Wednesday, June 17, 2009

இந்திய பண்பாடும் தமிழர் பண்பாடும்

இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் படித்த ஒரு செய்தி குறிப்பு இது.
-------------------------------------------------------------------------------------

http://timesofindia.indiatimes.com/India/PM-Advani-apologise-to-each-other/articleshow/4666827.cms



ON BOARD PRIME MINISTER’S SPECIAL AIRCRAFT: Putting months of bitterness in the run up to elections behind, Prime Minister Manmohan Singh Wednesday
on said he and Bharatiya Janata Party (BJP) leader L K Advani had apologised to each other over "hurtful" remarks. "I was compelled to reply to what Advani said," Manmohan Singh replied when asked whether he had forgiven Advani for calling him a "weak Prime Minister". "On May 16 when he (Advani) telephoned me, he told me that he was hurt by some of my statements. He said he was hurt and regretted his statements," Manmohan Singh added. Having put the bitterness behind them, the Prime Minister said he looked forward to working with Advani, who is the leader of opposition. "I apologised to him if I have hurt him. I am looking forward to a close relationship with the leader of opposition."
-------------------------------------------------------------------------------------------------

பிரதமர் எதிர்கட்சி தலைவரிடம் மன்னிப்பு கேட்க எதிர்கட்சி தலைவர் பிரதமரிடம் மன்னிப்பு கேட்கிறார். தேர்தல் காலத்தில் ஒருவரை ஒருவர் தனிபட்ட முறையில் தாக்கி பேசியதற்காக.

பிரதமரும் எதிர்கட்சி தலைவரும் நேருக்கு நேர் சந்தித்து பேசுகிறார்கள் கருத்து பேதம் எவ்வள்வு இருந்தாலும் பாரளுமன்றத்தில் காரசாரமாக விவாதித்தாலும் நேரில் ஒரு மரியாதைக்காக பேசிக் கொள்கிறார்கள்.

மாறாக பண்பாடு, கலை, இலக்கியம் என கூச்சலிடும் தமிழர்கள் தம் எதிர்கட்சிக்காரர்களை கண்டாலே வெறுப்பை உமிழ்கிறார்கள். எதிர்கட்சிக்காரன் தமிழனாக் இருந்தாலும் வெறுப்பை காட்ட தவறுவதில்லை. ஒரு கட்சி ஜெயித்தால் அடுத்த கட்சித் தலைவர் சட்டசபைக்கு வருவதில்லை. இதன் பெயர் தான் தமிழ் பண்பாடா அல்லது தமிழ் உணர்வா?

Sunday, February 22, 2009

வால்மார்ட் பற்றிய இரு வேறு பார்வைகள்


வால் மார்ட் என்பது ஆணி முதல் கப்பல்வரை விற்கும் ஒரு பலசரக்கு கடை. இந்த கடை அமெரிக்கா/கனடாவில் எல்லா ஊரிலும் மூலை முடுக்கு களிலும் இருக்கும். உலகில் அதிக பிசினஸ் செய்யும் கம்பெனிகளில் முதல் இடத்தில் இருப்பது இதுதான்.


கடந்த வாரம் ஒரு இந்திய சிவில் இஞ்ஜினியரை சந்தித்தேன். மிக பணக்காரர். கால்கரியில் 4 வீடுகள். டில்லியில் ஒரு பங்களா, ஹவாயில் ஒரு ரிசார்ட் என பணத்தில் திளைப்பவர். எல்லாம் அவரும் அவருடைய குடும்பத்தாரும் உழைத்த சொத்து.


அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் எல்லா பொருடகளையும் வால்மார்ட்டிலேயே வாங்குவதாக சொன்னார். அவர் தேடின பொருள் வால்மார்ட்டில் கிடைக்கவில்லையென்றால் மட்டும் வெளியில் வாங்குவதாக சொன்னார்.

வால்மார்ட் ஏழை மக்களின் கடையாயிற்றே உங்களை போன்ற பணக்காரர்கள் எப்படி... என இழுத்தேன்.. அவர் சொன்ன அவரின் கதை என்னை பிரமிக்க வைத்தது.


அவர் கனடாவிற்கு வந்த புதிதில் வேலையே கிடைக்கவில்லை. இந்தியாவில் அவர் பார்த்த கவர்மெண்ட் வேலையும் அனுபவமும் உதவவில்லை. கையில் கொண்டு வந்த ரூபாய் 20 லட்சம் வேகமாக தீர்ந்தது. அவர் அவரின் மனைவி மற்றும் பதின்ம வயதில் இரு மகன்களும் ஒரு மகளும் என்ன செய்வது என கையைப் பிசைந்து கொண்டு நின்றார்கள். அப்போது அவர்களுக்கு கை கொடுத்ததது வால்மார்ட். ஐவரும் அங்கே வேலைக்கு சேர்ந்தார்கள். வாடகைக்கும் சாப்பாட்டிற்கும் பணம் கிடைத்தது. முதலில் தந்தை மேல் படிப்பு படித்து இஞ்ஜினியராக மறுபடியும் நல்ல வேலையில் சேர்ந்தார். மனைவி வால்மார்ட்டிலேயே பதவி உயர்வடைந்து அக்கௌண்டண்ட் ஆனார். பிறகு குழந்தைகள் படித்து முன்னுக்கு வந்துவிட்டார்கள். வந்தாரை வாழ வைத்த வால்மார்ட்டுக்கு நன்றி கடனுடன் இருக்கிறார்கள் இந்த மில்லியனர்கள்

இன்னொருவர், இவர் ஒரு அமெரிக்கர், வெள்ளை இனத்தவர் . அமெரிக்காவின் ஆடம்பர, கூச்சல் நிறைந்த வாழ்க்கையை வெறுத்து கனடவில் குடியேறிவர். மிக எளிமையாக வாழ்பவர். இவரின் அபார்ட்மெண்டில் சுத்தமாக ஒரு பர்னிச்சரும் இல்லை. ஸ்லீப்பிங் பாக் இல் தூங்குவார். இயற்கை சோப், மற்றும் வாசனை திரவியங்களை உபயோகிப்பார். உறைந்த இறைச்சியை சாப்பிட மாட்டார். ப்ரஷ் இறைச்சி அதுவும் இயற்கை தீவனங்கள் தின்று வளர்ந்த கால்நடை, இறைச்சியை உண்பார். இயற்கை உரங்களை கொண்டு விளந்த காயகறிகளைதான் உண்பார். கனடா மற்றும் அமெரிக்காவில் தயாரான உடைகளையும் காலணிகளையும் அணிவார். கோக் பெப்ஸி போன்ற பானங்களை அருந்த மாட்டார் இவ்வாறும் இன்னும் பல

இவரும் நானும் ஒரு முறை நகருக்கு சென்ற போது நான் வால்மார்ட்டில் சில பொருட்களை வாங்க வேண்டியிருந்தது. இவர் வால்மார்ட்டின் உள்ளே வர மறுத்து விட்டார். பிறகு அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் வால்மார்ட்டின் மேலுள்ள அவரின் ஆதங்கங்களை வெளியிட்டார்..


வால்மார்ட் அநியாய பிஸினஸ் செய்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் பல குழந்தை தொழிலாளர்களினால் குறைந்த விலையில் தயாரிக்க்பட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்கிறது என்பார். வால்மார்ட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களை அடிமையாக நடத்துவார்கள் என்றார். உதாரணத்திற்கு. திங்களன்று ஒருவரை மானேஜர் ஒரு தொழிலாளியை அழைத்து இன்று 10 மணிநேரம் வேலை செய் என்பார். அந்த தொழிலாளியும் ஓவர் டைம் கிடைக்கிறது என்று சந்தோஷமாக வேலை செய்வார். ஆனால் வெள்ளி கிழமை அந்த தொழிலாளியை அழைத்து இன்று 6 மணிநேரம் வேலை செய்தால் போதும் என்பார். அந்த வாரம் அவர் 40 மணிநேரம் வேலை செய்த மாதிரி ஆகிவிடும் ஆகையால் ஓவர் டைம் வழங்க தேவையில்லை. மேலும் தொழிலாளிகளின் கூலியை எப்போதும் ஏற்றுவது இல்லை. சம்பள உயர்வு கேட்டால் வேலை காலியாகிவிடும் இன்னும் இவ்வாறு பல குற்றசாட்டுகளை அடுக்கினார்.


அவர் அடுக்கியதில் அர்த்த முள்ள குற்றசாட்டு இதுதான்: வால்மார்ட் அசுர வளர்ச்சிக்கு அடைவதற்கு முன் ஆங்காங்கே சிறு சிறு கடைகள் இருந்தன. சில கடைகளில் சில பிரத்யேக பொருடகள் கிடைக்கும். அங்கே வாடிக்கையாளராகி அந்த கடைகளை ஊக்குவிப்பதில் அலாதி இன்பம். ஆனால் வால்மார்ட் வந்தவுடன் அந்த சின்ன கடைகள் காணாமல் போய்விட்டன. சின்ன சின்ன முதலாளிகள் இல்லாமல் போய்விட்டனர். இப்படி சின்ன மீன்களை விழுங்கிய பெரும் திமிங்கிலம் தான் இந்த வால்மார்ட் இங்கே பிசினஸ் செய்வது நல்லதில்லை என்பார். மேலும் இவர் சுவிட்சர்லாந்தை அதிகமாக வெறுப்பவர். சுவிட்சர்லாண்ட்டில் மூன்றாம் உலக ஊழல்வாதிகள் ஏழை மக்களை ஏமாற்றி அங்கே பணத்தை போடுகிறார்கள். அந்த பாவபட்ட பணத்தில் கிடைக்கும் வட்டியில் வாழ்கிறது இந்த நாடு. இதெல்லாம் ஒரு நாடு. இந்த நாட்டின் பொருளை நான் ஏன் வாங்க வேண்டுமென்றார். இந்தியாவில் தயாராக்கும் டைடன் வாட்ச்களை வாங்க தயாராய் இருக்கிறார். அடுத்த முறை இந்தியாவிற்கு போகும் போது ஒரு டைடன் வாட்ச் ஒன்றை வாங்கி இவருக்கு தரவேண்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்.

இதில்எனக்கு என்ன புரிந்தது என்றால் .ஏழை மக்களை அடித்து ஏழைகளை வாழவைத்து வால்மார்ட் ஓனர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்பது தான்



























Friday, February 20, 2009

சூரிய நாய்கள்

கடந்த ஆறுமாதங்களாக கனடாவின் வடக்கே உள்ள எண்ணை எடுக்கும் மணற்குவாரியில் வேலை.


கிறிஸ்துமஸ் நியூ இயர் லீவில் பெரும்பாலோர் ஊருக்கு போய்விட நான் அங்கே வேலைப் பார்த்து கொண்டிருந்தேன்.

அன்றைக்கு கடும் குளிர். லாட்ஜிலிருந்து கார்பார்கிங்க்கு நடந்து வருவதற்குள் கண்ணில் இருக்கும் நீர் கூட உறைந்து கண்கள் வலித்தன.

அதிகாலை சுமார் 6.30 இருக்கும் கும்மிருட்டு இங்கே சூரிய உதயமே காலை 9 மணிக்கு பிறகுதான்.

காரை ஸ்டார்ட் செய்து காரின் வெப்பமானியை நோக்கியதில் வெப்பம் -45 என காட்டியது. என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகு குறைந்த வெப்பம் இதுதான்.


கண்ட்ரோல் ரூமிற்கு முன்னால் காரை பார்க் செய்து உள்ளே வந்து சூடான காபி அருந்தி கொண்டே மீட்டிங்க் அட்டெண்ட் செய்தேன். அங்கே எந்தெந்த பைப்புகள் உறைந்து உடைந்துள்ளன என விவரித்து கொண்ட்டிருந்தார்கள். எரிகோபுரத்தின் (Flare) மேல் சுமார் 3 டன் ஐஸ் உறைந்திருக்கிறது. அது எந்த நேரத்தில் உடையும் உடைந்தால் எங்கே விழும் விழுந்தால் என்னென்ன இயந்திரங்கள் பழுதாகும் என விவாத்திதோம்.


அதற்குள் மணி காலை பத்தாகியிருந்தது. அப்போது பப்ளிக் அனௌன்ஸ்மெண்ட் சிஸ்டத்தில் "வெளியே குளிர் -52 டிகிரி சி அவசியம் ஏற்பட்டால் ஒழிய யாரும் வெளியே போகவேண்டாம். இது கட்டளை " என அறிவித்தார்கள்


கட்டளை என்றாலே அதை மீற வேண்டும் போல் தோன்றும் எனக்கு புகைபிடிப்பாளர்கள் ரகசியமாக வெளியே போனார்கள். நானும் அவர்களுடன் போனேன்.



அங்கே நான் கண்ட காட்சி காணக்கிடைக்காத காட்சி.



மூன்று சூரியன்களை கிழக்கே அடிவானத்தில் கண்டேன்



ஆ என் வாய்பிளந்ததில் என் சிறு குடல் வரை உறைந்து விட்டது :)



புகை பிடிக்க வந்த நண்பர்கள் " அதுவா சிவா, இதை சூரியநாய் என்பார்கள்" என் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் சொல்லிவிட்டு புகை பிடிக்க போய்விட்டார்கள்.


அந்த காட்சியை போட்டோ எடுக்கலாம் என்றால் கையில் காமிரா இல்லை. செல் போன் காமிராவிலும் சரியாக பதிவாக வில்லை.


விக்கிபீடியாவில் கிடைத்த புகைபடம் கீழே உள்ளது.



மிஷ்டி தோய்யும் நீர் மோரும்



கடந்த ஆறுமாதங்களாக படு பிஸி. எண்ணையை எடுத்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலைப்பார்த்தோம் கனடாவின் வடமத்திய மேற்கே எண்ணை மணலில் ஆலைகட்டி எண்ணை எடுக்க செக்கிழுத்துக் கொண்டிருந்தோம்.

ஆலைக்கு ஓரத்தில் ஒரு ஓடுபாதை கட்டி பிரத்யேக விமானங்களில் தொழிலாளர்களை அள்ளிக் கொண்டு போய் ராட்சச லாட்ஜுகளை அங்கேயே கட்டி தொழிலாளர்களை தங்க வைத்து வேலை வாங்கி கொண்டிருந்தார்கள்.

வழக்கம்போல் கம்யூட்டர்/கண்ட்ரோல் ஸிஸ்டம் வேலைகளை செய்ய இந்திய இளைஞர்கள் கணிசமான அளவில் வந்திருந்தார்கள். நானும் அவர்களுடன் போயிருந்தேன். காடு இரண்டு வாரம் வீடு ஒரு வாரமென கடந்த ஆறுமாதகளாக வாழ்க்கை ஓடுகிறது.


கானகத்தில் கட்டிய லாட்ஜில் உள்ள மெஸ்ஸில் தினம் தினம் வேளைக்கு வேளை மாமிசம்தான். மாமிச பட்சிணி எனக்கே சலித்துவிட்டது என்றால் பாருங்கள். எத்தனை ஆயிரம் மாடுகள், பன்றிகள், கோழிகள், மீன்கள் உயிர்தியாகம் செய்தனவோ.

நம்மாட்களுக்கு மாமிசம் என்றாலே ஆகாது. இந்தியாவிலிருந்து வந்தவர்களெல்லாம் மிக வேகமாக கனடாவின் ரிசஷென் போல் எடை இழந்து கொண்ட்டிருந்தார்கள்.

ஒருநாள் என்னிடம் "சார், சப்பாத்தி, தால், தயிர், சோறு கிடைத்தால் போதும் சார்" என்றார்கள். நானும் மெஸ் மானேஜரிடம் பேசினேன். அவர் என்னை தர தரவென்று இழுத்துக் கொண்டு வித வித மான் யோகர்ட் அதாவது வெள்ளைகார மிஷ்டிதோய்யைக் காட்டினார். "சாமி இதெல்லாம் இருக்கம்ட்டும்யா..... நம்மாட்களுக்கு இதெல்லாம் பிடிக்காது . இந்த மாதிரி வெண்ணிலா, ஸ்ட்டிராபெர்ரி, ப்ளூ பெர்ரி பிளேவர்களை விட்டு சர்க்கரை போடாதத ப்ளேன் தயிரை காட்டுமய்யா எங்காட்கள் மிக சந்தோஷமாகிவிடுவார்கள்" என்றேன்.


அடுத்த நாள் முதல் நம்மாட்களின் முகத்தில் சந்தோஷ களை தாண்டவமாடியது. கால்கரியிலிருந்து ப்ரியா ஊறுகாய் பாட்டில்களை இறக்குமதி செய்யபட்டு தயிர்சாதத்தை கட்டு கட்டு என ரவுண்டடித்துக் கட்டினார்கள். முதலில் முகம் சுழித்த வெள்ளைக் கார துரைகள் பிறகு அதைப்பார்த்து பழகி கொண்டார்கள்


முந்தின இரவு சாப்பிட்ட ஸ்டேக் காலையில் சாப்பிட்ட சாசேஜ் மதியம் சாப்பிட மூஸ் ஸ்டூ இவைகள் வூடு கட்டி தாக்கியதி வயிற்றில் வெப்பம் அதிகரித்தது . வெளியே என்னவோ வெட்பம் -45 டிகிரி சி தான்.


என் வயிற்று வெப்பத்தை தணிக்க சமையலறைக்கு சென்றேன். அங்கே இரு வெள்ளைகார பெண்மணிகள் தங்கள் எடையை குறைக்கும் நோக்கத்தில் மிக சுவையான ராஸ்பெர்ரி யோகர்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சர்க்கரை போடாத, ப்ளேவர் இல்லாத யோகர்ட் கிடைக்குமா என கேட்டன். அவர்களும் ஒரு சின்ன கப் ப்ளேன் யோகர்டை கொடுத்தார்கள்.

ஒரு பெரிய கிளாஸை எடுத்து அந்த யோகர்டை அதில் காலி செய்தேன். அந்த பெண்மணிகள் சங்கடத்துடன் என்னைப் பார்த்தார்கள். பிறகு வெண்டிங் மெசினில் ஒரு அக்வா ஃபினா பாட்டிலை வாங்கி அந்த தண்ணீரை அதில் ஊற்றினேன். ஒரு பெண்மணி "ஏய்... சிவா என்ன செய்கிறாய்?" என அந்த ப்ளாண்ட்களுக்கே உரிய முகபாவனைகளை காட்டினாள். நான் அதில் சிறுது உப்பை போட்டதும் "ஏய்... ஏய்.. நீ வேடிக்கை தானே காட்டுகிறாய்" என்றாள். நான் புன்னகைத்து கொண்டே சிறிது மிளகு பவுடரை போட்டதும் அந்த பெண் வீல் என வீரிட்டாள்


கண்ட்ரோல் ரூமில் இருந்த எல்லோரும் என்ன சத்தம் என பார்க்க வந்து விட்டார்கள்.

அந்த பெண் "என் வாழ்க்கையில் பார்க்காத நிகழ்ச்சி இது.. இவன் தயிரில் உப்பும் மிளகும் போட்டு தண்ணீர் ஊற்றி சாப்பிடுகிறான்" என் கண்களை விரித்து தோள்களை குலுக்கி சொல்லிகொண்டிருந்தள்.


இதை கேட்ட என் வட இந்திய நண்பர்கள் "அரே யார், ச்சாஸ் (chaas) யார் மேரகோ ஏக் கிளாஸ் தேதோ" என உற்சாகமாகி விட்டார்கள்.


இந்த மாதிரி சமயத்தில் தான் திரு. சொக்கன் எழுதிய இந்தப் பதிவை பார்க்க நேரிட்டது.

என் வயிற்று வெப்பம் தணிந்ததோ இல்லையோ நீர்மோர் இந்த பனிக்காட்டில் கொடிகட்டி பறக்கிறது.






பி.கு. பனிகாட்டில் என் வெள்ளைகார நண்பர்கள் பனிஸ்கூட்டரில்(Snow mobile) போய் மேலே படத்தில் உள்ளதை போன்ற ஒரு மூஸை வேட்டையாடி அந்த இறைச்சியை சமைத்தார்கள்.

Tuesday, December 09, 2008

48 மணிநேரங்களும் மட்டன் பிரியாணியும்

பம்பாயில் தீவிரவாத தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானை சேர்ந்த அமைதி மார்க்கத்தினர் தான் என சிக்குயூலர் வியாதிகள் ஓட்டு பயத்துடன் சற்று தயக்கத்துடன் "48 மணி நேரத்தில் வீர அமைதி மார்க்கத்தினரை பிடித்து தா.. அவர்களுக்கு நாங்கள் தான் மட்டன் பிரியாணி தருவோம்" என பாகிஸ்தானுக்கு சாவல் விட்டன.

நானும் அந்த செய்தியை படித்து விட்டு இந்திய அரசியலில் கரை கண்ட என் அமெரிக்க நண்பனிடம் தொலை பேசினேன். "பார்த்தீங்களா சார் காங்கிரஸ் கட்சிக்கும் தில் வந்திருச்சு. இனிமே பாகிஸ்தான் அம்ப்ட்டுதான். துண்டைக் காணோம் துணியை காணோம் என ஓடிடுவாங்க" என சொன்னேன்.

அவர் ஏளன் சிரிப்பு சிரித்து விட்டு "சிவா நீங்க மட்டுமில்லே நம்ம நாட்டிலே 100 கோடி பேரும் உங்களை மாதிரிதான் திங்க் பண்ணுவாங்க. ஒரு பேனாவும் பேப்பரும் எடுத்து ஒரு லிஸ்ட் சொல்றேன் எழுதிகுங்க" என்றார்

இதோ அந்த லிஸ்ட் :

1. 48 மணி நேரத்திற்குள் லக்சர் டொய்பா ஆட்கள் சிலர் கைது செய்யப் படுவார்கள். அதில் இந்தியா கேட்ட ஆட்கள் இருப்பதாகவும் சொல்வார்கள் ஆனால் எல்லோருமே தாடிக்காரன் என்பதினால் பிடிபட்டவன் பிக்பாக்கெட் கிரிமினலாகக் கூட இருக்கலாம். எவனாவது நாலு பேரைப் பிடித்து இவன் தான் இந்தியா சொன்ன ஆட்கள் என்று சொல்லி விட்டால் எவனுக்குத் தெரியும்

2. அப்படிப் பிடித்து வைத்த டுபாக்கூர் ஆசாமிகளையும் இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம் நாங்களே விசாரித்து கடும் தண்டனை தருவோம் என்று சொல்வார்கள். இந்தியாவும் சும்மா ஒரு ஒப்புக்கு மறுப்பு சொல்லி விட்டு ஒத்துக் கொள்ளும்

3. அமெரிக்காவும் அவ்வளவுதானே ஐயா நீ கேட்ட ஆட்களை பாக்கிஸ்தான் பிடித்து கை மா செய்து விட்டது அப்புறம் என்ன உன் வேலையைப் பாரு என்று இந்தியாவுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி விடும்

4, மன்மோகனும் காங்கிரசும் அந்த நாலு பேர்களின் கைதை அரசின் சாதனையாக விளம்பரப் படுத்தி வெற்றி விழா கொண்டாடுவார்கள். இந்தியாவின் பலத்தையும் இந்தியா எப்பேர்ப்பட்ட வல்லரசு என்பதையும் காங்கிரஸ் ஜால்ரா புகழ்ந்து தள்ளுவார்கள்

5. பிடிபட்ட கைதிகள் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டு எல்லா உபச்சாரங்களும் இந்திப் பட நடிகைகளின் உபச்சாரம் உட்பட செய்யப் படும் தண்டனை மட்டும் கொடுத்து விட மாட்டார்கள் (ஹா ஹா தலைப்புக்கு ஹிண்ட் கிடைத்துவிட்டது)


6. எல்லாம் முடிந்து விட்டது. குற்றவாளிகளை பாக்கிஸ்தான் அரசு பிடித்து விட்டது மீண்டும் சமாதானப் பேச்சு, கிரிக்கெட் போட்டி, பஸ், டிரெயின் தூது, வர்த்தகம் எல்லாம் ஆரம்பித்து ஜோராக நடக்கும். சர்தாரும் சர்தாரியும் கட்டிப் பிடித்து கை குலுக்கி நட்பு பாராட்டுவார்கள்

7. மீண்டும் டெல்லியில் பெரும் குண்டு வெடிக்கும் அல்லது இந்திய விமானம் கடத்தப் படும் அல்லது ஏதாவது பெரிய கோவிலில் குண்டு வைப்பார்கள் அல்லது பெங்களூர் ஐ டி கம்பெனியில் உள்ளே புகுந்து சுட்டுக் கொல்வார்கள் அல்லது விஷ வாயுவைப் பிரயோகித்துக் கொல்வார்கள் அல்லது இவை எல்லாமே நடக்கும்.

8. மீண்டும் மன்மோகன் அனுதாபம் தெரிவிப்பார். மீண்டும் கண்டனம் தெரிவிப்பார். மீண்டும் எச்சரிக்கை விடப் படும். பிந்தியா பில் நாட் பெயிட் என்று பிரணாப் முகர்ஜி காலையில் எச்சரிக்கை விட்டு விட்டு மாலையில் அதை மறுத்து விடுவார் மீண்டும் காலையில் இன்னொரு எச்சரிக்கை மாலையில் இன்னொரு மறுப்பு.

9. அமெரிக்க அரசின் தூதுவர்கள் வந்து பாக்கிஸ்தானை நாங்கள் நடவடிக்கை எடுக்க வைப்போம் என்று சொல்லி பாக்கிஸ்தானுக்குப் போய் கபாப் சாப்பிட்டு விட்டு பாக்கிஸ்தான் நடவடிக்கை திருப்தி அளிக்கிறது என்று சொல்லி ஏப்பம் விட்டு விட்டு மீண்டும் வாஷிங்க்டன் போய் விடுவார்கள். பாக்கிஸ்தான் அரசும் மீண்டும் 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கும்.

மீண்டும் நம்பர் 1 க்குப் போய் 9 வரை சுற்றி வரவும். இந்த விளையாட்டை வருடத்திற்கு நூறு முறை விளையாடிக் கொள்ளலாம்.

அதற்கு மேலும் விளையாடவும் சாத்தியம் உள்ளது

---------------------------------------------------------------------------------------------

என்னே ஒரு தீர்க்க தரிசனம் அவருக்கு 1, 3 , 5 சரியாக அரங்கேறிவிட்டது. இன்றைய செய்தியில் அய்ட்டம் #2 கூட அரங்கேறிவிட்டது பார்க்க கீழே

India not impressed by detention of Azhar, Lakhwi; wants handover
PTI
New Delhi, December 9, 2008 India not impressed by detention of Azhar, Lakhwi; wants handoverIndia is not at all impressed by the detention of Jaish-e-Mohammad chief Masood Azhar and Lashkar-e-Taiba commander Zakiur Rehman Lakhwi by Pakistan, saying it was "nothing" as compared to what had been demanded.

Looking for "concrete" action by Pakistan in terms of closing down the terror camps and handover of 20 terrorists, India will be watching what further steps Islamabad takes.
"It is nothing," sources in the government said when asked to comment on the detention of Azhar and Lakhwi along with some LeT commanders under US pressure.
They underlined that India wanted Azhar, Lakhwi and 19 other faces of terror to be handed over, for which a demarche had already been issued to Pakistan.
Pakistan has ruled out handing over any of these men.

The government sources pointed out that Azhar was detained by Pakistan at least twice in the past, without taking any concrete action to stop his or his group's activities.
Azhar, who had formed Jaish-e-Mohammad soon after his release by India in exchange for the hostages of a hijacked Indian Airlines plane in 1999, was detained soon after the attack on parliament in 2001.

He was, however, released after a few months when a review board of Lahore High Court examined his case.

He was detained again in 2003 after a suicide attack on then Pakistan President Pervez Musharraf but the restrictions did not last long.
----------------------------------------------------------------------------------------------

மேலும் சில வக்கிரங்களை நம் இந்திய ஊடகங்கள் அரங்கேற்றி வருகின்றன. பிடிபட்ட தீவிரவாதிக்கு பிரியாணி பிடிக்குமாம், அமிதாப் பச்சன் படம் பிடிக்குமாம் அவன் அம்மாவை பார்க்கணும் போல் இருக்கிறதாம். தாங்க முடியல் இவர்களின் வக்கிரம்.

இன்னும் சில வருடங்களில் இந்த அமைதி மார்கக்த்தை சேர்ந்தவனை தியாகி... கடவுள் பக்தன்... ஈமான்... கொண்டவன் என ஆட்டோ சங்கர் என்ற செக்ஸ் சீரியல் கில்லரை ஹீரோ ஆக்கிய ஜூனியர் விகடன் எழுதும் என்பது என் தீர்க்க தரிசனம்.

நாமும் பெட்டி கடையில் ஒரு த்ம் அடித்துவிட்டு இந்த கண்றாவிகளை வாங்கி படித்துவிட்டு "ஆ... என்னே தியாகம்.." என வியந்து லுங்கியை டப்பா கட்டு கட்டி மொட்டை மாடியில் தண்ணீர் பிடிக்கும் போதும் தண்ணி அடிக்கும் போதும் வியந்து பேசுவோம்

Sunday, December 07, 2008

ஊடக விபசாரர்கள்

பம்பாயில் நடந்த தீவிரவாத தாக்குதலின் போது ஊடக விபசாரர்களின் கூத்து தாங்க முடியாத அளவிற்கு வக்கிரமாக இருந்தது. இதைப் பற்றி வனமாலி என்பவர் தமிழ்ஹிந்து.காமில் அருமையான பதிவொன்றை எழுதியுள்ளார்.

---------------------------------------------------------------------------------------------
http://www.tamilhindu.com/2008/12/mumbai-terror-and-media/

மும்பை பயங்கரமும் டி.வி. சேனல்களும்
~ வனமாலி நாள்: 2008-12-06 பார்வை: 186 அச்சிட
‘Butch Cassidy and the Sundance Kid’ என்ற பிரபலமான திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் திரைப்படத்தின் நாயகர்கள் இருவரும் ஒரு பாழடைந்த கட்டடத்துக்குள் மாட்டிக் கொள்வார்கள். சிறு திருடர்களான அவர்களை எப்போதும் போலிஸ் துரத்திக் கொண்டேயிருக்கும். ஒவ்வொரு முறையும் போலிஸுக்கு டிமிக்கி கொடுத்துத் தப்பித்து விடும் அவர்களை இந்தமுறை எப்படியாவது பிடித்துவிடவேண்டுமென்று ஒரு பெரிய பட்டாளமே அந்த கட்டடத்தைச் சுற்றிவளைக்கும். வெளியே ஒவ்வொரு அங்குலத்துக்கும் போலிஸ் நிற்பது தெரியாமல் எப்போதும் போல் தப்பித்துவிடலாம் என்று கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே வெளியே வருவார்கள் நாயகர்கள் இருவரும். அந்த ஃப்ரேம் அப்படியே உறைந்துபோய், இன்று உலக சினிமாவின் ஒரு முக்கியக் காட்சியாகப் பதிந்துவிட்டது.
ஆனால் Butch Cassidy-யும், Sundance Kid-உம் பாவப்பட்டவர்கள்! அவர்கள் காலத்தில் கட்டடத்தைச் சுற்றி வெளியே என்ன நடக்கிறது என்று லைவ் அப்டேட் கொடுக்க செய்திச் சேனல்கள் இல்லை. ‘இதோ சூழ்ந்துவிட்டார்கள், இந்த போலிஸ்காரர்கள் இப்போது பின்வாசல் வழியே நுழையலாமா என்று நினைக்கிறார்கள்’ என்றெல்லாம் உயிரைக் கொடுத்துக் கத்த அந்தக் காலத்தில் ஒரு பர்க்கா தத் இல்லை. அந்த கட்டடத்தின் வரைபடமோ, அதனைச் சுற்றி எங்கெங்கு போலிஸ் நிற்கிறார்கள் என்பதைக் குறித்து விளக்கும் ஒரு கிராஃபிக்ஸ் வரைபடமோ இருந்திருக்கவில்லை என்பது இன்னும் துரதிர்ஷ்டவசமான விஷயம்.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்கியபோது அவர்களுக்கு போலிஸ், NSG-யின் நடமாட்டம் உடனுக்குடன் செல்ஃபோனில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தீவிரவாதிகளிடம் பத்து இந்திய சிம்கார்டுகள் இருந்தன; அவை புதுதில்லியில் வாங்கப்பட்டு பங்களாதேஷ் வழியாக பாகிஸ்தானுக்குக் கடத்தப் பட்டிருக்கின்றன; தீவிரவாதிகள் வசமிருந்த செல்ஃபோன்களின் பேட்டரி தீர்ந்து போனபோது, தாங்கள் சுட்டுக்கொன்றவர்களிடமிருந்த செல்ஃபோன்களை எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவை அத்தனையும் போலிஸிடம் உயிருடன் சிக்கிய ஒரே தீவிரவாதி சொன்ன தகவல்கள்! தீவிரவாதிகளுக்கு இத்தனை தகவல்கள் நம் ஊடகங்களின் உடனடிச் செய்திகளால் கிடைத்ததில் ஒரு கட்டத்தில் அரசே, இந்த ஊடகங்களை சற்று நேரம் அமைதி காக்கும்படி வேண்டிக்கொள்ளுமாறு ஆனது. ஆனாலும் நம் செய்தி ஊடகங்களைப் போர்வீரர்கள் என்றும், பொறுப்பான மகாத்மாக்கள் என்றும் சிலாகித்துக் கட்டுரை எழுதுபவர்கள் இருக்கிறார்கள்!
நாளை இதுபோன்ற புல்லரிப்புக் கட்டுரைகள் கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பல்லாயிரக் கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படிக்கும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இடம்பெறும். ஏன், சென்சேஷலிசப் பத்திரிகைகளில் ஒன்றான ஜூனியர் விகடன், தீவிரவாதிகள் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள தங்கள் தலைமையகத்தைத் தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப் பட்டும், அதுவும் ஏன், பிடிபட்ட தீவிரவாதியே தான் ஒரு பாகிஸ்தானி என்று வாக்குமூலம் கொடுத்தும், கூசாமல் மும்பையில் தாக்குதல் நடத்தியது இந்துக்கள் எனக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. தமிழ் ஊடகங்களே இப்படிப் பொறுப்பில்லாமல், விஷமத்தனத்துடன் நடந்து கொள்ளும்போது, உலக ஊடகங்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
பிரபலமான பத்திரிகையான ‘டைம்’, முஸ்லிம்கள் இப்படி அடிக்கடி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடக் காரணம் இந்தியாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அதலபாதாளமான பொருளாதார வேறுபாடு இருப்பதுதான் என்றும், கடும் வறுமையில் இருக்கும் முஸ்லிம்கள் பயங்கரச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள், பொருளாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை என திட்டமிட்ட பிரச்சாரம் சர்வதேச ஊடகங்களில் திட்டமிட்டுச் செய்யப்பட்டு வருகிறது.
இது எவ்வளவு பெரிய பொய் என்று இந்தியாவின் கிராமங்களை ஒருமுறை சுற்றிப்பார்க்கும் எவராலும் சுட்டமுடியும். முஸ்லிம்கள் உண்மையில் தங்கள் சவக்குழியைத் தாங்களே வெட்டிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். மிகப் பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவதில்லை. பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தித் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். ஆண்களிலும் கல்லூரியைத் தாண்டுபவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். இதற்குப் பொருளாதாரக் காரணங்கள் இல்லை.
இந்தியப் பொருளாதாரத்தில், ஏன், உலகப் பொருளாதாரம் இருக்கும் நிலையில், வீட்டில் ஒருவர் மட்டுமே சம்பாதித்துக் குடும்ப வண்டியை இழுப்பது எவ்வளவு சிரமம் என்பது மத்திய தரத்தினருக்கு நன்றாகத் தெரியும். இதில் அடிப்படை வாதத்தால் உந்தப்பட்டுப் பெண்களைச் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுத்தபின், வெகு சிரமப்பட்டுக் கல்லூரியை முடிக்கும் இளைஞர்களைக் கொண்டு பொருளாதாரத்தை எப்படி முன்னேற்ற முடியும்? அதே நேரத்தில், பொருளாதார முன்னேற்றத்துக்கு, கல்விக்கு முக்கியத்துவம் அளித்த எத்தனையோ முஸ்லிம் குடும்பங்கள், பொறியியல், வணிகம், மருத்துவத் துறைகளில் நுழைந்து வெகுசிறப்பான நிலைகளுக்கு வந்திருக்கின்றன.
ஒரு வாதத்துக்காக முஸ்லிம்கள் ஏழ்மையான நிலையில் இருப்பதால் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இந்தியாவில் தாழ்நிலையில் இருக்கும் ஏழை இந்துக்கள் எத்தனை அரசு அலுவலகங்களைத் தகர்த்திருக்க வேண்டும்! பல்லாயிரக் கணக்கான ஏழைத் தமிழர்கள் வாழும் மும்பைச் சேரிகள் இந்நேரம் எத்தனை தீவிரவாதிகளை உருவாக்கியிருக்க வேண்டும்?
இவர்கள் சொல்லும் இன்னொரு வாதம் முஸ்லிம்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளும், ஊக்கமும் இந்தியாவில் கிடைப்பதில்லை என்பது. ராமேஸ்வரத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஒரு முஸ்லிம் விஞ்ஞானியை ஜனாதிபதியாக்கிப் பார்த்த நாட்டைப் பார்த்துக் கூசாமல் இவர்களால் எப்படிப் பொய் சொல்ல முடிகிறது? இந்திய தேசம் முழுதும் கொண்டாடும் விளையாட்டான கிரிக்கெட்டில் எத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்கள்? இந்திய அணியின் கேப்டனாக இருந்த முகமது அசாருதீன் முஸ்லிம் இளைஞர்தானே! சானியா மிர்ஸாவுக்குத் தொடர்ந்த மிரட்டலும், அச்சுறுத்தலும் வருவது இந்திய அரசாங்கத்திடமிருந்தா, இல்லை இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தா?
அபூர்வமாக பதிலுக்கு இந்துக்களிடமிருந்து வன்முறை கிளம்பினால் தேசமெங்கும் கண்டிக்கப்படுகிறது. ‘நான் ஒரு இந்துவாக இருப்பதற்கே வெட்கப்படுகிறேன்’ என்ற கூக்குரல்கள் கூட அவ்வப்போது எழும்புகின்றன. நம் பத்திரிகைகளும் மை தீரும் வரை கண்டித்துத் தலையங்கங்கள் எழுதிக்கொண்டே இருக்கும். இது போன்ற அறக்கோபம் தொனிக்கும் எதிர்ப்புக் குரல்களில் நூறில் ஒரு பங்கு கூட, இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வெறித்தனத்தின் போது இஸ்லாமிய சமூகங்களிலிருந்தோ, நம் ‘செக்யூலர்’ ஊடகங்களிலிருந்தோ எழுவதில்லை.
ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும்போதும் தவறாமல் பாபர் மசூதி இடிப்பையும், குஜராத் கலவரங்களையும் ஒரு சமநிலைக்காக முன்னணியில் வைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. அப்படியானால் 64 முறை இடிக்கப்பட்ட சோமநாதபுரம் (மற்றும் எண்ணற்ற கோவில்களை) இந்துக்கள் காட்டி நியாயம் கற்பிக்கலாமே. பாமினி புத்தர் சிலைகளைத் தகர்த்ததை பௌத்தர்கள் சுட்டிக் காட்டலாம். இதெல்லாம் வாதமே அல்ல. ஆனாலும், ஒவ்வொரு குண்டுவெடிப்புக்கும் நம் ஊடகங்கள் ஏதாவது ஒரு நியாயத்தைக் கற்பித்துக் கொண்டேயிருக்கின்றன.
நேற்று ஒரு செய்திச் சேனலில் மும்பை குண்டுவெடிப்பைப் பற்றிய ஒரு தொகுப்பு வெளியானது. அதில் பேசிய ஒருவர் சொன்னது: “BJP உண்மையிலேயே தலைகுனிய வேண்டிய நேரமிது. ஏனென்றால் பாபர் மசூதியை இடித்து இதுபோன்ற தீவிரவாதச் செயல்கள் ஆரம்பிப்பதற்குக் காரணமாக இருந்ததே அந்தக் கட்சிதான்!” தொழுகைக்குப் பயன்படாத பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் இந்தியாவில் முஸ்லிம் தாக்குதல்களே நடைபெற்றது கிடையாதா?
இதோ இப்போது மும்பை தாக்குதல்களை நியாயப்படுத்தி, நம் சிறுபத்திரிகைகள் மெல்ல, மெல்லத் தம் ஆஸ்தான எழுத்தாளர்களை வைத்துக் கட்டுரைகள் எழுதிக் குவிக்கும். தவறாமல் அக்கட்டுரைகளில் மோடி, குஜராத், மலேகான் போன்ற வார்த்தைகள் இடம்பெறும். ஒருவேளை இக்கட்டுரைகள் இவர்களைத் துகிலுரித்துக் காட்டிவிடுமோ என்ற அச்சம் இருந்தால், மொத்த குண்டுவெடிப்பையும் மறந்துவிட்டு ஏதாவது மேற்கத்திய எழுத்தாளரின் கதைகளை மொழிபெயர்த்து இப்பத்திரிகைகள் வெளியிடும். இவர்களுக்குத்தான் கட்டமைப்பை விடக் கட்டுடைப்பு அதிகம் பிடித்ததாயிற்றே.
மொத்தத்தில் பொறுப்பில்லாத, கைக்கூலித்தனம் இந்திய ஊடகங்களின் அடையாளமாகிவிட்டது. இருந்திருந்தால், பந்துக்குப் பந்து கிரிக்கெட் விமர்சனம் போல, பயங்கரவாதத் தாக்குதலைக் காண்பித்து விவரித்து, ISI முன்னாள் அதிகாரி ஒருவர் இங்கே செயல்பட்ட வன்முறைக் கும்பலுக்குச் சரியான அழிவுக்கு வழிகாட்ட உதவியிருக்க மாட்டார்கள். இருந்திருந்தால், மத்திய அரசுக் கட்டில் மிக நெடுங்காலமாக உட்கார்ந்திருக்கும் காங்கிரஸ் அரசின் கையாலாகத் தனத்துக்கு எதிரான மக்களின் கோபத்தை ‘அரசியல்வாதிகளின் மீதான கோபம்’ என்று திசைதிருப்பிக் காட்ட மாட்டார்கள்.
இனிமேலாவது பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் திருந்த வேண்டும். இல்லையென்றால் மக்கள் திருத்துவார்கள்.

நன்றி-- வனமாலி

Thursday, November 27, 2008

எல்லாம் வல்ல ஏக இறைவா....

எல்லாம் வல்ல ஏக இறைவா..
உன் சொர்க்கத்தில் நிறைய இடங்களை
காலியாக வைத்திரு
நரகத்தில் அதைவிட் அதிகமாக வைத்திரு
என் திருநாட்டின் மக்கள் தொகை 100 கோடிக்கும் மேல்
உன்னை நரகத்தில் நிச்சயமாக தீயில் வாட்டுவோம்
100 கோடி மக்களும் சேர்ந்து

வேதனைகளுடன்....

Friday, November 21, 2008

அந்த காட்சியை நானும் பார்த்தேன்..

நேற்று மாலை சுமார் 5.30 ஒரே கும்மிருட்டு ! :) வேலையை முடித்துவிட்டு காரில் செல்லும் போது தென்கிழக்கே தீடிரென்று தீப்பந்து குப்பென்று எழுந்தது.

சத்தம் ஏதுமில்லை....

பக்கது தொழிற்சாலை பத்திகிச்சா என நெஞ்சம் பதறியது.. அதில் வேலை பார்க்கும் என் நண்பருக்கு போன் செய்தால் அவரும் எங்க பாக்டரி இல்லையப்பா இன்னும் தெற்கே தெரிந்தது என்றார்.

மேலும் பதறி எல்லா தொழிற்சாலைகளிலும் போன் போட்டு கேட்டு பார்த்ததில் எல்லாரும் நலம் என்றார்கள்

கடைசியாக ருமுக்கு வந்து டிவி பார்த்து பிறகுதான் தெரிந்தது.... விண்கல்லாம்... ஆல்பெர்ட்டா சாஸ்கெச்சுவான் எல்லையில் விழுந்திருக்கிறது.

மறுநாள் அலுவலகத்தில் வீழும் பங்கு சந்தையைவிட வீழ்ந்த விண்கலலைப் பற்றிதான் பேச்சு பார்க்க்க யூட்யூப்

அமெரிக்கா என்னும் மாபெரும் ஜனநாயகம்


அமெரிக்காவை திட்டாத நாடுகள் இல்லை


அமெரிக்காவை எதிர்பப்து என்பது இந்திய அறிவுஜீவிகளின் அன்றாட வழக்கம்.


அமெரிக்காவின் படையெடுப்பை இகழாத மக்களே இல்லை..அமெரிக்கர்கள் உட்பட.


அமெரிக்காவின் டவுசரை கிழித்து அவிழ்த்து பார்த்து கைக்கொட்டி சிரித்துவிட்டு அமைதியாகி விட்டார்கள் தமிழ்வலைப்பதிவாளர்கள்.


அமெரிக்கா தன் ஜனநாயகத்தன்மையை மேலும் செம்மைப் படுத்திக் கொண்டிருக்கிறது.


ஒபாமா தன்னை எதிர்த்த தன் கட்சியை சேர்ந்தவருக்கு மந்திரி பதவி தருகிறார்.


இந்தியாவில் தலைவரை எதிர்த்தவருக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் உரிமையும் பறிக்கப்பட்டு தனி கட்சி தொடங்க கட்டாய்த்தில் இருப்பார்


தன்னை எதிர்த்து ஆக்ரோஷமாக பிராசாரம் செய்தவரை அழைத்து ஆலோசனைகள் செய்கிறார்.


தன்னை எதிர்த்து தோல்வி அடைந்தவருக்கு ஜெயிலில் ஒரு அறை ஏற்பாடு செய்யபடும்


எதிர்கட்சி ஆட்கள் திறமையானவர்களாய் இருந்தால் அதே பதவியில் தொடர்ந்து பணிபுரிய வேண்டிக்கொள்கிறார்கள்


ஆனால் இங்கே ஆளும் கட்சி போலீஸ், அதிகாரிகள் எதிர் கட்சி போலீஸ் அதிகாரிகள் என பிரிந்து கிடக்கிறார்கள்


சரிந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த ஒருங்கிணைந்து பேசுகிறார்கள்.


ஆனால் இங்கே பிரச்னைகள் தானக ஓய்ந்து தீர்ந்துவிடும். அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை திருடுவதில் மும்முரமாக இருப்பார்கள்


வாரிசு அரசியல், கோடிகணக்கில் கொள்ளை, ஊழல்... ஊழல்... என உழலும் இந்திய அரசியல்வாதிகளை இந்திய வாக்காளார்கள் தூக்கியடிக்கும் நாள் என்றோ என்ற ஏக்கத்துடன்.....



பி.கு. அமெரிக்க டவுசரை கிழித்தவர்களுக்கு... அமெரிக்கா என்னும் யானை சற்றே கால் தவறி விழுந்திருக்கிறது...அந்த அதிர்வில் ஜப்பான், ஜெர்மனி, சீனா மற்றும் இந்தியா கலங்கிவிட்டது.