Tuesday, March 28, 2006

இது எனது அனுபவம் அல்ல - டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த செய்தி

http://www.samachar.com/showurl.htm?rurl=http://timesofindia.indiatimes.com/articleshow/1467234.cms?headline=Indian~workers~abandoned~in~Bahrain


DUBAI: A group of Indians is among 40 Asian workers who claim they have been abandoned by their Bahraini employer and now face the prospect of hunger and starvation. The workers, including Pakistanis and Nepalis say the company, Al Khaja Establishment, has not paid their salaries for the last nine months, reports said. There are over 130,000 Indians in Bahrain, most of who work on contracts. The company, however, claims it is the workers who have run away. "They are the ones who abandoned their company to work for others," the report quoted company chairman Jassim Al Khaja as saying. "Unfortunately this is all very common in Bahrain. The problem is these workers have resigned from Al Khaja and are working for other companies." The workers have filed five court cases against the company. One case was heard on Monday in which an Indian driver, Prabhu Narayan, was present with his Bahraini lawyer Mohammed Al Watani. The case has been adjourned to May 14, according to the report...

These workers are not runaways," the report quoted Al Watani as saying. "In fact, it is their company that has run away from them. "Some of these workers have been with the same company for 20 years, and Narayan himself has been working there for about 18 years, so why run away now?" The men denied working for other companies, saying they were "too scared" to try, according to the report. Another Indian worker, Gangaram Muttana Jane, holds a telegram from home, which informed him of his wife's death in January this year. He wants to return to India to take care of his two children, aged 10 and 12. Penta Rajaiah, also Indian, says his wife is seriously ill with cancer. He needs the Bahraini dinar (BHD) 1,335 he says the company owes him, to pay for her treatment. The workers are now faced with fresh trouble. A nearby store in which the workers had run up a huge credit bill has now decided to stop giving them food for credit

I want to help them as much as I can," cold store owner Esmail Moideen told the newspaper. "But I too am losing out." The workers say they have food supplies that will last only a week. The Indian and Pakistani embassies in Bahrain have reportedly been informed of the workers' plight and have sent official letters to the labour ministry, the report quoted Surya Charitable and Cultural Association (SCCA) general secretary and Indian Community Relief Fund (ICRF) treasurer KR Nair as saying. Nepali Club (Bahrain) president Nem Thapa has also informed the Nepal embassy in Riyadh, Saudi Arabia, about the case. "The embassies are doing all they can," Nair said

Monday, March 27, 2006

என் அரேபிய அனுபவங்கள் - 5

--------------------------------------------------------------------------------------

நான் முன்பே குறிப்பிட்டது போல் அரேபியாவின் கூட கோபுரங்களிலும் மாடமாளிகைகளிலும் நம் இந்திய சகோதரர்களின் இரத்தக்கறையைப் பார்க்கிறேன். பளபளக்கும் கழிவறைகளில் அவர்களின் வேர்வை நாற்றத்தை முகர்கிறேன்.

அரேபியாவில் மிகவும் பரிதாபத்துக்குறியவர்கள் அங்கே வீட்டு வேலைக்கு வரும் நம் ஏழை சகோதரிகள். இவர்களில் இந்தியர் அதிகம் இருப்பதில்லை. இலங்கை, தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு சகோதரிகள்தான் அதிகம். இவர்களிடம் நான் நேரிடையாகப் பேசியதில்லை. இவர்கள் படும் வேதனைகளை அறிய எனக்கு வாய்ப்புஇருந்ததில்லை. ஒரு முறை என் மனைவி இந்தியாவிற்க்கு சென்றிருந்த போது நான் கம்பெனி க்ள்பில் உணவருந்திக் கொண்டிருந்தேன். அங்கே வந்த என் அரேபிய நண்பர் ஒருவர் " என்ன ஹோட்டல் சாப்பாடு?" என்றதற்கு "மனைவி ஊரில் இல்லை" என்றேன். அதற்கு அவர் "நீ எனக்கு நல்ல நண்பர் அதனால் என் வீட்டு பிலிப்பினோ வேலைக்காரியை அனுப்பி வைக்கிறேன் என்றார். "பிலிப்பினோ உணவு எனக்குப் பிடிக்காது" இது நான். "அடே சாப்பட்டிற்க்கு இல்லையப்பா, 'அதற்கு'" என்று கண்ணைச் சிமிட்டானார் என் உயிர் நண்பர். "இதெல்லாம் சகஜமப்பா.நாங்கள் இவ்வளவு செலவு செய்து அவர்களை இங்கே அழைத்து வந்து சம்பளம் கொடுத்து சாப்பாடு போட்டு வைத்திருப்பது எதற்காக. இவர்களை என்ன வேண்டுமானலும் செய்ய எங்களுக்கு உரிமை இருக்கிறது. எங்கள் அரேபிய நண்பர்கள் இவர்களை மாற்றிக் கொள்வோம்" என்று ஒரு குற்ற உணர்வே இல்லாமல் பேசிக் கொண்டிருந்தார். இவர் அமெரிக்காவில் 5 வருடம் தங்கிப் படித்தவர் பண்பாளர். இவரே இப்படியென்றால், மற்றவர்களிடம் இச்சகோதரிகளின் நிலைமை?

ஏதோ ஒரு காரை இரவல் தருவது போல் தன் வேலைக்காரியை எனக்கு அளித்தார். அங்கே மானிடம் இல்லை. அடிமைகள் ஒரு இயந்திரமே என்ற கணிப்பிருந்தது. என்ன செய்ய என் அரேபிய வெறுப்புக் கொண்ட மூளை இந்த மாதிரி சிந்தித்தது. என் அரேபிய நண்பனின் விசுவாசத்தை மறந்த நன்றிக் கெட்ட நாய்தானே நான்


இந்தியாவில் கோடிக்கணக்கான திறமையான வாலிபர்கள் பல்வேறு காரணங்களால் அவர்களின் திறமை வெளிபடாமல் போயிருக்கும். இவர்கள் அதிகப் பணம் சம்பாதிக்க கடைசி வழியாக தேர்ந்தெடுப்பது அரேபிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகள். அங்கே போய் அதிக பணம் சேர்த்து தன் பெற்றோர்களை நன்றாக வைத்துக் கொள்ளவும் தன் சகோதரிகளின் திருமணத்திற்க்காவும், சகோதரரின் படிப்பிற்க்காவும் வருகிறார்கள். இவர்கள் கண்களில் எவ்வளவு கனவுகள், ஆசைகள்.

முதலில் இந்தியாவில் அரேபியரைவிட கேவலமான மனித மிருகங்களான ஏஜெண்டுகள் சுரண்டுவார்கள். இந்த ஏஜெண்டுகளை அரேபியா பாலைவனங்களில் வதக்கவேண்டும். இந்த அவலங்களை வெளிக் கொணர்த்திய நல்ல தமிழ் திரைப் படம் வெற்றிக்கொடி கட்டு.


ஜப்பார், இவரது இயற்பெயரும் இதுவே. இவர் நான் சவூதியில் தங்கியிருந்த காம்பௌண்டில் காவலாளியாக வேலைசெய்து வந்தார். என் வயது ஒத்தவர். படித்தது பி ஏ ஆங்கில இலக்கியம். கேராளாவை சேர்ந்தவர். இவருக்கு தந்தை இல்லை. இரு தங்கைகள். இவருடைய தாயையும் தங்கைகளையும் கரையேற்ற இருந்த சொற்ப நிலத்தை விற்று அதை ஏஜென்ட்டிடம் கொடுத்து ஏமாறமல். சவூதிக்கு வந்து வகையாக ஒரு அரபியிடம் மாட்டிக்கொண்டு ஹொஃபுஃப் என்ற கிராமத்தில் அவர் வீட்டில் வேலையாளக இருந்தார்.

எப்படியோ அவரிட்மிருந்து தப்பித்து எங்கள் கம்பெனிக்கு வேலைக்கு வந்துவிட்டார். எங்கள் கம்பெனியில் அமெரிக்கர்கள் அதிகம் வேலை செய்ததால் ஆங்கிலம் நன்றாக பேச கூடியவற்க்கு கம்மியான சம்பளத்தில் உடனடியாக வேலைக் கிடைத்துவிடும். ஒழுங்காக 1 தேதி சம்பளம் 2 வருடத்திற்கு ஒரு முறை விடுமுறை, விமான டிக்கட் கரக்டாகக் கிடைத்துவிடும். எங்கள் கம்பெனியில் சேர்ந்த பிறகுதான், ஜப்பாரின் கனவு நனவாகத் தொடங்கியது. தன் தங்கைகளைக் கரைசேர்த்து தானும் திருமணம் செய்துக் கொண்டார். அவர் சொல்லித்தான் கேரள முஸ்லிம் மக்களிடையே வர்தட்சினை கொடுமை யிருபது எனக்குத் தெரிந்தது. ஜப்பார் அழுகாக ஆங்கில இலக்கியம் பற்றி பேசுவார். அவர் நைட் சிப்ட் பார்க்கும் போது செக்கியுரிட்டி கூண்டில் அமர்ந்து புகைத்துக் கொண்டே ஆங்கில இலக்கியத்தைப் பற்றி பேசிக் கொண்டும் ஜேசுதாஸ் பாடிய பாடல்களை கேட்டுக் கொண்டும் நட்பை வளர்த்திருக்கிறோம்.

ஒரு நாள் ஜப்பார் என்னிடம் "சாரே எனக்கு இடது கை அடிக்கடி வலிக்கிறது, ஹார்ட் அட்டாகக இருக்குமோ" என்றார். நானும் எதற்க்கும் நாளை காலை டாக்டரிடம் செல்லுமாறு கேட்டுக் கொண்டேன் . மறுநாள் கம்பெனி டாக்டர் அவரை பரிசோதித்து விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று இருதய நிபுணரைப் பார் என்று அனுப்பிவிட்டார். ஆஸ்பத்திரியில் இவரை செக் செய்து ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் இவர் கைவலி குறையவேயில்லை. மீண்டும் ஆஸ்பத்திரிக்க்க் போனதில் நீ லீவ் எடுக்க அடிக்கடி பொய் சொல்கிறாய் என டாக்டர் சொல்ல அதைக் கேட்ட அவருடைய சூப்பர்வைசர் திட்ட மிகுந்த மனவேதனையுடனும் கை வலியுடனும் ஜப்பார் வேலை செய்தார். அதற்கு மறுநாள் அவருக்கு தாங்க முடியாத கை வலி, செக்யுரிட்டி கூண்டில் கடுமையான ஹார்ட் அட்டாக்கில் உயிரிழாந்தார்.

அவர் தன் மனைவியுடன் வாழ்ந்தது சரியாக நான்கு மாதங்கள் மகளுடன் இருந்தது 1 மாதம்.

இவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்த டாக்டர் சவூதியில்லை ஆனால் ஒரு எகிப்தியன். எகிப்தியர்களும் மனிதர்களை கேவலப்ப்டுத்துவதில் அரேபியவ்ற்க்கு சளைத்தவர்களில்லை. அந்த டாக்டர் ஜ்ப்பாரை ஒரு மனிதானாக பார்க்கவில்லை, ஒரு இந்தியானாக் பார்த்தார் ஜப்பாரின் கனவு பாதியில் கரைந்தது. நான் நல்ல் நண்பரை இழந்தேன். இது நடந்தது 1995/6.

இந்த மாதிரி அரைகுறை டாக்டர்களினால் நான் இழுந்த நண்பர்களின் எண்ணிக்கை மூன்று. அதில் தமிழ் நண்பர் ஒருவர். அவரைப் பற்றி எழுத என்னால் முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைக்கிறது.

என்னுடைய கணிப்பில் ஒரு சாதரண டாக்டர் சிறிதே மனிதநேயத் துடன் செயல்பட்டிருந்தால் இவர்கள் நம்மிடையே இருந்திருப்பார்கள்.

இந்த அரேபிய மருத்துவர்கள் அவர்கள் இனத்தவரிடம் காட்டும் பரிவை சிறிதே நம்மவர்களிடம் காட்டியிருந்தால்..... நான் பார்த்து இறந்தது மூவரே.

அரேபியாவில் இருப்பவரே உங்கள் அனுபவம் எப்படியோ?


இந்த மண்ணின் மைந்தர்கள் அவர்களுடைய சிகிச்சைக்கு மட்டும்
அவர்க்ளுடைய எதிரி நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போவர். வசதி குறைவானவர்கள் நீச நாடன இந்தியாவிற்கு வருவர்


இவர்களை நேசிக்கும் அளவிற்கு எனக்கு பக்குவ்ம் வரவில்லை



........ தொடரும்

என் அரேபிய அனுபவங்கள் - இடைக் குறிப்பு

----------------------------------------------------------------------------------
முன் குறிப்பு பின்குறிப்பு போல் ஒர் இடைக்குறிப்பு
முதல் நான்கு அத்தியாங்கள் வரை எனக்கு ஆதரவாகவெ பின்னூட்டங்கள், மின்னஞ்சல்கள் வந்தன.

பிறகு திரு மலர்மன்னன் அவர்களை நான் .. நான் தான் அழைத்து வந்தேன். அவரை அழைத்துவந்தவுடன் எனக்கு கிடைத்தப் பட்டங்கள்

1. பார்பணிய வாதி

2. முஸ்லிம்களின் விரோதி

3.சூழ்ச்சிக் காரன்


மற்றும் அச்சில் எற்ற முடியாத வார்த்தைகளால் வசவுகள்.


நான் 99.9% அரேபியர்கள் தீயவர்கள் என்று சொன்னேன். ஒருவர் கேட்கிறார் அதில் பெண்களும் குழந்தைகளும் அடக்கமா என்று?. நல்ல கேள்வி. என் முதல் பதிவில் முன்குறிப்பு ஒன்றைப் பாருங்கள். நான் சந்தித்த அரேபியர்களில் 99.9% தீயவர்களே. ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி அடைமொழிகளுடன் எழுதினால் அப்புறம் என் கட்டுரை ஒரு சட்ட கட்டுரை போல் இருக்கும். சரியா சல்மான்.


அன்பு என்பவர் அதற்க்கும் மேல். எதோ நான் அதிக பின்னூட்டம் பெற எழுதுவாதகவும் இஸ்லாமிய விரோதி என்றும் கத்துகிறார். பார்க்க என் முன்குறிப்பு- 2. உண்மை நிகழ்ச்சியை உண்மை பெயரிட்டு எழுதிய தைரியமான இஸ்லாமிய சகோதரரை சந்தேகிக்கிறார். நான் உங்கள் முன்னேற்றதிற்கு எந்த வகையில் தடையாய் இருக்கிறேன். உங்கள் முன்னெற்றம் உங்கள் கையில்தான் என்னிடத்தில் இல்லை.


நிறைய பேர்கள் இந்த மாதிரி அரேபியாவிலிருந்து எழுதுவதுதானே வீரம். கனாடா போனபிறகு எழுதுவது கோழைத் தனம் என்று புனைப் பெயர்களுக்குப் பின் நின்று சவுண்டு விடுகின்றனர்.

ஐயா... நான் ஓர் கோழை அதனால் தான் இங்கு வந்த பிறகு எழுதுகிறேன். நீங்கள் எல்லோரும் உங்களுக்கு நடக்கும் நல்லவைகளை உங்கள் பெயர் மற்றும் படம் போட்டு தயவு செய்து எழுதுங்கள்.

அடுத்து அரேபியாவில் அதிகம் பணம் சம்பாதித்து நன்றி மறந்த நாய் என்று சொல்லி மகிழ்ந்தனர். நான் பலமுறை சொல்லிவிட்டேன் நடந்தது வியாபாரம் அங்கே நன்றி என்பதற்கு இடமில்லை.


அடுத்து அச்சில் எற முடியாத வார்த்தைகளால் மின்னஞ்சல்கள். நாம் எல்லோரும் எழுதுவது அழகிய தமிழ் மொழியில் அதுவும் தமிழ்மணம் என்ற கௌரவமான தளத்தில். ஆகையால் நாம் எல்லோரும் நாகரிகமாக எழுதுவோமே. அதற்க்கு உடன் படாதவர்கள் தமிழ்நாற்றம் என்று தளம் அமைத்து பேசுங்கள்...ப்ளீஸ்


என்னுடைய அரேபிய அனுபவங்கள் தொடரும்....... தயவு செய்து மேலெ உள்ள சப்ஜெக்டுகளில் மீண்டும் மீண்டும் பின்னூட்டம் அளிக்க வேண்டாம் என அன்புடன் தயைக் கூர்ந்து தாழ்மையுடன் உங்கள் காலைத் தொட்டுக் கேட்டுக்கொள்கிறேன்.


இடைக்குறிப்பிற்கு ஒரு பின்குறிப்பு:


உண்மையான பெயர், மின்னஞ்சல் முகவரி கொடுப்பவர்களின் பின்னூட்டங்கள் பதிக்கப் படும். உண்மையான பெயர் மற்றும் முகவரிகளை மறைத்துவ்டுகிறேன்.


"யோவ்!.. அப்ப அந்த நீசத்தனமான நேசகுமாரின் விவரங்கள் உன்னிடம் உள்ளனவா?" ஒருவர் கேட்கபோவது இப்பவே கேட்கிறது.

என்னுடைய பதில் " ஆம்"

(சாரி நேசகுமார் வலைபதிவாளர்களின் பழகி நானும்....)

Thursday, March 23, 2006

திரு.மலர்மன்னன் அவர்களின் விளக்கங்கள்

திரு. மலர் மன்னன் அவர்கள் என்னுடைய வாரனாசி என்ற பதிவையும் இந்தியாவின் வர்ணங்கள் என்ற பதிவையும் படித்துவிட்டு அதற்கு அவருடைய கருத்தை எழுதியிருந்தார். என்னுடைய பதிவை அவராக படிக்கவில்லை. நான் தான் என்னை ஆசிர்வாதியுங்கள் என்று என் பதிவை அனுப்பிருந்தேன். அவரின் நேர்மையும் தைரியுமும் என்னை கவர்ந்தது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் மீண்டும் ஒரு முறை தான் நேர்மையானவர் என்று நிரூப்பித்துள்ளார். நான் அவரை மதிப்பதால் என் மரியாதை குறையும் என்று சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர், எனக்கு மரியாதை இருப்பதாக நான் நினைக்கவில்லை. நான் சில முடிவுகள் என்னை நம்பி எடுக்கிறேன் மற்றவர்களிடம் மரியாதைப் பெற அல்ல. திரு மலர் மன்னன் அவர்கள் என்னுடைய பதிவில் இட்ட பின்னூட்டத்தை இக்னோர் செய்து இந்த விளக்கங்களைப் படிக்கவும். திரு மலர் மன்னன் அவர்களின் விளக்கங்கள் இதோ:

Dear brother:

One of your commentators wanted to know as to where Gandhi had saidMohmeddan is a bully. I do NOT NOT record anything without documentary evidence. I'm attaching the full text in which Gandhi talks about the behaviour of Hindus and Mohmeddans.

Pl send this to Sri Nesa Kumar also, as he wanted to find it out.

Now, I have proved several times that Babur memorial was NEVER NEVER a mosque. Having minarets on four corners is a mandatory for Mohmeddan place of worship stricrtly followed always to qualfy for being called as mosque. These minarets are intended to call the believers form all sides to come for joint forship. The common place of worship called mosque should also have a small waterbody or facility to wash hands, mouth, and face to faclitate even if a worshipper breaks wind at the time of attending the common worship!

Babur memorial DID NOT have minarets and a water tank to qualify to be called a mosque.

The disgracing Babur memorial(Mohmeddans of Bharath should be equally happy for the removal of that memorial because the frist Panipat battle was fought between the alien Babur and Ibrahim Lodi who had already become a Bharatiya Mohmeddan by that time!)was built by Mir Pakky, one of his commanders to celebrate the victory of his master.

Mohmeddans have only real estate value for Babur memorial whereas for Hindus, it is a sacred place according to their faith.

The locality is called Janmasthan in all revenue and survey records and the post office of the locality is also named Ayodhya Janmasthan sub post office. This name is NOT NOT given by any Hindu organisation but is being in force from time immemorial.Hindus were always demanding construction of a temple at the site of Babur memorial, as they were demanding in Varanassi and Somnath. At the time of Wajid Ali Shaw, Nawab of Audh, Hindus were allowed to construct a place of worship at the platform of the memorial to worship Maryada Purushottam Sri Ramachandra Moorthy, as infant Rama, that is Ram Lalla.Seeing this, Mohmeddans immediately started having their worship inside the memorial in order to establish their supremacy. The building was called Masjid by them in default!

During the 1857 rebellion, many records of Audh princely state were destroyed by the British troops but still some documentary evidenceds are available for my information in the revenue records of Audh. You have to go there to get satisfied, as I went and gathered information.

See, I have to narrate all this to justify the removal of Babur Memorial and constructuon of a temple for my Ram Lalla at his birth place according to my faith in my own motherland which is basically the land of Hindus! This is the ground reality (forefathers of most of Bharatiya Mohmeddans and Christians are Hindus only)! Just imagine whether it could happen in any Mohmeddan or Christian country!

As for Godhra, the truth is now being supressed by the new regime at the Centre in accordance to their vote bank policy. I do NOT need any vote form anybody and therefore I have no hesitation to call a spade a spade. The initial stage of the riot between Hindus and Mohmeddans at that time went in favour of Hindus' spontaneous anger.

Then came the govt. forces to quell the riots. It was NOT like Premier Surahwardy's encouragement to Mohmedddans to kill Hindus in Calcutta and whole of Bengal at the time of Muslim Leagues's Direct Action Day for the demand of Pakistan obsrved in 1946. At that time, Surahwardy, the Mohmeddan premier of Bengal encouraged Mohmeddans to loot rape and kill Hindus. This kind of inhuman behaviour was NOT found among the persons responsible for manitaning law and order in Gujarath. Gujarath riot is highly exagerated. In recent localbody elections in Gujarath, even in Mohmedddan localities, BJP has won. At Godhra itself, as it is a Mohmeddan majority town, the municipality has more Mohmeddan members and they have supported Narendra Modi's BJP for the post of Municipal Chairman without asking! These are NOT fiction but plain truths.

In Mandaikkadu, the trouble was the handiwork of the church to stop the festival of Mandaikadu Bhagawati Amman because even tradition bound women of fisherfolk despite being RC Christians used to worship Amman. Most of the fisherfolks in Kanyakumari district are RC Chritians and they are stronger than Hindus and they also had the support of influential church and missionaries. My work in Mandaikadu was to infuse confidence among Hindus and to prepare them to safeguard themselves. I was also helpful to represent their grievances to the authorities. I did NOT go there to create trouble.

I was NOT angry just because one person had doubted my stay at Su.Ra's at that time. The way I was called a liar and my account a bluff seemed indecent in healthy debates and therfore I wantd to withdraw to maintain the dignity of the forum. As the editorial board of Thinnai has ensured some sort of organised debates, I have agreed to write again for them. I don't become angry because I know even my own society will NOT shed a drop of tear if I am hurt because of my openness. That is the Hindu mentality! IT will only find fault with me as to why I did NOT keep quiet minding my business!

See what is happening in Iraq. Sunnies bomb Shias' mosques at the height of worship, killing several believers despite the fact that Shias are also of the same faith but with a difference. Shias will do the same on Sunnis when they have the upper hand. In the circumstances, do Mohmeddans have any moral standing to regret and go wild even if their place of worship is demolished (though it did NOT occur at Ayodhya)?

I wish you publish this message in full and also the attachment so that the visitors of your blog spot will know the truth.

Regards,

Malarmannan

---------------------------------------------------------------------------------------------

Attachemant


"There is no doubt in my mind that in the majority of quarrels the Hindus come out second best. But my own experience confirms the opinion that the Mussalman as a rule is a bully, and the Hindu as a rule is a coward. I have noticed this in railway trains, on public roads, and in the quar­rels which I had the privilege of settling. Need the Hindu blame the Mussalman for his cowardice? Where there are cowards, there will always be bullies. They say that in Saharan­pur the Mussal­mans looted houses, broke open safes and, in one case, a Hindu woman's modesty was outraged. Whose fault was this? Mussalmans can offer no defence for the execrable conduct, it is true. But I, as a Hindu, am more ashamed of Hindu cowardice than I am angry at the Mussalman bullying. Why did not the owners of the houses looted die in the attempt to defend their possessions? Where were the relatives of the outraged sister at the time of the outrage? Have they no account to render of themselves? My non-violence does not admit of running away from danger and leaving dear ones unprotected. Between violence and cowardly flight, I can only prefer violence to cowardice."

"Hindu-Muslim Tension: Its Cause and Cure", Young India, 29/5/1924;
Reproduced in M.K. Gandhi: The Hindu-Muslim Unity, p.35-36.


---------------------------------------------------------------------------------------------

Monday, March 20, 2006

இன்று என் வலைப் பதிவிற்கு இரண்டு அங்கீகாரங்கள்

என்னுடைய வலைப்பதிவை மூத்த பத்திரிக்கையாளர் திரு மலர் மன்னன் அவர்களிடம் காட்டி அவருடைய ஆசிர்வாதத்தைக் கேட்டிருந்தேன். அவரிடமிருந்து வந்த பதில் என்னை புல்லரிக்கவைத்தது. இவ்வலைப் பதிவின் மூலம் இவ்வளவு பெரிய அறிஞர்களிடம் தொடர்ப்பு கொள்ளமுடிவது இந்த தொழில் நுட்பத்தின் சாதனை தான். அவரின் கடிதம் இதோ:

For your expressions on Varanasi incidents:Your outbust shows your concern for our national safety. I am happy to see the spirit in you.One of your commentators had equated terrorist attacks with riots between two different communities, reminding Godhra incidents. If you probe riots in our Bharat deeply, you will know it is always started by Mohmeddans. By the time Hinudus regroup to retaliate, government will bring in its force to safeguard Mohmeddans. In Gujarat, it did NOT happen initially but afterwards, armed forces stood firm between the two and more than 300 Hindus also died in police firings. Godhra was also triggered by Mohmedddans only and Hindus had an opportunity to show that they also know how to return in the same coin. Even after the demolition of Babur memorial at Ayodhya, Mohmeddans only started riots. In the demolition of Babur memorial, no Mohmeddan had suffered but by the riots and serial blasts started by Mohmeddans, many innocent lives and properties were wiped out. Godhra should be seen as Hindus will also loose patience and do the same of what Mohmeddans always do. Once, Gandhiji himself has said that Mohmeddan is a bully. Terroirst attack is a cowardly act on innocents that should be seen from different perspective.

Now for your English rendering of that devotional stanza and Cyril's Tamiz version: Both are excellent! Cyril's interpretation as breaking the walls is also more apt though the original does NOT mean that.

Now about Sourashtrians. Centuries ago, a large section of Hindus from Sourashtra in Gujarath had to migrate to escape from the ruthless Mohmeddan viloence and to safeguard their faith and honour. They came deep south and settled comfortably at the hospitality of the locals. Likewise, Parsis had also come to Bharath to save themselves from the barbaric act of Arab Mohmeddans. Their motherland is Persia that is today's Iran. Having settled in Bharath, they are also our own people now. Similarly, Jews also came and settled in Bharath for safety. Bharath has always been a host to all people from different parts of the world. We have never hesitated to give shelter to anyone and that tradition continues till now by allowing Bangladesh Mohmeddans and also Pakistani Mohmeddans to settle down here at the cost of our own safety.

I have no hatred against Mohmeddans but I'm to remind ground realities to all of you. Personally, I have many friends among Mohmedddans and most of them agree to what I say in these matters.

I'm recording my views as requested by Sri Siva. My best wishes to him for all his endeavours.
-Malarmannan

அவரிடம் பாராட்டுப் பெற்ற நண்பர் சிறில்க்கு ஒரு கை குலுக்கல்.

தினமலரில் இரண்டாவது முறையாக என்னுடைய வலைப் பதிவிற்கு லிங்க்


இந்த இரண்டிற்க்கும் சேர்ந்து திருஷ்டி கழிக்க போலி டோண்டுவிடமிருந்து ஒரு "காதல்" கடிதம்.

போலியே! வெறுப்பு என்றும் வென்றதும் இல்லை அன்பு என்றைக்கும் தோற்றதுமில்லை. Please use your talent constructively.

என் அரேபிய அனுபவங்கள் - 4

----------------------------------------------------------------------------------------------
முன் குறிப்பு : மீண்டும் நான் கூறிக் கொள்கிறேன். நான் அரேபியரைப் பற்றி எழுதுவது என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத்தான். இஸ்லாமியரை பற்றியோ இஸ்லாம் பற்றியோ குறை கூற அல்ல. தயவு செய்து இதை மனதில் வைத்துக் கொண்டு படியுங்கள். சக இஸ்லாமியரின் குறைகளை அறிய விருப்பமில்லையென்றால் தயவு செய்து என் பதிவை படிப்பதை தவிர்க்கவும்.
----------------------------------------------------------------------------------------------


9/11 நிகழ்ச்சிகளின் "கொண்டாட்டங்கள்" அடங்கியவுடன். ஐ.நா. சம்மததின் பேரில் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் படையெடுக்க ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்த போது. என்னுடைய அரேபிய நண்பர்கள். அமெரிக்கரை ஏளனம் செய்துக் கொண்டு இருந்தனர். அமெரிக்கர்கள் கோழைகள், பெண்பித்தர்கள், மதுஅடிமைகள் என்று திட்டித் தீர்த்தனர். ஆப்கானியர்கள் பிறவி போராளிகள் அவர்களை வெல்லவே முடியாது. அமெரிக்கர்கள் தோற்பது உறுதி எனென்றால் தாலிபான்கள் தூய்மயான இஸ்லாமியர் அவர்களை வெல்லவே முடியாது. நிஜ இஸ்லாமிய வல்லரசு ஆப்கானிஸ்தான் தான். இவைகளை சொன்னது அரேபியர்கள். ஆனால் என்னுடன் வேலை செய்த ஆப்கானிகள் தாலிபான் தோற்ப்பதையே விரும்பினர். போர் ஆரம்பித்து ஆரம்பத்தில் அமெரிக்கருக்கு சாதகமான செய்திகள் இல்லை. எனவே எனக்கு தினம் தினம் ஆபிஸில் இனிப்புகள் கிடைத்தன. பிறகு தாலிபான்களும் , பின்லாடெனும் அவனது சகாக்களும் துண்டைக் காணாம் துணியைக் காணாம் ஒடிய போது, அமெரிக்காவால் ஒரு போதும் பின்லேடனை உயிருடன் பிடிக்கமுடியாது என அரேபியர்கள் சொல்லிக் கொண்டார்கள். இந்த பேச்சுகள் நம் தமிழ் படங்களில் வரும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளை நினைவுப் படுத்தின. சண்டைக்கு முன் ஆய் ஊய் என்று சலம்புவது பிறகு நன்றாக அடிப்பட்டவுடன் மீசையில் மண் ஒட்டவில்லை என சொல்லுவது. இதுதான் அரேபியரின் டிபிகல் காரக்டெர்ஸ்டிக். அரேபியரை எப்படி கையாளுவது என்று என் அரேபிய நண்பர்களே எனக்கு சொல்லிக் குடுத்திருக்கிறார்கள். ஒரு அரேபியனுடன் சண்டை போடும் போது கை ஒஙவேக் கூடாது. அவன் தொண்டைக் கிழிய அரபியில் கத்துவான். அவன் கத்தி முடிந்தவுடன் நீங்களும் உங்கள் குரலை உயர்த்தி நம் தமிழில் அவனைத் திட்டக்கூடத் தேவையில்லை, திருக்குறள் சொன்னாலும் போதும் பயந்து பின் வாங்கி விடுவான். எனக்கு இந்த முறை 99% வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.
இந்த போரில் உண்மையில் வென்றது பின்லாடன் தான். பின்லாடனின் முக்கியக் கோரிக்கை அமெரிக்கப் படைகள் சவூதியிலிருந்து வெளியெறவேண்டும். அமெரிக்கா சவூதியிலிருந்து வெளியேறி கட்டாரில் படைத் தளத்தை அமைத்து விட்டார்கள். இதற்காக என்னுடைய மரமண்டை அரேபிய நண்பர்கள் எனக்கு இனிப்பு வழங்காதது எனக்கு சற்று வருத்தமே.
ஈராக் மேல் அமெரிக்கா படையெடுப்பதை எதிர்த்து அமெரிக்கர் உட்பட உலகில் அனைத்து நாடுகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனால் இந்த அரேபிய மக்களோ அரசாங்கமோ ஆர்பட்டம் நடத்தவேயில்லை. சிரியா மற்றும் ஜோர்டன் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் துய அரபு நாடுகளான சவூதி, யு.ஏ.இ, ஒமான், பஹ்ரைன், யெமன் ஆகியவை அமைதிக் காத்தன. குவைத்தும் கட்டாரும் அமெரிக்காவிற்கு ஆதரவு அளித்தன!!!!!.
போர் ஆரம்பித்தவுடன் வடிவேல் தனமான சலம்பல்கள் ஆரம்ப்ப்பித்தன. என் அரேபிய நண்பர்களுக்கு ஈடாக ஈராக்கின் அப்போதைய தகவல்துறை அமைச்சர் அல் சாஹாப் அளித்த பேட்டிகள் வயிறு குலுங்க வைத்தன. அவர் பேட்டிகளை டீவியில் பார்த்து பிற்காலத்தில் இவை பெரிய ஜோக்களாக பேச படும் என நான் சொன்னது பொய்க்கவில்லை. இவருடைய பொன்னான ஜோக்குகளை காண இங்கே க்ளிக்கவும்.
வழக்கமாக ஆரம்பத்தில் அமெரிக்கருக்கு தொய்வு ஏற்படும் போது அரேபியரும் அரேபிய பத்திரிக்கைகளும், டீவியும் துள்ளி குதிப்பார்கள். அமெரிக்கர்கள் வெற்றி பெற்றால் அவர்களை திட்டி தீர்ப்பார்கள். சதாம் ஒடி ஒளிந்தவுடன், சதாம் மிகப் பெரிய படைகளை திரட்டி வந்து அமெரிக்கரை வெல்லுவார் எனக் கூடி கூடிப் பேசினர். சதாம் மாட்டிக் கொண்டவுடன் சில நாட்கள் அது சதாமே இல்லை என் ஹேஸ்யம் கூறினர். பிறகு சதாம் அமெரிக்கரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தோற்றுவிட்டார் என சொல்லி அரேபியர்கள் தோற்கவே மாட்டார்கள். இவர்கள் வெல்லப் பிறந்தவர் என டீ அருந்திக் கொண்டே காலத்தைக் கடத்துவர்.
நான் அரேபியாவில் பார்த்த நம் இந்திய சகோதரர்களின் சோக கதைகள் ஏராளம் அவைகளை உங்களிடம் வரும் நாட்களில்......

Sunday, March 19, 2006

என் அரேபிய அனுபவங்கள் - 3



அரேபியாவில் நான் வாழ்ந்த காலங்களில் சில முக்கிய நிகழ்வுகளும் அதற்க்கு அரேபியர்களின் ரீயாக்ஷ்னும்:


1992, டிசம்பர் 6 ந்தேதி பாபர் மசூதி இடிக்கப் பட்டது. அதன் மறுநாள் ஆபிஸில் அகமது என்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர், மிகவும் துயரமாகக் காணப்பட்டார். (அந்த காலகட்டங்களில் சாடிலைட் டிவியோ, இணையாமோ இல்லை. அராப் நீயுஸ் என்ற சவூதி தினசரி படிக்கும் பழக்கம் அப்போது இருக்கவில்லை.டைம்ஸ் அப் இந்தியா இரண்டு தினங்களுக்கு அப்பால்தான் கிடைக்கும். ஆகையால் அந்த மசூதி இடிப்பு சம்பவம் பற்றி நான் அறிந்திருக்கவில்லை). இந்த சூழ்நிலையில் நான் அகமதுவிடம் "என்னப்பா சோகமாக இருக்கிறாய்? இந்த முறையும் கலயாணத்திற்க்குப் பார்த்த பெண் உன்னை நிராகரித்து விட்டாளா?" என்று சொல்லி அவர் மூடை சரி செய்யப் பார்த்தேன். அவர் என்னிடம் "நீங்கள் இந்து வெறியர்கள். மசூதிகளை இடிப்பீர்கள். எங்களைக் கொல்லுவீர்கள்" என எரிந்து விழுந்தார். பிறகுதான் நடந்த விசயங்களை அறிந்து அகமதிடம் அவர் உணர்வுகளை அறியாமல் ஜாலியாக பேசியதற்க்கு பலமுறை மன்னிப்பு கேட்டன். அவர் இதுவரை என்னை மன்னிக்கவில்லை. அதன் பிறகு சவூதியில் இந்திய முஸ்லிம் சகோதரர்களும் அரேபியர்களும் இந்துக்களையும் எதிரியாகத் தான் பார்த்தார்கள். நான் என் இந்து நண்பர்களிடமும் ஆங்கில நண்பர்களிடமும் இதைப் பற்றி பேசும்போது "யூ ஆர் வெரி சென்ஸிடிவ். டேக் இட் ஈஸி. வி ஹாவ் கம் ஹியர் டு செல் அவர் ஸ்கில்ஸ் அட் ஹையர் ப்ரைஸ். இக்னோர் தீஸ் ஜஸ்ட் வொர்க் அண்ட் கெட் அவுட் " என்று புத்திமதி வழங்கினார்கள். இந்த சம்பவம் நடந்து ஒரு 3 மாதங்கள் கழித்து ஒரு சவுதீ நண்பர் சென்னையைப் பற்றி சில சந்தேகங்கள் கேட்க வந்தார். அவர் இன்னும் ஒரு வாரத்தில் சென்னை செல்லவிருப்பாதாகவும் அங்கு ஹாலல் உணவுக் கிடைக்குமா எனெக் கேட்டார். நானும் தாரளமாக கிடைக்கும் எனவும் நிறைய முஸ்லிம் ஹோட்டல்கள் உள்ளதாயும் எனச் சொல்லி அவர் சென்னை செல்ல காரணம் என்ன எனக் கேட்டதற்க்கு அவர் தந்தைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு போவாதாயும் மூன்று மாதங்கள் தங்க போவதாயும் அவர் சொன்னவுடன் என்னுள் இருந்த மானிடம் விழித்துக் கொண்டு "நான் உங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்கிறேன். என்னுடைய ப்ளாட் காலியாகத் தான் உள்ளது அங்கு நீங்கள் இலவசமாகத் தங்கிக் கொள்ளலாம். உங்களுக்கு வேலைக் காரர்களையும் வாடகைக்கு கார் மற்றும் டிரைவர் இவர்களை ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் இந்த செலவையும் ஆஸ்பத்திரி செலவையும் செய்யுங்கள். உங்களுக்கு உதவ என்னுடையப் பெற்றோரும் உடன் பிறந்தோரும் சென்னையில் இருக்கிறார்கள். அவர்கள் உஙகளுக்கு எல்லா உதவிகளையும் செய்வார்கள். உங்களில் (அவருக்கு 19 சகோதர சகோதரிகள் இருப்பது எனக்குத் தெரியும்) உங்கள் தந்தைக்கு சிறுநீரக தானம் செய்யும் தியாகி யார்?" என மூச்சு விடாமல் பேசி நிறுத்தினேன். அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு "நாங்கள் முஸ்லிம் அல்லாதோர் வீட்டில் தங்குவதில்லை.உன்னுடைய அழைப்பிற்க்கு நன்றி. என் தந்தைக்கு சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியே சிறுநீரகதிற்க்கு ஏற்பாடு செய்யும். நாங்கள் 3 மாசமும் நட்சத்திர ஹோட்டலில் தங்கும் அளவிற்க்கு பணம் என்னிடம் இருக்கிறது" என்று அவருடைய அரேபிய ஆணவத்தையும் புதுப்பணக்காரத் திமிரையும் வெளிப் படுத்திக் கொண்டார். அப்போதும் அவரை நான் வெறுக்கவில்லை. அவரது அறியாமையையும் ஆணவத்தையும் கண்டு அவர்மேல் அனுதாபமே ஏற்பட்டது. அவர் சென்னைக்கு சென்று அவருடைய தந்தையாருக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை முடித்துவிட்டு வந்தார். அவரிடம் சென்னை எப்படி எனக் கேட்டதற்க்கு அவர் முகமலர்ந்து அருமையான ஊர் என சொல்லி " பாம்பேயை விட கிட்னி சீப். அதை விட அங்கு சினிமாவில் நடிக்கும் துணை நடிகைகள் அருமை" எனச் சொன்னான். இவன் தந்தைக்கு ஒரு ஏமாந்த்த இந்திய சகோதர(ரி) யின் கிட்னி இவனின் உடல் பசிக்கு ஒரு இந்திய சகோதரியின் உடல். அங்கு அவனுக்கு மதம் தடையில்லை. இவன் போன்ற மிருகங்களை என்னால் வெறுக்காமல் இருக்க முடியவில்லை.


அடுத்து 25 ஜுன் 1996. அன்றுதான் அல்கோபாரில் தீவிர வாதிகள் அமெரிக்க இராணுவம் தங்கியிருந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தை குண்டு வைத்துத் தகர்த்தார்கள். அதில் அநேக அமெரிக்க படை வீரர்கள் இறந்தார்கள். இது நடந்த இடம் நான் தன்கியிருந்த இடத்திலிருந்து 4 க்.மீ தூரததில் தான் இருந்தது. இந்த வெடி அதிர்ச்சியில் என் கட்டிததில் இருந்த சில எக்ஸாஸ்ட் பேன்கள் கழண்டு விழுந்தன. மறுநாள் ஆபிஸ் போனால் முக்கிய சவூதி மானேஜர்கள் பலர் பயந்து வெளியூருக்கு எஸ்கேப் ஆயிருந்தனர். இதுதான் அரேபிய வீரம். உண்மையில் அரேபியர்கள் மிகப் பெரும் கோழைகள்.


தேதி செப்டம்பர் 12, 2001 நேரம் காலை 8 மணி இடம் : நான் வேலை செய்த ரிபைனரி


செப் 11, 2001 நாம் எல்லோரும் அறிந்த நாள். அன்று இரவு முழுவதும் நான் சி என் என் இல் செய்திகளைப் பார்த்து விட்டு களைப்பாக அபிஸிற்க்கு போனால் அங்கே அரேபியர்கள் இனிப்புகளை வழங்கி அமெரிக்காவின் தோல்வியை கொண்டாடிக் கொண்டிருந்தனர். என்னைக் கண்டதும் அவர்கள் வெறி அதிகமாகி என் வாயில் இனிப்புகளைத் திணித்தனர். இதற்க்கு காரணம் என்னுடைய அமெரிக்க ஆதரவு பேச்சுகள். இனிமேல் இவ்வுலகை ஆளப் போவது அரேபியர்கள். அமெரிக்கர்கள் தோற்றுவிட்டார்கள். அரேபியரிடம் அமெரிக்கர் மண்டியிடுவார்கள் எனக் கொக்கரித்துக் கொண்டிருந்தார்கள். அன்று விநியோகம் செய்யப் பட்ட பானம் பெப்ஸி. சிகரெட் மார்ல்பரோ. இவை அமெரிக்க தயாரிப்புகள். இதே அரேபியர்கள் ஆப்கானிஸ்தான் வீழ்ந்த பிறகும் , ஈராக் வீழ்ந்த பிறகும் இந்த நிகழ்ச்சிகளை எப்படி எதிர்கொண்ட்டர்கள் என்பதை வரும் நாட்களில்...........


தொடரும்....... சென்றவை ...1 2

Wednesday, March 15, 2006

என் அரேபிய அனுபவங்கள்- 2



யாசர் (பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது) மூத்த கணிணிப் பொறியாளர். பாலஸ்தீனத்தை சேர்ந்தவர். இவர் என்னுடன் அபுதாபியில் பணியாற்றியவர். இவர் செய்யும் கோமாளித் தனங்கள், எங்கள் ரிபைனரியில் மிகவும் பேமஸ். இவருக்கு சாதிக் என்ற தமிழ் இளைங்ஞ்ர் ஹெல்பர் ஆக இருந்தார். சாதிக் போன்ற 1000 கணக்கான தமிழ் சகோதரர்கள் நம் நாட்டில் ஏஜெண்டுகாளால் வஞ்சிக்கப் பட்டு அரபு நாடுகளுக்கு வந்து அங்கே அரேபியர்களால் சக்கையாக பிழியப் படும் பரிதாபத்துக்குரியவர்கள். அரபு நாடுகளின் அலங்கார கட்டிடங்களைக் காணும்போது நம் இந்திய சகோதரர்களின் இரத்தக்கறைகள் என் கண்ணில் தெரிகிறது. அரேபிய நாடுகளில் உள்ள பளபளப் பான கழிவறைகளில் நம் சகோதரர்களில் வேர்வை நாற்றத்தை உணர்கிறேன். இவர்களைப் பற்றி பின்.

யாசரின் மூளை ஒரு பள்ளி மாணவனின் மூளையைவிட மிகச்சிறியது. மிகக் கஷ்டமான, மூளைக்கு வேலை தரும் பணிகளை இந்தியப் பொறியாளர்களிட்ம் தந்து விட்டு ( நம் ஆட்கள் சாவலான வேலைகளை அவர்களே எடுத்துக் கொள்வார்கள்) பைலிங், லேபிளிங், ஸ்டோர் கீப்பிங் போன்ற எளிய வேலைகளை மட்டும் செய்வான். ஆனால் தன் அறியாமையை மறைக்க ஆளாதிக்கம் செய்வதில் கைதேர்ந்தவர். அதுவும் சாதிக் போன்ற அப்பாவிகள் இவர் கையில் படும் பாடு அக்கிரமம். ஒரு முறை புதிய கணிணிகளை விநியோகம் செய்ய நான் இருக்கும் பகுதிக்கு யாசரும் சாதிக்கும் வந்தார்கள். சாதிக்கின் வேலை பெரிய பெரிய மானிட்டர்களை தூக்கி வைப்பது. நம்மாள் சுறுசுறுப்பானவன். எல்லா கணிணிகளையும் தூக்கி வைத்து விட்டு டீ குடிக்க பொய்விட்டார். நம் கோமாளி அங்குள்ள மானஜரின் அறையில் கனெக்ஷ்ன் கொடுத்துவிட்டு முழித்துக் கொண்டிருந்தான். டீ குடித்துவிட்டு வந்த சாதிக் மற்ற அறைகளில் உள்ள கம்ப்யுட்டர்களுக்கு கனக்ஷன் தந்து அவைகளை இயங்கவைத்துவிட்டு வந்துப் பார்த்தால் நம் பாலஸ்தீன கோமாளியின் கம்ப்யுட்டர் இன்னும் வேலைசெய்ய ஆரம்பிக்கவில்லை. சாதிக் அந்த கம்ப்யுட்டரில் மௌஸும் , கீபோர்டும் கனக்ஷன் மாறி இருப்பதைப் பார்த்து அதை சரி செய்தவுடன் கம்ப்யுட்டர் வேலை செய்ய ஆரம்பித்தது. அதைப் பார்த்து அந்த மானேஜர் சிரித்துவிட்டார். அது யாசரை மிகக் கோபப்படுத்திவிட்டது. அவர் சாதிக்கை மிகவும் கேவலமாகத் திட்டி இனிமேல் நீ கக்கூஸ் மட்டும் கழுவு கம்ப்யுட்டரில் கை வைக்காதே எனக் கூறிவிட்டான். ஆனால் சாதிக் கக்கூஸும் கழுவி கம்ப்யுட்டரையும் கற்றுக் கொண்டான்.


வலித், இவர் இன்னொரு பாலஸ்தீனர். ரிபைனரியில் மிக சிக்கலான ஹைட்ரோகிராக்கர் ஆபேரேட்டர். இவர் பானலில் இருக்கும் போது கேரளாவைச் சேர்ந்த அனுபவமிக்க மஹ்மூத் கூட இருப்பார். ஒரு நாள் வலித் வேலை செய்யும் கம்ப்யுட்டரில் எதோ பிரச்சனை. மஹ்மூதும் வலிதும் என்னை அழைத்தனர். மஹ்மூது ஒரு ஜாலி பேர்வளி. எப்போதும் சந்தோசமாகவும் புன்சிரிப்புடனும் இருப்பார். அவர் பானலில் இருந்தால் அவருடன் பேசிக் கொண்டே வேலை செய்வது என்க்கு மிகவும் பிடிக்கும். அன்றும் அவ்வாறு அவர் ஜோக் சொல்ல நான் சிரித்துக் கொண்டே அந்த கம்ப்யுட்டரில் உள்ள கோளாறைச் சரி செய்துவிட்டு ஸ்டைலாக "இந்த என்டெர் பட்டனை அமுக்கினால் சரியாகிவிடும்" எனெ கையைத் தூக்கினேன். அப்போது எங்களை எரிச்சலாகப் பார்த்துக் கொண்டிருந்த வலித் என் கையைப் பற்றி "என்டெர் அமுக்கவத்ற்க்கு முன் இன்ஸா அல்லாஹ் எனக் கூறு" எனெ ஆணையிட்டார். "இதற்க்கு கடவுளை அனாவசியமாக தொந்தரவு செய்ய வேண்டாம், இந்த கம்ப்யுட்டர் என் பேச்சையைக் கேட்கும்" என்றதற்க்கு " நீ கடவுளக்கே சாவல் விடுகிறாயா". நானும் சளைக்காமல் "கடவுள் பெயர் சொல்லி என்டெர் பட்டனை அமுக்கினாலும் சொல்லாமல் அமுக்கினாலும் அது வேலை செய்யும். அதனால் கடவுள் இங்கே தேவையில்லை. ஆனால் எனக்கு இன்ஸா அல்லாஹ் புக்ரா என்று கூறுவதில் ஒரு ஆட்சபணையும் இல்லை" என்றேன். அங்கிருந்த மஹ்மூத் அவருக்கே உரிய ஜோக் சொல்லி எங்களைப் பிரித்து வைத்தார். இன்ஸா அல்லாஹ் புக்ரா என்றால் கடவுள் சித்தமிருந்தால் நாளைப் பார்க்காலம் எனப் பொருள். நாளை உயிருடன் இருப்பது கடவுளின் சித்தம் தானே. அதில் எனக்கும் உடன்பாடே. ஆனால் மனிதாரால் உருவாக்கப் பட்ட கம்புயுட்டர், மனிதாரால்தான் சரி செய்ய முடியும். வலித் இந்த விஷயத்தை விடுவாகதில்லை. அவர் மானெஜ்மென்ட்டில் என்னுடைய ஆட்டிடியுட் (Atitude) சரியில்லை எனக் கம்ப்ளைன்ட் செய்து, அதற்க்கு ஒரு விசாரணைக் கமிஷன் வைத்து., இருவரும் நண்பராக இருங்கள் என அறிவுரை வழங்கப் பட்டது. அது வலித்தின் வெற்றி யாகவும் என் தோல்வியாகவும் கருதப் பட்டது.

ஒரு சனிக்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் ரிபைனரியிருந்து ஓர் அழைப்பு கண்ட்ரோல் ஸிஸ்டம் வேலை செய்யவில்லையென்று. அழைத்தவர் ஒசாமா, இவரும் ஒரு பாலஸ்தீனர். சனிக்கிழமை என்பது அரேபியாவில் வீக் பிகினிங். காலை 7.30 மணிக்கு ஆபிஸ் அதற்க்கு 4 மணி நேரம் முன் ஒரு காலா சே.. வெருப்பாக இருந்தது. என் செல்லில் பானலில் இருந்த தமிழ் நண்பரிடம் பிரச்னையைப் பற்றிக் கேட்ட போது "அவரும் சின்ன பிரச்னைத்தான். நீங்கள் காலையில் வந்து ரிப்பேர் செய்யலாம்" என்றார். என்னை வெறுப்பேற்ற ஒசாமாவின் சதி எனத் தெரிந்துக் கொண்டேன். காரில் ரிபைனரி கண்ட்ரேல் ரூம் வாசலில் இறக்கிவிடப் பட்டேன். உள்ளே நுழைந்தவுடன் ஒசாமா தன் குரலை உயர்த்தி " இது மோசமான ஸிஸ்டம் இதை தூக்கி குப்பையில் போடு" எனக் கத்தி என்னை பயமுறுத்த நினைத்தான். இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் "வைக்கிறேன்ட்டா உனக்கு ஆப்பு" எனக் கைப்புள்ளத்தனமா யோசித்து "இதைக் குப்பையில் போட வேண்டுமென்றால் ஜெனரல் சர்வீஸைக் கூப்பிடு" என்று சொல்லி மீதமிருந்தத் தூக்கத்தைத் தொடர வீட்டுக்கு சென்றுவிட்டேன்.

காலையில் விசாரணைக் கமிஷன் கூடியது. இந்த முறை நான் மானெஜர்களிட்ம் " நான் பேசுவதைக் கேட்டுவிட்டு கேள்விகளை கேளுங்கள்" எனத் தொடங்கி "ஸிஸ்டமில் பெரிய பிரச்னை இல்லை. அதை நான் 10 நிமிடத்தில் சரி செய்துவிட்டேன். ஆனால் ஒசாமா ஸிஸ்டத்தை குப்பையில் எறியச் சொன்னார். அது என்னுடைய டிபார்ட்மென்ட் வேலையில்லை, ஜெனரல் சர்வீஸைக் கூப்பிட்டு குப்பையில் போடு என்றேன். இந்த ஸிஸ்டத்தின் மதிப்பு சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள். நான் செய்தது தவறு என்றால் இதோ என் ராஜினாமா, பாட்ஜ், சாவிகள், எனக்கு சுமார் 60 நாட்கள் லீவு இருக்கிறது அதை நோட்டிஸ் பிரீயடாக வைத்துக் கொண்டு என்னை ரிலீவ் செய்யுங்கள்" என முடித்தேன். வைத்தார்கள் ஒசாமாவிற்கு பெரிய ஆப்பு


அரேபியர்களில் மிகவும் நசுக்கப் பட்டவர்கள் பாலஸ்தீனர்கள். ஒரு பக்கம் இஸ்ரேலியர், மறுப்பக்கம் ஜோர்டனியர், சிரியர் எகிப்தியர்களால் பந்தாடப்பட்டவர்கள். ஐ.நா வும் அமெரிக்காவும் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கமல் இருந்திருந்தால் , பாலஸ்தீனம் என்ற நாடு அவர்களுடைய அரேபிய சகோதர நாடுகளால் விழுங்கப் பட்டிருக்கும். இங்கு எண்ணை வளமோ, இயற்கை வளமோ இல்லை, மக்கள் சோம்பேறிகள் மற்றும் படிப்பறிவு இல்லாதவர்கள். இவர்களுக்கே இவ்வளவு ஆணவமும், ஆளாதிக்க எண்ணமும் இருந்தால் , இவர்களுக்காக வக்காலத்து வாங்கும் இவர்களுடைய புதுப் பணக்கார சகோதரர்களைப் பற்றி வரும் நாட்களில்


தொடரும்........ சென்றவை ...1

Sunday, March 12, 2006

என்னுடைய அரேபிய அனுபவங்கள்- 1





---------------------------------------------------------------------------------------
முன்குறிப்பு - 1 இது நான் சந்தித்த சில மனிதர்களின் குணாதிசயைங்களைப் பற்றி. இஸ்லாமைப் பற்றி அல்ல.

முன்குறிப்பு - 2 அரேபிய நாடுகளின் சட்டதிட்டங்களை விமர்சரிக்க அல்ல

-----------------------------------------------------------------------------------
முதல் நாள் சவூதி அலுவலகத்தில் நுழைந்தவுடன் என்னை பெர்சன்னல் மனேஜரை பார்க்க சொன்னார்கள். அவர் ஒரு சவூதி. என்னை இன்முகத்துடன் வரவேற்று. டீ உபசரித்து பிரயாணம் பற்றி விசாரித்தார். என்னுடைய பாஸ்போர்ட்டைக் கேட்டார். என் பாஸ்போர்ட்டைப் பார்த்ததும் அவர் முகம் மாறியது. "நீ இந்தியனா? நான் அமெரிக்கன் என நினைத்தேன்" என்றார். "என்னைப் பார்த்தால் அமெரிக்கன் போலிருக்காதா? எதை வைத்து அமெரிக்கன் என்று நினைத்தீர்கள்" எனக் கேட்டதற்க்கு."உன்னை விமான நிலையத்திற்க்கு வந்து ஜான் அழைத்து வந்தாரே? உன்னை இந்த வேலையில் எடுப்பதற்க்கு ஒத்தைக் காலிச் நின்றாரே" என்று பதிலளித்து என்னை அவருடைய உதவியாளரிடம் ஒப்படைத்தார். ஜான் என் அமெரிக்க நண்பன். அவன் தான் இந்த வேலையை வாங்கிக் கொடுத்தான். இந்த சவூதி மானேஜர் அமெரிக்கர்களையும் பிரிட்டிஷாரை மட்டும் கையாளுவாரம். இந்தியர்களை கையாளுவது அவருக்கு இழுக்காம் என்பதை ஜான் மூலம் பின்னாளில் தெரிந்து கொண்டேன்


பெர்சன்னல் மானேஜரின் உதவியாளர் ஒரு இந்தியர். இவர் பெயரை சலீம் என்று வைத்து கொள்வோம். இவர் என்னிடம் இந்தியில் பேச ஆரம்பித்து விட்டார். எனக்கு இந்தி அவ்வளவாக வராது என்று சொன்னதற்க்கு இதுதான் தமிழர்களின் பிரச்சனை என சலித்துக் கொண்டே தொடர்ந்து எனக்கு சவுதீயைப் பற்றி இந்தியில் பயமுறுத்திக் கொண்டே இருந்தார். அப்போது அவருக்கு ஒரு தொலைபேசி வந்தது. அவர் தொலைபேசியில் மறுமுனையில் உள்ளவரிடம் சுத்தமான சென்னைத் தமிழில் பேசிக் கொண்ட்டிருந்தார். அவர் பேசி முடித்தவுடன். "நீங்கள் தமிழரா. எனக்கு தமிழ் நன்றாகத் தெரியும்" என்றேன். அவர் "நான் பொதுவாக தமிழில் பேச விரும்புவதில்லை. இந்தியாவில் முஸ்லிம்களைக் கொல்லுகிறார்கள். இந்தியாவில் அமைதியாக வாழ வழியில்லை. அதனால் தமிழில் பேசுவதில்லை" என சொன்னதும் எனக்கு தலைச் சுற்றியது. சென்னையில் எப்போது இந்து முஸ்லிம் கலவரம் நடந்தது என என் மூளையைக் கசக்கி கொண்டிருந்தேன். பின்னாளில் எனக்கு சில பேர்கள் இப்படி தங்களை சுற்றி ஒரு பரிதாபம் என்ற வலையையும் நசுக்க படும் சிறுபான்மையினர் ஒரு இமேஜையும் வளர்த்து தங்கள் எஜமானர்களிடம் நல்ல பெயர் வாங்கி அதிக நாள் அந்த நாட்டில் தங்க அவர்கள் போடும் நாடகம் என தெரிந்து கொண்டேன். அதன் பிறகு சலீம் என்னுடன் ஹிந்தியில் தான் பேசுவார் நானும் சளைக்காமல் தமிழில் பதில் சொல்வேன்.


பிறகு நான் சந்தித்தது அக்கௌண்டன்டை. இவர் கர்நாடாகவைச் சேர்ந்தவர். இவர் பெயரை ராம் என்று வைத்துக் கொள்வோம். இவர் என்னை ஒரு 1/2 மணி நேரம் காக்க வைத்துவிட்டு என்னிடம் பேசினார். அவர் கேட்ட முதல் கேள்வி "ஏன் இன்ஸ்ட்ரூமென்ட் துறையில் தமிழர் மட்டும் இருக்கின்றனர்?" நான் பதில் கூற முடியாமல் அமைதியாக இருந்தேன். அவர் தனக்கு அந்த கம்பெனியில் உள்ள அதிகாரங்களை பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். அவர்தான் அந்த கம்பெனியை நிர்வாகம் செய்வதாவாகவும் அவர் பேச்சிற்க்கு சவூதி மானேஜர்கள் கூட பயப்படுவார்கள். அவர் தான் அந்தக் கம்பெனியின் முதுகெலும்பு. அவர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் வேலையிலிருந்து எடுக்கும் அதிகாரம் அவர் கையில் இருப்பதால் அவரை மதிக்கவேண்டும் என் அறிமுகப் படலத்தில் 4 /5 முறை பிரகடனப் படுத்தி விட்டார். நான் அமைதியாக கேட்டுக்கொண்ட்டிருந்தேன். எனக்கு என் திறமையின் மேல் அபார நம்பிக்கை உண்டு. அதனால் எனக்கும் தலை கர்வம் உண்டு. ராம் தனது பாரகிரமங்களைச் சொல்லி முடித்து "எனி கொஸ்டின்ஸ்?" எனக் கேட்டார். நானும் ஒரே ஒரு கேள்வி" என்றேன் "என்னை சவுதிக்கு அழைத்து வந்து வேலை கொடுக்கபோகிறீர்களா இல்லை வேலையிலிருந்து எடுக்க போகிறீர்களா?" எனகெட்டு அவர்க் கண்களை உற்று நோக்கினேன், அவர் தன் பார்வையைக்த் தாழ்த்தி " நீ வேலைக்கு ஜானிடம் ரிப்போர்ட் செய்" என தன் வேலையில் கவனம் செலுத்தினார்.

இப்படி தொடங்கியது என் சுவாரசியமான சவூதி வாழ்க்கை.


.........தொடரும்

Thursday, March 09, 2006

SPB என் பாஸின் இனிய நண்பர்


நான் இந்தியாவில் பணிபுரியும் போது எனக்கு பாஸாக(மேனஜர்) இருந்தவர் மிக இனிமையானவர். அவர் அவருடைய நண்பர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியைப் பற்றி சிலாகித்து பேசுவார். என்னுடைய பாஸும் திரு எஸ்.பி..பி யும் சிறுவயதில் ஒரே மேடையில் பாடியவர்கள். திரு எஸ்.பி..பி யின் தமிழ் உச்சரிப்பு அருமை.





உ.ம். இதோ


மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக்கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள்

துள்ளும் கலை மான்கள்
தேன் சிந்தும் இளம் பூக்கள்
பாவை முகக்கலைகள்
தமிழ் கோவில் கொண்ட சிலைகள்
வங்கக்கடல் அலைகள்
பனி வழங்கும் வண்ண மலைகள்
பொங்கும் நதி நிலைகள்
அந்தப் பூவை நகை வளைகள்

போதை மொழி பனங்கள்
அந்தப் புறாக்கள் அவள் இனங்கள்
ஆசை மிகும் குணங்கள்
அவள் ஜாடை பல விதங்கள்
கனிகள் தந்த இதழ்கள்
உயர் கவிகள் தந்த வரிகள்
கிளிகள் தந்த மொழிகள்
என்னை கிள்ளும் அவள் தடைகள்

தோட்டம் கொண்ட குயில்கள்
நடை ஆட்டம் கண்ட மயில்கள்
காட்டும் அவள் அசைகள்
அவள் கால கோயில் மணிகள்
தெய்வம் வைத்த கடைகள்
அவள் தேகம் சொல்லும் விலைகள்
நெஞ்சில் இல்லை தடைகள்
அவள் கண்ணில் ரெண்டு கதைகள்

ஆசை மிகும் குணங்கள்
அவள் ஜாடை பல விதங்கள்
கனிகள் தந்த இதழ்கள்
உயர் கவிகள் தந்த வரிகள்
கிளிகள் தந்த மொழிகள்
என்னை கிள்ளும் அவள் தடைகள்

தோட்டம் கொண்ட குயில்கள்
நடை ஆட்டம் கண்ட மயில்கள்
காட்டும் அவள் அசைகள்
அவள் கால கோயில் மணிகள்
தெய்வம் வைத்த கடைகள்
அவள் தேகம் சொல்லும் விலைகள்
நெஞ்சில் இல்லை தடைகள்
அவள் கண்ணில் ரெண்டு கதைகள்


இப்பாடலைக் கேட்க இங்கே

Wednesday, March 08, 2006

வாரனாசி




வாரனாசி குண்டு வெடிப்பு சம்பவங்களை இணையத்தில் கனத்த மனத்தோடு படித்துக் கொண்டிருந்தபோது டீவியில் ஸ்வோர்ட் பிஷ் என்ற ஆங்கிலப் படம் ஓடிக் கொண்டிருந்தது. அதில் ஜான் ட்ரவோல்டா எக்காள்த்துடன் "இங்கு ஒருவர் இறந்தால் அங்கு பத்துப் பேர் இறக்கவேண்டும். அவர்கள் ஒரு விமானத்தை வீழ்த்தினால் அங்கு ஒரு விமான நிலையம் அழிய வேண்டும். இங்கு ஒரு கட்டிடம் விழுந்தால் அங்கே ஒரு ஊர் அழிய வேண்டும்" என சூளுரைத்துக் கொண்டிருந்தார். ஆஹா இதுவல்லவோ வீர்ம். நாமும் இதுபோல்தான் இருக்கவேண்டும் என நினைத்தேன். அது விவேகமில்லாத வீரம்
பிறகு காந்திய வழியில் யோசித்து என் மனதில் "தீவிரவாதியே வா 100 கோடி இந்தியர்கள் இருக்கிறோம். எங்கள் அனவரின் இரத்ததைக் குடி. அப்போதாவது உன் வெறி அடங்குகிறாதா என்று பார்ப்போம்" என ஒத்திகைப் பார்த்தேன். நோ இது வொர்க் அவுட் ஆகாது. இது 1940 கள் அல்ல நம் எதிரியும் நேர்மையானவன் இல்லை.
இப்போது என் தொண்டைக் கிழிய நான் அழைக்கிறேன். " தீவிரவாதி என்னும் கோழையே வா. நேருக்கு நேர் வா. அப்பாவி மக்களைக் கொல்லும் பேடியே நீ உன் படைகளைத் திரட்டிக் கொண்டு வா. நான் என் இந்திய வீரர்களைத் திரட்டிக் கொண்டு வருகிறேன். நேருக்க்கு நேர் மோத நெஞ்சில் துணிவிருந்தால் வா. சுத்தமான வீரனாய் இருந்தால் நீ வருவாய். நீயோ கோழை,, ஒரு பேடி. இந்தியப் படைகளின் பேரைக் கேட்டாலே காத தூரம் ஒடும் உனக்கு காத்த்ருக்கிறது நரகம்"

இந்தியாவின் வர்ணங்கள்

கலர்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஒரு அற்புதமான இசை ஆல்பம். இதில் அஹிம்சா ஒரு உன்னதப் பாடல் இங்கே.

என்னுடைய தமிழ் அறிவு இந்த பாடலை மொழிபெயர்க்கும் அளவிற்க்கு இல்லை. வலைப்பதிவாள்ர்களில் தமிழில் அழகாக எழுதும் தம்பி குமரன், ஜி .ராகவன், இராமநாதன், ஞானவெட்டியான் அவர்கள், போன்றவர்கள் மொழிப் பெயர்த்தால் மிக நன்றியுடையவானக இருப்பேன். இப்பாடல் சாய் பஜனிலும் இடம் பெற்றுள்ளது.

இப்பாடலின் வரிகளும் அதன் ஆங்கில அர்த்தமும் இதோ:

Govinda Bolo Gopaala Bolo
Ram Ram Bolo Hari Naam Bolo
Allah Maalik Isa Naanak
Zorashtra Mahaveer Buddha Naam Bolo
Ye Naam Saare Hain Jeevan Sahare
Paramanandke Kholte Hain Dvaare
Jo Naam Chaaho Vo Naam Bolo
Prem Sey Bolo Bhav Sey Bolo


(Sing (chant) the names of Govinda, Gopala, Ram and Hari; the names of Allah, Jesus, Nanak (Guru Nanak), Zoraster, Buddha and Mahaveera; all these names are the props in life. Open the wall (doors) to supreme Bliss; whatever name you like, call upon that name, but chant it with Love and Devotion)

Tuesday, March 07, 2006

காந்தியை வைத்து ஒரு போட்டி

-----------------------------------------------------------------------




போன சனிக்கிழ்மையன்று ஹிஸ்டரி தொலைக்காட்சியில் பார்த்த நம் ரிச்சர்ட் ஆட்டன்பாரோவின் காந்தி திரைப்படம் என் நினவை விட்டு அகல மறுக்கிறது. அப்படத்தைப் பார்த்த என் சினிமாக் கார மூளை வேறு விதமாக யோசித்தது. இப்படத்தின் ஹீரோ காந்தி வில்லன் ஆங்கிலேயர் கதை சுதந்திரப் போராட்டம். இந்தக் கதைக்கு ஹீரோ-வில்லன் காம்பினெஷன்களை மாற்றினால் என்ன ஆகியிருக்கும். அது நம் வலைபதிவாளைகளின் கற்பனைக்கு. நல்ல கற்பனை செய்பவற்க்கூ $ 50 மதிப்புள்ள் புத்தகங்கள் பரிசாக அளிக்கப் படும்.

நடுவர் - நான் தான்

தங்கள் கற்பனைகளை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 7 ஏப்ரல் 2006

முடிவுகள் : தமிழ் புத்தாண்டு அன்று அறிவிக்கப்படும்


காம்பினேஷன் - 1 ஹீரோ பாரதியார் வில்லன் ஆங்கிலேயர்

காம்பினேஷன் - 2 ஹீரோ காந்தி வில்லன் அமெரிக்கர்

காம்பினேஷன் - 3 ஹீரோ காந்தி வில்லன் மொகலாயர்

இஸ்லாமிற்க்கு சிபாரிசுத் தேவையா?

சில தினங்களாக வலைப்பதிவுகளில் என் கவனத்தை கவர்ந்தத் தலைப்புகள்

1 . சுப்ரமணிய பாரதியாரும் இஸ்லாமும்

2. டாக்டர் ஆத்மராமும் இஸ்லாமும்

3. டாக்டர் ஜாஹிர் நாயக் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் பேசிய மேடைப் பேச்சு. (நபி அவர்களைப் பற்றி இந்து வேதத்திலும் புராணத்திலும் காட்டிய குறிப்புகள்).

அரேபியாவில் ஜாதிக் கொடுமைகளை ஒழித்த ஒரு தூய மதத்திற்கு, இந்தியாவில் ஜாதியினை வளர்த்த இந்து மதத்தை சேர்ந்த அறிஞ்ர்களின் சிபாரிசும், இந்து வேத , புராண களிலிருந்தும் சிபாரிசு தேவையா?

Sunday, March 05, 2006

கடவுளே.....நீங்கள் நல்லவரா? கெட்டவரா?





ஒரு நாள் கடவுள் சிறிது களிமண்ணை எடுத்து மனிதன் போல் ஒரு உருவத்தை செய்தார், அந்த உருவத்துக்கு மென்மையான சுவாசத்தைத் தந்து அவனுக்கு உயிர் அளித்தார். அவனை ஆதாம் எனப் பெயரிட்டார். அவனுக்காக தோட்டம், மிருகங்கள், இத்யாதி..இத்யாதி வகைகளைப் படைத்துவிட்டு கடைசியாக ஏவாளைப் படைத்தார். இருவரிடமும் இத்தோட்டத்தில் உள்ள எல்லா மரங்களிலிருந்தும் பழங்களை உண்ணுங்கள் ஆனால் அந்த ஞானவிருட்சத்திலிருந்து மட்டும் பழங்களை உண்ணாதீர்கள் எனக் கூறி மறைந்து போனார்.

ஒரு நாள் சாத்தான் பாம்பு வடிவில் வந்து ஏவாளிடம் "கடவுள் எல்லா மரங்களின் கனிகளை உண்ணசொன்னரா? ஞானவிருட்சத்திலிருந்து மட்டும் பழங்களை உண்ணாதீர்கள் என்று சொல்லியிருப்பாரே? நான் சொல்கிறேன் அம்மரத்திலிருந்து பழங்களை சாப்பிட்டால் நீங்களும் ஞானம் பெற்று கடவுள் போல் ஆகிவிடுவீர்கள்" என உசுப்பேற்றிவிட்டு மறைந்து போனான். ஏவாளும் ஆதாமும் அந்த மரத்திலிருந்து கனிகளை உண்டு கடவுளிடம் சாபம் பெற்று சாவை சம்பளமாகப் பெற்றார்கள்.


அந்த பாம்பு ஆதாமிடம் சொல்லாமல் ஏன் ஏவாளிடம் சொல்லவேண்டும். ஆதாம் ஒரு ஆண்மகன். அவனிடம் இயற்க்கையாகேவே ஆணவமும் செருக்கும் இருக்கும். மேலும் செருக்கு உள்ள இடத்தில் வெற்றி அல்லது தோல்வி என்ற இரண்டு மட்டுமே சாத்தியம். உண்மையறிய அவன் மூர்க்கத்தனம் ஒரு தடையாய் இருக்கும். ஒரு பாம்பிடம் பேச அவன் ஆணவம் அவனுக்கு தடையாய் இருக்கும். ஏவாள் என்ற பெண்ணிடம் உண்மையறிய வேண்டும் ஒரு ஆவலும் மற்றவர் மனது புண்படுமே என்ற மனநிலை இயற்க்கையாகவே இருக்கும். அதானால்தான் பேசுவதற்க்கு அந்த பாம்பு ஏவாளைத் தேர்ந்தெடுத்தது.


ஒரு கொடிய தகப்பன்கூட தன் பிள்ளைகள் அறிவோடும் நீண்ட ஆயுளோடும் வாழ விரும்புவான். ஆனால் அந்த தந்தைக்கும் மேலான கடவுளோ தன் குழந்தைகள் ஞானம் பெறுவதையோ சாகாவரம் பெறுவதையோ விரும்பவில்லை. எங்கே எனக்கு போட்டியாக வந்துவிடுவான் என்ற பயத்தில் ஞானவிருட்ச்சதின் கனிகளை உண்ண அனுமதி மறுக்கிறான். மனிதன் ஞானம் பெற்று கடவுளைப் போல ஆகிவிட்டால் அங்கே கடவுளுக்கு வேலையில்லை. கடவுளேக்கே வேலை இல்லையென்றால் இந்த மதத்தலைவர்க்ளின் கதி என்ன? கோயில்கள்,சர்ச்கள், மசூதிகள், புண்ணியஸ்தலங்கள் யாருக்கு வேண்டும்?

சாத்தான் இருந்திருக்கவிட்டால் கூட மனிதன் தானாகவே ஒரு நாள் அக்கனிகளை உண்டு ஞானம் அடைந்திருப்பான். கடவுளே அப்பழங்களை உண்ணாதே என்று கூறிவிட்டானே. அடங்க மறுப்பவன் தானே மனிதன். ஒரு நாள் அத்துமீறி அக்கனிகளை உண்டு கடவுளுக்கு போட்டியாக வளர்ந்திருப்பான், உண்மையில் மனிதன் தெய்வமாவதற்க்கு தடையாய் இருந்த கடவுளே சாத்தான்


எனவே நான் கடவுளைக் கண்டால் கவுண்டமணி ஸ்டைலில் " கடவுளே..கடவுளே...நீங்கள் நல்லவரா? கெட்டவரா?" என்று கேட்பேன்

பி.கு. : ஓஷோ அவர்களுக்கு நன்றி. அவருடையபடைப்புகளைப் படிக்க இங்கே சுட்ட்வும்

Wednesday, March 01, 2006

யாரோ...... இவர்..... யாரோ....


1. தன்னுடைய மெர்ஸிடஸ் பென்ஸ் காரை வீட்டில் வைத்துவிட்டு பஸ்ஸில் ஆபிஸ்ற்க்கு போவார். பெட்ரோல் லிட்ட்ருக்கு 5 சென்ட் ஏறி விட்டதாம்

2. ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி ஊறுகாய் போட்டு ஒரு மாதத்திற்க்கு சாப்பிடுவார்.

3. தன் மகனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்துவிட்டு நாம் சாப்பிடவேண்டிய சாப்பாடை நம்மை கொண்டுவரசொல்வார்.

4. தம்முடைய முழு சம்பளத்தை இந்தியாவில் அதிக வட்டிக்கு டெபொசிட் செய்துவிட்டு நண்பரிடம் வட்டியில்லா கைமாற்று வாங்கி காலத்தை ஓட்டுவார்.

5. சரியாக நாம் சாப்பிடும் நேரம் வீட்டுக்கு வந்து ஃப்ரீயாக லஞ்ச் சாப்பிட்டு டாலர்களை சேமிப்பார்

6. ஆபிஸில் ஸ்டேஷனரி சாமன்களை சுட்டு இந்தியாவில் நண்பர்களுக்கும் உறவினருக்கும் அன்பளிப்பாக கொடுப்பார்

7. ஆபிஸில் டீ பாக்கை சுட்டு வீட்டில் சுட சுட டீ அருந்தவார் அல்லது ஆபிஸ்லிருந்து ஒரு ஃப்ளாஸ்க் நிறைய காபியை நிறப்பி வீட்டுக்கு எடுத்து செல்வார்

8. கமெரா பொன்ற சாதனங்களை தேவைபடும் போது வாங்கி உபயோகித்து விட்டு கடையில் திருப்பிக் கொடுத்து காசை வாங்கிவிடுவார்


இவர்தான் ஆஃப் பாண்டுடன் இந்தியாவிற்க்கு வந்து மாமனார் செலவில் மினரல் வாட்டர் குடிக்கும் என்.அர்.ஐ மாப்பிள்ளை