Wednesday, April 26, 2006

திரு. மரிய குமாரன் அவர்களுக்கு........

புதிய வலைப்பதிவாளர் ம்ரியகுமாரன் அவர்களே வருக.

நீங்கள் என் பெயரில் இட்ட வலைப்பதிவை தேன்கூட்டில் கண்டேன், அதற்கு பின்னூட்டமுமிட்டேன். நீங்கள் இதுவரைக்கும் அதை publish செய்யவில்லை. அதனால் அதை இங்கு publish செய்கிறேன்

திரு மரிய குமாரனின் வலைப்பதிவு இதோ http://idiminnal.blogspot.com/

"மரிய குமாரன்,
நான் 1000 முறைக் கூறிவிட்டேன். வியாபாரத்தில் நன்றி தேவையில்லை மற்றும் நான் இஸ்லாமியருக்கு எதிரானவர் அல்ல என்று. திரும்ப திரும்ப இதையே சொல்லி சொல்லி கொண்டிருந்தால் நான் இஸ்லாமிற்கு எதிராக மாறிவிடுவேன் அதன் பிறகு நான் சொன்னது எல்லாம் பொய் ஆகிவிடும் என கனவுகாணாதீர்கள்.நான் முஸ்லிம்களுக்கு எதிரி அல்ல அல்ல அல்ல பல மூறை கூறிக் கொள்ளவும்.

சும்மா ரீல் விடாதீர்கள். அந்த நாட்டிற்கு போய் வேலை தேட எல்லாம் முடியாது. இங்கேப் பார்த்து வேலைக் கொடுத்து பிறகு அங்கெ சேம்பர் ஆப் காமர்ஸில் பெர்மிட் எடுத்து. அதைக் கொடுத்து ஏதோ ஒரு அமைச்சகத்தில் விசா எடுத்து. அது பம்பாய்க்கு வந்து. பிறகு மருத்துவ சோதனை முடித்து விசா ஸ்டாம்ப் ஆன பிறகு தான் அந்த நாட்டிற்கே போக முடியும். இங்கே வேலைக் கிடைக்காமால் விமானம் ஏறி அங்கே போய் வேலை தேடுவதெல்லாம் யுஏஇ ல் தான். சவூதியில் அல்ல. ஏஜந்த் என்ற நரிகளிடம் நம் சகோதரர்கள் ஏமாறும் சோகங்களை மறைக்காதீர்கள்.
சவூதியின் புதிய சட்டம் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இந்த சட்டங்களை நல்ல கம்பெனிகள் பின்பற்றுகின்றன. நலிந்தவர்களுக்கு அங்கெ நடப்பவை பரவலாக இப்போது தெரிந்துவிடுவதால் அந்த சட்டம். இது சட்டத்தால் விடிவுகாலம் வந்துவிடாது. நம் சகோதரர்கள் சட்டபடி அவர்களின் உரிமைகளுக்காக போரட வேண்டும். அப்போதுதான் அங்கே விடிவுகாலம் பிறக்கும். துபாயில் சிறிது போராடி வெற்றி பெற்றுள்ளார்கள்"

2 comments:

said...

சிவா அவர்களே,

ஒரு பதிவைப் பற்றிப் பேசும்போது அதன் சுட்டியை கொடுப்பது என்பது மிக அடிப்படியான விஷயம். தயவு செய்து இவ்விடத்தில் அதை முதலில் செய்யவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

திரு டோண்டு அவர்களே, தந்துவிட்டேன் சுட்டியை.

நன்றி

அன்புடன்

கால்கரி சிவா