Wednesday, February 15, 2006


சுதந்திரம்....

"தன்னைப் போல் ஒருவனை உருவாக்குவதும், தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்:ளுவத்தும் மனித இயல்பு. மரணம் நிச்சயம். இதற்க்கு இடையே உள்ள பந்தம், பாசம், மதம், சம்பிரதாயம் போன்றவைகள் இச்சமுதாயத்தால் நம் மேல் திணிக்கப்பட்டவைகள்"
மேலே உள்ள வார்த்தைகள் ஒரு தத்துவஞானியொ அல்லது ஓஷோ போன்ற குருவோ கூறியிருந்தால். அஹா...அருமை என்று சொல்லி இந்த வாக்கியத்தை காலப்போக்கில் மறந்திருப்பேன். ஆனால் இவ்வார்தைகள் எனது 15 வயது மகனிடம் இருந்து வந்ததால் என் நெஞ்சில் பதிந்து விட்ட்து. டிபிககல் மிடில் கிளாஸ் மாமா போல் ஒரு நாள் டின்னெர் டேபிலிள் என் மகனுக்கு தாய் பாசம் தான் உயர்ந்தது என அட்வைஸ் செய்த போது, என் மகனிடமிருந்து கிடைத்த பதில். நானும் என் மனைவியும் பிறகு எதுவுமே பேசவில்லை.
டின்னெருக்குப் பின் அவனுடைய அறைக்கு சென்றேன். போன வருடம் வரை சிப்ஸும் பெப்ஸியும் சாப்பிட்டுக் கொண்டும், வீடியோ கேம் ஆடிக்கொண்டும், பீட்டெர் வீட்டுக்கொண்டும்,பாய்ஸ் திரைப்படத்தில் வரும் பையன்கள் போல் ட்ரெஸ் செய்து கொண்டும் இருந்தவன் எப்படி என்ற சிந்தனையுடன்.
என் மகனும் "நீ வருவே என்று எக்ஸ்பெக்ட் செஞ்ஜேன்" என கூறி பேச ஆரம்பித்கான். "ப்ரீடம் பா ப்ரீடம்.... இந்த ஊர் ஸ்கூல்லே ப்ரீயா திங்க் பண்ண சொல்றா. அபுதாபி ஸ்கூல்லே டீச்சர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே வாந்தி எடுத்தால் 100 மார்க் வாங்கி விடலாம். அங்கே லைப்ரரி போனா நம்க்கு பிடித்த மாதிரி புக்ஸ் கிடைக்காது, இன்டெர்னெட்ல் சென்ஸார், ஸ்கூல்லே எப்போ பாரு பர்ஸ்ட் மார்க் வாங்குபவளிடம் கம்பேர் செய்து மற்றவர்களை கிண்டல் செய்வது இதெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை போதா குறைக்கு எனக்குப் பிடிக்காத அரபி கம்பல்ஸரி. அந்த அரபி டீச்சரின் இஸ்லாமிய போதனை என்ற டார்ச்சரை அனுபவித்து வந்தால், வீட்டில் பஜனை செய்ஞ்சி நீ டார்ட்ஜெர் பண்ணுவே. என்னை திங் செய்ய விட்டிங்களா. கனடாவிலே என்ன திங் பண்ண விட்றாங்க. எல்லாம் ப்ரீயாகிடைக்குது. போன வாரம் நீயும் நானும் லைப்ரரிக்கு போய் கார்ல் சேகனின் டெமன் ஹான்டட் ஒர்ல்ட் என்ற புக்கை எடுத்தோம்அதில் உள்ள வரிகள் தான் இவை" என விளக்கம் கூறி மேலும் தொடர்ந்தான் " அப்பா...நான் ஒரு ஏதிஸ்ட் ப்பா... எனக்கு எந்த மதத்திலும் நம்ப்பிக்கை இல்லை...எனக்கு சுதந்திரத்தில் நம்ப்பிக்கை இருக்கிறது" என்று கூறி என் முகத்தை நோக்கினான். நான் அதற்க்கு " சுதந்திரம் என்ற பெயரில் என் மத நம்பிக்கைகளை கிண்டல் செய்தால் எனக்குப் பிடிக்காது" எனக் கூறினேன்அதற்க்கு அவன் புன்னகைத்துவிட்டு, தொடர்ந்தான் " அப்பா... என்னுடைய ப்ரண்ட்ஸை பாருப்பா... போரிஸ் ஒரு ரஷ்யன்,, ஃப்லீக்ஸ் ஒரு சீனன் இவர்கள் இருவரும் என்னைப் போல் ஏதீஸ்ட்ஸ், அமோல்... இந்தியன் ஒரு ராம பக்தன்...மோனிக்கா ஒரு ஜு..அஹ்மத் ஒரு இஸ்லாமியன்..லூபோ ஒரு ஒரு செர்பியன் ஆனால் ஒரு இந்து உன்னை விட அவனுக்கு அதிக பஜனைகள் பாடத்தெரியும். நாங்கல்லாங் எல்லா ஃப்லீங்ஸையும் ரெஸ்பெக்ட் செய்ஞ்ச்சி ஃப்ரீயா இருப்போம் கவல படாதே"
நான் மேலும் பேச ஒன்றும் இல்லை. சுதந்திரதிற்க்கு இவ்வளவு சக்தியா என வியந்து கொண்டே ...படுக்கையில் புரண்டு காலை 4 மணிக்கு தூங்கி போனேன்

4 comments:

said...

என் மூனு வயது மகள் எப்போது இதனை எல்லாம் சொல்லப் போகிறாள் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் சிவா அண்ணா. இப்போதே அவளுக்கு காரில் போகும் போது 'சுட்டும் விழிச் சுடரே, சுட்டும் விழிச் சுடரே' தான் வேண்டும். இல்லை ஏதாவது விஜய் மாமா (அவளுக்கு மாமா)வோட குத்துப் பாட்டு வேண்டும். நிறைய பாடல்களை இப்போதே பாடத் தெரிகிறது. நான் எப்போதாவது தப்பித் தவறி சாமிப் பாட்டு போட்டால் அவ்வளவு தான். கத்தி ரகளை பண்ணி சுட்டும் விழிச் சுடரேயோ ரெயின்போ ரெமோவோ போட்டால் தான் விடுகிறாள்.

said...

சிவா,
என் நெஞ்சில் உதைத்துக்கொண்டிருந்த சின்னஞ்சிறு குழந்தை இப்போது என் மூளையை உதைக்கிறது.

அன்பு தம்பி,
சரவணன்

said...

நல்ல படிப்பினை. நல்ல பதிவு

said...

தேசாந்திரி அவர்களே,முதல் வருகைக்கு நன்றி