Tuesday, November 28, 2006

மனம் சூடான இடம் நோக்கி அலைகின்றது,,,

நேற்றும் இன்றும் கால்கரியில் 119 வருடங்களாக இல்லாத வரலாறு காணாத குளிர் இருந்தது . வெப்பம் -29 டிகிரிக்கு கீழ் சென்றது. மேலும் வாடைக் காற்றின் தன்மையினால் குளிர் -43 டிகிரி என்றுணரப்பட்டது.

என் வீட்டு முற்றத்தில் இருந்த ஊஞ்சல் டாப் மெத்தைகள் கழற்றப்பட்டு எலும்புகூடாக காட்சி அளிக்கிறது. பெஞ்ச் கவிழ்ந்தடித்து படுத்துக் கொண்டிருக்கிறது




பச்சை பசேலென்றிருந்த புல்தரை பனியால் நிறைந்து சந்திர மண்டலத்தைப் போல் காட்சி தருகிறது.


ரோடுகளில் கார்கள் வழுக்குவதால் 40 நிமிட அலுவலக பயணம் இரண்டு மணிநேரம் ஆகிறது.

வழக்கமாக அடிக்கும் அரசம்பழங்களும், தென்றலார்களும், ப்ரம்ம தேவர்களும் உதவி புரியாததால் சிவாவின் ரீகல்களும் நடை மனிதர்களும் மாவீரன் நெப்போலியர்களும் மிக உதவியாய் இருக்கிறார்கள்.

ஆக மொத்தம் ....

மனம் சூடான இடம் நோக்கி அலைகின்றது....

Thursday, November 23, 2006

விக்கி பசங்களுக்கு 10 பகிரங்க கேள்விகள்

1. Wine மற்றும் Gin ஆகியவைகளை Dry என்று குறிப்பிடுவதேன்? ஒரு திரவம் எவ்வாறு உலர்ந்திருக்கும்?

2. சினிமா பிலிம்களை பல ஆண்டுகாலமாக யார் எப்படி பாதுகாக்கிறார்கள்?

3. சினிமா பாடல்களின் ராயல்டி எப்படி வழங்கபடுகிறது? அது முறையாக உரியவருக்கு போய் சேருமா?

4. இந்தியாவில் ரயில் நிற்காத நிலையங்களிலும் இஞ்சின் டிரைவரும் ஸ்டேசன் மாஸ்டரும் ஒரு டென்னிஸ் பாட்டை மாற்றிக் கொள்வார்கள் அது என்ன?

5. விமானத்தில் இருக்கும் ப்ளாக் பாக்ஸ் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் அப்புறம் எதுக்கு ப்ளாக் பாக்ஸ் என்று பெயர்? அதேபோல் வெள்ளை அறிக்கை, மஞ்சள் பத்திரிக்கை என நிறங்களை வைத்து எதற்கு பெயர் வைக்கிறார்கள்/

6. காரில் ஆட்டோமாடிக் கியர் எவ்வாறு இயங்குகிறது?

7. இரத்த பரிசோதனையின் போது ESR, CBC, LFT என்றால் என்ன? இதை வைத்து டாக்டர்கள் என்ன அறிகிறார்கள்?

8. இதய கோளாறு உள்ளவர்கள் பல் டாக்டரிடம் சென்று பல்லை சுத்தம் செய்தால் ஆண்டிபயாடிக் தருவதேன்? இதயத்திற்கும் பல்லும் என்ன தொடர்பு?

9. GPS/Satellite மற்றும் விமானம் வருவதற்கு முன் தேசங்களின் மேப்புகளை எப்படி உருவாக்கினார்கள்?

10. எலக்ட்ரானிக்ஸ் என்பது எலக்ட்ரானை அடிப்படையாக இயங்குவது. இந்த எலக்ட்ரானை கண்ணால் காணக் கூடிய மைக்ராஸ்கோப் உள்ளதா? இருந்தால் அது எங்கே உள்ளது? என்னைப் போன்ற சாமானியர்கள் போய் பார்க்க முடியுமா?


எல்லா விக்கி பசங்களும் ஒழுங்கா படிச்சி பதில் சொல்லனும் ஓ.கே வா?

Sunday, November 19, 2006

உலகின் புதிய கடவுள்

Photobucket - Video and Image Hosting

தலைப்பு என் நண்பர் செல்வனின் காப்பிரைட் அவரிடம் அனுமதி பெறாமலேயே நான் எடுத்துக் கொண்டு விட்டேன்.... செல்வன் கோபித்துக் கொள்ளமாட்டார். மேலும் அது அவருடைய தொழிலைப் பற்றிய பதிவும் கூட...


உலகின் புதிய கடவுளைக் காண்பதற்கு முன்..பழைய கடவுளர்களைப் பற்றிய என் அனுபவங்கள்...

சின்ன வயதில் சித்திரை திருவிழா என்பது எனக்கு குதூகலம் அளிக்கும் நாட்கள். கள்ளழகர் ஆற்றில் இறங்குவார் பிறகு ஆற்றின் கரையில் உள்ள மண்டபங்களுக்கு மண்டகபடி செய்வார். மூன்றாம் நாள் என நினைக்கிறேன் வண்டியூர் சேஷ வாகனத்தில் அதிகாலை காட்சிதருவார். அதைக் காண்பதற்கு இரவு முழுவதும் ஆற்றில் குடும்பத்தோடு சென்று கட்டான்சோறு உண்டு மணலில் குன்றுகளை கட்டி விளையாடி அங்கே விற்கும் பீம புஷ்டி அல்வா முதல் பற்பல திண்பண்டங்களை உண்டு திருவிழாவில் விற்கும் பலூன், ஊதல்கள், டிக்டிக்குகள் முதலியவைகளை வாங்கி இரவு முழுவதும் கொண்டட்டம் தான், அதிகாலையில் அழகர் தரிசனம் கண்டு பக்தி பெருகி ஆனந்தமடைந்து வீடு திரும்புவோம். எல்லாரிடமும் சந்தோசம் கடவுளைக் கண்ட திருப்தி மேலோங்கி இருக்கும்...


பிறகு வைகாசி விசாகம் திருப்பரங்குன்றத்திற்கு சென்று முருகனை கும்பிட்டு அங்கே இருக்கும் ஓட்டலில் தோசை சாப்பிட்டு விட்டு 5 ஆம் நம்பர் பஸ் பயணம் ஆனந்தம்.

அனி உத்திரம்.. ஆடி பெருக்கு...ஆவணி அவிட்டம் என மூன்று மாதங்கள் திருவிழாக்கள் கடவுளை காண்பது சிறிது மந்தமானலும் புரட்டாசியில் பீக் ஆகும். நவராத்திரி அந்த பத்து நாட்கள் அற்புதம் . பக்தி மணம் கமழும். மதுரையில் என் குடும்பத்தாருக்கு சொந்தமான் திரௌபதி அம்மன் கோவிலிலும் அதன் அருகில் அமைந்திருக்கும் காமட்சி அம்மன் ஆலயத்திலும் அலங்காரங்கள் அட்டகாசமாக இருக்கும். ப்ரசாதாங்களான சர்க்கரை பொங்கல், சுண்டல் முதலியவை ....ம்ம்ம்ம்ம்,.... அந்த நாளிலும் வந்திடாடோ.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இசை வேள்விகள் நடக்கும் எம் எஸ் என்ன, எம் எல் வி என்ன, மதுரை சோமு என்ன, சீர்காழி கோவிந்தராஜன் என்ன மதுரை மண்ணின் மைந்தன் டி எம் எஸ் என்ன என தினம் தினம் இசை என்னும் இன்ப சாகரத்தில் மூழ்குவோம்

ஐப்பசியில் திருவிழாக்களின் கதாநாயகன் தீபாவளி. இரவு முழுவதும் கண்விழித்து பட்டாசுகள் வாங்கி ஊர் சுற்றி அதிகாலையில் எண்ணை தேய்த்து குளித்து கடவுளிடம் அடிபணிந்து பெற்றோர் பெரியவர்களின் காலில் விழுந்து புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடிக்கும் போது கிடைக்கும் பரவசம்... பிறகு இனிப்புகள், சாப்பாடு, நண்பர், உற்றார் வீடுகளுக்கு சென்று வாழ்த்துகள் தீபாவளி தீபாவளி தான்.


கார்த்திகை...கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து....இரவெல்லாம் கண்விழித்து இருமுடிக்கட்டி ஐயப்ப பக்தர்களை வழியனுப்பும் பஜனைகள்... அப்போது அங்கே வழங்கபடும் ப்ரசாதங்கள்.. அந்த மென்குளிர் இரவில் குடிக்கும் டீ சாமியேய்ய்ய்ய்ய்ய் சரணம் ஐயப்பா... அதே கார்த்திகை மாதம் கார்த்திகை நாளில் வாசலில் அகல் விளக்கேற்றி இரவினில் சொக்கப்பானை கொழுத்தி கடவுளை காண்போம்...

மார்கழி ... மாதம் முழுவதும் பக்தி பரவசம்தான் அதிகாலை குளிரில் பச்சை தண்ணீரில் குளித்து கோவிலுக்கு சென்று திருப்பாவை திருவெம்பாவை பாடி பக்தி பரசவத்தில் திளைப்போம் மதுரையில்.

மார்கழியில் இரவு முழுவதும் கண்விழித்து கடவுளை நினைத்து உருகி அதிகாலையில் பரமபத வாசலில் எம்பெருமானை காணும் போது கிடைக்கும் பரவசம் பரமானந்தம்.

தை மாதம் பொங்கல், கரும்பு, மஞ்சி விரட்டு போன்ற விழாக்களுடன் ஆரம்பமாகும் மாதம், தைபூசம், தெப்பதிருவிழா என கொண்ட்டங்களும் கடவுளின் நினைவுகளுடனும் கடக்கும்

மாசி மாதத்தில்தான் சிவராத்திரி. அன்றிலிருந்துதான் கோடை காலம் தொடக்கம். குன்னகுடி அவர்களின் வயலின் இசை வழக்கமாக மதுரையில் நகைக்கடைகள் நிறைந்த தெற்காவணி மூல வீதியில் நடக்கும். மதுரை மறவர் சாவடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை இரவெல்லாம் கண்விழித்து கண்டு களித்து, அதிகாலை கோவில் அபிஷேகத்தில் "ஹரோஹரா" என்ற கோஷத்தில் என்னை மறந்த நாட்கள் எத்தனை.

பிறகு பாலைவனத்தின் நடுவே அபுதாபியில் என் வீட்டில் நடந்த சிவராத்திரி பஜனைகள், சிவனின் பாடல்கள், ருத்ரம் , ஜமகம் , அபிஷேகங்கள் என்னே நான் செய்த புண்ணியம்.

பங்குனியில் பங்குனி உத்திரம். மதுரை கிருஷ்ணன் கோவில் திருவிழா என ஊர் மீண்டும் விழா கோலம் கொள்ளும்.

மேலும் காமன் பண்டிகை. அந்த பண்டிகையில் மன்மதன் எரிந்த கட்சி எரியாத கட்சி என போட்டிகள்.

வாழ்கையே உல்லாசமாக இருந்த மதுரை மற்றும் இந்திய வாழ்கை இந்த நாட்டு இளைஞர்களுக்கு வேறு விதமாக கிடைக்கிறது. கிறிஸ்துமஸ், தாங்க்ஸ் கிவிங், வெட்டரன்ஸ் டே, வாலண்டைன்ஸ் டே. மதர்ஸ் டே, பாதர்ஸ் டே, ஹாலோவீன் என மாதம் ஒரு பண்டிகை வருகிறது. எல்லாமே பழைய கடவுள்கள்.

பிறகு வந்த எம் ஜி ஆர் என்ற புதிய கடவுள் மக்களை இரவுமுழுவதும் கண்முழிக்க வைத்தார். மதுரை மீனாட்சி திரையரங்கில் உலகம் சுற்றும் வாலிபன் என்ற திரைப்படத்தை திரையிட்டபோது மக்கள் ஊண் உறக்கமின்றி வரிசையில் நின்றிருந்தனர். அரங்கம் நிறைந்தவுடன் காட்சி பிற்கு மீண்டும் டிக்கட் பிறகு காட்சி என இரவு பகல் பாராமல் உலகம் சுற்றும் வாலிபரை கண்டு நான் அடைந்த பரவசத்தை அடைந்தனர் மக்கள்

கல்லூரி முடித்து என் நண்பர்கள் பூலோக சொர்க்கம் அமெரிக்கா போக விசா எடுக்க தவமிருப்பர். அவர்களுக்கு கம்பெனி கொடுக்க தேவியில் நைட் ஷோ பார்த்துவிட்டு பிலாலில் பிரியாணி சாப்பிவிட்டு வில்ஸ் பில்டருடன் அமெரிக்க தூதரக வாசலில் செட்டில் ஆவோம். அதிகாலை 8 மணிக்கு டோக்கன் கிடைத்தால் ஒரு மினி பரவசம். உள்ளே விசா கிடைத்தால் கொண்டாட ஒரு குவார்ட்டர் கிடைக்காவிட்டால் வருத்தப்பட ஒரு குவார்ட்டர் அது ஒருவிதமான கடவுளை நோக்கிய தவம்


இந்த உலகின் புதிய கடவுள் மற்றும் திருவிழா அனுபவம் நேற்றைக்கு எனக்கு கிடைத்தது. நேற்றிரவு குளிர் சற்றே குறைவாக -6 டிகிரி சி தான். இளைஞர்களும், இளைஞிகளும், நடுத்தரவயதினரும், முதுமை அடைந்தவர்களும், குழந்தைகளும் போர்வை, கூடாரம். காபி, சிகரட்,பியர், பர்கர், ஆகியவற்றுடன் செட்டில் ஆகி தவம் செய்து கொண்டிருந்தனர். சில இடங்களில் க்ளைமாக்ஸ் காலை 7 மணி சில இடங்களில் 8 மணி மற்றும் வேறிடத்தில் 10 மணி.

காலை எழு மணிக்கு வாசல் திறந்தவுடன் கடவுளை கண்ட பரவசத்தில் கூட்டம் வீ..வீ..வீ என கரகோஷம் இட்டது.

Photobucket - Video and Image Hosting

இது என்ன கடவுள்...

Nintendo வின் புதிய வீடியோ கேம் கன்சோல் Wii வெளியீட்டிற்குதான் இவ்வளவு ஆர்பாட்டம். முந்தாநாள் சோனியின் புது கடவுள் Playstation 3 அவதரித்தார். அப்போது மக்கள் 3 நாட்கள் தவமிருந்தனர், அமெரிக்காவில் கலவரம் வெடித்து போலீஸ் தடியடி ப்ரோயொகம் செய்ய வேண்டியிருந்தது.

இந்த கடவுளை காண மார்க்ஸீயம் முதல் மாடர்ன் ஆர்ட் வரை பேசும் என் மகன் போனதால் தான் எனக்கு இந்த விவரங்கள் தெரியவந்தது.

Photobucket - Video and Image Hosting
புதிய கனவுகளை காண கடும் குளிரில் பக்தர்கள்



இந்த மார்கெட்டிங் ஆசாமிகள் செய்யும் தந்திரம் இது.

அவர்களின் ப்ராடெக்ட்களை கடவுள் ரேஞ்சுக்கு ஏற்றி அதன் விற்பனையை திருவிழா மாதிரி நடத்தி அவர்களின் விற்பனையை பெருக்குகிறார்கள்

இந்த மாதிரி உலகின் புதிய கடவுள்களை படைக்கும் மனிதனே மிக அறிந்தவன்

Saturday, November 11, 2006

புத்தம் சரணம் கச்சாமி...சங்கம் சரணம்...

Photobucket - Video and Image Hosting

30 லட்சம் இந்துக்கள் புத்த மதத்திற்கு மாறினர்.. இது தூய மார்க்கத்தை தழுவிய இறைநேசன் என்ற நண்பருக்கு மிகுந்த மகிழ்சியை அளித்துள்ளது. இதை ஒரு பதிவாக போட்டு என் பெயரையும் அதில் ஈடுபடுத்தி என் கருத்து என்ன என் கேட்டிருக்கிறார்.

என் கருத்து :

தலித்துகள் நல்ல காரியம் செய்தார்கள். இந்தியாவில் தோன்றிய புத்த மதத்திற்கு மாறினார்கள். நல்ல வேளை கொள்ளைகாரர்களும் வியாபாரிகளும் கொண்டுவந்த ஆப்ரகாமிய மதங்களுக்கு மாறவில்லை

அறிவாளி அரசனால் தோற்றிவித்த புத்த மத வளர்ச்சிக்கு உபயோகமாய் இருப்பார்கள்.

நல்ல தியானம் செய்து அறிவாளி ஆவார்கள்.

பெண் விடுதலைக்கு வழி வகுப்பார்கள்.

அன்பை பேணி அமைதி காப்பார்கள்.

புலால் உணவை தவிர்த்து உடல் நலத்தை பேணுவார்கள்.

இந்தியாவில் புத்த மத மக்கள் எண்ணிக்கை அதிகமாகி திபெத்தில் நடக்கும் சீன அடக்கு முறையை எதிர்க்க வழிவகுப்பார்கள்.

இலங்கையின் புத்த பிக்குகளை கேட்டுக் கொண்டு அங்கே தமிழர்கள் சுய மரியாதையிடன் வாழ வழி வகுப்பார்கள்.

புத்த மதம் பிடிக்கவில்லை என்றால் திரும்பவும் இந்து மதத்திற்கு வரவும் வழியிருக்கிறது அவர்களுக்கு

இப்படி பல சமூக மற்றும் அரசியல் ஆதாயம் இந்தியாவிற்கு இருப்பதால், அவர்கள் புத்த மதத்திற்கு மாறியதில் எனக்கு சந்தோசமே

இப்போது என் கேள்வி:

ஒரு இந்து முஸ்லிமாக மாறி.... பிடிக்கவில்லையென்றால் திரும்பவும் பகிரங்கமாக இந்துவாக மாற முடியுமா?

Wednesday, November 08, 2006

எண்ணை விலை

உலகின் ஆதரமான எண்ணைவிலை கடந்த 5 மாதங்களின் 25% குறைந்துள்ளது. லிட்டருக்கு $1.15 வரை இருந்த பெட்ரோல் இப்போது லிட்டருக்கு 80 செண்டுகள் அளவிற்கு உள்ளது.

என்ன காரணம்?


போன கோடையில் அமெரிக்காவில் தாக்கிய சூறாவளி, சீன மற்றும் இந்தியாவில் எண்ணை தேவை அதிகரிப்பு ஆகியவை எண்ணை விலை பீப்பாய்க்கு $78 வரை தூக்கி சென்றது.

இந்த கோடையில் சூறாவளியை எதிர்ப்பார்த்து அமெரிக்கா அதிக அளவில் எண்ணையை கொள்முதல் செய்தது. சூறாவளி அடிக்கவில்லை ஆனால் தேர்தல் வந்தது. கொள்முதல் செய்த எண்ணையை சந்தையில் விட்டு விலைக்குறைத்தது. இந்திய/சீன தேவைகளில் மாறுதல் இல்லை. ஆக எண்ணைவிலையை நிர்ணயப்பவர்கள் அமெரிக்கர்கள்

OPEC என்னும் கூட்டுக் களவாணிகள் மற்றும் அமெரிக்க எண்ணை கம்பனிக்கொள்ளைகாரர்கள் விலை அதிகம் இருக்கும் போது அதிக லாபம் சம்பாதித்தன. எக்ஸான் மொபில் உலக சரித்திரத்தில் அதிக லாபம் ஈட்டியது.

அரபு நாடுகள் பணக்கடலில் மூழ்கின.

இப்போது விலைக்குறைந்து 57 -59 டாலரில் எண்ணை விற்கிறது. இதுவும் அதிகம் தான். உலகின் அதிக செலவில் எண்ணையை எடுக்கப்படும் கனடாவின் எண்ணை மணல் குவாரிகளில் எண்ணை எடுக்க பீப்பாய்க்கு 20 முதல் 25 டாலர்கள் தான் ஆகிறது.

அரபு நாடுகளில் 1 முதல் 4 டாலர்கள் தான் ஆகிறது.

எண்ணை விலை 59 ஆன பிறகும் இவர்கள் சம்பாதிப்பது கொள்ளை லாபம்தான்.

இந்நிலையில் நேற்றைய செய்தி ஒன்று என்னை வெகுவாக பாதித்தது.


OPEC என்னும் கூட்டுக் களவாணிகளின் தலைவரான சவூதி எண்ணை விலையை ஏற்ற உற்பத்தியை குறைக்க போகிறார்களாம். விலை ஏறினால் இவர்களின் முதலீடுகள் அதிகமாகுமாம். விலைகுறைந்து இவர்கள் வருமையில் வாடுபவர்கள் போல் புலம்புகிறார்கள் இந்த கொள்ளைக்காரர்கள்.

ஆனால் விலை ஏறினால் வளரும் நாடுகளின் சமானியர்களின் வாழ்க்கை நரகமாகும்.

பல நாடுகளின் அக்கிரமங்களை கண்டிக்கும் சமூக நீதி காவலர்கள் இந்த கொள்ளைக்காரர்களின் இந்த பகல் கொள்ளை கண்டுக் கொள்ளாமல் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்