Sunday, October 15, 2006

மீண்டும்...வணக்கம்...

கடந்த ஒரு வாரமாக உங்களிடம் என் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள வாய்பளித்த தமிழ் மண குழுவினர்க்கு நன்றி.

என் உளறல்களை பொறுமையாக படித்து அதற்கு பின்னூட்டம் அளித்தவர்க்கும், சும்மா படித்தவர்க்கும் நன்றி.

என் பதிவுகளில் உங்களுக்கு சந்தேகமிருந்தால் தயவுசெய்து கேட்கவும். என் பதில்கள் சிறிது தாமதமாகலாம் ஏனென்றால் அடுத்த இரண்டு வாரத்திற்கு ஒரு அலுவலக பயணம் இருக்கிறது


Saturday, October 14, 2006

குண்டலினி

Photobucket - Video and Image Hosting

முன்குறிப்பு :

1. எனக்கு குண்டலினி பற்றி பட்டறிவு இல்லை படிப்பறிவு( புத்தகம் மற்றும் இணயம்) சிறிதே உண்டு

2. எனக்கு தெரிந்த மிக சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளவே இந்த பதிவு. விவாதங்கள் மற்றும் மேல் விவரங்கள் வரவேற்க படுகின்றன



இட்ஸ்தாக் பெண்டாவ் என்பவர் ஒரு சோதனையை செய்தார். நம் இதய தசைகளை 7.5 Hz அலைவரிசையில் அதிர செய்தார். இது மூளையில் இந்த அலைவரிசையில் சில அதிர்வுகளை ஏறபடுத்தியது. இந்த அதிர்வுகள் மின்சக்தி போன்ற கிளர்ச்சிகளை ஏற்படுத்தியது. அது மூளையில் செல்களை ஒரு முகபடுத்தியது. அவ்வாறு ஒரு முகபடுத்தும் போது உடம்பில் உள்ள சக்திகளை மேல் எழுப்பி உடலிலும் மனதிலும் இருந்த இறுக்கங்களைத் தளர்த்தியது. இந்நிலையில் உடல் ஒரு 7.5 Hz அலைவரிசை ஆண்டெனா வாக மாறியது. இந்த அலைவரிசைதான் resonant frequencies of the ionosphere. அதாவது காற்றில் மிதந்து வரும் செய்திகளை கிரகிக்ககூடிய ரேடியோவாக உடல் மாறுகிறது. இது குண்டலினி சக்தி மேல் எழும்பும்போது எற்படும் உணர்வுகளை ஒத்தது என்றார்


ஆனால் இந்த மாதிரியான உணர்வுகளை ஆன்மிகம் (அது எந்த மதமானகும் சரி. மதமே இல்லையென்றாலும் சரி) என்ற பார்வையில் வெளி சக்திகளின் துணை இல்லாமல் அறிவதுதான் குண்டலினி யோகம் என்பது என் சிற்றறிவிற்கு எட்டியது.

இது தான் பாரதம் அளித்த யோகங்களின் மைய தத்துவம்

பாரதத்தின் தென்கோடியில் உள்ள தமிழ் மாநில சித்தர்கள் முதல் வடக்கே உள்ள காஷ்மீர் மாநிலத்தின் சைவர்கள் வரை குண்டலினி யோகத்தை போற்றி வளர்த்திருக்கிறார்கள்.


தன்னை தானே அறிவது தான் யோகத்தின் நோக்கம். இதற்கு முதலில் வேண்டியது உடல். அதைதான் திருமூலர் "உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே" என்றார். திருமூலர், போகர் போன்றவர்கள் குண்டலினி ஞானம் பெற்றவர்களே.

பாரதத்தின் பழம் பெரும் பொக்கிஷம் யோகம் என்பதாகும். எல்லா யோகங்களும் போதிப்பது என்ன வென்றால் உடலையும் மனதையும் தூய்மையாக வைத்துக் கொள் என்பதே. எல்லா யோக பயிற்சிகளும் முதுகெலும்பு வலிமையாக்குவதை பற்றியும் சுவாசப் பயிற்சியைப் பற்றியும் இருக்கும். இதற்கு முக்கியமான காரணம் குண்டலினியை எழுப்பதான்.

இந்த குண்டலினி-தூங்கி கொண்ட்டிருக்கும் சர்ப்பம் என சமஸ்கிருதத்தில் அறியப் படுகிறது. இந்த தூங்கும் சர்ப்பத்தை எழுப்பி நம் தலைக்கு மேல் விடுவித்து அளவற்ற ஞானத்தை பெறுவது குண்டலினி யோகம்

குண்டலினி பயிற்சிக்கு ஒரு குரு தேவை. இந்த பயிற்சியின் பக்கவிளைவுகள் அதிகம். அதைக் கண்காணிக்க நல்ல குரு தேவை. இதை ஊதாசீனப் படுத்த்கூடாது.

குண்டலினியை எழுப்பதவற்கு ஒரு குரு தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு அதைப் பெற்றவர் தொடர்கிறார். இங்கே சாதி, சமயம் , கடவுள் வேதம், மந்திரம் போன்றவற்றுக்கு வேலையில்லை. நம் உடலின் அடியில் மூலாதாரம் என்ற இடத்தில் தூங்கி கிடக்கும் சக்தி நாபி, வயிறு மார்பு, தொண்டை, நெற்றி கடைசியாக மேல் தலையில் முடிகிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு சக்கரம் சுற்றுவது போல் உணர்வுகள் தோன்றும் எனப்படுகிறது. அந்த்ந்த இடங்களுக்கு பெயர் வைத்து அழைக்கப்ப்டுகிறது.

சக்கரம் இருக்கிறது என்றால் ஆபரேசன் செய்து சுத்த விடுவதுதானே என கேள்விகள் கேட்டால் அது முட்டாள்தனம். நேரில் பார்ப்பவைகளைதான் ஆபரேசன் செய்து சரி செய்ய முடியும். நரம்பில் தோன்றும் அதிர்வுகள், மூளையில் ஏற்படும் எண்ணங்களை ஆபரேசனால் ஒன்றும் செய்யமுடியாது.

ஆச்சரியமான உண்மை என்னவென்றால் இந்த சக்கரங்களை குறிக்கும் இடமும் நம் உடம்பில் உள்ள நாளமில்லா சுரப்பிகளின்(Endocrine Glands) இருப்பிடமும் சில நரம்புகளின் கொத்துகள் (Ganglion Bundles) இருக்கும் இடமும் ஒன்றாக இருப்பது.

இந்த சக்கரங்களில் இயக்கங்களால் உடலும் மனமும் அமைதியாகின்றன. அமைதியான மனம் பேருண்மைகளை உணர்கிறது. இதுவே இறைவுணர்வு என அறியபடுகிறது.

யோக சாஸ்திரத்தின் எட்டு படிகள்

1. நல்லவைகளை செய்
2. மனம், உடல் செயல் களை சுத்தமாக வைத்திரு
3. ஆசனங்களை அனுஷ்டித்து உடல் நலம் கொள்
4. மூச்சு பயிற்சி செய்து மனதை அமைதி படுத்து
5. உணர்ச்சிகளிலிருந்து விடுதலை பெறு
6. கவனி
7.குவி
8 தியானி


முதல் இரண்டும் வீட்டிலும், பள்ளியுலும் கற்றுக் கொள்கிறோம். ஆசனங்களை ஹத யோக குருவிடம் கற்றுக் கொள்கிறோம்

ப்ராணாயாமம் என்பது சுவாச பயிற்சி.
உங்கள் மனம் அமைதியாக இருக்கும் போது சுவாசமும் அமைதியாகவும் சீராகவும் இருக்கும்.

அதேபோல் மூச்சு சீராகும் போது மனம் அமைதியாகிறது. வாழும் கலையின் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போதிப்பது இதைத்தான். மனம் அமைதியானால் போதும் சந்தோஷம் தானக வரும் என்பது அவரின் தத்துவம் . இதுவும் குண்டலினி யோகத்தின் ஒருபடிதான்

உடலும் சுவாசமும் கட்டுப்படும் போது கவனமும், நல்லவைகளை நோக்கி குவியும் மனமும் தானாக வந்துவிடும்

தியானம் எனபடும் அடுத்த நிலை. இது சற்று சிரமமானது. ஆனாலும் தொடரும் பயிற்சியினால் கற்றுத்தேறலாம்.

சமாதி என்பது இறுதி நிலை.



எல்லா நிலைகளிலும் நல்லதை நினை நல்லதை செய் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் படுகிறது.

இந்த யோகம் எங்கே கற்று தரபடுகிறது எனக் கேட்டால் எங்கும் என்றே பதில் சொல்வேன். மதுரையில் 96 வயது முதியவர் இருந்தார் மிக ஏழ்மையில் வாழ்ந்தாலும் சந்தோசமாக இலவமாக இந்த யோகத்தைக் கற்றுத்தந்தார். இது போல் வாழ்பவர்கள் உங்கள் நகரங்களில் வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள் அவர்களை அணுகுங்கள்,

இதைக் கற்றுக் கொள்ள என்ன தேவை. மனம்.
மாற்றங்களை விரும்பும் மனம்.
நம்பிக்கை
பணம் தேவையில்லை.
மதம் தேவையில்லை.
மறைகள் தேவையில்லை
ஓபன் மைண்ட் மட்டும் தான் தேவை

அகத்தியர், திருமூலர், போகர், பாபாஜி போன்ற சித்தர்கள் குண்டலினி யோகிகள்.

Photobucket - Video and Image Hosting

சமகலத்தவர்களில் நம்மாளு ஓஷோ, கோபி கிருஷ்ணா என்ற காஷ்மீரத்து சைவர் ஆகியோரின் எழுத்துகள் உலகில் பிரசித்தமானவை.

மேல்நாட்டு மனோதத்துவ வல்லுனர்களும், மருத்துவ வல்லுனர்களும், இறையியல் வல்லுனர்களும் எழுதிய புத்தகங்கள் இணையத்திலும் நூல் நிலையங்களிலும் கிடைக்கின்றன.

அனுபவத்தால் மட்டும் உணரகூடிய ஆன்மிக விஞ்ஞானத்தின் ஒரு மிகச் சிறிய அறிமுகமே இது.

பி.கு. தயவு செய்து குண்டலினி அனுபவம் பெற்றவர்கள். தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

மிக அசைவ சமையல் குறிப்பு

1. புனிதபிம்பம் கலைந்தது



2. முகத்திரை கிழிந்தது



3. பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது


4. இதிலிருந்தே தெரியவில்லையா ஆரிய வந்தேறிகளின் உண்மையான உணவு எது வென்று

இது போன்ற பின்னூட்டங்காளோ அல்லது தனி பதிவுகளோ கூட வரும். இதற்கெல்லாம் பயந்தால் முடியுமா. இந்த் பயங்களையெல்லாம் மீறி தான் இந்த பதிவு



அசைவம் சாப்பிட ஆரம்பித்த பிறகு ஆடென்ன மாடென்ன எல்லாமே தசைதான்.

அதற்க்காக மனிதனை சாப்பிடுவியா? எனக் கேட்டால் உயிர் வாழ அவசியமேற்பட்டால் ஆம் என்பதே என் பதிலாய் இருக்கும். சில வருடங்களுக்கு முன் விமான விபத்தில் தப்பித்தவர்கள் இறந்த பயணிகளின் தசைகளை அறுத்து சாப்பிட்டு உயிர் பிழைத்த கதைகள் தெரியுமே.

இந்த சமையல் குறிப்பு சிலபேருக்கு உவ்வே.... என வாந்தி வந்தால் அதற்கு பொறுப்பு அவர்களே.

மேலை நாட்டினரின் முக்கிய உணவு Beef Steak. வாரத்திற்கு ஒரு நாளாவது சாப்பிடவில்லையென்றால் ஏங்கிவிடுவார்கள். இப்போதெல்லாம் நாம் எல்லா நாட்டிற்கும் போகிறோம் அந்தந்த நாட்டின் உணவுகளை உண்டு பார்க்கவேண்டுமெல்லவா. ஜிகர்தண்டாவில் நின்றுவிட்டால் வாழ்க்கை போரடிக்கும்.

Beef Steak செய்வதற்கு மிக எளிது. Beef Steak செய்வதற்கு முன் அது மாட்டின் எந்த பகுதியிலிருந்து அறுத்தெடுத்தது என்பதை பற்றி அறிய வேண்டும். கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்

Photobucket - Video and Image Hosting


1.Chuck
Chuck Arm Pot Roast
Chuck Shoulder Pot Roast
Chuck Shoulder Steak
Chuck Eye Steak
Chuck Top Blade Steak
Chuck Blade Steak
Chuck Short Ribs
Chuck 7- Bone Pot Roast


2. Rib Roast
Rib Steak
Rib Roast
Ribeye Roast
Ribeye Steak
Back Ribs

3. Short Loin
Strip Steak
T- Bone Steak
Porterhouse Steak
Tenderloin
Filet Mignon

4. Sirloin
Sirloin Steak
Tri-tip Roast
Tri-Tip Steak

5. Round
Top Round Steak
Round Tip Steak
Round Tip Roast
Bottom Round Roast Eye
Round Roast Eye
Round Steak

6. Shank & Brisket
Shank Cross Cut
Whole Brisket Flat
Cut Brisket

7. Plate & Flank
Skirt Steak
Flank Steak

நாம் செய்ய போவது அய்ட்டம் நம்பர் 5 .

இது Safeway போன்ற பலசரக்கு கடைகளில் கிடைக்கும்.

Photobucket - Video and Image Hosting

இதை வாங்கி இதன் மேல் உடைத்த மிளகு, மற்றும் காய்ந்த மிளகாயை அழுத்தி தேய்க்கவும் (வெள்ளைகாரர்கள் மிளகாயை உபயோகிக்க மாட்டார்கள்)

Photobucket - Video and Image Hosting
ஒரு கோப்பையில் சிறிது பூண்டு பேஸ்ட் தேவையான உப்பு எண்ணெய் ஆகியவைகளை கலந்து இறைச்சியின் மேல் பூசிவிடவும். இதை அப்படியே 1/2 மணிநேரம் முதல் 1 மணிநேரம் வரை ஊற விடவும்.

Photobucket - Video and Image Hosting

பிறகு இதை எடுத்து போய் oven னிலோ அல்லது க்ரில்லிலோ அல்லது தோசைகல்லின் மீதோ போட்டு வாட்டவும். கரில்லில் 400 டிகிரி பாரன்ஹீட்டில் ஒரு பக்கம் 5 நிமிடம் வீதம் வாட்டினால் ஸ்டேக் ரெடி. அவ்வள்வு சிம்பிள். சிக்கன் மட்டன் செய்வது விட எளிது.

Photobucket - Video and Image Hosting

அடுத்து என்ன பார்க்கவேண்டுமென்றால் “done-ness” அதாவது எவ்வள்வு வெந்து இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

இந்த இறைச்சியை லேசாக சுடு பண்ணி சாப்பிட்டல் அதை VERY RARE என்பார்கள் இறைச்சி லேசாக வெந்துஇருக்கும் அப்படியே சிவப்பாக இருக்கும் கற்கால மனிதன் சாப்பிட்து போல் . அதற்கு அடுத்த ஸ்டேஜ் RARE உள்ளே Reddish pink கலரில் இருக்கும் இது கற்கால மனிதனுக்கு பின்னால் வந்தவன் சாப்பிட்டது. MEDIUM RARE அடுத்த தலைமுறை இதன் உள்ளே pink கலரில் இட்க்கும் மேலே முத்துக்கள் போல் juice இருக்கும். இது 18 ஆம் நூற்றாண்டு மனிதன் சாப்பிடுவது 19 ஆம் நூற்றாண்டின் மனிதன் MEDIUM சாப்பிட்டான் இது கொஞ்சம் அடர்ந்து ஆனால் juicy ஆக இருக்கும். 20 ஆம் நூற்றாண்ட்டின் மனிதன் சாப்பிட்டது WELL DONE இது Grayish pink கலரில் Somewhat moist ஆக இருக்கும். VERY WELL DONE என்பது உப்பு கண்டம் போல் கடினமாக இருக்கும்.

நான் 19-20 ஆம் நூற்றாண்டில் நின்று விடுவேன். அதாவது MEDIUM WELL தான் எனக்கு பிடித்த பதம்
Photobucket - Video and Image Hosting இது மெய்ன் புட். இதற்கு சைட் டிஷ் என்னவென்றால் சுட்ட உருளைக் கிழங்கு அல்லது அஸ்பாரகஸ் அல்லது ப்ரஞ்ச் ப்ரைஸ். இது செரிக்க இதை சாப்பிடும் முன்பும் சாப்பிடும் போதும் சாப்பிட்ட பிறகும் Wine குடிக்க வேண்டும்

டேய் மாடு எல்லாம் சாப்பிடேறே நீ இந்துவா என கேட்டால்

அதை சமாளிக்கவும் என் கிட்டே ஐடியா இருக்கு.
நம்மூர் மாட்டை பார் அதற்கு முதுகின் மேல் ஒரு திமில் இருக்கும். சிவபெருமானின் வெஹிகிள் அதுதான் .


Photobucket - Video and Image Hosting

நான் சாப்பிடும் மாட்டை பார் அதுக்கு திமில் கிடையாது ஆகையால் அதை சாப்பிடலாம்.

Photobucket - Video and Image Hosting

இதைப் படித்த பிறகும் பீப் ஸ்டேக் செய்து சாப்பிடுபவர்கள் எப்படி இருந்தது என்பதை எனக்கு தெரிய படுத்தவும்

பி.கு.1.

நான் வாழும் கலையின் சுவாச பயிற்சியைக் கற்றுக்கொள்ளும் வகுப்பில் சுமார் 50 வயது மூதாட்டி ஒருவர் இருந்தார். இந்த வகுப்பு நடக்கும் காலத்தில் மாமிசம் உண்ணக்கூடாது என்பது வேண்டுகோள். இந்த மூதாட்டி அவருடைய 50 வருட வாழ்வில் முதல் முறையாக மரக்கறி உணவை உட்கொண்டார். மேலும் 7 நாட்கள் மாமிசத்தை உண்ணாமல் இருந்தார். அவர் அடித்த கமெண்ட் "50 வருடங்களாக காய்கறிகளை உண்ணாமல் இந்த உலகத்தில் நல்லதை இழந்துவிட்டேன்"

பி.கு.2
என் மகனின் உடம் பருமனை கூட்ட அவனை ஒரு பிட்னெஸ் வகுப்பில் சேர்த்தேன் அவர்களின் சிபாரிசால்தான் இந்த உணவு. இவைகளை சாப்பிட்டும் அவன் எடை கூட வில்லை. சின்ன வய்தில் நீங்கள் ஒல்லியாக இருந்தீர்களா என கேட்டார்கள். ஆம் என்றேன். அப்படியென்றால் உங்கள் மகன் எடை கூடும் வாய்ப்பு மிக கம்மி என்றார்கள். இந்த மாதிரி ஒரு தமிழ் பதிவு படித்ததாக ஞாபகம்

Friday, October 13, 2006

இந்திய-அரேபிய-கனேடிய பள்ளிக்கூடங்கள்

என் உலகம் மிக சிறியது, என் குடும்பம். என் நண்பர்கள். நான் வாழ்ந்த ஊர்கள் என சிறிய வட்டம். நாம் எங்கு போனாலும் பள்ளிகூடங்கள் வாழ்வின் அடித்தள மாகிறது. அதனால் என் மகனின் பள்ளிகூடங்களை வைத்து ஒரு பதிவு. இதில் கூற படும் விஷயங்கள் என் மகனையும் அவனுடைய நண்பர் கூட்டத்தையும் வைத்து. விதிவிலக்குகள் உண்டு,.

இந்தியாவில் சிறு வயது முதல் படிப்பை திணி திணி என திணிக்கிறார்கள். சிறு குழந்தைகள் சின்ன வயதில் அதிசயதக்க வகையில் கணக்குகள் போடுகிறார்கள் பொயட்ரிகள் சொல்லுகிறார்கள். அதே வயதில் உள்ள வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகள் பள்ளிகூடங்களில் படம் வரைய சில பாடல்கள் பாட மட்டுமெ கற்று கொள்கிறார்கள்.

இந்தியாவில் குழந்தை வளர்ந்து மேல்நிலை பள்ளிக்கு போனதும் 5 மணிநேரம் பள்ளி 5 மணிநேரம் டியூசன் என பயங்கர டென்ஷன் மற்றும் போட்டி போட்டி என சதா காலமும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். இஞ்ஜீனியரிங் இல்லை என்றால் மெடிசின் இவை இரண்டும் இல்லை யென்றால் வாழ்க்கை இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். கணிணி படித்தால்தான் வேலை என்ற மாயையை உருவாக்கிவிட்டார்கள்.

அரேபியா பள்ளியில் கண்டிப்பு இல்லை. கவலையில்லாத வாழ்க்கை எல்லா வசதிகளும் ஈசியாக கிடைத்து விடுகிறது. பள்ளி போக வர சொகுசு பேருந்துகள் இல்லையென்றால் பெற்றோர்களின் கார்கள். மாலையில் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடிகளுக்கு போகவர பெற்றோர்களின் துணை. வேண்டிய பொருட்களை வாங்கிதர தந்தையாரின் வருமானம். நாளை மார்க்கு கம்மியானலும் தந்தை சீட் வாங்கிதந்துவிடுவார் ஒரு தன்னம்பிக்கை


கனடாவில் உயர்நிலை பள்ளியில் மாணவர்களை ஒரு வளர்ந்த மனிதனை போலவே பார்க்கிறார்கள். ஒருத்தரை ஒருத்தர் ஒப்பிட்டு பார்ப்பதில்லை. உங்கள் மகன் வாங்கிய மார்க்குகள் மற்றும் அவனுடைய வகுப்பின் சாரசரி இவைதான் நமக்கு தெரியபடுத்துகின்றனர். ஏனென்றால் 90% வாங்கியவனுக்கும் 100% வாங்கியவனுக்கும் அதிக வித்தியாசமில்லை என சொல்லுகிறார்கள். சிறு சிறு தவறுகளால் மார்க் குறைகிறது. அதை sloppy mistake ஓகே என ஈசி யாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் concept புரிந்து கொள்கிறானா என்பதை கவனிக்கிறார்கள். மேலும் தனிதன்மைக்கு அதிக மதிப்பெண்கள் தருகிறார்கள். காப்பியடிப்பது முக்கியமாக இண்டெர்னெட்டிலிருந்து வெட்டி ஒட்டினால் பிளாகிரிஸம் என உடனே தகுதியிழக்க வைக்கிறார்கள்.

சரி சந்தில் சிந்து பாட வருகிறேன்.

நான் அரேபியாவில் இருக்கும் போது என் மகன ஆங்கில கட்டுரைகளை ரெடிமேடாக கிடைக்கும் புத்தகத்திலிருந்து மனபாடம் செய்து பரீட்சையில் போய் கொட்டிவிடுவான். (எல்லா குழந்தைகளும் அப்படி கிடையாது. அறிவாளி குழந்தைகளும் அரேபியாவில் இருக்கிறார்கள்)

சில சமய்ம அவன் போன சுற்றுலாபற்றி நானும் என் மனைவியும் அமர்ந்து கட்டுரைகளை எழுதி தந்திருக்கிறோம். அந்த அளவிற்கு அவரேஜ் ஸ்டூடண்ட் ஆக தான் என் பையன் 2 வருடங்களுக்கு முன் கூட இருந்தான். அவன் பத்தாவது இரண்டாம் பாதியிலிருந்து இண்டெர்னேஷனல் பாக்குலேரேட் என்ற சிறிது கஷ்டமான கோர்ஸ்க்கு மாறினான். அந்த கோர்ஸ் சேர அப்ளிகேஷனுடன் ஒரு கட்டுரை எழுத வேண்டும். அதையும் நாஙகள் தான் எழுதி தந்தோம். அந்த கோர்ஸில் சேர்ந்ததும் மாற்றங்கள் மளமளவென தெரிந்தன.

நான் எழுதிய பயணகுறிப்பை படித்திருப்பீர்கள்.... இப்போது என் மகன் எழுதியது ஆங்கிலத்தில்....... என் மகனின் தரம் உயர்ந்த தரம் என எனக்கு தெரிகிறது என்ன இருந்தாலும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா.

உங்களுக்கு எப்படி தெரிகிறது என்பதை தயங்காமல் தெரிவித்தால் அவன் தரம் உயர வழிவகுக்கும். என் மகனின் வயது 16 படிப்பது 12ஆம் வகுப்பு

கட்டுரை இங்கே

August 30

Thoughts while on vacation

I have a 4 hour flight ahead of me and I thought I would do something productive. A blog entry came to mind, so here it is! Just a note, this isn’t an entry about how much fun this ride was and all that. Just about some of my thoughts and feeling that I had while I was on my trip.

I wasted my first 4 hour trip to Toronto listening to music and attempting to get some sleep on the little airplane seats. The movie wasn’t any good either. I believe the actor lost his job shortly after he did it. I speak of MI: 3 of course. I loved the music that I packed though, it inspired me to name the play list “Cardio Bismol”, because its mostly music that soothes the depressed person.

The airport was boring. It doesn’t deserve more words. And so were all the formalities my dad had to go through to rent a car. But our drive to Niagara was fun, mainly because we took a wrong turn as soon as we exited the rent-a-car compound. (XD). Many such incidences later, the first droplets from the falls started peppering our windshield.

The falls was beautiful, amazing, tantalizing blah blah blah… I’m sure you can come up with more adjectives than I ever could. =p. What I most loved about the falls was its sound. I loved the thunderous roar of thousands of gallons of water screaming past me in an instant. The deafening sound of monstrous rapids put a cork on all my thoughts. I lusted for the unimaginable power that let these rapids dance. I wished that I could hear it again.

I must admit that the falls’ beauty was dampened by development and the sheer number of people. There were observation decks, man made caves and walkways sticking out of nearly every crevice in the gorge. Hotels for rich people blocked the view of the horizon. And miles of Euclidian bridges stole the beauty away from the river underneath. It felt more like a gigantic water theme park than a natural wonder.

Verdict: Niagara Falls -had- the potential to become one of the most beautiful natural wonders. But Falls view casinos and five star hotels show that we are in a reign where natural beauty is only secondary to small pieces of green paper. Money be damned.

I missed the falls, but not the town. And I would get more town than I can handle in the next few days. I left Niagara and entered Toronto. It was the typical overcrowded, extremely large city. My best experience in Toronto was food. I visited three restaurants that are based in Madras (my birth city, you should know already, geez.). All of them had the same taste and standards that I would expect back in my home town. You should be ashamed if you have stopped reading my wonderful entry :p. Your friends mean nothing to you at all! (For people who are still reading, I just had to do that XD. Mention this in your comment so I know you read it.). They are extremely authentic, but maybe too authentic for people not from south India. The best of these three was a restaurant called “Wang’s Kitchen” (you owe me a cute gift if I made you laugh.). It was a fusion of south Indian cooking with Chinese cuisine; simply delicious and overwhelmingly spicy.

Worst experience in Toronto was the CN tower. There are two levels in the tower, one at 300 something meters and the other at 400 something meters. I had to wait an hour to get to the 400 meter level. And I had almost the same view >_>.

I also made a short trip to the Art Gallery of Ontario. Its ironic that such a tranquil place should be located in the heart of one of the biggest cities in the world. I wished that I had spent more time in there. I love looking at art work. I enjoyed about two and a half hours in there. The first two, I spent staring at one sculpture which was titled “Atom”.

Photobucket - Video and Image Hosting

Extrapolating meaning from a sculpture is much more complicated that looking into a painting or a poem. It was fascinating. I also craved for someone to talk to while I was in there, so that I could share my thoughts. But, my parents hated modern art.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

I completely loved the AGO’s tagline. It simply said “ART MATTERS” in all caps.

The gallery was fantastic. It had an entire section of sculptures that I would love to spend days looking at. After I was dragged away from the “Atom” (nuuuu!), I entered a gallery of paintings. The gallery arranged the paintings according to the questions they raised. Paintings dealing with society, spirituality and self discovery were the ones that I looked at the most.

“THERE ARE LESS THAN 5% FEMALES IN MODERN ART, BUT MORE THAN 85% OF THE NUDES ARE FEMALES” – “Do women have to be nude to enter a moden art gallery” painting.

That one was thought provoking. Is the bare female body really beautiful or is it simply because top artists say so?

The gallery had a section called “In Your Face”, where art from anyone and everyone was displayed. I picked up this wonderful poem on this exhibit. It’s about love, and I dedicate it to everyone who cares.

I AM

I am spirit,

I am grace,

Creativity,

Kaleidoscope face.



I am earth,

I am sea,

I am chaos,

Tranquility…



I am strength,

I am sorrow,

I am hope,

I am tomorrow.



I am courage,

I am fear,

I am alone,

I am here.



I am child, mother, sister, brother,

I am kindness, I am shame,

I am forgiveness, I am blame.



I am faith,

I am one,

I am all of these,

I am none,

I AM LOVE!

-Anonymous



That poem goes into my favorites list. I get a tingly feeling every time I read it.

Those are all the notable thoughts and feelings that I had in my trip. If you read all the way from the start till this point without forcing yourself a lot, please tell me! I want to see if my language makes for an easy read.

Awaiting comments!

Thursday, October 12, 2006

இந்து மதத்தின் இறை தூதுவர்

இந்த தலைப்பில் சுவன்ப்ரியன் ஒரு பதிவிட்டிருந்தார். அதை பற்றி விவாதங்கள் நடந்தன. நானும் பங்கு கொள்ளலாம் என இருந்தேன். சந்தில் சிந்து பாடும் நான் கும்பலில் கோவிந்தா போடுவதில்லை.

முதலில் இந்து மதத்திற்கு தூதுவர்.. ..........இந்த கான்செப்டே தப்பு.
அவர் முகமதிய மதத்தை ஒரு பெஞ்ச் மார்க்காக வைத்து கேள்விகள் கேட்கிறார். அதுவே தவறு. .

சரி விஷயத்திற்கு வருவோம்.

இணைய இஸ்லாமிஸ்ட்களின் இந்துமத மற்றும் வேத அறிவு என்னை பலமுறை வியப்பில் ஆழ்த்திள்ளது.

எப்படி இது சாத்தியம் என நான் ஒருவரிடம் கேட்க போக அவரும் கூகுளில் தேடவும் அதில் இந்து மத குப்பைகள் நிறைய உள்ளன என்றார்.

நானும் கூகுளில் தேட போக இந்துமத குப்பைகளை மட்டும் அவர்கள் கண்ணுக்குத் தெரிய அதன் பக்கத்தில் உள்ள முகமதிய மதத்தின் குப்பைகள் என் கண்ணுக்கு தெரிந்தது. சரி நானும் குப்பைகளை அள்ளி வீசலாம்.

ஐயோகோ நான் செய்வது வேறு தொழில் அல்லவா.

ஆகையால் இந்த குப்பைகளை கிளறும் தலைவர் யார் என்று பார்த்தேன். இவர் எனக்கு அறிமுகமானவர்தான். இவர் பெயர் Dr. ஜாகிர் நாயக். இவர் எம்.பி.பி.எஸ் படித்தவர். பம்பாயில் உள்ளவர். (சிலபேர் எம்.பி.பி.எஸ் படித்து விட்டு வேறு வேலைப் பார்த்து கவர்மெண்ட் பணத்தை வீணடிப்பர். இவரைப் போல் இன்னொருவர் தமிழ் நாட்டில் டாக்டர் மாத்ருபூதமுடன் சேர்ந்து புதிரா புனிதமா என்ற நிகழ்சிகளை நடத்திய Dr.சர்மிளா.)

Dr. ஜாகிர் நாயக் குர்ரானை வலமிருந்து இடமாகவும் இடமிருந்து வலமாகவும் படித்தவர்.

அந்த வசனங்களை மனதில் நிறுத்தியவர். எப்போது வேண்டுமென்றாலும் சக்.... சக் என்று நின்ஜா வீரர் நட்சத்திரங்கள் வீசுவது போல் குரான் வசனங்களை வீசுவார். அவர் தான் நம் இணைய இஸ்லாமிஸ்ட்டுகளின் friend, philospher and guide அவர் இடுப்பில் இருந்து தான் இவர்கள் சுடுவார்கள்.

இணைய இஸ்லாமிஸ்ட்கள் கையில் இந்தமதத்தின் நான்கு வேதப் புத்தகங்கள் இருக்கும் என நம்பிய நான் ஒரு முட்டாள். இவர்கள் இருப்பது சவூதி அல்லவா

இந்தமாதிரி இந்து வேதங்களை இஸ்லாமிஸ்ட்கள் அங்கே படித்தால் அவர்களின் தாடி எவ்வளவு நீளமாக் இருந்தாலும் அவர்களுக்கு உடனே டிபோர்டேஷன் தான்.

Dr. ஜாகிர் நாயக்கும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களும் சேர்ந்து "Concept of God in Hinduism and in Islam" என்ற ஒரு நிகழ்சியை நடத்தினார்கள். அதை ஏற்பாடு செய்தது ஒரு இஸ்லாமிய அமைப்பு. பங்கு கொண்ட மக்களில் பெரும்பாலோர் முகமதிய்ர்கள். இந்த நிகழ்சியின் ஒலிப்பதிவு எனக்கு கிடைத்தது. இருவர் பேசியதும் எனக்கு தூக்கத்தை வரவழைத்தது. அதிலும் டாக்டரின் டார்ச்சர் தாங்க முடியவில்லை. இந்து மதத்தின் இந்த புத்தகத்தில் இந்த பக்கத்தில் இந்த வரிகளை பார் என கேப்டன் ரேஞ்சுக்கு புள்ளி விவரங்களை பட்டியலிட்டார். எல்லா இந்துமத புத்தகத்திலும் முகமதுவைப் பற்றி கூறியிருக்கிறார்கள் அதனால் நாங்க தான் டாப்பு என சொல்லவும் கரகோஷம் வானைப் பிளந்தது. அந்த சத்ததில் "உங்க முகமதுவை பற்றி சொன்ன எங்க வேதங்களையும் மதியுங்கள்" என்ற ஸ்ரீஸ்ரீயின் வார்த்தைகள் யாருக்கும் கேட்கவில்லை.


இந்த நிகழ்ச்சியின் கேள்விபதில் பகுதிதான் சிறப்பானது.

அதில் ஒரு பெண்மணி கேட்ட கேள்வியை கீழே உள்ள வீடியோவில் கேட்கலாம்( ஆடியோ கிளிப்பை எப்படி அப்லோட் செய்வது என தெரியாமல் அதை வீடியோவாக மாற்றி ஏற்றியுள்ளேன்)


Dr. ஜாகிர் நாயக்கிடம் ஒரு இஸ்லாமிய பெண்மணியால் கேட்கப்பட்ட கேள்வி "நான் ஸ்ரீஸ்ரீ அவர்களின் சுவாசப் பயிற்ச்சியை பயின்று இறைவனுடன் இரண்டர கலக்கும் உணர்வை பெற்றிருக்கிறேன். அதற்கு நன்றி. இறைவன் எங்கும் நிறைந்தவன் (omni-present) என்கிறார்களே அதைப் பற்றி குரான் என்ன சொல்கிறது?"

அதற்கு Dr. ஜாகிர் நாயக் " குரானிலோ ஹதீஸ்லோ எங்குமே இறைவன் எங்கும் நிறைந்தவன் என்று சொல்லவில்லை. ஒரு முறை முகமது ஒரு வயதான் பெண்மணியிடம் கடவுள் எங்கே உள்ளார் என கேட்க அவர் வானததைக் காட்டினார். நீ பாஸ் என முகமது மார்க் போட்டுவிட்டார். கடவுள் எங்கும் நிறைந்தவன் என்று எந்த இடத்திலும் குரானில் பேசவில்லை. இதைப் பற்றி மேலும் விவாதம் செய்ய தேவையில்லை" என முடித்துவிட்டார்"

வானத்தில் அமர்ந்துக் கொண்டு அவ்வப்போது தூதுவர்களை அனுப்பி வேதங்களை பப்ளிஷ் செய்யும் இறைவன் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கடைசி ஆளை அனுப்பி கடைசி புத்தகத்தை வெளியிட்டுவிட்டு கடையை மூடிவிட்டார் என்பது காஃபிரல்லாதவரின் நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு இந்துமதத்தின் சிபாரிசும் தேவைபடுகிறது

"உனை எனதுள் அறியும் அன்பை தருவாயே" என உருகிய அருணகிரிநாதரின் வார்த்தைகளில் என்னை போன்ற காஃபிர்களின் நம்பிக்கை

இறந்தபிறகு கடவுளுடன் ஜாலியாக பார்ட்டி செய்யவேண்டுமென்பது காஃபிரல்லாதவரின் நம்பிக்கை

அந்த கடவுளாக மாறி அவருடன் கலப்பது என்பது என்னை போன்ற காஃபிர்களின் நம்பிக்கை

ஒரு புத்தகத்தில் காலை முதல் இரவு வரை ஆண் என்ன செய்யவேண்டும் பெண் என்னசெய்யவேண்டும் என உத்திரவிடுவது காஃபிரல்லாதவரின் கடவுள்

நீ நானாக் இரு. நானும் நீயும் வேறல்ல என்று அன்பை பிழிவது காஃபிர்களின் கடவுள்

உன்னிலும் என்னிலும்
தூணிலும் துரும்பிலும்
நேற்றும் இன்றும் என்றும்
இருப்பவன் இறைவன்.
அடியும் முடியும்
இல்லாத இறைவன்
முற்றுப் புள்ளிகளை
என்றும் வைப்பதில்லை
மனிதனே கடவுள்
மனிதமே மதம்

யோவ்... அது சரி இந்து மதத்தின் தூதுவர் யாரு அத்த சொல்லுவியா ...?


இந்து மதத்தின் இறைத்தூதுவர்.............


Photobucket - Video and Image Hosting


நீங்கள் தான்..........


Photobucket - Video and Image Hosting

நானும் தான்

கிளி(பெண்) விடுதலை

பெண் என்பவள் வளைவுகளின் அளவுகள் அல்ல (நன்றி டோண்டு சார்)

பெண் உன்னைப் போன்றே ஒரு உன்னத உயிர்.

எப்போதாவது WOMAN எனும் ஆங்கில வார்த்தையை உற்று நோக்கியதுண்டா?

அது WO(MB)MAN எனத் தெரிவதைக் காண்.

அதன் பொருள் கர்ப்பப்பைக் கொண்ட மனிதன் என உணர்.

ஆக யார் உயர்ந்தவர் என ஒப்பிடப் பார்த்தால், அதிகம் படைத்தவர்தானே உயர்ந்தவர்?

ஆண் தாழ்வு மனப்பான்மை கொண்டவன். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்தான் பொதுவாக அடக்குமுறையாளர்களாகவும் இருப்பார்கள். ஆண் பெண்ணை அடக்குவதும் அதனால்தான். எனவே எப்போது ஆண், பெண் அடக்குமுறையை கைவிடுகிறானோ, அப்போதுதான் அவன் அவனுடைய தாழ்வு மனப்பான்மையினின்று மீள்வான்.

ஆகையால் மனிதர்களே, உண்மையில் பெண் விடுதலை என்பது ஆண் விடுதலையே!


நன்றி : சரவணன்

இதுவும் ஒரு ரீமேக் என்னுடைய பழைய பதிவுகளிலிருந்து

டிஸ்கிளய்மெர்:

1. இது போட்டிக்கு அல்ல
2, இதில் உள்குத்து எதுவும் கிடையாது

மோட்டார் மேட்டர்

கார் என்பது சமீப காலம் வரை நடுத்தர மக்களின் எட்டாக் கனியாக இருந்தது. இன்று அது எல்லாருக்கும் கிடைக்கும் கனியாக மாறிவிட்டது. கார்களின் மேல் எனக்கு ஆர்வம் சிறு வயதிலிருந்து உண்டு.

சிமுலேசன் அவர்கள் என்னுடைய பதிவில் கேட்ட கேள்வி இந்த பதிவை எழுத தூண்டியது.

நவீன ரக காரில் என்னென்ன வசதிகள் அல்லது ஆடம்பரம் உள்ளன என பார்க்கலாமா?

நீங்கள் ஆபிஸ்ற்கு காலையில் 7 மணிக்கு கிளம்புகிறீர்கள் வெளிய கடுமையான பனி அல்லது வெயில் என்றால் வீட்டிலிருந்தபடியே காரை ஸ்டார்ட் செய்து ஏசி அல்லது ஹீட்டரை துவக்க ஏதுவாய் ரிமோட் ஸ்டார்டர். அருமையான சாதனம்

Photobucket - Video and Image Hosting

கார் பெட்ரோலில் மட்டும் இயங்கி கொண்டிருந்த காலம் போய் பாதி பெட்ரோலிலும் பாதி எலக்ட்ரிக்கிலும் இயங்கும் ஹைப்ரிட் கார்கள் வந்துவிட்டன. மெதுவாக போகும் போது எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும். வேகமாக போகும்போது எலக்ட்ரிக் மோட்டார் ஆப் ஆகி எஞ்சின் இயங்கும் அப்போது எலக்ட்ரிக் மோட்டாருக்கு வேண்டிய மின்சாரம் உற்பத்தி செய்து சேமிக்க படுகிறது, இது ஒரு வகை என்றால் நாலு சக்கரங்களிலும் எலக்ட்ரிக் மோட்டாரை பொருத்தி எஞ்சினின் ஸ்ட்ரெஸை குறைத்து பெட்ரோல் சேமிக்க வழிசெய்வது இன்னோரு வகை.

ஆட்டோமாடிக்காக காரின் வேகத்தை செட் செய்யும் Cruise control இருப்பது தெரியும். இப்போது காரின் முன் ஒரு லேசர் சென்ஸரை போட்டு இதை இன்னும் அதிக ஆட்டோமாடிக ஆக்கிவிட்டார்கள். நீங்கள் ஒரு ஹைவேயில் 100 கி,மீ செட் செய்துவிடுகிறீர்கள் உங்கள் முன்னால் செல்லும் காரும் 100 கிமீ வேகத்தில் போகிறது. முன்னால் செல்லும் கார் அதன் வேகத்தை குறைத்தால், இந்த லேசர் சென்ஸர் அதை உணர்ந்து உங்கள் காரின் வேகத்தை குறைத்து விடும்.

காரின் சாவியிலும் நுணுக்கங்களை நுழைத்துவிட்டார்கள். உங்கள் சாவியில் ஒரு சங்கேத குறி இருக்கும். அந்த குறிக்கு மட்டும் பணிந்து காரில் உள்ள கணிணி காரை ஸ்டார்ட் செய்யும். ஒரே காரை இருவர் உபயோகித்தால் அவரவரர்க்கு ஏற்றவாறு கார் சீட், ஸ்டேரிங்க் வீல் மற்றும் ரியர் வியு மிர்ரர்களை அட்ஜஸ்ட் செய்யும் செட்டிங்களை அந்த சாவிகளில் செட் செய்யலாம். எந்த சாவி கொண்டு காரை ஸ்டார்ட் செய்கிறோமோ அந்த சாவிகேற்றவாறு செட்டிங்கள் மாறும்

கார் ஏசியில் உங்களுக்கு ஒரு செட்டிங், பக்கத்து சீட்டுக்கு ஒரு செட்டிங், பின் சீட்டிற்கு ஒரு செட்டிங் என பல செட்டிங்களை செய்யலாம்.

நாலைந்து சானல் உள்ள ஆடியோ சிஸ்டம் வந்துவிட்டது. காரில் பயணம் செய்யுன் நான்கு பேரும் நாலு வேறு வேறு பாடல்களை அவர்களின் ப்ரத்யேக ஹெட்போன்களில் கேட்கலாம்
Photobucket - Video and Image Hosting
கார் பார்ர்கிங் அசிஸ்ட் என்ற சிஸ்டம் நீங்கள் கார் பார்க் செய்ய உதவுகிறது. ஏதையாவது ஒன்றை இடிக்கபோனல் சத்தம் எழுப்பி உங்களை உசுப்பிவிடும்

உங்கள் செல் போனை காரின் ஆடியோவுடன் இணக்கபட்டு உங்களுக்கு போன் வந்தால் ஆடியோ சிஸ்டம் ஆப் ஆகி போன் அந்த ஸ்பீக்கர்களின் வழியாக கேட்கும். போனை கையில் எடுக்க தேவையில்லை. காரில் ஒட்டிக்கொண்டே கவனம் சிதறாமல் பேசலாம்

மழை வரும் போது தானாக செயல் படும் வைப்பர்கள் வேகமாக கார் போகும் போது வேகமாகவும் மெதுவாக போகும் போது மெதுவாகவும் இயங்கும்.

கார் டயர்களின் காற்று இறங்கிவிட்டால் அதுவும் டாஷ் போர்டில் காட்டும்

வழிகாட்டும் GPS சிஸ்டம் உங்கள் குரலுக்கு மட்டும் கட்டுபட்டு வேலை செய்யும். வட அமெரிக்காவின் எல்லா நகரங்களின் மேப்புகள் அந்த சிஸ்டத்தில் உள்ளன. உங்களால் வழிதவறமுடியாது. திருடர்கள் இந்த கார்களை திருடினால் அதன் இருப்பிடத்தை துல்லியமாக காட்டி விடும். மேலும் இதை ஒரு ப்ளாக் பாக்ஸ் மாதிரி காரில் பொருத்தி நீங்கள் எந்த ரோட்டில் எந்த நேரத்தில் வேகமாக சென்றீர்கள் போன்ற செய்திகளை ரிகார்ட் செய்யபடும். வருட கடைசியில் நீங்கள் காரின் ரிஜிஸ்ட்ரேசனை புதுபிக்கும் போது அபராதங்களை தீட்ட வசதியாக இருக்கும்

ஆண்டி ரோல் ஒவர். காரில் வேகமாக போய் திரும்பும் நேரம் அதுகவிழும் அபாயத்திலிருந்து காப்பாற்றும்

சஸ்பென்ஷன் கண்ட்ரோல். ரோட்டின் கடுமையை பொறுத்து உங்கள் சஸ்பென்ஷனின் டென்சனை மாற்றி உங்களை சந்தோஷப் படுத்தும்

இப்போது பெட்ரோல் விற்கும் விலையில் சின்ன கார்களுக்கு மவுசு அதிகம். இரண்டு பேர் மற்றும் செல்லகூடிய ஆனால் வசதிகளில் சற்றும் குறைவைக்கத இந்த வகை கார்கள் அதிகமாக விற்கின்றன


Photobucket - Video and Image Hosting


இன்னும் என்னன்ன இருக்கிறது என்பது மேலும் அனுபவம் வாய்ந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்

Wednesday, October 11, 2006

நீமோ எனும் அன்புருண்டை

A pet in the house will change your life forever.

Photobucket - Video and Image Hosting
எங்கள் நீமோ வந்த பிறகு எங்கள் வாழ்க்கை மிக இனிமையாக இருக்கிறது.

பாலைவன குக்கிராமத்தில் இருக்கும் போது பற்பல வசதிகள் இருந்தபோதும் எந்த பொருளும் சொந்தமாக இல்லை.

இருந்த சில விலை உயர்ந்த பொருட்களை இந்தியாவிற்க்கு அனுப்பிவிட்டு, பல பொருட்களை குறைந்த விலையில் விற்றுவிட்டு, மிந்திய சில பொருட்களை இலவசமாக தந்துவிட்டு புத்தகங்கள், சமையல் பாத்திரங்கள், காசெட்கள், துணிமணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு கனடா வ்ந்தோம். வந்து வீடு, கார்கள், பர்னிச்சர்கள் வாங்கி செட்டில் ஆகிவிட்டது.

எதெற்கெடுத்தாலும் எங்களையே சார்ந்திருந்த எங்கள் மகனும் சுதந்திரமாக செல்ல நல்ல நகரமும் , பள்ளியும் நண்பர்களும் கிடைத்துவிட்டனர்.

வேலை, வீடு Friends, Raymond போன்ற அசட்டு சீரியலகள், வாரயிறுதி என வாழ்க்கை ஒரு ரோட்டீன் ஆனது.

அந்த சமயத்தில் என் மனைவியும் ஒரு மிகப் பெரிய நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கடையில் கணிணி டெக்னீசியனாக சேர்ந்தார். அங்கே கடும் வேலை. உடல் அசதியும் மன அசதியும் ஒருங்கே அவருக்கு ஏற்பட்டன. கிடைக்கும் நேரங்களில் அருகிலுள்ள வளர்ப்பு பிராணிகள் கடைக்கு சென்று அங்குள்ள பிராணிகளை
பார்த்தும் தடவியும் கொடுக்கும் போது என் மனைவிக்கு ஒரு வித இளைபாறுதல் கிடைத்தது.

இப்பிராணிகள் தலைமுறை தலைமுறையாக மனிதனுக்கு அன்பை தந்தும் பெற்றும் வளர்கின்றன. இதைக் கண்டதும் எங்களுக்கும் ஒரு செல்ல பிராணி வைத்துக் கொள்ளவேண்டும் என ஆசை வந்துவிட்டது.

சரி ஒரு கிளி வாங்கலாம் என்று முடிவுசெய்து Cockatiel இனத்தை தேர்ந்தெடுத்தோம் .

Photobucket - Video and Image Hosting

Cockatiel என கூகுளினால் ஆ....கோடிகணக்கில் தகவல்கள்.

Cockatiel பற்றி படிக்க படிக்க சுவையான தகவல்கள்.

எங்களின் முதல் கேள்வி சுதந்திரத்தை விரும்பும் நாம் சுதந்திர பறவையை கூட்டில் அடைத்து வைப்பதா? (தெ.கா. முன்னோரு முறை இதே கேள்வியைக் என்னிடம் கேட்டார்)

தவறுதான். இயற்கையாக திரியும் சுதந்திரமான பறவைகளை பிடித்து கூண்டில் அடைத்து வளர்ப்பது பாவம். நீமோவின் முதாதையரை யாரோ பிடித்து அந்த பாவத்தை செய்துவிட்டார். நீமோ மற்றும் அதனுடைய தாய் தந்தை ப்ரீடர்களின் வீட்டில் பிறந்து மனிதர்களால் உணவு கொடுக்கப்பட்டு மனிதர்களின் கையால் வளர்ந்தவை. இவைகளுக்கு சரியாக பறக்க தெரியாது, சரியான உணவை தேட தெரியாது எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள தெரியாது. இவைகளுக்கு 'விடுதலை' தந்தால் அதுதான் பாவம். இந்த பறவைகளை வெளியே விட்டால் ஒரே நாளிலோ அல்லது சில நாட்களிலோ இறந்துவிடும். நம் அன்பை செலுத்தி அதன் அனபை பெற்று அவைகளுக்கு நல்ல வீட்டை அளித்து காப்பது எங்கள் நோக்கம். நாங்கள் சுதந்திர பறவைகளை பிடித்து விற்கும் வியாபாரிகளை எதிர்க்கிறோம்.



இந்த பறவைகள் அவர்களுடன் வாழும் மனிதர்களை தன்னுடைய சக பறவை என்றே நினைக்கும். அந்த பறவை வகைகள் Canaries, finches, cockatiels, parakeets, and lovebirds.

ஆனால் conures, parrots, macaws, cockatoos போன்றவைகளின் குணங்கள் மாற்றவே முடியாது. இந்தமாதிரி பறவைகளை வளர்பதற்கு தனி தேவைகள், நேரம் இடம் தேவை. இவைகளை வளர்ப்பதைவிட இயறகையில் பார்த்து ரசிப்பது சால சிறந்தது. அடுத்தமுறை நீங்கள் உங்கள் மாடியிலோ அல்லது தோட்டத்திலோ அடிப்பட்ட பறவைகளை கண்டால் அவைகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து பறக்கவிடுங்கள். அந்த பறவைகள் பறக்க விரும்பாமல் உங்களிடமே இருந்தால் மட்டும் அதெற்கென்று ஒரு வீட்டை (கூண்டு என்பது ஜெயில்) கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

ஆக சுத்ந்திரமான பறவையை பிடித்து கூண்டில் வைக்கவில்லை அன்பான பறவையை வீட்டில் வைத்துள்ளேன்.

என் நீமோவிற்கு அவனுடைய வீடு ரொம்ப பிடிக்கும்.

Photobucket - Video and Image Hosting

பறவையை எப்படி செலக்ட் செய்வது?

பறவையை நீங்கள் செலக்ட் செய்ய முடியாது பறவை உங்களை செலக்ட் செய்ய வேண்டும். மேலும் பறவையை பெட் சாப்களில் வாங்கவே கூடாது. பெட் சாப் களில் சுதந்திர பறவைகளை பிடித்து விற்பார்கள். பறவைகளை humane சொசைட்டி அல்லது breeder இடமிருந்தோ தத்தெடுக்கவேண்டும். humane சொசைட்டியி லும் ப்ரச்னையான பறவைகள் இருக்கும். ஆகையால் நல்ல பறவை ஒரு நல்ல breeder இடம் மட்டும் தான் இருக்கும்

மீண்டும் கூகுள்........

கால்கரிக்கு அருகாமையில் 50 கிமீ தூரத்தில் Acme என்றொரு கிராமம் அங்கே ஒரு breeder காகடீல் களை தத்து தர விருப்பமாக இருந்தார். ஆனால் அவர் எங்கள் வீட்டையும் எங்கள் குடும்பத்தினரைப் பார்க்கவேண்டுமென்றார். நாங்களும் முதலில் பறவைகளை பார்க்கிறோம். அப்புறம் நீங்கள் எங்களை பாருங்கள் என்றோம். ஒரு சனி காலையில் அவர்கள் வீட்டிற்கு போனோம். அவர் அவரிடமிருந்த 3 குஞ்சுகளை காட்டினார். நான் அழைத்ததும் எங்கள் நீமோ என் மேல் தாவி அமர்ந்தது . என் விசிலுக்கு பதில் செய்தது என் கண்ணாடியை கடித்தது. அதைப் பார்த்த அந்த அம்மையார் நீமோவை எங்களுக்கு தத்து தர உடனடியாக சம்மதித்தார். Adoption fees ஐ 200 டாலரிலிருந்து 100 டாலருக்கு குறைத்தார்!!!.



நீமோவை ஒரு அட்டை டப்பாவில் அடைத்து எங்களிடம் தந்தார். நீமோவின் பிறப்பு சான்றிதழ் தந்தார். நாங்களும் வரும் வழியில் நீமோ வாழ வீடு, தானியங்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வ்ந்தோம். நீமோவின் வீட்டை செட்டப் செய்துவிட்டு அட்டை டப்பாவை திறந்தால் நீமோ மிக பயந்திருந்தது. பாவம். புது இடம் புது வீடு புது மனிதர்கள் மிகவும் பய்ந்து நடுங்கி கொண்டே அதன் வீட்டின் மூலையில் பதுங்கியது. பார்க்கவே பாவமாக இருந்தது. ஐயோ தவறு செய்துவிட்டோமோ என எங்களை நினைக்கவைத்துவிட்டது. ஆனால் நாங்கள் ஒன்றை கவனித்தோம் நாங்கள் சாப்பிடும் போது அதுவும் கீழே இறங்கி வந்து அதனுடைய வீட்டின் வைத்துள்ள அதன் உணவை சாப்பிடும். சிறிது உற்சாகம் எங்களுக்கு வந்தது. நாங்கள் அதன் வீட்டில் அருகில் அமர்ந்து சாப்பிடுவது போல் பாவ்லா செய்தாலும் அது சாப்பிட ஆரம்பித்துவிடும். அதன் வீட்டிலிருந்து அது இரண்டு நாட்கள் வரேவே இல்லை. எப்படி வரவழைப்பது என்பதை மீண்டும் கூகுளினால். ஒரு தவறான தகவல். ஒரு டவலால் அதைப் பிடித்து கைகளால் தடவி கொடுத்தால் அது பழகிவிடும் என போட்டிருந்தது. நானும் நீமோ வை டவலால் பிடித்தேன். அது மரண ஒலமிட்டது பாவமாய் இருந்தது. பிறகு என் கையில் அதை எடுக்கும் போது என் விரலை செமையாக கடித்து இரத்தம் வந்துவிட்டது. சரி அப்போதைக்கு விட்டு விட்டேன்.
Photobucket - Video and Image Hosting

அதுவும் ஓடி போய் அதன் வீட்டில் அடைந்தது. மறுநாள் பறவைகளின் டாக்டரிடம் ஒரு செக்-அப். பறவைகள் மற்றும் வளாப்பு ஓணான், தவளை, பாம்பு இவைகளுக்காக ஒரு ஸ்பெசலிஸ்ட். அவர் நீமோவை நன்றாக செக் செய்துவிட்டு நல்ல பறவை இது. சிறிது பொறுமையாக அன்பாக இருங்கள் பழகிவிடும் என்றார். (இங்கே மனிதர்களுக்கு மருத்துவம் இலவசம். மிருகங்களுக்கு பீஸ் மிக அதிகம். ஒரு விசிட்டிற்கு $100 ஆகும்) நாங்களும் அதனுடைய treat ஆன spray millet என்ற கேழ்வரகு பொன்ற தானியத்தை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தோம். அதனை காட்டியும் அது அதன் வீட்டிலிருந்து வெளியே வரவே இல்லை. பொறுமை...பொறுமை.... மறுநாள் spray millet ஐ பார்த்து ஆசையுடன் இறங்கிவந்து பயத்துடன் சாப்பிட்டது . என் மனைவி பொறுமையாக..மிக பொறுமையாக தினமும் சுமார் இரண்டு மணிநேரம் அந்த spray millet ஐ கையில் வைத்து ஒரு தவம் செயவதை போல் அதன் முன் அமர்ந்திருப்பார். மெதுவாக... மெதுவாக நீமோ கையில் அமர்ந்தது. நாங்கள் அருகில் போனால் அதன் வீட்டில் தஞ்சமடைந்தது. சில நாட்களில் மெதுவாக எங்கள் கைகளில் உள்ள spray millet ஐ பயமில்லாமல் சாப்பிட ஆரபித்தது. ஒரு நாள் அருகில் உள்ள பெட் சாப்பில் ஒரு பெண்மணி ஒரு கிளியின் தலையை கோதி கொண்டிருந்தார். அந்த கிளியும் ஆனந்தமாக தலையை திருப்பி திருப்பி கோதிக் கொண்டது. அந்த டெக்னிக்கை பயன் படுத்துவது என முடிவு செய்து வீட்டிற்கு வந்து. என் மனைவி நீமோவை spray millet காட்டி வெளியே அழைத்தார். அது கையில் அமர்ந்தவுடன் மெதுவாக அதன் தலையை வருடினார். அவ்வளவுதான் அது மயங்கிவிட்டது. அழகாக தலையை குனிந்து மேலும் மேலும் வருட சொல்லி கேட்டுக் கொண்டது. பறவைகள் அதன் ஓய்வு நேரத்தில் அதன் உடல் முழுவதும் சொறிந்து கொள்வதை பார்த்திருப்பீர்கள். இதை preening என்பார்கள். அதன் இறகுகளின் அடியில் ஒருவித moisturising திரவம் ஊறும். அதைக் கொண்டு அதன் இறக்கைகளை பள பளப்பாக்கி கொள்ளதான் அது அவ்வாறு செய்கிறது. அதன் தலை அதற்கு எட்டாது அதனால் அருகில் உள்ள பறவையிடமோ அல்லது நம்மிடமோ preening செய்வதில் கொள்ளைப் பிரியம்.

அதன் பிறகு நீமோ மிக நன்றாக பழகிவிட்டது.


தினமும் காலையில் கண் முழிக்கும் போது பரபரப்பாக் போய் நீமோவை பார்ப்பதும் அதன் அதிகாலை பாடலை கேட்பதிலும் மனம் லயித்தது. ஒவ்வொரு மாலையும் அலுவலகத்தில் வந்தவுடன் க்கீ என நம் வருகையை அன்புடன் வரவேற்கும் அழகை காண வீட்டிற்கு வருவதில் ஒரு உற்சாகம் இருந்தது.

கால போக்கில் நாம் பேசும் வார்த்தைகளை அர்த்ததுடன் பேச துவங்கியது.

சாப்பிட வேண்டுமென்றால் நீமோ ஈட் என சொல்லும், ஸ்பெஷல் அய்ட்டங்களை நீமே ட்ரீட் என்று சொல்லும். ஊட்டா என வாட்டரை கேட்கும் . படுக்க போகுமுன் குட்நைட் என அழகாக சொல்லும்.


சில பாடல்களை விசிலடிக்கும். அந்த வீடியோ கீழே உள்ளது




இந்த பறவைகளுக்கு சந்தோஷம், துயரம், கோபம், டிப்ரஷன் போன்ற உணர்ச்சிகள் உள்ளன.

இந்த வகை பறவைகள் ஜோடி சேர்ந்துவிட்டால் உயிருள்ள வரை பிரியாது. ஆம் ஏக பத்தினி (பத்தனன்) விரதர்கள்.



நீமோ எங்களுடன் சேர்ந்து எங்கள் குடும்பத்தில் ஒன்றாகிவிட்டது. தினசரி மாலையில் என் மனைவியின் தோளில் அமர்ந்து அவர் செய்யும் எல்லா வேலைகளிலும் பங்கு கொள்ளும். மாலை வேளை பூஜையில் என் மனைவியின் தோளில் அமர்ந்து பூஜையில் பங்கு கொள்ளும். அவர் தியானத்தில் இருக்கும் போது தோளில் இருந்து இறங்கி வந்து கையில் அமர்ந்து கொண்டு உறங்கி விடும் . பிறகு விபூதியை பூசிக் கொள்ளும் போது அந்த வீபூதியை சாப்பிட சிறு குழந்தையை போல் ஓடி வரும். பிறகு தீர்த்தம் சாப்பிட ஆவலாக வந்து அந்த தண்ணீரை குடிக்கும்.

பிறகு மாலை முழுவதும் என் மனையின் கையால் தலையை வருடிக் கொள்ளூம்.

Photobucket - Video and Image Hosting

நீமோ இல்லாத வாழ்க்கை ஒரு சூன்யமாகதான் இருக்கும்




காகடீல் வகை பறவைகள் சுமார் 20 வருடங்கள் முதல் 25 வருடங்கள் வரை உயிர் வாழும். எங்கள் குடும்பத்தில் கலந்து எங்களின் இரண்டாவது மகனான நீமோவின் ஆயுட்காலத்தில் எங்கள் ஆயுள் முடிந்தால் அவன் வாழ்வதற்கு வகை செய்து அவனுக்காக உயில் எழுத ஏற்பாடுகள் செய்து வருகிறோம்

எங்கள் அன்பிற்காக ஏங்கி அன்பை மட்டுமே கொடுத்து வாழும் இந்த பறவைகளின் அன்புதான் நிபந்தனைகள் அற்ற தெய்வீக அன்பா.....

Photobucket - Video and Image Hosting


ஆம்... இந்த சின்னஞ்சிறு 70 கிராம் அன்புருண்டையின் அன்பினால் வாழ்க்கை இனிமையாய் இருக்கிறது

காந்தீயம் ...

Photobucket - Video and Image Hosting
ஒரு உச்சி காலை நேரம். அமைதியாக இருந்தது. நான் மாகாத்மா காந்தியின் சிலையின் அடியில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தேன். காந்தியடிகளிடம் உண்மையான காந்தியடிகள் எங்கே என கேட்கலாம் என நினைத்தேன். நான் கேட்க முற்படுதற்கு முன் காந்தி சிலை " இந்த முட்டாள்கள் என்னை இங்கே நிறுத்திவிட்டார்கள். அங்கே ரணா ப்ரதாபிற்கு ஒரு குதிரை, சிவாஜிக்கு ஒரு குதிரை ராணி லக்ஷ்மிபாய்க்கு ஒரு குதிரை இருக்கிறது நான் மட்டும் நிற்க வேண்டியிருக்கிறது" என முணுமுணுத்தது.

எனக்கு ஒரே ஆச்சரியம் காந்திக்கும் கோபம் வருமா என அவருக்கு அருகில் ஓடினேன். காந்தி மிக கோபமாகவும் அவர் சீடர்களை சபித்துக் கொண்டும் இருந்தார். " எங்கே அந்த கபடர்கள் எனக்கும் உட்கார ஒரு குதிரை வேண்டும்" என்றார். நான் அவரை ஆசுவாசப் ப்டுத்தி தோட்டத்தில் உள்ளே ஒரு மரத்தின் நிழலுக்கு அழைத்து சென்றேன். அங்கே போனதும் அவர் "I asked you for a horse mister, not an ass." என்று பீட்டர் விட்டார். ஆக்ஸ்போர்டு பட்டதாரி அல்லவா "நான் கேட்டது குதிரையை கழுதையை அல்ல நண்பரே"

அதற்கப்புறம் காந்தி எங்கே போனார் என தெரியவில்லை. என் பகல் தூக்கம் முழுவதும் களைந்திருந்தது ஆனால் இந்த நினைவுகள் இரவு முழுவதும் நிறைந்திருந்தன.

கழுதைகளை குற்றம் கூறி பிரயோசனமில்லை . மஹாத்மாக்கள் சுற்றி கழுதைகளின் கூட்டம் கூடும். ம்ஹாத்மாக்கள் முதல் ரேங்க் வாங்குபவர்கள. ஒரு மஹாத்மா இன்னொரு மஹாத்மாவின் காலடியில் அமர்வதில்லை. மாஹாவீராகட்டும் புத்தராகட்ட்டும் கிருஷ்ணராகட்டும் காந்தியாகட்டும் இவர்கள் யாரையும் பின் பற்றவில்லை. இவர்களுக்கென்று தனி பாதையை வகுத்து அதில் பயணம் செய்வார்கள். சொந்த காலில் நிற்க மனவலிமையும் அறிவும் இல்லாதவார்கள் தான் பின்பற்றுபவர்கள்.

காந்திக்கு பின்னால் இருந்தவர்கள் காந்தியின் பிம்பத்தை பிரதிபலித்தார்கள். ஆனால் இப்போது இருப்பவர்களோ மூன்றாம் தர நான்காம் தர அரசியல்வாதிகள்

நாம் எப்போது விமர்சிக்கிறோம். நாம் நல்லது என கற்பனை செய்தது நம் இஷ்டத்திற்கு இல்லாத போது விமர்சனங்கள் வருகின்றன.

கற்களையும் கண்ணாடி துண்டுகளையும் வைரம் என வாங்கி பிறகு அவை வெறும் கற்கள் என மன்ம் நோகும் போது யாரை குறை கூறவேண்டும் அந்த கற்களையா அல்லது அந்த ஏமாளியையா?. அந்த ஏமாளி தனது மூளையை உபயோகித்திருக்க வேண்டும்..

இந்த மாதிரிதான் இந்த காந்தீயவாதிகளும் காந்தி என்ற ஒளி இருந்தவரை இந்த கண்ணாடிகற்கள் ஓளிந்தன. அது மறைந்தவுடன் அவை உடைந்த கண்ணாடி சில்லுகள் ஆகிவிட்டன. அவை இருக்க வேண்டிய இடம் குப்பை ஆனால் அவர்களுக்கு நாம் சிம்மாசனமல்லவா கொடுத்திருக்கிறோம்.

உண்மையான விடுதலை வேண்டுமென்றால் எல்லா இசம்களும் கொளகைகளையும் உடைத்தெறிய வேண்டும். காந்தியவாதிகளை சிம்மாசனத்தில் அமர்த்தி தவறு செய்தோம். மார்க்ஸீய வாதிகளை தேர்ந்தெடுத்தால் அது மற்றுமொறு மிக தவறு. ஒரு இசத்திலிரிந்து இன்னொரு இசத்திற்கு தாவும் குரங்குகளாக திரிகிறோம்

நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர் ஒரு மனிதரின் கொளகையிலோ ஒரு இயக்கத்திலோ தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதவராக இருக்கவேண்டும். தன்னுடைய சுயப்புத்தியை உபயோகித்து மக்களின் அன்றாட ப்ரச்னைகளை மன உறுதியோடு அதன் வேரிலிருந்து களைபவராக இருக்கவேண்டும்.

ஒரு கொளகையை பின்பற்றுபவர்களுக்கு அந்த தனமை கிடையாது. அவருக்கு ப்ரச்னைகள் எழுப்பபடும் முன்னரே தீர்க்கப்பட்டு விட்டன. மஹாத்மாக்கள் எழுதிய புத்தகங்களில் எல்லா ப்ரச்னைகளுக்கும் தீர்வு தந்தாகி விட்டது.

இந்த மாதிரி தீர்வுகளை தந்த புத்தகங்கள் குப்பைகள் மேலும் மனித குலத்திற்கு அதிக தீங்குகளை விளைவிப்பவை. காந்தியடிகளின் அணுகுமுறை அந்த காலத்தில் அந்த ப்ரச்னைகளுக்கு ஒரு நல்ல தீர்வாக இருந்திருக்கலாம். தற்போது ப்ரச்னைகள் வேறு. காலம் மாறி விட்டது. ஆனால் காந்தியவாதிகள் ப்ரச்னைகளை தீர்க்க அதே முறையை கையில் எடுத்துக் கொள்கின்றனர். வாழ்க்கை முன்னோக்கி செல்ல இந்த காந்தியவாதிகள் இதை பின்னோக்கி இழுக்கிறார்கள்.

வினோபாவை அரசாங்க சந்நியாசி என்கிறார்கள் ஒரு சந்நியாசி அரசாங்கத்தில் ஆளாக இருக்க முடியுமா? இது விபசார-மனைவி என்பது போலல்லவா இருக்கிறது.

ஒரு சந்தியாசி என்பவன் ஒரு புரட்சிக்காரன் (நமது புரட்சி தலைவர், தலைவி, கலைஞர் இவர்களுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்) . வினோபா யாரை எதிர்த்து புரட்சி செய்வார். காந்தி அரசாங்க அனுமதியுடன் ஒத்துழையாமை நடத்தினார். வினோபா அரசாங்க அனுமதியுடன் புரட்சி செய்கிறார். விந்தையுலும் விந்தை.

இந்த மஹாத்மாக்கள் சாதரணரால் பின்பற்ற முடியாத கடுமையான தத்துவங்களை சொல்லுவார்கள். இவைகளை கேட்க மிக அருமையாக இருக்கும் ஆனால் பின்பற்ற மிக கடினம். இதை பின்பற்றிய வெகு சிலர் மேலே செல்ல சாதரண மக்களின் வாழ்கை இன்னும் மோசமாகியது. சர்கஸில் கயிற்றில் நடப்பவனைப் பார்த்து கைத்தட்டி உற்சாகப் படுத்துகிறோம். நாம் எல்லாரும் அந்த கயிற்றில் நடக்க முயன்றால் நாம் போக போவது மருத்துவமனைதான்.

ஒரு மனிதன் தலை கீழாக நகரத்தில் நடந்தால் நாம் கைதட்டி உற்சாகப்படுத்துவோம் . நாம் கைத்தட்டாவிட்டால் அவன் ஏன் தலைகீழாக நடக்கிறான். இந்த மஹாத்மாக்கள் இந்த சர்கஸ்காரர்களை போல்தான். சாதரண மக்கள் செய்பவைகளை அவர் செய்யவில்லை. செய்ற்கரிய காரியங்களை செய்துவிட்டு மறைந்துவிடுகிறார்கள். இவர்களின் சீடர்களின் பாடு படுதிண்டாமாகிவிடுகிறது.

ஒரு வகையில் இந்த மஹாத்மாக்களும் தீவிரவாதிகளே. அஹிம்சை என்ற கொள்கையை விட்டு சென்றார். அவருடைய சீடர்களால் அஹிம்சையை கடைப் பிடிக்க முடிந்ததா?
இவ்வுலகில் உயிர் வாழ சிறிதளவு வன்முறை தேவை. சரி காந்தியின் அஹிம்சை கொளகையை எடுத்துக் கொள்வோம்

ஒருவன் மார்பில் கத்தியை வைத்து அடங்கு என்றால் அது வன்முறை

அதே நேரம் அவன் வீட்டு வாசலில் அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரதமிருந்து அடங்கு என்றால் அஹிம்சையா?

இதுவும் ஒரு வன்முறை அல்லவா. முந்தையது அவனை நோக்கி என்றால் பிந்தையது தன்னை நோக்கி அல்லவா. இந்த விஷயத்தில் உண்மையானவர் அம்பேத்கார். நான் என்னுடைய கொள்கையிலிருந்து மாறவில்லை. காந்திஜியின் உயிர் காக்க நான் ஒத்துக் கொள்கிறேன் என்றார். இங்கே மனங்கள் மாறினவா?

இவருடைய சத்தியாகிரகத்தால் கிடைத்த சுதந்திரம் அதற்கப்பால் நடந்த பிரிவினையை தடுத்ததா? அல்லது பிரிவினையில் நடந்த வன்முறைகளை தான் தடுத்ததா? ஒரு வில்லின் நாண் எவ்வளகெவ்வளவு அதிகம் பின்னோக்கி இழுக்கப்படுகிறதோ அம்பு அவ்வளக்கவ்வளவு முன்னோக்கி பாயும் அது போல் தான் சுதந்திரம் கிடைப்பதற்கு அடக்கி வைத்த வன்முறை பிரிவினையின் போது அதிக சீற்றம் கொண்டு பாய்ந்த்து.

யேசு ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று அனபை போதித்தார். ஆனால் நடந்த முடிந்த உலகபோர்கள் கிருத்துவர்க்ளுக்குள் தானே. எத்தனை வன்முறை எத்தனை உயிரிழப்பு அப்பப்பா...

ஒரு கிருத்துவனை இன்னொருவன் கன்னத்தில் அறைந்தான். சிறிது நேரம் கழித்து அந்த கிருத்துவன் தன்னை அடித்தவனின் கழுத்தை முறித்துக் கொண்டிருந்தான். அவனிடம் "என்னப்பா நீ இன்னொரு கன்னத்தை அல்லவா காட்டியிருக்க வேண்டும்" என கேட்டதற்கு அவனும் " என்னிடம் இருந்த இரு கன்னங்களையும் உபயோகித்துவிட்டேன். இப்போது மூளையை உபயோகிக்கிறேன்" என்றான். இந்த நிலைமையில் தான் இன்றைய காந்திய்வாதிகள இருக்கிறார்கள். வேண்டிய் அளவிற்கு காந்தீய தத்துவங்களை பின் பற்றிவிட்டு மனதில் உள்ள விகாரங்களை வெளி கொணர்கிறார்கள். அதன் விளைவுகளை நாம் இப்போது காண்கிறோம்.

கன்பூஸியஸ் " நான் இருமுறை சிந்தித்தால் போதும். ஆகையால் நடுவழியை தேர்ந்தெடுக்கிறேன்" என்றார். வாழ்க்கையின் ஒரு எல்லையில் இருப்பவன் வன்முறையை தேர்ந்தெடுக்கும் தீவிரவாதி என்றால் மறு எல்லையில் இருப்பவன் அஹிம்சையை தேர்ந்தெடுக்கும் மஹாத்மா. இருவருக்கும் அவ்வளவு வித்தியாசமில்லை

காந்தி உடையை குறை. சாப்பட்டை குறை. ஏழ்மையை ஏற்றுக்கொள் என போதித்தார். அது இயற்கைக்கு முரணானது.

நன்றாக சாப்பிடு அது அலுக்கும் வரை. நன்றாக உடுத்து அது அலுக்கும் வரை எல்லையில்லா பணம் சம்பாதி அது அலுக்கும் வரை. இதுதான் நான் காட்டும் வழி. எதையுமே முழுமையாக செய்பவன் தான் நல்ல பண்பாளனாகவும் உருவாகிறான். எதையுமே மறுப்பவனின் மனம் இருகூறாகிறது. இயற்கை ஒன்றை செய் என சொல்ல கொளகை தடுக்க மனிதன் இருகூறாகிறான்.

காந்தி முரட்டு காதி அணிய சொன்னார். அவரின் சீடர்கள் மிக மெல்லிய காதியை அணிய ஆரம்பித்துவிட்டனர். காதி மெலிய மெலிய விலை ஏறுகிறது. இன்றைய நாளில் காதிதான் அதிக விலையில் விற்கிறது. மனிதன் மெல்லிய பட்டு போன்ற ஆடைகளை அணிய விரும்புகிறான் ஆனால் காந்தியோ அதை எதிர்க்கிறார்.

காந்தி குடிசையில் வாழ வேண்டுமென்றார். அவர் இறந்ததும் அவரது சீடர்கள் மாளிகைகளை நாடி சென்றனர். நான் பாபு இராஜேந்திர பிரசாத் அவர்களை சந்திக்க ராஷ்ட்ரபதி பவனுக்கு சென்றிருந்தேன். அவர் வைஸ்ராய் அமர்ந்த சிம்மாசனத்தில் பாய் போட்டு அமர்ந்திருந்தார். அந்த மாளிகையில் கோமணங்கள் காயப்போடபட்டிருந்தன. என்ன ஒரு பகல் வேஷம். ஆயிரம் வேலைக்காரார்கள் இருக்கும் இடத்தில் இது விநோதமாக பட்டது. குடிசையில் இருக்கவேண்டுமென்றால் குடிசையில் இருங்கள் மாளிகையில் இருக்க வேண்டுமென்றால் மாளிகையில் இருங்கள். குடிசை வாசி போல் மாளிகையில் ஏன் வாசிக்க வேண்டும்?. ஏன் இந்த இரட்டை வேடம்

இவர்கள் மக்களை எளிதாக வாழ் என போதித்து ஏழ்மையை நோக்கி அழைத்து சென்றார்கள். செழிப்பாக வாழ் என போதித்து வளமையை நோக்கி மக்களை அழைத்து செல்ல மறந்துவிட்டார்கள்.

பாவம் காந்தீயவாதிகள்....

------------------------------------------------------------------------------------
ஜூலை 19ந்தீ, 1969 பாம்பேயில் ஒஷோ பேசியது. இது புத்தகமாக பதிப்பிடவில்லை
-------------------------------------------------------------------------------------

Photobucket - Video and Image Hosting


இங்கே காந்தீயம் என்பதை எடுத்துவிட்டு வேறு எந்த ஈயத்தையும் ஊற்றுங்கள் சரியாக வரும். எல்லா இசங்களும் ஈயங்களும் காலத்திற்கு காலம் மாறிவிடுகின்றன. அதை பற்றி தொங்கிக் கொண்டிருக்கும் மனிதன் தான் ஆபத்தானவன் அதுவும் அவன் தலைமை பீடத்தில் இருந்தால்.


மாற்றம் மட்டும்தான் நிரந்தரம்

Tuesday, October 10, 2006

நயாகரா-டோராண்டோ ஒரு பயணக் கட்டுரை

குடும்பத்துடன் டோராண்டோ மற்றும் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு கோடை விடுமுறைக்கு சென்ற பயணக் கட்டுரை. (நட்சத்திர வாரத்தில் சொந்த கதைக்களை சொல்லி பந்தா அடிக்காவிட்டால் பிறகு வாய்ப்பு ஏது)

கால்கரியிலிருந்து டோரோண்டாவிற்கு விமான பயணம் சுமார் 4 மணி நேரம் இது அபுதாபி/சவூதி - சென்னையை விட அதிக நேரம்.

நானும் அமெரிக்க கஞ்ச பிஸினாரி NRI போல் மிக மலிவான விலையில் விமான டிக்கட் வாங்கினேன். விளைவு விமானம் காலை 6 மணிக்கு. இந்த தீவிரவாத மூதேவிங்க ஏதோ சொல்லபோயி எல்லாரும் ஒரு மணி நேரத்திற்க்கு முன்னமே விமான நிலையத்திற்கு வர சொல்ல 5 மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டுமென்றால் வீட்டிலிருந்து 4.30 க்கு கிளம்ப வேண்டும். 4.30 மணிக்கு கிளம்பவேண்டுமென்றால் 3.30 மணிக்கு எந்திரிக்க வேண்டும். ய்ப்பா ...... ஏர்போர்ட்டுக்கு போயி களைத்துவிட்டோம்.

இணையத்தில் செக்-இன் செய்திருந்ததால் நேராக லக்கஜை பொட்டுவிட்டு என் பேவரிட் Tim Hortons காபியை அருந்தியவாறே செக்யூரிட்டிக்கு போனால் அங்கே இருந்த ஆபிஸர்ர் "சார் காபியை குடித்து விட்டோ அல்லது கொட்டிவிட்டோ போங்கள்" அடபாவிங்களா மெதுவா காபிகூட குடிக்க முடியவில்லையே ... நல்லாயிருப்பீங்களா நீங்க"


விமானத்தில் ஏறி அமர்ந்ததும். பசி வயிற்றை கிள்ளியது. சாப்பட்டுக் ஏங்கினால் அதுவும் இலவசம் கிடையாதாம். (இலவசமாக கொத்தனார்கள் மட்டும் தான் கிடைப்பார்கள்) பைசா கொடுத்து வாங்க வேண்டுமாம். நல்லவேளை பர்கர் கிங், சப் வே போன்ற சாண்ட்விச்கள் கடையில் விற்கும் விலைக்கே கிடைத்தது.

விமானம் இறங்கி லக்கேஜ்களை கவர்ந்து வாடகை கார் எடுத்துக் கொண்டு இந்த பிரமாண்ட நகரில் எவ்வாறு கார் ஓட்ட போகிறோம் என்ற நினைப்பில் map களை என் மனைவியிடும் தந்து வழிசொல் என்றேன். அவரும் குஷியாக வழி சொல்ல ஆரம்பித்தார்.

வலப்பக்கம் திரும்பவும் , திரும்பினால் அது கிழக்கு நோக்கி போகும் விரைவு வழி சாலை. வெய்ட் நாம் மேற்கு நோக்கி அல்லவா போகவேண்டும் ... ம்ம்ம்ம்ம் சுற்றுலாவிற்கு வந்து வழி தவறவிடுவதும் ஒரு சுகமே. ஒரு வழியாக சுற்றி மேற்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்து முதல் ஸ்டாப்...

மதிய சாப்பாட்டிற்கு சரவணபவன்

நல்ல சாப்பாடு நம்மூர் சுவையை கனடாவிற்கு கொணர்ந்துள்ளார்கள்.

மற்ற இந்திய/பாகிஸ்தானிய உணவுவிடுதிகளை போலில்லாமல் சுத்தமாக இருக்கிறது அவர்களின் பவன்.

Photobucket - Video and Image Hosting


பேஷ்...பேஷ்...ரொம்ப நல்லாயிருக்கு என் சொல்லும் வகையில் அவர்களின் காபி இல்லை.. ஆனால பரிணாம வளர்ச்சியுற்று காபியை அந்த டேஸ்ட்டுக்கு கொண்டு வந்து வந்துவிடுவார்கள்.

சரவண பவனின் வடை குளோசப்பில்

Photobucket - Video and Image Hosting

மிக நல்ல உணவு உண்டு விட்டு என் மகன் வழிக்காட்ட மேற்கு நோக்கி மேலும் பயணம்.

என் இடபுறத்தில் கடல் அளவிற்கு விரிந்த ப்ரமாண்டமான் ஏரி. அத்தனையும் நல்ல நீர். உலகில் உள்ள ந்ல்ல நீரில் 25% இங்குதான் உள்ளது என என் புள்ளிவிவர புலியாகிய் என் மகன் சொன்னான்.

வழியெங்கும் திராட்சை தோட்டங்களும் அதனால் "சரக்கு" ஆலைகளும் உள்ளன.

வெகு சீக்கிரமே நயாகரா நகரம் வந்துவிட்டது.

அங்கே உள்ள ஓட்டலில் ரூம் எடுத்துவிட்டு ஜன்னல் வழியே எட்டிபார்த்தால் அருவி தெரியும் என் ஆசையோடு பார்த்தால் கட்டிடங்கள் தான் தெரிந்தன. ஒட்டல் இருந்தது Falls View Boulevard ஆனால் அருவி இருப்பதோ River Road இல்.

ஒரு 5 நிமிட நடையில் அருவிகரைக்கு வந்துவிட்டோம்.

அருவிகள் விழுவதும் அதிலிருந்து எழும் நீர் துவாலைகள் நம்மை தழுவதும் மிக பரவசமான அனுபவ்ம் . அருவிகரையில் அலைகடலன மக்கள் கூட்டம். அந்த கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் நம் துணைக் கண்டத்தை சார்ந்தவர்கள். அதிலும் நம் மக்கள் கூட்டம் அதிகம். அருவியுன் அக்கரையில் அமெரிக்கா

அங்கிருந்து படகில் மக்களை அழைத்து அருவிக்கு மிக அருகில செல்கின்றனர். அந்த பயணத்திற்கு பெயர் Maid of the Mist என்பது. பட்கில் ஒரு மெல்லிய மழை கோட்டுக் கொடுத்து மெதுவாக கதைகளை சொல்லி கொண்டு அழைத்துச் செல்கின்றனர். கடைசியாக படகு அருவியின் நீர் அருகே சென்று ஆனந்த மழையில் நனைய விடுகிறார்கள். கீழே உள்ள படத்தில் வட்டமிட்ட பகுதியில் படகை காண்க

Photobucket - Video and Image Hosting


அந்த படகில் நான் பாடிய பாடல்

" ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே..
நயகாரா அழகை நாம் காண்பதற்கு வண்ணகிளியே"

அந்த படகின் பயணம் முடிந்தவுடன் குதிரை லாட அருவியின் பின்புறம் போய் பாருங்கள் என அழைப்பு வந்தது. சரி போய்விடலாம் என நடந்து..நடந்து... அந்த குகையின் வாசலை அடைந்தோம். குதிரை லாட அருவியின் பின் புறம் பாரைகளை குடைந்து அருவியை அதன் முதுகிலிருந்து காண வைக்கிறார்கள். அருவிக்கு மிக அருகில் அழைத்து சென்று அந்த நீரின் ஆவேச பாய்ச்சலை உணரவைக்கிறார்கள். அந்த நீரின் வேகத்தை காட்டும் படமும் வீடியோவும் கீழே

Photobucket - Video and Image Hosting







மறுநாள் நாங்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்த ஜெட் போட் பயணம்.

நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்காவின் ஈரி என்ற ஏரி யிலிருந்து நீர் வீழ்ந்து சிறு நதி யாக ஓடி கனடாவின் ஒண்டாரியோ ஏரியில் கலக்கிறது. இந்த சிறு நதியின் ஓட்டம் மிக ஆக்ரோஷமானது, இதில் சுழிகள் நிறைய இருக்கும். இந்த நதி ஒரு இடத்தில் 90 டிகிரி வலமாக திரும்புகிறது. இந்த இடத்தில் சுழிகள் அதிகம். இந்த சுழிகளை ஆங்கிலத்தில் Rapids என அழைக்கிறார்கள். இதனி லெவல் 1 முதல் 6 வரை வகைப்படுத்திய்ள்ளார்கள் . 1 நெம்பர் சுழி இலகுவானது. 6 நெமபர் மரணசுழி. இதில் உள்ளே போனவர்கள் மீண்டதாக சரித்திரம் இல்லை. 6 நெம்பருக்கு அருகில் அழைத்து சென்றார்கள் ஆனால் 5 நெம்பர் சுழிக்கு உள்ளே சென்று மீண்டதுதான் த்ரில். படகின் பயணத்தில் நம் உயிர்க்கு மட்டும் தான் உத்திரவாதம் உடமைகளுக்கு அல்ல என்று சொல்லிவிட்டார்கள். படம் எடுக்க முடியவே முடியாது, இங்குள்ள படங்கள் அவர்களின் இணையதளத்திலிருந்து சுட்டது

முதல் மூன்று வரிசையில் அமர்வகளுக்கு அதிக பட்ச த்ரில் என்றார்கள். நாங்கள் அமர்ந்தது மூன்றாவது வரிசை.

5 ஆம் எண் சுழிக்குள் நுழையும் போது என்னை அடித்த அலையை மறக்க முடியாது. அலை அடித்து ஒய்ந்தவுடன் நான் முதலில் பார்த்தது என் மனைவியும் மகனும் பத்திரமாக இருக்கிறார்களா என்று. இவ்வளவு பெரிய நல்ல நீர் அலையை நான் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.

என்னை பொருத்தவரைஇந்த ஜெட் போட் பயணம்தான் நயாகராவின் மிக அதிக பட்ச அட்ராக்ஷன் . ஆகையால நண்பர்களே அடுத்தமுறை நயாகராவிற்கு போகும் போது இதனை தவறவிடாதீர்கள்.

இந்த ப்டகுகள் முன்புறம் தண்ணீரை உள்வாங்கி பின்புறம் பீச்சியடித்து முன்னேறும். மணிக்கு சுமார் 100கி.மீ வேகத்தில் செல்லும்

Photobucket - Video and Image Hosting

இவ்வாறு அமைதியாக ஆரம்பித்து.........

Photobucket - Video and Image Hosting


சுழியில் மூழ்கி.....

Photobucket - Video and Image Hosting

ஆ..உயிருடன் வெளியில்.....



இது இணையத்தில் சுட்ட வீடியோ. இந்த அளவிற்கு படம் எடுக்கும் காமிரா என்னிடமில்லை. இருந்திருந்தாலும் அந்த படகில் எடுத்து செல்லும் தைரியம் இருந்திருக்காது

Photobucket - Video and Image Hosting

படு ஆக்ரோசமாக பாயும் அலைகள்

இந்த பயணத்திற்கு அப்புறம் நயாகரா போதும் போதுமென்றாகி விட்டது. மற்றபடி எல்லா சுற்றுலாதளங்களின் இருக்கும் பூக்கடிகாரம். பறவைகள் சரணாலயம் (சிங்கபூரின் பறவைகள் பார்க்குடன் ஒப்பிடுகையில் இது ஒரு ஜூஜூபி) வழக்கமான சமாச்சாரங்கள்.

Photobucket - Video and Image Hosting



Photobucket - Video and Image Hosting

இதோ பேரிக்காய்......

Photobucket - Video and Image Hosting


இரவில் நயாகராவில் விளக்கேத்துகிறார்கள். படு செயற்கை வாணவேடிக்கையும் அமெச்சுரிஷ்


Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

அதோ அமெரிக்கா.....

மறுநாள் அதிகாலையில் கனடாவின் பெரிய நகரமான டொரண்டாவிற்கு பயணம்.

டோரண்டோவில் என்னை அதிகம் கவர்ந்தது அங்கிருந்த தமிழ்.

நன்றி இலங்கை தமிழ் சகோதரர்களே.

ஆனாலும் சில தமிழ் கொஞ்சம் ஓவர் தான்.

உதாரணமாக ஒரு கடையின் பெயர் தளபாட அங்காடி. நல்லவேளை அங்கே பர்னிச்சர் பட்ம போட்டிருந்தார்கள் இல்லையென்றால் குமரனுக்கு போன் செய்து கேட்டிருக்க வேண்டும் அவரும் "தள" என்றால் பர்னி "பாட" என்றால் சர் இரண்டையும் சேர்த்தால் பர்னிச்சர் என் ஒரு பொழிப்புரை வழங்கியிருப்பார். :)

மேலும் சில தமிழர்கள் தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில் பதிலளித்தார்கள். நம் தமிழர்களை போலதான் இலங்கை தமிழர்களும் என்று நினைத்தேன். அங்கிருந்த என் நண்பர் இலங்கை தமிழர்களுக்கு சென்னை தமிழ் பேச வராது அதனால் தான் ஆங்கிலம் என சொன்னார். மற்றபடி அவர்களுக்கு தமிழ்தான் உயிர் மூச்சு என்றார்.

டோராண்டோ இன்னுமொரு வட அமெரிக்க நகரம். ஒரு ஏரிக்கரை அல்லது ஆற்றங்கரை அல்லது கடற்கரை இதனருகே உயர்ந்த கட்டிடங்கள், ஒரு மிக உயர்ந்த டவர், மிக நெரிசலான தெருக்கள், பஸ்கள், பாதாள ரயில்கள், உலகத்தின் எல்லா இன மக்களும் அமைதியாக வாழும் வாழ்க்கை , வித வித் மான் உணவு கேளிக்கை விடுதிகள். நகரின் மத்தியில் ஒரு அமைதியான பூங்கா அகியவை தப்பாமல் இருந்தன. மற்றபடி டோராண்டோ ஒரு பிரமிப்பை என்னிடம் உருவாக்க வில்லை.

Photobucket - Video and Image Hosting

சி என் டவர்


Photobucket - Video and Image Hosting

அந்த டவரின் கண்ணாடி தளத்திலிருந்து.....



நம்மூரின் அஞ்சப்பர், வாங்க்ஸ் கிட்சன், சரவண பவன் போன்ற உணவ்கங்கள் உற்சாகமூட்டின. அஞ்சப்பரின் மதிய பபே மிக மலிவு 30 அய்ட்டங்கள் என்றார்கள் அதில் 27 மரக்கறி. அதில் எனக்கு மிகுந்த ஏமாற்றம்.

Photobucket - Video and Image Hosting


சென்னயின் வாங்க்ஸ் கிச்சன் தரத்திலும், சுவையிலும், சேவையிலும் முதல் தரம் என நீரூப்பித்துள்ளார்கள்.

ஜெரார்ட் தெருவில் சீனர், அரேபியர், உப்கண்டத்தினர் வரிசையாக கடைகள் வைத்து அந்த தெருவில் தத்தமது நாட்டின் அசுத்தத்தை வெளிபடுத்தி வாழ்கின்றனர்.

Photobucket - Video and Image Hosting

எந்த ஒரு இடத்திற்கு போனாலும் எல்லாரையும் நிற்க வைத்து ஒரு முழுநீள Hi-Definition போட்டோ எடுக்கிறார்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் வாங்கலாம். ஆனால் போட்டோ கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் . மறுக்க முடியாது. தீவிரவவத கண்காணிப்பு தான் காரணம்

இந்த சுற்றுலாவில் என்னை மிகவும் வேதனை அடைய செய்தது என் கிரடிட் கார்ட்டின் நிலைதான். பாவம் அதனை தேய்த்து தேய்த்து அதன் முதுகு தோலை உரித்துவிட்டார்கள். தெருவில் நடக்க மட்டும்தான் இலவசம் மற்ற எல்லாவற்றிற்க்கும் காசு காசு தான்.

கால்கரியில் கிடைப்பதற்கரிய சுவாமி விக்ரகங்கள், மாவாட்டும் இயந்திரம் ஆகியவைகளை வாங்கி மீண்டும் 4 மணிநேரம் பறந்து, 5 நாட்களுக்கு முன் பார்க் செய்த காரை கண்டுபிடித்து, ஏர் போர்ட்டை விட்டு வெளியே வந்து காலியான கால்கரி சாலையில் கார் 100 ஐ தொடும் போது பாடியே பாடல் "சொர்க்கமே என்றாலும் கால்கரி போல வருமா......

I.T.


IT என்ற வார்த்தைக்கு என்றைக்குமே ஒரு சக்தியுண்டு. இன்று Information Technolgy என அறியபடும் இந்த சொல்சுருக்கம் 80களில் Instrument Technology என அறியப் பட்டது.

கருவியியல் என்னுடைய தொழில். கருவியியல் அதாவது Instrumentation என்பது எல்லாரும் அறிந்த ஒன்றே. நம் வீட்டிலோ அல்லது அடுத்தவீட்டிலோ அல்லது சொந்த காரர்களில் ஒருவரோ இந்த படிப்பை படித்துக் கொண்டிருப்பார்.

இந்த படிப்பை இந்தியாவில் முதன் முதலில் அறிமுகப் படுத்தியது அடியேன் படித்த அண்ணாப் பல்கலைகழகத்தை சேர்ந்த எம் ஐ டி என அழைக்கப்படும் Madras Institute of Technology என்ற கல்லூரிதான்.

இந்த கல்லூரியை நிறுவியவர் திரு இராஜம் ஐயர் அவர்கள். சுமார் 50 வ்ருடங்களுக்கு முன் மிகுந்த தொலைநோக்கில் அந்தக் காலத்தில் முற்றிலும் வித்தியாசமான பொறியியல் துறைகளான Aeronautics, Automobile, Electonics and Instrumentation ஆகியவைகளை தொடங்கினார். அண்ணா பல்கலைகழகத்தில் இணைந்தவுடன் இங்கே Production Technology மற்றும் Rubber Technology பாட பிரிவுகள் ஆரம்பிக்க பட்டு விட்டன.

முதன் முதலில் இங்கே B.Sc. படித்தவர்களுக்கு மட்டும் மூன்று வருட பொறியியல் படிப்பு இருந்தது. இப்போது +2 முடித்துவிட்டு 4 வ்ருட படிப்பாக மாறிவிட்டது

இங்கே படித்த பிரபலமானவர்களில் முதன்மையானவர்கள் மாண்புமிகு இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களும் பிரபல எழுத்தாளர் திரு சுஜாதா என்ற ரங்கராஜன் அவர்களும்.




சரி கருவிகள் என்றால் என்ன அவைகள் எங்கே புழங்குகின்றன என்பதை பார்ப்போமோ?

கருவிகள் நம் வாழ்வின் தரத்தை உய்ர்த்துவதில் ஒரு இன்றியாமையாத பங்கு வகிக்கின்றன. வீட்டில், வாகனத்தில், ஆஸ்பத்திரியில், அலுவலக்த்தில், தொழிற்சாலைகளில் ஏன் கோவில்களில் கூட உபயோக்கிக்க படுகின்றன.

தொழிற்சாலைகள் என்றால் எந்த மாதிரி தொழிற்சாலைகள்? அனைத்து தொழிற்சாலைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளன கருவிகள். உண்மையில் சொல்லவேண்டுமென்றால் இந்த கருவிகள்தான் தொழிற்சாலைகளின் நரம்பியல் மண்டலம் என சொல்லலாம்.


வீட்டில் உள்ள கருவிகள் ... மின்சாரத்தை கணக்கெடுக்கும் Watt-Hour Meter ப்ரிட்ஜ். ஏசி மற்றும் ஹீட்டரில் உள்ள thermostat கள்


வண்டியில் மைலேஜைக் காட்டும் odometer. இது எத்தனை கிலோமீட்டர் வண்டி ஓடியுள்ளது எனக் காட்டும். செகண்ட் ஹாண்ட் விற்பவர்கள் இதை ரிவர்ஸில் சுத்தவிட்டு மைலஜை கம்மியாக காட்டுவார்கள். ஆட்டோவில் சூடு வைப்பதும் இந்த மீட்டரில் உள்ள சில பல்சக்கரங்களில் தான். ஆனால் இப்போது எல்லா கார்களிலும் கம்யூட்டர் உள்ளதால் இந்த odometer ஐ டிஜிடல் ஆக மாற்றி விட்டார்கள். இதில் ப்ராடு பண்ண வேண்டுமென்றால் Embedded software இல் பிஸ்தா வாக இருக்கவேண்டும். இந்த பிஸ்தாக்கள் நேர்வழியில் நிறைய சமபாதிப்பதால் இந்த ப்ராடுக்கு துணைப் போவதில்லை.

சரி அலுவலகத்திற்கு போகிறோம் அங்கே வாச்லில் உள்ள மாக்னெடிக் லாக் என்பது இன்னொரு கருவி. உங்கள் ID கார்டை ஒத்தி எடுத்தவுடன் கதவுதிறக்கும் அதேசமயத்தில் உள்ளே கம்யுட்டரில் நீங்கள் வந்த நேரம் பதிவாகிவிடும். ஒருநாளைக்கு எத்தனை மணிநேரம் ஆபிஸில் இருந்தீர்கள என மானஜ்மென்ட் துல்லிய கணக்கு வைக்க ஏதுவாயிருக்கும்

கருவியியலில் பல பிரிவுகள் உண்டு. Test and Measuring Instruments, Bio-Medical Inistruments, Process Instruments ஆகியவை முக்கிய பிரிவுகள் ஆகும்.

இதில் அதிகம் சம்பளம் கிடைக்ககூடிய பிரிவு Process Instruments தான் இதில் உள்ள உட் பிரிவான Control System Software இல் உள்ளவர்கள் அதிக சம்பளம் பெறுபவர். நான் எந்த பிரிவு என தெரிந்திருக்க்கும் ஹி..ஹி..ஹி..


கருவிகள அதிகம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள்

சர்க்கரை ஆலைகள், காகித ஆலைகள், பால்பண்ணைகள், சிமெண்ட் ஆலைகள், துணி ஆலைகள், அனல்மின்சார உற்பத்தி நிலையங்கள், அணுமின் நிலையங்கள், மின்சாரம் விநியோகிக்கும் கம்பனிகள் மருந்து தாயாரிக்கும் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் (தங்கம், தாமிரம், யுரேனியம் ஆகியவை). சிலிக்கான் சில்லுகள் செய்யும் தொழிற்சாலைகள், உணவு பண்டங்கள் செய்யும் தொழிற்சாலைகள், சாரயத் தொழிற்சாலைகள், பீர் தொழிற்சாலைகள், உரத்தொழிற்சாலைகள், இரசாயன தொழிற்சாலைகள் கடைசியாக எண்ணை மற்றும் எரிவாயு தொழிற்சாலைகள்.
Photobucket - Video and Image Hosting
இந்த தொழிற்சாலைகளில் யுரேனிய சுரங்கம் சிலிக்கான் தொழிற்சாலைகள் தவிர மற்ற எல்லா தொழிற்சாலைகளிலும் அடியேன் மூக்கை நுழைத்துள்ளேன்.
Photobucket - Video and Image Hosting
இதில் அதிக லாபம் தரும் தொழிற்சாலை எண்ணை மற்றும் எரிவாயு. அதில் தான் நான் புரிகிறேன்.

மேலே உள்ள அதிநவீன Control System மை வடிவமைத்ததில் அடியேனின் பங்கும் உள்ளது. இது இந்தியாவில் மேற்கோடியில் ஒரு குக்கிராமத்தில் அமைந்துள்ளது.


இந்த Control System தயாரிப்பாளர்கள் உலகில் 6 பேர் தான். அதில் 3 அமெரிக்க கம்பெனிகள். ஒரு சூவீடன் நாட்டு கம்பெனி (ஆனால் பெரும்பாலான தயாரிப்புகள் அமெரிக்காவில்), ஒரு ஜெர்மானிய கம்பெனி, ஒரு ஜப்பானிய கம்பெனி.

இந்த 6 கம்பெனிகளும் பெருமளவு வேலைகளை இந்தியாவில் இருந்து தருவித்துக் கொள்கிறது. சென்னை, பெங்களூர், புனே ஆகிய நகரங்களில் இந்த கம்பெனிகளின் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன

இந்த கருவிகளை உபயோகிக்கும் தொழிற்சாலைகள் இந்தியாவில் கிராமங்களில்தான் பெரும்பாலும் இருக்கும். அதனால் பல உள்கிராமங்களில் (ஆந்திரா, கேரளா, மஹாராஷ்ட்ரா, குஜராத், பஞ்சாப், மே.வ, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில்) தங்க வாய்ப்புக் கிடைத்தது. அந்தந்த ஊர் மக்களின் வாழ்க்கை முறைகளை கவனிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் பல நண்பர்கள் கிடைத்தனர். நான் இந்த தொழிலுக்கு வரமால் இருந்திருந்தால் ஒரு காங்கீரிட் ஜங்கிளின் குரங்காக இருந்திருப்பேன்..

என்னால் மறக்கமுடியாத தொழிற்சாலைகள்

1.இயற்கை அழகு வாய்ந்த இடத்தில் அமைந்த சர்ச்சைக்குரிய என்ரானின் டபோல் மின்சார நிலையம்..
2. சவுத் இந்தியா விஸ்கோஸ், மேட்டுப்பாளயம் (மூடப்பட்டுவிட்டது)
3. ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம், ஊட்டி (மூடப்பட்டுவிட்டது)
4. குதிரேமுக் இரும்பு சுரங்கம்
5. கனடாவில் ப்ரிட்டிஷ் கொலாம்பியாவின் தாமிர சுரங்கம்
6. சவூதி அரேபியாவில் நட்ட நடு பாலைவனத்தில் இருந்த எரிவாயு தொழிற்சாலை
7. அபுதாபியிலிருந்து 250 கிமீயில் அமைந்துள்ள ரூவைஸ் என்ற சின்னஞ்சிறு குட்டி நகரம் (மொத்தம் 2000 வீடுகள்)
8. டென்மார்க்கின் உள்புறத்தில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பாலாடைக் கட்டித் தொழிற்சாலை
9. வான்கூவரின் மலைக்கும் கடலுக்கும் இடையே உள்ள அனல் மின்சார நிலையம்
10. மகேந்திரகிரியில் உள்ள ராக்கெட் சோதனை நிலையம்
11. NASA வின் Cape Canaveral
12. கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையம்
13. சிங்கப்பூரின் டைகர் பியர் தொழிற்சாலை
14. குஜராத்தின் AMUL பால் பண்ணை
15. சத்தியமங்கலம் மற்றும் சிவகங்கையில் உள்ள சர்க்கரை ஆலைகள்
16, கொச்சியில் உள்ள ரிபைனரீயும், உரத்தொழிற்சாலையும் , பீனால் தொழிற்சாலயும்
17. கனடாவின் வடக்கே அமைந்துள்ள எண்ணை மணற் குவாரிகள்
என் தொழிலுக்கு வந்தனம்........