Showing posts with label கால்கரி. Show all posts
Showing posts with label கால்கரி. Show all posts

Friday, February 16, 2007

ஆன்மிகம் ஆனந்தமானது...

இன்று சிவராத்திரி. சிறுவயதில் மதுரை தெற்காவணி மூல தெருவில் திரு குன்னக்குடி வைத்தியநாதரின் வயலின் இசையை இரவு முழுக்க கேட்டு ஆனந்தமடைந்திருக்கிறேன்.

பிறகு அரேபிய பாலைவனத்தில் காபிரல்லாதவர்களின் நடுவில், மற்றவர்கள் பயந்து பயந்து இருக்க நான் ஆனந்தமாக இரவு முழுக்க சிவராத்திரி பஜனை மற்றும் அபிஷேகங்களை வீட்டில் நடத்தியிருக்கிறேன்.

பஜன் நடக்கும் போது அவ்வப்போது இஞ்சி ஏலக்காய் டீ, சுக்கு மல்லி காப்பிகளை தயாரித்து மக்களுக்கு விநியோகம் செய்திருக்கிறேன்.

இன்றைய ராத்திரி கால்கரியில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பக்தர்கள் நடத்தும் பஜனையில் கலந்து கொள்ள முடிவெடுத்துள்ளேன். ஸ்ரீஸ்ரீ " ஆன்மிகம் என்பது ஏன் இறுக்கமாக இருக்கவேண்டும். ஆனந்தமாக பாடி நடனமாடி சந்தோஷமாக ஆன்மிகத்தை பெறலாமே" என்று கூறுவார். பார்க்க ஸ்ரீஸ்ரீ பக்தர்கள் கொண்டாடும் வீடியோவை:




ஆன்மிகம் ஆனந்தமானது. நம்முள் இருக்கும் இறைவனை நாம் உணரும் போது கிடைக்கும் இன்பம் அளவிட முடியாது. பகலென்ன இரவென்ன அந்த ஆனந்ததிற்கு தடை கிடையாது. தங்கு தடையின்று ஆனந்த வெள்ளத்தில் நீந்த ஆன்மிகமன்றி வேறின்பம் ஏது இதைத் தான் முன்னோர்கள் பேரின்பனம் என்பார்களா?

இங்கே பாரதியாரின் பாடலை மனதிற்குள் பாடிக்கொண்டேன்.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் -
எங்கள் இறைவா! இறைவா! இறைவா!

சித்தினை அசித்துடன் இணைத்தாய் -
அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்.
அத்தனையுலகமும் வர்ணக்களஞ்சியமாகப்
பலபல நல்லழகுகள் சமைத்தாய். (ஓ- எத்தனை)

முக்தியென்றொருநிலை சமைத்தாய் -
அங்கு முழுதினையுமுணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலைவகுத்தாய் -
எங்கள பரமா! பரமா! பரமா! (ஓ - எத்தனை)

இந்த பாடலை என் அபிமான பாடகர் திரு உன்னிகிருஷ்ணன் குரலில் கேட்க
இங்கே

இசைக்குயில் பாடியதை கேட்க இங்கே

சின்னகுயில் மஹாநதி ஷோபனா பாடியதை கேட்க இங்கே

Tuesday, February 06, 2007

மனத்தடைகள்

சில பேருக்கு சில நேரங்களில் சில மனதடைகள் இருக்கும். மனத்தடை என்பது என்ன? ஆங்கிலத்தில் mental block என வைத்துக் கொள்ளலாம். ஒரு இடத்தைப் பற்றியோ அல்லது ஒரு உணவைப் பற்றியோ அல்லது சில பேரின் உருவங்களைப் பார்த்து அவர்களை பற்றியோ ஒரு மனத்தடையை ஏற்படுத்தி கொள்வார்கள்.

எனக்கு இந்த சூஷி பற்றி ஒரு மனத்தடை. அது வேகவைக்காத மீனால் ஆன உணவு பொருள் என்று. பொதுவாக ஸீ புட்களைப் பார்த்தலே அது நாறும் என்ற மனத்தடை எனக்கு உள்ளது.

என் அனுபவத்தில் நான் பார்த்த மனத்தடைகள் :

கடந்த வருடம் துபாய் ஏர்போர்ட்டில் சென்னை கனெக்டிங் பிளைட்டை தவறவிட்டு அடுத்த பிளைட்டிற்காக சுமார் 6 மணிநேரம் காக்க வேண்டியிருந்தது. கணிணியில் தமிழ் வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது ஒரு தமிழ் இளைஞர் அறிமுகமாகமானர். அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஈமெயில் பார்க்க என் கணிணியைக் கொடுத்தேன். இலவசமாக உணவு கிடைத்தது. அங்கே நானும் அவரும் சென்று ஸ்டார்ட்டர்களான சமோசாவையும் ஒரு கிளாசில் ஜூஸும் எடுத்துக் கொண்டு அமர்ந்தோம். சமோசாவை நான் கடிக்க எத்தனிக்கும் போது. அந்த இளைஞர் நிறுத்துங்கள் என கத்திவிட்டார். ஏன் என்றேன் இது சிக்கன் சமோசா என்றார். அதனால் என்ன என்றேன். அவர் நீங்கள் சிக்கன் சாப்பிட மாட்டீர்களே என்றார். நான் உங்களைப் பார்த்து 1 மணிநேரம் தான் ஆகிறது. நான் சிக்கன் சாப்பிட மாட்டேன் என சொன்னமாதிரி எனக்கு ஞாபகமில்லையே என்றேன். இல்லை சார் உங்களைப்பார்த்தால் நான் வெஜ் சாப்பிடுபவர் மாதிரி இல்லையே என்றார். அவருக்கு நான் பிராமணராக இருப்பேன் என மனத்தடை. இந்த மாதிரி உருவ அமைப்பு உள்ளவர்கள் பிராமணர்களாகத்தான் இருப்பார்கள் என அவரின் மனத்தடை.

இன்னொருவர் இவர் வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். நல்ல உயரம். உயரத்திற்கு ஏற்ற பருமன். கரிய நிறம். இவருடன் ஹூஸ்டனில் ஒரு ஓட்டலுக்கு போனேன். நீ தண்ணியடி ஆனால் பாரில் வேண்டாம் ரெஸ்டாரண்டில் அடிக்கலாம் என்றார். நானும் சரியென்று ஒரு பீரும் சைட் டிஷ்ஷிற்கு சிக்கன் விங்க்ஸும் ஆர்டர் செய்தேன். அவர் சிக்கன் விங்ஸை என்னுடன் பகிர்ந்துக் கொள்வதாயும் குடிக்க கோக் பாட்டில் அல்லது கேனில் வேண்டும் கிளாஸில் வேண்டாம் என பல முறை அந்த பெண்ணிடம் கேட்டுக் கொண்டார். ஆர்டர் செய்தவுடன் அவர் தன்னை ஒரு டீ டொடலர் என்று சொல்லிக் கொண்டார். சிகரட் வாசனை ஆல்கஹால் வாசனை அறவே பிடிக்காது என்றார். அயிட்டங்கள் வந்தன அவருக்கு கோக் கிளாசில் வந்தது. மனிதர் கொதித்து விட்டார். சர்வரியும் அங்கே ட்ராப்ட் கோக் மட்டும் உள்ளது பாட்டிலோ / கேனோ இல்லை என்றார். கடைசியாக ஒரு பேப்பர் டம்ளரில் கோக்கை குடித்தார். நானும் ஏன்... ஏன் எனக் கேட்டேன். அவரிடமிருந்து வந்த பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது. கிளாஸில் ஆல்கஹால் ஒட்டியிருக்க வாய்ப்பிருக்குமாம் அதனால் வெளியே வந்தால் கிளாஸில் எந்த பானமும் குடிக்க மாட்டாராம். எங்கு போய் முட்டிக் கொள்வது. ஆல்கஹால் தண்ணீரில் இரண்டற கலக்கும் குறைந்த வெப்பநிலையில் ஆவி ஆகிவிடும். இங்கே ரெஸ்டராண்டுகளில் கிளாஸ் பாத்திரம் கழுவும் மெசினில் நன்றாக கழுவி சுடு காற்றால் காயவைப்பார்கள். ஆல்கஹால் இருக்க வாய்ப்பில்லை. வேதியியலில் டாக்டர் பட்டம் வாங்கியவருக்கு நான் சொல்லத் தேவையில்லை. சிக்கன் விங்ஸ் சாப்பிட்டு முடிந்தவுடன் அந்த விங்க்ஸ் வைன் ஊற்றி சமைத்திருப்பார்கள் என்றேன். அவர் பேய் அறைந்தவர் போல் ஆகி விட்டார். ஆல்கஹாலைப் பற்றி அவரின் மனத்தடை சற்று அதிகம்.

நம் வலைப்பதிவுகளில் ஒருவர் இந்து மதத்தைப் பற்றி எழுதிவிட்டாலோ அல்லது கருப்புக் கொடி கேடிகளை தாக்கிவிட்டாலோ அவர் ப்ராமணராகத்தான் இருப்பார் என்பது சிலரின் மனத்தடை.

மனத்தடைகளே மனிதனின் முன்னேற்றத்திற்கான முக்கிய தடை கல்.

மனத்தடைகளை களைவோம் முன்னேறுவோம்

Saturday, January 27, 2007

குரு - ஒரு அருமையான திரைப்படம்

சினிமாக்களை சில நாள் ஆற அமர பார்ப்பதுதான் என் வழக்கம். பல பேர் குருவை பார்த்து விட்டு பயங்கரமான விமர்சனங்கள், விவாதங்கள் செய்துவிட்டார்கள்.

என் பங்குகிற்கு நான் செய்ய வேண்டாமா. குரு யார்? பணக்காரங்களிடமிருந்து பணத்தை எடுத்து ஏழைக் களுக்கு வாரி வழங்கும் வள்ளல். சிறு வயதில் கடுமையாக உழைத்து வளந்து பெரியவனாகி தன் காதலியை சந்திக்கிறான். அப்போது அவன் காதலியிடம் படும் பாட்டை இந்த பாடல் மூலம் முற்றிலும் வித்தியாசமாக் இயக்குனர் காட்டியிருக்கிறார்



ஹி ஹி புது ப்ளாக்கர் புது டெம்ப்ளேட் ஒரு டெஸ்டிங் தான்