Friday, December 14, 2007

கிளிகளை கொஞ்சுவது எப்படி- துக்ளக் க்கு ஒரு பதில்

இந்த வார துக்ளக்கில் டெலிவிஷயம் என்ற பகுதியில் கீழ்கண்ட செய்தி வந்திருந்தது :

அடுத்த வீட்டு நாய்க்குட்டி !

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது குறித்து, ஒரு துண்டுச்செய்தி சன் நியூஸில் வந்தது. நாய், பூனை மட்டுமின்றி, முயலையும் கிளியையும் வளர்ப்போரைப் பற்றிக் கூடக் காட்டினார்கள். குழந்தைகளுக்குத்தான் இதில் வெகு ஆனந்தம். "என் டாமியைப் போல எங்கேயும் பார்க்க முடியாது' என்று சொல்லி, கொஞ்சிக் கொஞ்சி அதற்கு முத்தம் கொடுக்கிறார்கள். (நாய்க்கும் பூனைக்கும் சரி. கிளிக்கு எப்படி முத்தம் கொடுப்பார்கள்?)
வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்தால், இதய நோய் உள்ளவர்களுக்கு விரைவில் குணமாகும் என்று ஒரு நிபுணர் தெரிவித்தார். சில அபார்ட்மென்ட்களில் நாய் வளர்க்கக் கூடாதென்று கட்டுப்பாடுகள் இருப்பதாக ஒரு பிராணி நேசர் வருத்தப்பட்டார். அதற்கென்ன செய்ய முடியும்? செல்ல நாய் வளர்த்தால், இவருடைய இருதய நோய் வேண்டுமானால் குணமாகலாம். நாள் பூரா அதன் குரைப்பைக் கேட்டுக்கொண்டிருக்கும் அடுத்த போர்ஷன்காரர்களுக்கு, இருதய நோய் வரும் அபாயம் இருக்கிறதே!
The pessimist complains about the wind; the optimist expects it to change; the realist adjusts the sails – என்ற யதார்த்தத்தை உணர்ந்து, நாய் பூனை இல்லாத வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடி போக வேண்டியதுதான்.

இந்த மாதிரி சினிமா கிசுகிசு களையும் டெலிவிஷயம் போன்ற filler ஐட்டங்களை எழுதுபவர்கள் ஆங்கில கோட்களை சொல்லி முடிப்பது என்ன வழக்கம் என புரியவில்லை

அவர்கள் வழியிலேயே நாமும் ஒரு கொட்டேஷனை சொல்லி ஆரம்பிப்போம். நம்ம காந்திஜி என்ன சொல்லியிருக்கார்னா :

"The greatness of a nation and its moral progress can be judged by the way its animals are treated."


இதன்படி பார்த்தா அமெரிக்காவும், ஜப்பானும், கனடாவும் உலகில் மிக சிறந்த நாடுகள். இது ஓரளவு உண்மையும் கூட.

சரி பாய்ண்டுக்கு வருவோம். கிளியை கொஞ்ச முடியுமா? நிச்சயமாக முடியும்.

கிளிகள்தாம் பறவையினங்களில் ஒரு உன்னத இனம்.

இதன் உணர்ச்சிகள், அறிவுதிறன் அபாரமானவை. கிளிகள் பல சைஸ்களில் உள்ளன. உங்கள் உள்ளங்கையில் ஆனந்த சயனம் கொள்ளும் மிக சிறிய பாரட்லெட்டுகள் முதல் ஒரு சிறு நாய் குட்டி சைஸில் உள்ள மக்கா (Macaw) வரை பல சைஸ்களில் உள்ளன.

எல்லா கிளிகளையும் உங்கள் கையில் ஏந்தி உங்கள் உதட்டையும் அதன் அலகையும் ஒத்தி கொஞ்சலாம்.

அதற்கு முன் அதனுடன் உங்கள் பாசத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

என்னிடம் இருக்கும் நீமோவுடன் சென்று கொஞ்சும் குரலில் "நீமோ பேபி, குட்டி பேபி , ஐ லவ் யு உச்..உச்..உச்.. "என்றால் ஒடி வந்து அதன் அலகை நம் உதட்டோடு உரசி கொள்ளும். சில சம்யம் என் தாடியை அதன் அலகால் வருடி கொடுக்கும். அதைப் பார்க்கும் நீமோவின் ஜோடியான ரமோவிற்கு பொறாமை வந்து அதுவும் என்னை கொஞ்சும். கொஞ்சுவதில் இரண்டிற்கும் பலத்த போட்டி இருக்கும்.

சில கிளிகளிகளுக்கு முதுகை தடவினால் பிடிக்கும், சிலவற்றிற்கு மார்பை தடவினால் பிடிக்கும்.

பெரும்பாலன கிளிகளுக்கு தலையை தடவினால் மிக பிடிக்கும். இந்த தடவலில் கிளிகள் அடிமையாகி கொஞ்ச சொல்லி கெஞ்சும். மெதுவாக பொறுமையாக கிளிகளின் தலையை தடவிவிட்டால் போதும். பிறகு நாள் முழுவதும் கொஞ்சிக் கொண்டே இருக்கலாம்.

காக்கடூ என்ற வகை கிளியின் தலையை தடவி அனைத்துக் கொண்டால் நாள் முழுவது உங்கள் உடலிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும்., ஒரு அன்பான குழந்தையை போல.

வீட்டில் வளரும் கிளிகள் மிக சுத்தமானவை. வேளா வேளைக்கு குளித்து ஒரு வித சுகந்த நறுமணத்துடன் இருக்கும். நாயும் பூனையும் என்னதான் பற்பல ஷாம்பு , சோப்பு போட்டு குளிப்பாட்டினாலும் அதன் மேல் ஒரு வித துர்நாற்றம் இருக்கும். இந்த துர்நாற்றத்தை அந்த நாய்/பூனை குடும்பத்தினருக்கு தெரியாது.

துக்ளக் நிருபர் நாய் குரைப்பதை பார்த்து குறைப்பட்டிருக்கிறார். நன்றாக பழக்கிய நாய்கள் தேவையில்லாமல் குரைப்பதில்லை. வீட்டில் இயற்கை உபாதைகளை கழிப்பதில்லை. சுமார் 8 மணிநேரம் வரைக்கும் அது இயற்கை உபாதையை அடக்கிகொள்ளும். சில பூனைகள் வீட்டிலிருக்கும் டாய்லெட்டை உபயோகித்து விட்டு அதை ஃப்ளஷ் செய்கின்றன. இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்


இனி சில படங்கள் :


கீழே இருப்பது எங்கள் வீட்டில் இருக்கும் நீமோ (க்ரே கலரில் எட்டிப் பார்க்கும் கிளி) மற்றும் ரமோ






கிழே உள்ள வீடியோவில் ஒரு சின்னஞ்சிறு பாரட்லெட் செய்யும் குறும்பை பார்க்கவும்




இறந்து போவதாக வேடிக்கைக் காட்டும் சன் கனூர் வகை கிளி



மிக புத்திசாலியான ஆப்ரிகன் க்ரே வகை கிளிகள். சுமார் 300 வார்த்தைகள் வரை அதன் அர்த்ததுடன் புரிந்து கொள்ளும்


கீழே உள்ளது நம் இந்திய பச்சைகிளிகள். இவைகளும் பாசகார பசங்கதான்.


கீழே அமேசான் என்ற தென் அமெரிக்க கிளி ஒன்று கால்கரியில் ஒரு செல்ல ப்ராணிகளை விற்கும் கடையில் என்னைப் பார்த்து "hai guy.. " என அழைத்தது. கையில் எடுத்து தலையை தடவியவுடன் வீட்டிற்கு அழைத்து போ என் ஏக்கத்துடன் பார்த்தது. அதன் விலையைப் பார்த்து நானும் ஏக்கத்துடன் விட்டு விட்டு வந்துவிட்டேன் . அதன் விலை சுமார் $2000.

மடியில் குழந்தையை போல் கொஞ்சி விளையாடும் காக்கடூ வகை கிளிகள்









Sunday, December 09, 2007

ஜெனிபர் என் உற்ற தோழி.......

கடந்த ஒரு மாதமாக பல நகரங்களுக்கு சுற்றுலா. எல்லாம் தொழில் நிமித்தம்தான். கால்கரி போன்ற சின்ன ஊரில் குடும்பம் இருந்ததால் ஜெனிபரின் தேவை அவசியமில்லாமல் இருந்தது. அமெரிக்காவில் தன்னந்தனியே கும்மிருட்டில், பெரும்பாலும் இரவு நேரங்களில் ஜெனிபர் இல்லாமல் வழி தெரியவில்லை. ஜெனிபர் என் உற்ற தோழி, என் வழிகாட்டி, என் வயிற்று பசிக்கு வழிகாட்டுபவள், என் தேவைகளை வாங்க கடைகளுக்கு அழைத்து செல்வாள், பொழுது போக்க போதை ஏற்ற என பல இடங்களுக்கு வழிகாட்டுவாள். காலையில் சரியாக அலுவலகம் அனுப்பி ஆபிஸில் நல்ல பெயர் வாங்க வைப்பாள்.







என்னடா அமெரிக்காவில் வெள்ளைகாரியை செட்டப் செய்துவிட்டானா இந்த பாழாய் போன கால்கரி என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல..



இதோ என் ஜெனிபர்.......









இந்த ஜிபிஎஸ் தாங்க என் வழிகாட்டி. இதை காரில் பொறுத்தி ஏர்போர்ட்டிலிருந்து எந்த இடியாப்ப மேம்பாலத்தில் ஏறுவது என்ற கவலை வேண்டாம். வலது புறத்தில் 4 மைல் போய் திரும்பு, இடது புறம் ஆறாவது மைலில் இரண்டாம் தெருவில் திரும்பு சிறிது தூரம் போ வலபுறத்தில் பார் உன் ஓட்டல் என வழி சொல்லும்.

சரி பசியாக இருக்கிறதா ஜெனிபர் 5 மைல் சுற்றுவட்டாரத்தில் என்னன்ன ஓட்டல்கள் உள்ளன என்றால் ஜெனிபர் கபால் எனக் காட்டிவிடுவாள். இந்திய ஓட்டல்கள், இந்திய பலசரக்கு கடைகள், பெட்ரோ பங்குகள், ஏடிஎம் கள், சாப்பிங் சென்டர்கள், ஆஸ்பத்திரி, பார்க்கிங்கள் என சகலத்தையும் காட்டிவிடுவாள். இந்த விலாசத்திற்கு போக எந்த வழியில் போனால் சீக்கிரம் போகலாம், எந்த வழி மிக கம்மியான தூரம் என சொல்லுவாள். எந்த ரோட்டில் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள், எந்த வழியில் ட்ராபிக் அதிகம் என்பதையும் சொல்லுவாள், எந்த திசையில் பயணிக்கிறோம் எத்தனை வேகத்தில் பயணிக்கிறோம், எத்தனை மணிக்கு போய் சேருவோம் என்பதையும் சொல்லுவாள். எம்பி3 பாடல்களை இசைப்பாள், ப்ளூடூட்ல் உங்கள் போனை எடுப்பாள். மிக பெரிய நகரங்களில் கார் எந்த பார்க்கிங்கில் உள்ளது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்வாள்.

மொத்தத்தில் உற்ற தோழி இந்த ஜெனிபர்...

இந்த ஜிபிஎஸ் பிரயாணிகளுக்கு ஒரு வரப்ரசாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில்.

என்னங்க இந்த கிறிஸ்துமஸ் பர்சேஸ் ஜிபிஎஸ் தானே


Sunday, December 02, 2007

புஷ் பேட்டையில் கால்கரி

தந்தைக்கோ வயது 83. போரில் வெற்றிவாகை சூடி எதிரியை ஓட ஓட விரட்டியவர். இந்த வயதிலும் வானத்திலிருந்து பாராசூட்டில் குதிப்பதென்ன? ஓடியாடி வேலைப் பார்பதென்ன பேட்டி அளிப்பதென்ன..தனயனோ... அஞ்சா நெஞ்சன் எதிரிகளின் சிம்ம சொப்பனம்...எதிரிகளை வேட்டையாடி துவம்சம் செய்தவர். இவ்வீரமிக்க தலைவர்களின் ஊரான ஹூஸ்டனில் கால்கரியின் மாபெரும் பதிவாளாராகிய நான் வந்ததில் பெருமை அடைகிறேன்.

அடுத்த ஒரு வருடம் இங்குதான் வாழ்க்கை. என்னை வரவேற்க பெரிய புஷ் ஏர்போர்ட்டில் காத்திருந்தார் :)



நீங்க ஹூஸ்டனுக்கு வந்தாலும் உங்களையும் வரவேற்பார். பெரிய புஷ்ஷின் சிலை இங்கே உள்ளது.


கால்கரியில் -25 டிகிரி சி இங்கே +25 அருமையாக உள்ளது. அருமை..


பல மாதங்களாக வலைப்பதிவில் எழுத முடியவில்லை. அதனால் யாருக்கும் நஷ்டமில்லை யாரும் வருந்தவும் இல்லை. சில விஷயங்கள் என்னை வருத்தின.


கடந்த வருடங்களில் நான் எழுதிய அரேபிய அனுபவங்களில் நம் இந்திய உழைப்பாளிகளின் அவல நிலையை சொல்லியிருந்தேன். அதற்கு காரணமான அரபு நாட்டினரை ஏசியும் இருந்தேன். அவர்களின் அடிமை காலசாரத்தை சாடியுமிருந்தேன். அதற்கு பல முனை தாக்குதல் எனக்கு இணைய இஸ்லாமிஸ்ட்களிடமிருந்து வந்தன. உழைப்பவரின் வேர்வை தரையில் சிந்துமுன் ஊதியம் வழங்கும் உன்னத குடியினர் அரேபியர் என தங்களது எஜமானரை தாங்கியவரும் உண்டு.


ஆனால் நடப்பது என்ன?


தினம் தினம் இந்தியர்/தமிழர் இவர்களின் துயர செய்திகள், தற்கொலை செய்திகள், சம்பளம் தரவில்லை, உழைக்கும் இடத்தில் சேப்டி இல்லை. தொழிலாளர் போராட்டம் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்திய அரசாங்கத்திற்கோ அரபு அரசாங்களை கண்டிக்கும் மன தைரியமில்லை.


அரபுகளை வக்கலாத்து வாங்கியவர்கள் காணவில்லை. உழைப்பாளிகள் என்றதும் ஓடிவரும் சமூகநீதி காவலர்கள் எங்கே போனார்கள்.. ஐயா வாங்கய்யா எல்லாரும் சேர்ந்து கண்டிக்கலாம் அரபு அடிமை கலாசாரத்தை எதிர்க்கலாம்.



அடுத்து என்னை பாதிக்க வைத்தது. மலேஷிய இந்துகளின் போராட்டம். அவர்கள் இந்துகள் அல்ல தமிழர்கள் என சில வெண்தாடி வேஸ்ட்டின் சிஷ்ய கோடிகள் கூக்குரல் இடுகின்றனர்.


அமைதி மார்க்கத்தினரின் வாடிக்கை இதுதான். முதலில் சமூதாயத்தின் கீழ்தட்டில் இருக்கும் மக்களை அடிமை படுத்துவர்கள். மேல்தட்டில் உள்ள அறிவாளிகளான இந்துகளை பகைத்துக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் அவர்க்ளின் தயவு மலேஷியற்கு தேவை. பிறகு மெதுவாக மொத்தமாக எல்லாரையும் அரபு அடிமையாக்குவர். இது சரித்திரம் சொல்லும் உண்மை.


அங்கே மைனாரிட்டிகளின் வழிபாடு தளங்கள் தினம் தினம் இடிக்கபடுகின்றன. மலேஷியாவில் நடப்பது மைனாரிட்டி அடக்குமுறை. இதை இந்திய மைனாரிட்டிகள் உட்பட அனைவரும் எதிர்க்க வேண்டும்.


புஷ்பேட்டையிலிருந்து கால்கரி