Monday, February 08, 2010

1000 வழிகளில் சாவு

சமீபத்தில் 1000 ways to die என்ற டிவி நிகழ்ச்சியைப் பார்க்க நேரிட்டது. இது Spike என்ற சானலில் ஒளிபரப்பபடுகிறது.



சில நிஜ சாவுகள் எப்படி நிகழ்ந்தன என்பதை காட்டுகிறார்கள்



சில சாவுகள் செத்தவர்களின் முட்டாள்தனத்தால் நிகழ்கிறது, சில விபத்துகள், சில பொய் சொல்வதினால், சில பேராசையால், சில திமிர் பிடித்த செயல்களால்.



ஒருவருக்கு பங்ஜி ஜம்பிங் செய்ய ஆசை ஆனால் பணம் இல்லை. பக்கத்தில் நிற்கும் ஒரு உயர கிரேனில் ஏறி குதிக்கிறார். இவரின் முட்டாள் தனம் இவர் காலில் கட்டிய கயிறு கிரேனின் உயரத்தை விட அதிகமாய் இருந்தது. பாவம் ஸ்பாட்டில் அவுட்.


பணக்கார ஆனால் வயதான தாத்தா. மூக்கில் ஆக்ஸிஜன், மூச்சுவிட வெண்டிலெட்டர், மருத்துவர்கள். நர்ஸ்கள், மருந்துகள் இவைகளை வைத்துத் தான் இவர் வாழ்க்கை ஓடுகிறது. இந்த வயதிலும் இவருக்கு பலான பெண்களை ஆடவிட்டு ஜொள்ளுவிடுவார். இவ்வாறு ஒரு நாள் இவருக்காக ஒரு பெண் கவர்ச்சி ஆட்டம் ஆடும் போது கால் தவறி வெண்டிலெட்டர் மெஷின் மேல் விழுந்து அதன் பவர் பிடுங்கி கொள்கிறது. தாத்த வைகுண்ட பதவியை இஸ்டண்ட் ஆக அடைகிறார்.


இவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். இவருக்கு தீவிர ஆஸ்துமா நோய் இருக்கிறது. ஆனால் தன் காதலியிடம் தன் நோயை மறைக்கிறார் இவர். ஒரு நாள் இவர் காதலி காதல் செய்ய இவரை வீட்டிற்கு அழைக்கிறார். காதலிக்கு இந்திய உணவு பிடிக்கும். அதனால் இந்திய உணவை இவருக்காக சமைக்கிறார். ஒவ்வொரு மசாலா பொடியை இவரின் மூக்கிற்கு அருகில் சென்று முகர வைக்கிறார். காதலுனுக்கு ஆஸ்த்துமா அட்டாக் அதிகம் வந்து இவர் அவுட் பாவம் உண்மை சொல்லியிருந்தார் பிழைத்திருப்பார்.

இவருக்கு வர வர ஆண்மை குறைய தொடங்கியிருக்கிறது. இவருக்கு மனைவியும் உண்டு ஆசை நாயகியும் உண்டு. அதனால் வயாக்ரா சாப்பிடுகிறார். ஒருநாள் மனைவியிடம் உடலுறவு கொள்ள தயாராகும் போது ஆசை நாயகியிடமிருந்து போன் வருகிறது. பாத்ரூமிற்கு போய் 3 மாத்திரைகளை போட்டுக் கொண்டு மனைவியிடம் வருகிறார். தன் கணவனின் ஆண்மையை அதிகமாக்க கணவனுக்கு மனைவி பியரில் 3 மாத்திரைகளை போட்டு தருகிறாள். மனையிடன் காதல் செய்துவிட்டு ஆசை நாயகியின் வீட்டிற்கு ஓடுகிறான். காதலி பழச்சாறில் 3 மாத்திரைகளை போட்டு தருகிறாள். 9 மடங்கு ஓவர் டோஸாகி வயாக்ரா ஆள் ஆசைநாயகி வீட்டில் அவுட்டாகிறான்


இப்படி பலவழிகளில் இறந்தவர்களைப் பற்றிய 1000 ways to die என்ற டிவி தொடர் ஒரு நல்லப் பாடமாக இருக்கிறது

0 comments: