை அதிகம். அட்வர்டைசிங் கம்பெனியில் சின்ன ஆர்ட்டிஸ்ட் என ஆரம்பித்து காப்பி ரைட்டர் வரைக்கும் உயர்ந்தான். கம்யூட்டர் வந்தது அதில் கிராபிக்ஸ் அனிமேஷன் என தூள் கிளப்பி இவன் தவறவிட்ட, ஐஐடி அண்ணாவில் படித்த நண்பர்கள் சென்ற, அமெரிக்காவிற்கு சென்று அவர்களை விட அதிகம் சம்பாதிக்கிறான். இப்போது பெற்றோரும் சுற்றாரும் போற்றுகின்றனர். ஆனால் அவன் பட்ட அவமானங்கள் எத்தனை?

அப்பப்பா... சின்ன வயதில் அவனை அவன் வழியில் விட்டிருந்தால் அவன் இன்னும் சிறப்பாக வந்திருப்பான்.

மனத்தடைகளை களைந்து மனத்தளர்வுகள் இன்றி அமைதியான மகிழ்ச்சியான வாழ்கையை வாழுவோம்

பி.கு.

சுவாமி சுகபோதனந்தா, நித்தியானந்தா, சுகி.சிவம் போன்றவர்களுக்கு போட்டியாக வரவில்லை. ;))))

சிலா கார்பரேட் மொரேல் பூஸ்டர் செமினார்களில் பங்கு கொண்டதின் விளைவு.

எல்லா பசங்களும் நம் கீதை, யோகா, உபநிடதங்கள் இவற்றிலிருந்து தத்துவங்களை எடுத்து அழகாக கையாளுகின்றனர்.

5 நட்சத்திர ஓட்டல்களில் தங்கி நம் நாட்டின் தத்துவங்களை இவர்கள் மூலம் அறிந்து வியக்கிறோம்.

உம்ம்ம்..... "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கொங்கோ அலைகின்றாய் ஞான தங்கமே" என்ற பாடல் மனதில் ஓடியது

Tuesday, February 06, 2007

மனத்தடைகள்

சில பேருக்கு சில நேரங்களில் சில மனதடைகள் இருக்கும். மனத்தடை என்பது என்ன? ஆங்கிலத்தில் mental block என வைத்துக் கொள்ளலாம். ஒரு இடத்தைப் பற்றியோ அல்லது ஒரு உணவைப் பற்றியோ அல்லது சில பேரின் உருவங்களைப் பார்த்து அவர்களை பற்றியோ ஒரு மனத்தடையை ஏற்படுத்தி கொள்வார்கள்.

எனக்கு இந்த சூஷி பற்றி ஒரு மனத்தடை. அது வேகவைக்காத மீனால் ஆன உணவு பொருள் என்று. பொதுவாக ஸீ புட்களைப் பார்த்தலே அது நாறும் என்ற மனத்தடை எனக்கு உள்ளது.

என் அனுபவத்தில் நான் பார்த்த மனத்தடைகள் :

கடந்த வருடம் துபாய் ஏர்போர்ட்டில் சென்னை கனெக்டிங் பிளைட்டை தவறவிட்டு அடுத்த பிளைட்டிற்காக சுமார் 6 மணிநேரம் காக்க வேண்டியிருந்தது. கணிணியில் தமிழ் வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது ஒரு தமிழ் இளைஞர் அறிமுகமாகமானர். அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஈமெயில் பார்க்க என் கணிணியைக் கொடுத்தேன். இலவசமாக உணவு கிடைத்தது. அங்கே நானும் அவரும் சென்று ஸ்டார்ட்டர்களான சமோசாவையும் ஒரு கிளாசில் ஜூஸும் எடுத்துக் கொண்டு அமர்ந்தோம். சமோசாவை நான் கடிக்க எத்தனிக்கும் போது. அந்த இளைஞர் நிறுத்துங்கள் என கத்திவிட்டார். ஏன் என்றேன் இது சிக்கன் சமோசா என்றார். அதனால் என்ன என்றேன். அவர் நீங்கள் சிக்கன் சாப்பிட மாட்டீர்களே என்றார். நான் உங்களைப் பார்த்து 1 மணிநேரம் தான் ஆகிறது. நான் சிக்கன் சாப்பிட மாட்டேன் என சொன்னமாதிரி எனக்கு ஞாபகமில்லையே என்றேன். இல்லை சார் உங்களைப்பார்த்தால் நான் வெஜ் சாப்பிடுபவர் மாதிரி இல்லையே என்றார். அவருக்கு நான் பிராமணராக இருப்பேன் என மனத்தடை. இந்த மாதிரி உருவ அமைப்பு உள்ளவர்கள் பிராமணர்களாகத்தான் இருப்பார்கள் என அவரின் மனத்தடை.

இன்னொருவர் இவர் வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். நல்ல உயரம். உயரத்திற்கு ஏற்ற பருமன். கரிய நிறம். இவருடன் ஹூஸ்டனில் ஒரு ஓட்டலுக்கு போனேன். நீ தண்ணியடி ஆனால் பாரில் வேண்டாம் ரெஸ்டாரண்டில் அடிக்கலாம் என்றார். நானும் சரியென்று ஒரு பீரும் சைட் டிஷ்ஷிற்கு சிக்கன் விங்க்ஸும் ஆர்டர் செய்தேன். அவர் சிக்கன் விங்ஸை என்னுடன் பகிர்ந்துக் கொள்வதாயும் குடிக்க கோக் பாட்டில் அல்லது கேனில் வேண்டும் கிளாஸில் வேண்டாம் என பல முறை அந்த பெண்ணிடம் கேட்டுக் கொண்டார். ஆர்டர் செய்தவுடன் அவர் தன்னை ஒரு டீ டொடலர் என்று சொல்லிக் கொண்டார். சிகரட் வாசனை ஆல்கஹால் வாசனை அறவே பிடிக்காது என்றார். அயிட்டங்கள் வந்தன அவருக்கு கோக் கிளாசில் வந்தது. மனிதர் கொதித்து விட்டார். சர்வரியும் அங்கே ட்ராப்ட் கோக் மட்டும் உள்ளது பாட்டிலோ / கேனோ இல்லை என்றார். கடைசியாக ஒரு பேப்பர் டம்ளரில் கோக்கை குடித்தார். நானும் ஏன்... ஏன் எனக் கேட்டேன். அவரிடமிருந்து வந்த பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது. கிளாஸில் ஆல்கஹால் ஒட்டியிருக்க வாய்ப்பிருக்குமாம் அதனால் வெளியே வந்தால் கிளாஸில் எந்த பானமும் குடிக்க மாட்டாராம். எங்கு போய் முட்டிக் கொள்வது. ஆல்கஹால் தண்ணீரில் இரண்டற கலக்கும் குறைந்த வெப்பநிலையில் ஆவி ஆகிவிடும். இங்கே ரெஸ்டராண்டுகளில் கிளாஸ் பாத்திரம் கழுவும் மெசினில் நன்றாக கழுவி சுடு காற்றால் காயவைப்பார்கள். ஆல்கஹால் இருக்க வாய்ப்பில்லை. வேதியியலில் டாக்டர் பட்டம் வாங்கியவருக்கு நான் சொல்லத் தேவையில்லை. சிக்கன் விங்ஸ் சாப்பிட்டு முடிந்தவுடன் அந்த விங்க்ஸ் வைன் ஊற்றி சமைத்திருப்பார்கள் என்றேன். அவர் பேய் அறைந்தவர் போல் ஆகி விட்டார். ஆல்கஹாலைப் பற்றி அவரின் மனத்தடை சற்று அதிகம்.

நம் வலைப்பதிவுகளில் ஒருவர் இந்து மதத்தைப் பற்றி எழுதிவிட்டாலோ அல்லது கருப்புக் கொடி கேடிகளை தாக்கிவிட்டாலோ அவர் ப்ராமணராகத்தான் இருப்பார் என்பது சிலரின் மனத்தடை.

மனத்தடைகளே மனிதனின் முன்னேற்றத்திற்கான முக்கிய தடை கல்.

மனத்தடைகளை களைவோம் முன்னேறுவோம்

Saturday, January 27, 2007

குரு - ஒரு அருமையான திரைப்படம்

சினிமாக்களை சில நாள் ஆற அமர பார்ப்பதுதான் என் வழக்கம். பல பேர் குருவை பார்த்து விட்டு பயங்கரமான விமர்சனங்கள், விவாதங்கள் செய்துவிட்டார்கள்.

என் பங்குகிற்கு நான் செய்ய வேண்டாமா. குரு யார்? பணக்காரங்களிடமிருந்து பணத்தை எடுத்து ஏழைக் களுக்கு வாரி வழங்கும் வள்ளல். சிறு வயதில் கடுமையாக உழைத்து வளந்து பெரியவனாகி தன் காதலியை சந்திக்கிறான். அப்போது அவன் காதலியிடம் படும் பாட்டை இந்த பாடல் மூலம் முற்றிலும் வித்தியாசமாக் இயக்குனர் காட்டியிருக்கிறார்



ஹி ஹி புது ப்ளாக்கர் புது டெம்ப்ளேட் ஒரு டெஸ்டிங் தான்

Thursday, January 04, 2007

Bloody America.... yaar

வெளிநாட்டிலிருந்து நான் இந்தியா போகும் போது வங்கிகள், LIC, டெலிபோன் மற்றும் இதரவேலைகள் ஏதாவது ஒன்று இருக்கும். அந்தந்த அலுவலகங்களுக்கு செல்லும் போது என்னுடன் என் சகோதரியின் மகனை அழைத்து செல்வது என் வழக்கம்.

இந்த அலுவலகங்களில் அலைகழிப்புகள், லஞ்சம், மெத்தனம் ஆகியவைகள கடந்து வேலை முடிந்தவுடன் Bloddy India...yaar என அங்கலாய்ப்பது என் வழக்கம். அச்சிறுவனும் கேட்டுக் கொள்வான். அவனுக்கு வேண்டியது அவனுக்கு தேவையான் வெஜிடபுள் பப்ஸ், கேக் மற்றும் கோக் McRennet இல் கிடைத்துவிடும்.

சிறுவன் வளர்ந்தான், சாப்ட்வேர் நிபுணன் ஆனான். இரண்டு வருடங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் வேலைப்பார்த்தான். H1B விசா கிடைக்கப் பெற்று அட்லாண்டாவில் லாண்ட் ஆனான்.

சோசியல் செக்யூரிட்டி எண்ணிற்கு அப்ளை செய்ய அமெரிக்க அரசாங்க அலுவலகம் சென்றான். அங்கே வேலைப்பார்க்கும் பெண்மணி உன் பெயர் மிக நீளமாக இருக்கிறது என்னுடைய கம்யூட்டரில் அடக்க முடியவில்லை. இமிகிரேஷனில் போய் உன் பெயரை மாற்றிக் கொண்டு வா என்றார்.

சிறுவனும் இமிகிரேஷனுக்கு ஓடினான். இமிகிரேஷனில் இருந்த அம்மணி பெயரல்லாம் மாற்ற முடியாது. பெயர் மாற்ற வேண்டுமென்றால் சட்டரீதியாக மாற்றிக் கொண்டு வா இல்லையென்றால் மீண்டும் ஒரு முறை சோசியல் செக்யூரிட்டிக்கு சென்று அப்ளை செய்து பார் என்றார்.

சிறுவன் மீண்டும் சோசியல் செக்யூரிட்டிக்கு போனான். அங்கே இருந்த இன்னொரு அம்மணி ஒன்றும் சொல்லாமல் அப்ளிகேஷனை வாங்கி அப்ரூவ் செய்துவிட்டார்.

சிறுவன் வெளியே வந்து McDonald இல் அமர்ந்து ப்ரென்ச்ஜ் ப்ரைஸ் மற்றும் கோக் வைத்துக் கொண்டு கைத்தொலைப் பேசியில் என்னை அழைத்து Bloody America.... yaar என பழித் தீர்த்துக் கொண்டான்

Wednesday, January 03, 2007

ஒரு அமெரிக்க அடிவருடியாகிய நான்.......

சதாமை தூக்கிலிட்டவுடன் தமிழ்பதிவர்கள் குமுறிவிட்டார்கள். ( பல அப்பாவி பெண்களை கற்பழித்து கொன்ற ஆட்டோ சங்கர் என்ற கிரிமினலை தூக்கிலிட்டபோதும் நம் தமிழினம் இவ்வாறுதான் குமுறியது)

புஷ்ஷை தூக்கிலிட அறைகூவல்கள்,

அமெரிக்காவிற்கு சாவல்கள் என தூள் கிளப்பிவிட்டார்கள்.

அப்பா.... என்ன வீரம்.

சரி இந்த பட்டியலை பாருங்கள்

98% குழந்தைகளுக்கு போலிய தடுப்பு ஊசிகள்...

4500 பள்ளிகூடங்கள்

80 லட்சம் புத்தகங்கள்

நாடளுமன்றத்தில் 25% பெண்கள்

19000 புது போலிஸ்காரர்கள்

18000 எல்லைப் படை வீரர்கள்

33000 புது தொழிற் முதலீடுகள்

நாட்டிற்கு வேலை செய்வதைவிட உயிர் மேலா என கேட்கும் புது ஆட்சியாளர்

இவையெல்லாம் சதாம் பதவியிலிருந்து அகன்ற பிறகு ஈராக்கிய மக்களுக்கு கிடைத்தது.

இதை தடுப்பவர்கள் யார்?

இனவெறி கொண்டு ஒருத்தரை ஒருத்தர் அடித்து சாவடிக்கும் மனிதர்களே.

இத்தகைய மனிதர்கள் சிறுபான்மையினரே.

அவர்கள் வெகுசீக்கிரம் ஒழிந்து ஈராக்கில் அமைதி நிலவ அமெரிக்க அடிவருடியாகிய நான்...

எல்லாம் வல்ல மனிதனை வேண்டுகிறேன்.

மிக அறிந்த மனிதனே உயர்ந்தவன்.

இந்த விடீயோ கிளிப்பும் ஒரு அமெரிக்க அடிவருடையது